என்னுரை ---------------------------- எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது.
எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் கல்கி, குமுதம், குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
சோகமும் சுகமும் கலந்த வாழ்க்கை உணர்வுகளைச் சொல்லும் கவிதைகளைத் தொகுத்துள்ளதால் , இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு 'ஆனந்தக் கண்ணீர் ' என்று தலைப்பிட்டுள்ளேன். இவற்றில் பெரும்பாலானவை கவிதை வனம் , நவீன விருட்சம் குழுக்களில் பதிவு செய்யப்பட்டவை. அந்தக் குழுக்களின் நிர்வாக நண்பர்களுக்கு என் நன்றிகள்.
இது 'ஆனந்தக் கண்ணீர் -நாகேந்திர பாரதியின் கவிதைகள் தொகுப்பு - 72' .