கீதா மோகன் இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் பிறந்தவர். தந்தையைச் சிறுவயதிலேயே ஈழ யுத்தத்தில் இழந்தவர். ஏதிலியாக அம்மாவுடன் தமிழ்நாடு வந்தவர். தற்போது பகுதிநேரமாகச் சட்டம் படித்து வருகிறார். அவர் அலுவலகமொன்றில் கணினி இயக்குநர்.
சமூக சீர்திருத்தம், புரட்சி, ஏழ்மை, காதல், பிரிவுத்துயர் இவர் கவிதைகளில் அதிகம் காணப்படும், இன்றைய முகநூல் உலகில் தவிர்க்க முடியாத பெண் கவிஞர்களுள் ஒருவர்.