Jump to ratings and reviews
Rate this book

திசை தேடும் காகித கப்பல்கள்

Rate this book
திசை தேடும் காகித கப்பல்கள் 2021 ஆம் ஆண்டு நான் எழுதிய கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளே இந்த தொகுப்பு 2021 ஆம் ஆண்டு நான் எழுதிய கவிதைகளின் மற்றொரு தொகுப்பு மனமெங்கும் மாய ஊஞ்சல்.

இவை கவிதைகள் தான் என்பதில் எனக்கே சிறு சந்தேகம் உண்டு, வாசிக்கும் அனைவருக்கும் வெவ்வேறு பார்வை கண்ணோட்டம் கொண்டு இதை பார்க்கலாம். புத்தக வடிவம் பெறுவதால் இது ஒரு கவிதை தொகுப்பு என கருதுகிறேன்.

91 pages, Kindle Edition

Published February 14, 2023

1 person want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (75%)
4 stars
1 (25%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
3 reviews
September 21, 2025
தலைப்பின் முரணுக்கு ஏற்றார் போல்,
பிறப்பே வாழ்க்கையின் ஆரம்பம்
ஆனால் தொகுப்பின் இரண்டாம் கவிதையே மரணம் குறித்தானது.
பிடித்தமான ஒருவரை இழந்து இருந்தால், நிச்சயம் சில கவிதைகள் , சில வரிகள் விழி நனைத்துச் செல்லும். இழப்புகள் தரும் வலி, இயலாமை, தனிமைத் துயர் என பல்வேறு உணர்வுகளை அனாயசமாக நம்முள் கடத்திச் செல்கிறது.
தன் வலிகள் மட்டும் பேசாது இன்ன பிறரின் வலிகளையும் எப்போதும் பதிவு செய்வது ஆசிரியரின் சிறப்பு.
பெண் சுதந்திரம், சுயமரியாதை, பாலியல் வன்கொடுமை, கொத்தடிமை வாழ்க்கை, ஆணவப் படுகொலை என சமூகத்தில் இருக்கும் அத்தனை அழுக்குகளையும் அலசி இருக்கிறார்.
அவரின் இந்தக் கவிதை போல

"ஒரு எழுத்தாளர் சிறைப் பிடித்துக் கொள்கிறார், அவரது எழுத்துக்களால், சிந்தனையால், நூறு புத்தகம் படித்தாலும் அந்த எழுத்தாளரின் புத்தகம் போல் எதுவும் இல்லை, எழுத்துக்கள் வசீகரம் செய்கிறது மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது"

சிந்தனையால் எப்பொழுதும் சிறைப் பிடித்து இருக்கும் இந்த எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

இப்புத்தகம் ஒரு மிகக் சிறந்த வாசிப்பு. ஒவ்வொரு முறை மீள் வாசிப்பின் போதும் இவரின் புத்தங்கள் வெவ்வேறு சிந்தனைகளுக்கு வழி வகுக்கின்றன. அவரே அதையும் அவரின் கீழுள்ள கவிதையில் பதிவு செய்து இருப்பது சிறப்பு.

"ஆயிரம் புத்தகங்கள் வாசித்தாலும் சில புத்தகம் கவிதையோ கட்டுரையோ கதையோ களம் காட்டும் ஆவணத் தொகுப்போ சுயசரிதையோ எத்தனை முறை வாசித்தாலும் முதல் அனுபவம் போல் எல்லையற்ற உணர்வுகளைத் தரும் அந்தப் புத்தகங்களே மீள் வாசிப்பின் நித்தியம்"
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.