அறம் என்பது என்ன? எனக்கும் உனக்கும் அவனுக்கும் பொதுவானதாக எந்த மதிப்பீட்டை நான் முன்வைக்கிறேனோ அதுவே என் அறம் என்பது. என் அறம் ‘எம்மவருக்குள்’ மட்டுமே அடங்கும் என்றால் மானுடம் என்ற ஒன்றை நான் ஏற்கவில்லை என்றுதான் முதல் பொருள். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. நீயும் நானும் அவனும் மானுடர்கள் என்பதை முத்தரப்பும் ஒரே குரலில் நிராகரித்தால்கூட நிராகரித்துவிட முடியாது. நாம் ஒரே மண்மீதும் ஒரே வான்கீழும் வாழ்ந்தாக வேண்டும். போரிடும்போதும் வெறுக்கும்போதும்கூட நாம் மானுடர்களே. என் அறத்தின் ஒரு சிறுபகுதியையேனும் நீ ஏற்றாக வேண்டும். உன் அறத்தின் அதற்கிணையான அளவு பகுதியை நான் ஏற்க அதுவே என்
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)