இந்த நான்காம் வருணத்தவர் யாவர்? அவர்கள் எப்படித் தோன்றினார்கள்? பெண்களின் நிலைமைக்கு அவர்களைத் தாழ்த்த வேண்டியதன் அவசியம் எப்படி ஏற்பட்டது? நான்காம் வருணத்தவர் 'பாரதர்' என்ற இனக் குழுவில் தோன்றிய சுதரஸ் என்று க்ஷத்திரிய வம்ச மன்னனின் சந்ததியார் என்று, டாக்டர் அம்பேத்கார் தம் ஆய்வு நூலாகிய, ‘சூத்திரர் யாவர்?' என்ற ஆராய்ச்சியில் கருத்துரைக்கிறார்.

