மன்னர்களின் வரலாறு வரலாறல்ல மக்களின் வரலாறே வரலாறு; வரலாறு மீண்டும் எழுதப் பெற வேண்டும் என்று எண்ணும் வாடியான் கூட்டத்தினர் தங்கள் வரலாற்றினைப் பதிவு செய்யும் முகமாக 19.01.1973 ல் முதன்முதலாக 'வாடியான் கொடி வழி மலரை' வெளியிட்டுள்ளனர். புதிய வாரிசுகளையும் இணைத்து 1995 அன்று இரண்டாவது கொடிவழி மலரை வெளியிட்டுத் தம் வம்சாவளியினை வாடியான்கள் உலகுக்குத் தெரியப்படுத்தி உள்ளனர்.

