தாத்தா முகம் சுளித்தபடி சற்று நேரம் ஜன்னல் வழியாக வெறித்தார். பிறகு மெல்லக் குரலைத் தாழ்த்தி, “பாவப்பட்ட எடத்தில் வல்லதும் பார்க்கணுமா? பணக்காரியோ படிச்சவளோ வேண்டா மெங்கி வேண்டாம்...” என்றார். இவன் மனம் உறைந்தது. கண்கள் மங்குவது போலிருந்தன. இவனுள் புகுந்து எல்லா ரகசியங்களையும் தாத்தா பார்த்துவிட்டார் என்று தோன்றியது. அது பீதியையும் அதே சமயம் ஒருவித பாரமின்மையையும் ஏற்படுத்தியது.

![ரப்பர் [Rubber]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1534965343l/41435300._SY475_.jpg)