Kindle Notes & Highlights
Read between
November 22, 2018 - July 17, 2019
இதற்கான ஓர் எளிய முயற்சியே இந்நூல். அறிவியல் கண்டுபிடித்ததெல்லாம் எங்கள் மத நூல்களில் இருக்கிறது என்றோ இதெல்லாம் எங்களுக்கு அப்போதே தெரியும் என்றோ சொல்லும் நூல் அல்ல இது.
இந்திய அறிதல் சட்டகங்கள் உபநிடதங்களின் வேதாந்த மரபு சார்ந்தவை மட்டுமல்ல; சமணம், பௌத்தம், சாங்கியம், நியாயம், வைசேஷிகம் எனப் பன்மையான அறிதல் முறைகள் நம் பண்பாட்டில் உள்ளன.
ஈசாவாஸ்ய உபநிடதத்திலிருந்தே
ரோமன் கத்தோலிக்க சபை, பரிசோதனை மூலம் உருவாகும் அறிவியலைத் தமது இறையியலுக்கான அச்சுறுத்தலாகப் பார்த்தது. அரிஸ்டாட்டிலியத் தத்துவமே கிறிஸ்தவ இறையியலின் தத்துவார்த்த அஸ்திவாரமாகக் கருதப்பட்டது.
சாக்கடைகளில் பணிபுரிவோர் அல்லர். கழிவுகளை நந்தவனங்களாக்கும் நந்தவனப் பணியாளர்கள் எனும் பார்வை மாற்றம் தேவை.
டார்வினிய அறிவியல் ‘சமூக டார்வினியம்’ எனும் போலி அறிவியல் பார்வையை உருவாக்கியிருந்தது. காலனியத்தையும் சமூகச் சுரண்டலையும் ‘வலியது வாழும்’ என்று கூறி நியாயப்படுத்தும் ஒரு பார்வை அது.
க்ரோப்போட்கின் அதற்கு மாற்றாக விலங்கினங்களின் பரிணாமத்தில் சமூக ஒத்துழைப்பும் பரஸ்பர உதவும் தன்மையும் கொண்ட உயிரினங்கள் வெற்றி அடைவதை முன்வைத்தார்.
இங்கிருந்துதான் ஒரு சிக்கலான விஷயம் ஆரம்பிக்கிறது. அறிவியல் மேற்கில் நிறுவனரீதியாகப் பலமாகப் பலமாக அது பிற பண்பாடுகளிலிருந்து பெற்ற பங்களிப்புகளைத் தன்னுடையதாக மாற்றியமைத்தது.
1) இருக்கலாம் 2) இல்லாமல் இருக்கலாம் 3) இருத்தலும் இல்லாமலிருத்தலுமாக இருக்கலாம் 4) விளக்கப்படாத தன்மை கொண்டிருக்கலாம் (அவக்தவ்ய)
5) விளக்கப்படாததன்மையுடனான இருத்தலாக இருக்கலாம் 6) விளக்கப்படாத தன்மையுடனான இருப்பின்மையாக இருக்கலாம் 7) விளக்கப்படாத தன்மையுடன் இருத்தலும் இருத்தலின்மையுமாக இருக்கலாம்.
பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கம் இந்தியாவில் ஏற்பட்டபோது, அவர்கள் சமஸ்கிருதத்துக்கும் கிரேக்க லத்தீன் மொழிகளுக்கும் இடையே ஓர் ஆழமான ஒற்றுமையைக் கண்டனர். இதை அவர்கள் பைபிள் நம்பிக்கைகளின்படி விளக்க முற்பட்டனர். யஹீவாவால் பிரளயம் உருவாக்கப்பட்டது. அதில் காப்பாற்றப்பட்ட நோவா என்பவரின் மூன்று பிள்ளைகளான ஷெம், ஹாம், ஜாபேது ஆகியோர், உலக மக்கள் குழுக்களுக்குப் பிதாமகன்களாயினர். இவர்களில் ஹாம் என்பவன் நோவாவால் சபிக்கப்பட்டான். அவனுடைய சந்ததிகள் பிற இரு மகன்களின் சந்ததிகளுக்கு அடிமைகளாக இருக்கவேண்டும் என்பது சாபம். எனவே, ஐரோப்பிய காலனிய ஆதிக்கம் ஏற்பட்ட ஆப்பிரிக்க ஆசிய சமுதாயங்களையெல்லாம் ‘ஹாமின் வழி
...more
சுயமொழிப் பெருமைகளும் மொழி மேட்டிமையும் இந்தியாவில் இருந்திருக்கின்றன. சமஸ்கிருதம் உயர்வு என்றும், தமிழ் உயர்வு என்றும் பிற மொழிகள் தமிழைவிட அல்லது சமஸ்கிருதத்தைவிட அல்லது தம் தாய்மொழியைவிடத் தாழ்ந்தவை என்று சொல்லும் போக்குகள் இந்தியாவில் இருந்திருக்கின்றன. ஆனால், அவற்றைமீறி மொழிப் பன்மையைப் பேணி வளர்க்கும் போக்கே இந்தியாவின் ஆன்மாவாக இருந்திருக்கிறது.
விரிதலே உயிர் வாழ்தல் என்றார் சுவாமி விவேகானந்தர். Expansion is Life.
கல்வி, பாரதப் பண்பாட்டில் முக்திக்கான ஒரு கருவி. மெக்காலேயின் கல்வியோ, கட்டுப்படுத்தும் ஒரு கருவி. இந்த அடிப்படை வேறுபாட்டிலிருந்துதான் அனைத்துப் பிரச்னைகளும் உருவாகின்றன. இதனை விவேகானந்தரும், ஸ்ரீஅரவிந்தரும், காந்தியும், தாகூரும், ஜோசப் கார்னீலியஸ் குமரப்பாவும், அப்துல் கலாமும் உணர்ந்திருந்தனர்.
‘குஹ்யா’,
பிரம்மத்துவமே அனைத்தும் பிரம்மம் என்பதே சமூக ஜனநாயகத்துக்கான மிகச்சிறந்த ஆன்மிக அடிப்படை என பாபாசாகேப் அம்பேத்கர் கூறியதை இங்கு நினைவுகொள்ளலாம். மானுட
நம் மதச்சார்பற்ற அரசாட்சி அமைப்புகளால் சில பத்தாண்டுகள்கூடக் காப்பாற்ற முடியாத இந்த நீர்நிலைகளை, ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக ‘புண்ணியம்’ என்கிற பண்பாட்டுஉளவியல் கோட்பாட்டின் மூலம் காப்பாற்றி வந்திருக்கிறது நம் பாரம்பரியம்.

![இந்திய அறிதல் முறைகள் [India Arithal Muraigal: Naveena Ariviyal Pulangalai Purinthukolla]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1481973458l/33403252._SY475_.jpg)