பாவை சந்திரன் எழுதிய "ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு" பகுதி 1 மற்றும் 2, 2010ஆம் ஆண்டு வெளியானது. சுமார் 30 ஆண்டுகள் நீடித்து, 2009இல் முடிவடைந்த இலங்கை உள்நாட்டு போரின் கொடூரமான நிகழ்வுகளை துல்லியமாக பதிவு செய்துள்ள இந்நூல், அதிர்ச்சி தரும் நிகழ்வுகளின் தொகுப்பாகும்.
சிங்களர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான பதட்டம் மற்றும் மோதல்களிலிருந்து உருவான இந்த இரத்தமோதலில் பிறந்த கதைகளைக் கொண்டு, நூல் போரின் உண்மை நிலையை வெளிச்சமிடுகிறது. போரின் பாதிப்புகளையும் அதன் பின் நிகழ்ச்சிகளையும் விரிவாக பதிவு செய்கிறது. இப்போர் மற்றும் பெருமளவு உயிரிழப்புகளால், நாடும் மக்களும் எவ்வாறு மாற்றத்திற்குள்ளாகினர் என்பதை இந்நூல் ஆழமாக ஆராய்கிறது.
Eezha Thamizharin Poraatta Varalaru Part I, written by Pavaichandran S and published in the year 2010, is a hard-hitting compilation of the brutal Sri Lankan Civil War, which lasted nearly 30 years and ended in 2009. The book brings out stories born in a bloody conflict from the tension between minority Tamil groups and the Sinhalese. The book recounts the war and its aftermath, exploring how war and mass death changed the country and its people.
ஐயா பாவை சந்திரன் எழுதிய ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு என்பது வெறும் நூலென்று சொல்லிவிட முடியாத ஒன்று. இது ஒரு வரலாற்றுச் சான்றோடு கூடிய உணர்வுப் பெட்டகம்; தமிழரின் துன்பக் காலச் சுவடுகளை உணர்த்தும் இனச்சித்திரத் தொகுப்பும் ஆகும். இந்நூலில் இலங்கைத் தீவில் சிங்கள இனத்தவர் எவ்வாறு குடியேறினர் என்பதற்கான தொன்மக்கதைகளை அவர்கள் கூறும் விதத்தில் இட்டுச் சென்று, உண்மையில் தமிழர் தான் அந்த மண்ணின் பூர்வக்குடிகள் என்பதை நன்கு நிறுவுகிறார் ஆசிரியர்.
சிங்களர் சொல்லும் தொன்மக்கதைகள் நடைமுறைக்கு ஒத்துவராது எனினும், அவர்கள் சொல்வதில் திரட்டும் ஒரு வரி தான் தமிழர்களே பூர்வக்குடிகள் என்பதற்கான உறுதியான தத்துவச் சான்று என்பதை அவர் நன்கு கையாள்கிறார். இது நமக்குக் கூறப்படாமல் கூறப்படும் உண்மை. இந்நூல் தமிழர் வரலாற்றைப் பல பக்கவாட்களிலிருந்து ஆராயும் ஆழமான பார்வையுடன், ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஆணித்தரமான வரலாற்று ஆவணமாகவே அமைந்துள்ளது.
பிரித்தானியர் எவ்வாறு சிங்கள இனத்தவருக்கு ஆட்சியை ஒப்படைத்தனர், அதன் பின்னர் தமிழர் மீது நிகழ்ந்த சுரண்டல்களும், இனவெறிக் கொடூரங்களும், தமிழரின் உரிமை ஒடுக்கப்பட்ட வரலாறும், இந்நூலில் சுருங்காத சுவடுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன அழிப்பு நிலைமை எவ்வாறு உருவாகிறது? தமிழர் ஏன் அரசியல் வழியிலிருந்து ஆயுதப் பாதைக்கு நகர்கிறார்கள்? எவ்வாறு ஒரு இனத்தின் அடையாளமே நிலைக்க ஒவ்வாத சூழல் உருவாகிறது?
என்று தொடரும் கேள்விகளுக்குத் தெளிவான விளக்கங்களை இந்நூல் வழங்குகிறது.
அத்துடன் ஈழப் போராட்ட வரலாற்றில் முக்கியமான ஆளுமைகளான தோழர் செல்வா உள்ளிட்ட பலரைப் பற்றிய செய்திகளும், ஜெயவர்த்தனாவின் ஆட்சி காலத்திலான கொடூரச் சம்பவங்களும் சாட்சியங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நூலின் உருக்கமான பகுதி, மாவீரர் மேதகு பிரபாகரன் அவர்களின் இயக்கம் எவ்வாறு பிறந்தது என்பதையும் விளக்குகின்றது. வெறும் கற்பனை அல்லாமல் காலத்தின் கட்டாயம், அழிய முடியாத சான்றுகள், இனநேசத் துயரம், அனைத்தும் சேர்ந்து இப்பதிப்பு உணர்வு மிக்க வரலாற்றுப் புத்தகமாக உருமாறுகிறது.
இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் நிலைமை, இலங்கையிலும் தமிழர்கள் எதிர்கொள்ளும் வரலாற்று வலிகளை ஒத்திருக்கிறது என்பது இந்த நூலை வாசித்த பின் நம்மால் மறுக்கமுடியாத உண்மையாகப் புரிகிறது.
இந்த நூல் மற்ற புத்தகங்களைப் போல அல்ல. இது உண்மையை உண்மையாக்கிக் காட்டும் உண்மைச் சான்றுத் தொகுப்பு. எந்தவொரு பிம்பமுமின்றி, நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறே எடுத்துச் சொல்வதில்தான் இந்நூலின் பெருமை நிறைந்துள்ளது.
அதற்கான பழ. நெடுமாறனின் முன்னுரை இந்நூலுக்கு வழங்கிய உள்ளடக்கப் பெருமையை உறுதிப்படுத்தும் முத்திரையாக அமைகிறது.
இந்நூலை ஒவ்வொரு தமிழனும் வாசிக்கவேண்டும் என்பது எனது நெஞ்சார்ந்த வேண்டுகோள். ஏனெனில் இது ஒரு இனத்தின் நினைவடியாகவும், விழிப்புணர்வாகவும், தமக்கென வாழ வலியுறுத்தும் போராட்டக் குரலாகவும் விளங்குகிறது.