Akilan (Tamil: அகிலன்) was a Tamil author noted for his realistic and creative writing style. Akilan was a freedom fighter, novelist, short-story writer, journalist, satirist, travel writer, playwright, script-writer, orator and critic.He is also a children's novelist.
Early life
Akilan was the pen name of Akilandam, who was born on 27 June at Perungalore . He spent his childhood in a small hamlet called Perungalore near Pudukottai. His father Vaithiya Lingam Pillai was an accounts officer and adored his only son Akilan very much. Unfortunately, the boy lost his loving father at an early age. But his mother Amirthammal was a loving person, and being a creative person herself, she moulded her son into a writer. The author was attracted by Gandhian philosophy during his school days and he discontinued his college education at Pudukotai to join the freedom struggle. Later, after Indian independence, he joined the Railway Mail Service, after which he joined the AIR (All India Radio) and became a full fledged writer. His stories began to appear mostly in small magazines.
Awards won
In 1975 the novel Chitra pavai (சித்திர பாவை) won the prestigious Jnanpith Award.[1] This work of his has been translated in all Indian languages.In 1963 his historical novel Vengayin Mainthan (வேங்கையின் மைந்தன்) was awarded by Sahithya academy of Govt of India. Engepogirome a peculiar socio-political novel of his, won the Raja sir annamalai award in 1975. His children's book Kanana kannan won the special prize given by Tamil Nadu educational department. The author has written about 45 titles, most of which have been translated in all Indian state languages. Apart from this his works has been translated in other foreign languages such as English, German, Czech, Russian, Polish, Chinese, and Malay.
Historical novels
Vengayin maindan This is one of the famous works of Akilan, read by thousands and thousands of Tamilian's all over the globe. This historical fiction captures the history of chola dynasty. This book was dramatized by Late.Mr.Shivaji Ganesan on stage and was a huge hit.
In this novel, Akilan gives insight about the life and achievement of the great Rajendra Chola who was a Vengaiyin Maindhan to the rest of the world.[1] RajendraCholan is the son of Rajaraja Cholan and his period can be referred as the height of Tamil empire in art, literature and administration. He captured many countries including Indonesia (Kadaaram), Sri Lanka, Malaysia, southern and eastern coastal parts of India. He lived around 1010 AD and his dynasty had many business relationships with foreign countries. This novel depicts his victory over Kadaaram and the building of new city Gangaikonda Cholapuram upon his victory over northern part of India. The newly built temple and the city internally had so many architectural designs for war-time and peace activities. Along conquering the nations, Ilango Vel conquered the hearts of beautiful girls Arulmozhi and Rohini. Their love and affection was depicted in simple yet powerful words by Akilan. Vandhiya Thevan appears in this novel as an elderly counselor, who guides Rajendra Cholan in war and administration. Because of the narration and depiction of historic facts during Chola period using proper language there is no wonder this novel received the Sakithya Academy Award from Government of India. (Sakithya Academy award winning novel) Chola's historical novel Kayalvizhi. Tamil Nadu government award - Pandiya's historical novel-Akilan's Kayalvizhi is a gripping saga set in the Pandiya kingdom background.-Filmed by M.G.R as Madurai meeta sundarapandian. Vetrithirunagar- ( historical novel based on Vijayanagara Empire
Social novels
Chitrai Pavai. A contemporary social novel written by Akilan, who vividly brings Annamalai’s character to our eyes. The hero Annamalai’s calm and dreamy nature surely takes our mind. The ending of this novel was highly appreciated on those days and its simply the best.- Mr.
ஆசிரியர்: அகிலன் கதாபாத்திரங்கள்... சுந்தரபாண்டியன் //(( பைந்தமிழ் குமரன்) ),கயல்விழி, குலசேகரபாண்டியன்,கயல்விழி,குலோத்துங்க சோழர்,ராஜராஜன்,விழுப்பரையர்,ஜெயங்கொண்ட சோழ வல்லபர், பாமினி, வீர நரசிம்மர்,ஆதிச்ச தேவர்,உய்ய வந்தாள்,அழகியநம்பி,கோப்பெருத்தேவியார் மற்றும் பலர்.
கதை நடைபெறும் வரலாற்று பகுதிகள்: மதுரை,கங்கை கொண்ட சோழபுரம், கொடுங்குன்றம் ((பிரான்மலை)),திருமுனைப்பாடி.
கதை சுருக்கம்...
பாண்டிய நாடு குலசேகரபாண்டியரின் காலத்தில் சோழசாமராஜ்ஜியத்திற்கு திறை செலுத்தும் சிற்றரசாய் இருக்கிறது. சோழநாட்டின் பிரதிநிதியாகவும்,திறை பெறும் அதிகாரியாகவும் குலோத்துங்க சோழரால் நியமிக்கப்பட்ட ஜெயங்கொண்ட வல்லபர் இருந்து வருகிறான். என்னதான் பாண்டிய அரசுக்கு குலசேகரபாண்டியர் அரசராய் இருந்தாலும் சோழ ஆதிக்கம் இல்லாத சுதந்திர நாடாக வேண்டும் என்பது குலசேகரபாண்டியரின் விருப்பம். இது குலசேகரரின் தம்பி சுந்தரபாண்டியனுக்கு ஒருவித சுதந்திர வேட்கையாகவே இருந்து வருகிறது.சுந்தரபாண்டியன் சிறந்த வீரன். பாண்டிய மக்களால் போற்றப்படுபவன். குலசேகர பாண்டியர்-கோப்பெருந்தேவிக்கு குழந்தைகள் இல்லையென்றாலும், குலசேகரபாண்டியரின் தம்பியும் பாண்டிய இளவலுமான சுந்தரபாண்டியனையே தங்களது மகனாக எண்ணிப்போற்றுகின்றனர்.
சோழ சாம்ராஜ்ய குலோத்துங்கனின் மகனான மூன்றாம் ராஜராஜன் இதற்கு நேர் எதிரானவன். கோழை,பெண்பித்தன்,அரசாளும் நிர்வாக திறன் சிறிதும் இல்லாதவன். இது குலோத்துங்க சோழருக்கு மிகுந்த ஆத்திரமளிக்கிறது. சுந்தரபாண்டியனை போரில் எப்படியாவது கொல்ல வேண்டும் என்று திட்டமிடுகிறார்.
இந்நிலையில் குலோத்துங்க சோழர் தன் அதிகாரத்தில் இருக்கும்பாண்டிய நாட்டின் அரண்மனையில் வீராபிஷேகம் செய்து கொண்டு "சோழ பாண்டியர்" என்ற விருது பெற்றுக்கொண்டு, பாண்டி நாட்டை "சோழ பாண்டி மண்டலம் "என்றும் பெயரிடவிரும்பி, இதைதனது பாண்டிய நாட்டு பிரதிநிதி ஜெயங்கொண்ட வல்லபரிடம் தெரிவித்து தக்க ஏற்பாடுகள் செய்ய பணித்து, பாண்டியர்கள் இதற்கு இணங்கவில்லையென்றால் சோழநாடு பாண்டியநாட்டின் மீது போர் தொடுக்கும் என ஆணையிடுகிறார்.
குலசேகரபாண்டியர் இதற்கு ஒப்புக்கொண்டாலும் சுந்தரபாண்டியன் ஒப்புக்கொள்ள மறுக்கிறான். தன்மானம் இழந்து வாழ்வதைவிட போர்புரிந்து மடிந்து சாம்பலாவதே மேல் என்று சூளுரைக்கிறான். அந்த சாம்பலிலிருந்து புதுபாண்டியநாடு உதயமாகும் என்றும் வீரசபதம் செய்கிறான். குலோத்துங்க சோழரின் ஆணைக்கு கட்டுப்பட முடியாது,போர் முனையில் சந்திப்போம் என சோழப்பிரதிநிதி ஜெயங்கொண்ட சோழ வல்லவரிடம் தெரிவித்துவிடுகிறான்.
போர் துவங்குகிறது. சோழர்களின் கடல் போன்ற படைபலத்தை பாண்டியர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. குலசேகரபாண்டியர் கைது செய்யப்படுகிறர். மதுரை சூறையாடப்படுகிறது. பெண்கள் மானபங்கப்படுத்தபடுகின்றனர். போரில் சுந்தரபாண்டியன் கொல்லப்படுகிறான். குலோத்துங்க சோழர் சுந்தரபாண்டியன் வீழ்ந்ததால், கோழையான தன் மகன் ராஜராஜன் பிற்காலத்தில் அரசுரிமை ஏற்றால் அவனுக்கு இனி எதிரிகளே கிடையாது என்று கொக்கரிக்கிறார்.
ஆனால் உண்மையில் சுந்தரபாண்டியன் போரில் மரணமடையவில்லை. விழுப்பறையர் என்ற புலவரும், குலசேகரபாண்டியரின் அமைச்சரும் தன் மகன் அழகியமணவாளனை சுந்தரபாண்டியனைப் போன்றே உடையணிவித்து போரில் களமிறக்குகிறார். சோழர்கள் அவன்தான் சுந்தரபாண்டியன் என நினைத்து அவனை சாய்க்கிறார்கள். உயிர் காக்கப்பட்ட சுந்தரபாண்டியன் உடலிலும்,மார்பிலும் எண்ணற்ற வீரப்புண்கள் அடைந்த நிலையில் விழுப்பறையின் கண்காணிப்பில் மருத்துவர்களின் தீவிர கண்காணிக்கபடுகிறான்.
தன் உடல்நிலையும் பொருட்படுத்தாது மதுரையின் நிலையை கண்காணித்துவர செல்கிறபோது,வைகை ஆற்றில் தற்கொலை செய்துகொள்ள வரும் "கயல்விழி" என்ற பாணர் குல நாட்டிய பெண்ணை சந்திக்கிறான். தன்னை சுந்தரபாண்டியன் என காட்டிக்கொள்ளாமல் தான் ஒரு புலவன் என்றும் தன் பெயர் "பைந்தமிழ்க் குமரன்" என்றும் தெரிவிக்கிறான். எப்படியாவது பாண்டிய நாட்டை விடுவிப்பேன் என்று கயல்விழியிடம் உறுதி அளித்து அவளை தற்கொலையிலிருந்து காத்து தம்முடன் அழைத்துச்செல்கிறான்.
கயல்விழி,விழுப்பறையர் சுந்தரபாண்டியன் ஆகிய மூவரும் மதுரையிலிருந்து அருகாமையில் உள்ள கொடுங்குன்றம் என்ற மலைசூழ் பகுதிக்கு செல்கின்றனர்.அந்த மலையின் இன்னொரு பக்கத்தில் பாண்டிய மன்னர் குலசேகரபாண்டியரும் மறைந்து வாழ்கிறார். தன் தம்பியை போரில் இழந்ததால் மனம் நொந்து உடல் நலிவுடன் இருக்கிறார். விழுப்பறையர் சுந்தரபாண்டியன் தன்னால் காப்பாற்றப்பட்ட செய்தியை குலசேகரபாண்டியரிடம் தக்க சமயத்தில் தெரிவிக்க நினைக்கிறர்.
கொடுங்குன்றத்தில் சுந்தரபாண்டியன் "பைந்தமிழ் குமரனாக" புரட்சிக் கவிஞராக உருவாகிறான். வள்ளுவரையும்,கம்பரையும் நன்கு கற்று, தன்னுடைய நண்பனின் காதலி சோழ வீரர்களால் மானபங்கப்படுத்தப்பட்டு தீக்குளித்த உண்மை நிகழ்வை குறவை கூத்தாக உருவாக்குகிறான். கயல்விழியின் நாட்டியத்துடன் பாண்டிய நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் அரங்கேற்றுகிறான் சுந்தரபாண்டியன். பைந்தமிழ்க்குரன்தான் பாண்டிய இளவல் சுந்தரபாண்டியன் என அறியாத கயல்விழி சுந்தரபாண்டியனை உயிராய் காதலிக்கிறாள். சுந்தரபாண்டியனும் கயல்விழியை நேசிப்பதோடு மட்டுமல்லாமல் பாண்டிய நாடு சோழ ஆதிக்கத்திலிருநது விடுதலையடைந்தால் கயல்விழியை பாண்டிய இளவரசியாக்குவதென மானசீகமாய் கொடுங்குன்றத்துக் கோவிலில் வேண்டிக்கொள்கிறான்.
கயல்விழியின் ஆவேசமான நடனம் மற்றும் பைந்தமிழ் குமரனின் பாடல் ஆகியன பாண்டிய நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பு பெறுகிறது. அந்த கண்ணீர் கதையை கூத்தாக காணும் ஒவ்வொருவரும் வெகுண்டெழுந்து பாண்டிய நாடு உரிமை அடையவும்,போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்யவும் பொன்னையும் மணியையும் அள்ளி வழங்குகின்றார்கள்.இது குலோத்துங்க சோழருக்கும் பைந்தமிழ் குமரனை பற்றிய தகவல் எட்டுகிறது அவனை திறமையை நேரில் கண்டு பரிசளிப்பதாக அழைத்து பைந்தமிழ்குமரனை தந்திரமாக சிறை செய்கிறார் குலோத்துங்கர். சுந்தரபாண்டியன் அங்கிருந்து தப்புகிறான். குலோத்துங்க சோழர் அரண்மனையில் அவரது நெருங்கிய உறவினருமான கோசல நாட்டு அரசன் வீரநரசிம்மரையும் அவரது புதல்வி பாமினியையும் சந்திக்கிறான் பைந்தமிழ் குமரன்.பாமினி பைந்தமிழ் குமரனிட ம் தன் உள்ளத்தை பறிகொடுக்கிறாள்
பின்னர் பைந்தமிழ் குமரன் ஏலமலை சென்று சோழர்களுக்கெதிராக பெரும் படை திரட்டுகிறான். மதுரை சோழர்களால் சூரையாடப்பட்டபோது கயல்விழிமேல் ஆசை கொண்ட ராஜராஜன், கயல்விழியை கடத்த முயலவே விழுப்பறையர் துணையுடன் அவளும் ஏலமலையையை அடைகிறாள். பைந்தமிழ் குமரனை சோழ பிரதிநிதி ஜெயங்கொண்ட வல்லபர் பாண்டிய அண்மனையில் சோழத்தலைகரிலிருந்து தப்பியதற்காகவும்,பாண்டிய மக்களை புரட்சிப் கவிதைகளால் தூண்டி விட்ட குற்றத்திற்காக கைது செய்ய முற்படும் போது பைந்தமிழ் குமரன் தான்தான் சுந்தரபாண்டியன் என அறிவிக்கிறான்.
தன்னால் தனிமனிதனாக திரட்டிய பெரும்படையுடன் சுந்தரபாண்டியன் சோழநாட்டின் மீது போர்தொடுக்கிறான். வயது முதிர்வாலும், தன் மகன் ராஜராஜன் அரசாள முடியாத கோழையாய் இருப்பதால் உண்டான மனவலியாலும், பைந்தமிழ்க்குமரன் கங்கைகொண்ட சோழபுரத்திற��கு வந்துகொண்டிருக்கும்போதே மரணமடைகிறார் குலோத்துங்க சோழர். பைந்தமிழ்குமரன் உறையூர்,பழையாறை, மற்றும் சோணாட்டின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுறத்தையும் வீழ்த்தி, ராஜராஜனையும்l சிறைப்படுத்துகிறான். விஜயாலய சோழனால் தோற்றுவிக்கப்பட் சோழ சாம்ராஜ்யம் முற்றுப்பெருகிறது.
போரில் தோற்ற ராஜராஜன், பாண்டியருக்கு அடங்க மறுத்து கோசல நாட்டு மன்னர் வீர நரசிம்மரின் உதவியை நாடுகிறான். வீரநரசிம்மரும் தனது நட்பு நாடான சோழ நாடு தோற்கடிக்கப்பட்டதை கண்டு பெரும்படையுடன் பாண்டிய நாடு நோக்கிவருகிறார். இரு படைகளும் நேருக்கு நேர் சந்திக்கும்போது கயல்விழி, துணிவுடன் கோசலநாட்டு இளவரசி பாமினி, சுந்தரபாண்டியனை விரும்புவதாகவும் இந்த திருமணம் நடைபெற்றால் இனி பாண்டிநாட்டிற்கு போர் அபாயமே இருக்காது என்று கூற, வீரநரசிம்மரும் இந்த யோசனையை ஏற்று "சுந்தரபாண்டியன்-பாமினி" திருமணத்தை நடத்துகிறார். பாண்டிய நாட்டில் இன்னோர் பெரும் போர் தவிர்க்கப்பட்டு அமைதி நிலவுகிறது.
பாண்டிய அரண்மனையில் குலசேகர பாண்டியர், சுந்தரபாண்டியனின் புகழ் பெற்ற குறவை கூத்தை, கயல்விழி நாட்டியத்துடன் காண விரும்புகிறார். ஆவேசமாக ஆடும் கயல்விழி ஆடிக்கொண்டிருக்கும்போதே வீரசொர்க்கம் அடைகிறாள்.அதிர்ச்சி அடைந்து அவளை மடியில் கிடத்தி கதறும் சுந்தரபாண்டியனிடம்,விழுப்பறையர் குறவைக்கூத்தில் இடம்பெற்றது போன்றே கயல்விழி, மதுரை மாநகர் சோழர்களால் வெல்லப்பட்டபோது ராஜராஜனிடம் களங்கப்பட்டுவிட்டதாகவும்,அதனாலேயே வைகையாற்றில் குதித்துuo தற்கொலைக்கு முயன்று பின் சுந்தரபாண்டியனால் காப்பாற்றப்பட்ட ரகசியத்தை தெரிவிக்கிறார்.
சுந்தரபாண்டியன் பாண்டிய நாட்டை,கயல்விழியை கொற்றவை தெய்வமாக எண்ணி வழிபட்bடு ஆட்சி செலுத்துகிறான்.போர் பயமின்றி பாண்டியநாடு அமைதியுடன் செழிப்படைகிறது.
என்னுரை: தமிழக சரித்திரம் என்றாலே,சோழர்கள்தாம் கதைக்களம் என்பதை மாற்றியமைத்துள்ளார் அகிலன். பாண்டிய நாட்டை மீண்டும் உயிர்த்தெழச்செய்த சுந்தரபாண்டியன் எனும் பாண்டிய இளவலைபற்றியும், அவனது வேள்வியில் துணை நின்ற "கயல் விழி" எனும் பாணர் குல நாட்டிய பெண்ணைப்பற்றியும்,அழகாகவும்,சுவைபடவும் கூறியுள்ளார் அகிலன். நாவல் முழுவதும் திருவள்ளுவரையும்,கம்பரையும் உரி ய இடத்தில் பயன்படுத்தியுள்ளார் அகிலன். இந்த கதை திரைப்படமாக்கப்பட்டாலும் புதினத்தின் சுவையில் நூற்றிலொரு பங்கைக்கூட திரைப்படத்தால் கொடுக்க இயலவில்லை. கொடுங்குன்றத்தில் சுந்தரபாண்டியன் பைந்தமிழ்குமரனாய் மாறும் நிகழ்வு, கயல்விழியின் காதல் மற்றும் இறுதியில் நாட்டுக்காக தன் காதலை தியாகம் செய்யும் இடங்கள் ஆகியன அருமையாக ஆசிரியரால் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கயல் விழி... திரு அகிலனின் எழுத்தும் கற்பனையும் கலந்த வரலாற்றுக் கதை. இந்தக் கதைப் பாண்டிய மன்னரையும் மற்றும் சுந்தரபாண்டியன் எப்படி பாண்டிய நாட்டை; அதாவது காலம் காலமாய்ச் சோழர்களிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் மதுரையை எப்படிப் போராடி மீட்டேடுக்கிறான் மற்றும் சோழப்பேர்ரசை எப்படி வெற்றிக் கொள்கிறான் என்பதை கூறுவது.
கதையின் முற்பகுதியில் பாண்டிய நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் விழுப்பரையரின் மகன் மற்றும் மகனின் காதலைப் பற்று நளினமாக எடுத்துச் சொல்லியிருப்பார் எழுத்தாளர்.
விழுப்பரையரின் மகன்( ஆலவாய் நம்பிக்கும்), அவனது காதலி உய்யவந்தாளின் காதலை அழகாக்க எடுத்துரைத்திருப்பார்ப் படைப்பாளியான திரு அகிலன் அவர்கள்.
கதை நகர்ந்துச் செல்லச் செல்ல நாயகன் நாயகியின் அறிமுகமும் அருமையாகச் சுவாரசியம் குறையாமல் நமக்குப் புரியவைத்திருப்பார்.
நாயகனின் பெயர்(பைந்தமிழ்க் குமரன்) & நாயகியின் பெயரோ( கயல் விழி) யார் இந்தப் பைந்தமிழ்க் குமரன்? குலசேகரப் பாண்டியரின் தம்பி இளவரசர் (சுந்தரப் பாண்டியன்) தான். பின் யார் இந்தக் கயல் விழி? இவள் ஒரு பாணர்க் குலப் பெண்மணி.
எழுத்தாளர் இவர்களுக்கிடையே இருந்த காதலை அவரது கற்பனையுடன் கலந்து அழகிய கலைநயத்துடன்கூறியிருப்பார். அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் அனைத்தும் அற்புதமாகச் செல்லியிருப்பார்.
எப்படிப் பைந்தமிழ்க் குமரன் தனது நாட்டு மக்களை ஒன்று சேர்த்து, அவர்களுக்கு எப்படிப் போர்ப் பய்ர்ச்சி கொடுக்கிறான் என்பதை உணர்ச்சிப்பொங்க எடுத்துரைத்திருப்பார்.
பைந்தமிழ்க் குமரன் என்ற (சுந்தரப் பாண்டியன்) சோழப்பேர்ரசை வெற்றிக் கொள்கிறாரா? மதுரையை மீட்டாரா?பைந்தமிழ்க் குமரன் மற்றும் கயல் விழி எண்ணானார்கள்? என்பதை இந்த வரலாற்றுப் புதினத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
எழுத்தாளரின் கைவண்ணம் வெகு அருமையாக வெளியாயிருக்கு இந்தக் கதையின் மூலமாக. பாலமுருகன். லோ
This is an amazing book! Every line will induce the hidden bravery in us. There are so many books to glorify the Cholas! But not many to insist on the greatness of Pandyas. If anyone believes in the might of the Pandya kingdom and wish to go on an journey with the Pandyas then this book must be in your wishlist!
May it be the defeat or victory in war, Sundarapandian has handled it beautifully which makes him mark an everlasting impression in our hearts. The wait for 300 years was worthy for the Pandyan kingdom :) Prince Sundarapandian, a warrior, a saviour, remains as beloved too for Kayalvizhi readers.
Aalavaainambi and Uyavanthaal, has impressed me a lot with their love and patriotism though they come only for 2 or 3 chapters :) Another important character is Vizhupurayar. His patriotism will definitely make you shed a tear.
Last but not the least, I have to mention Kayalvizhi, the heroine of our story. She is amazing. Her artistic talent, bravery and love for Sundarapandian makes her memorable and she keeps hovering around our thoughts even after finishing this book.
Thank you so much Akilan for giving us this wonderful novel :)
மூவேந்தர்களில் எப்போதும் போற்றிப் புகழப்படும் சோழர்களைப் பற்றிய புத்தகம் அல்ல இது.
பாண்டியர்களைப் பற்றியும் அவர்களது வீரம் மற்றும் பண்பை பற்றியும், இதுவரை கண்டும் கேட்டும் இராத இராஜராஜ சோழன் பற்றியும், மன்னர்களின் போர் மாண்பையும், வெற்றி மட்டுமே இலக்காய்க் கொண்டு பொன், பொருள், பதவி, அதிகாரம் ஆகிய அனைத்தையும் பறித்து எதிரி நாட்டு மன்னனை நிர்மூலமாக்கும் எண்ணத்தால் பாதிக்கப்படும் நாட்டு மக்களைப் பற்றியும், போரால் கணவனை, மகனை, காதலனை இழந்து ஆதரவற்றவர்களாக்கப் படுவோர் பற்றியும், போரற்ற அமைதியான வாழ்க்கைக்கு ஏங்கிய உள்ளங்களையும்..,
மன்னனின் மாண்பு, மக்களின் மாண்பு, மொழிப்பற்று, கொடை, நம்பிக்கை, அன்பு, காதல், வீரம், தியாகம் என பல பரிமானங்களில் சுந்தரபாண்டியனைப் பற்றியும் அவர் ஆட்சிப் புரிந்த மதுரை மாநகரையும், மக்களையும் அவர்களுக்கு உண்டான இன்னல்களையும், பட்டப் போராட்டங்களையும், பெற்ற எழுச்சியையும் அத்துடன் கம்பர், வள்ளுவர் மற்றும் பல தமிழ் இலக்கிய மேற்க்கோள்களுடன் அகிலன் அவர்கள் மிகச் செறிவாய் இப்படைப்பைத் தந்துள்ளார்.
Excellent story line by Akilan, one can read if he is interested in Pandya dynasty. I'm always admiring Pandyas , though we don't have lot of inscriptions about them , Author like Akilan put effort and made the book , Buy it read it . Akilan always Great .
Having read 2 books from Akilan, I have started to like his writing. His writings are similar to Kalki and he has an art of using the language to the best of his advantage, the scenes, characters, places, expressions, emotions, storyline.
This book was unique in the sense, all my previous readings were centered around Chola kings and their glory, but this one for a change was about Pandya kings. I haven't come across too many books glorifying Pandya kings. Story was slow to start with but eventually picked up and had twists till the end. However, there was nothing exceptional about the storyline itself.
Overall, a good read if you like to read historic stories in tamil.
இது எழுத்தாளர் அகிலனின் மிகச்சிறந்த படைப்புகளுள் ஒன்று. இரண்டாம் சோழ மறுமலச்சியால் அடிமைப்படுத்தப்பட்ட பாண்டியாநாடு எவ்வாறு பாண்டிய இளவரசன் சுந்தரபாண்டியன் தலமையில் மீண்டும் தன்னுரிமை அடைந்தது என்பது பற்றிய வீரவரலாறு கூறும் நூலாகும். கயல்விழியுடன் குதித்தாடி, பைந்தமிழ்குமரனுடன் கவிபாடி, சுந்தரபாண்டியனுடன் வாள்பிடித்து, விழுபரையருடன் தியாகம்செய்து... அப்பப்பா, நாவலை படித்து முடிக்கும் போது மனதில் உண்டாகும் கனம் என்னை சில நாட்கள் பாண்டிய தேசத்திலேயே கட்டிவைத்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
The painthamizh kumaran's character is the best tamizhan, his character is always liked by the girls.because of my son name is painthamizh kumaran,due to thiru akilan iyya avargal. Fantastic book.