1காதல்களைக் கடந்துவருகிறேன்.“நீயே என் கடைசி”என்பதானபழைய வசனங்கள்என்னையும் பிணைத்திருந்தன—அந்தக் கலைஞனைசந்திக்கும் வரை. ஒரு வேடம் களையும்போதுபழைய மண்ணின் தடம்அறவே அகல வேண்டும்,மணமும் மறைய வேண்டும்,புதிதாய்ப் பிறந்தவனாய்நிற்க வேண்டுமெனஅவன் சொன்னான். 2அவ்வண்ணமேஒருத்தியை செல்லமென,மற்றவளை மலரென,ஒருத்தியை மயிலென,இன்னொருத்தியை முத்தெனவேறு வேறு நிறங்களில்அழைக்கத் தொடங்கினேன். “நீயே கடைசி” என்பதைமனதில் கூட வைக்கவில்லை.3நேற்றின் பாரத்தைநாளையின் பதற்றத்தைகழற்றி வீசி,இந்தக் கணத்தைசுவாசித்துஆழ்கிறேன் ReplyForwardAdd reaction
Published on May 12, 2025 08:10