கதைகளின் ஆழ்படிமங்கள்

மணிகண்டன்

ஐந்து வருட மௌனம் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் உங்களுக்கு எழுதுகிறேன்.

இக்கதைகள் மொத்தமாய்க் குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்கிறன. இக்கதைகளின் நாயக நாயகியர் வாழ்வின் பாரத்தை மௌனமாகச் சுமப்பவர்கள், அனைத்து விஷயங்களுக்கும் தார்மீக பொறுப்பேற்பவர்கள்,பழையவற்றில் சிலதை விடாது பிடித்துக் கொண்டிருப்பவர்கள்

சிறிய வைராக்கியங்கள் நிறைய உடையவர்கள் , சிறிய விஷயங்களிலேயே நிறைவை காண்பவர்கள், தனித்துவமிக்கக் குணாதிசயம் வழி துயர் மிகு வாழ்வை கடப்பவர்கள். நீங்கள் அவர்களது வாழ்வை எழுதியிருக்கும் விதத்தில் அவர்களிடம் பெரிய குற்றச்சாட்டோ பரிதாபமோ இல்லை , சிறிய சலிப்புடன் தங்கள் வாழ்வின் பாரத்தைச் சுமக்க தெரிந்தவர்கள், உங்கள் எழுத்து வழி கையறு வாழ்விலும் உறுதியான மனம் படைத்தவர்களின் கதைகளாக அமைந்துள்ளது இந்தத் தொகுப்பு.

‘துயரம் பொறுத்தலும்’ ‘மாறிக்கொண்டே இருக்கும் காலம்’ குறித்த பிரக்ஞையும் தங்கள் கதைகளின் ஆழ்படிமங்கள். உங்கள் கதைகளின் கலை வெற்றிகள் எவை என்று கேட்டால் இவை இரண்டையும் கூறுவேன்.

இவற்றைத் தாண்டி இத்தகையவர்களின் கதைகளைக் கூறும் தங்களைப் போன்ற எழுத்தாளுமையின் பரிவு அளிக்கும் ஆசுவாசம் இன்றியமையாதது, பாரம் சுமப்பவர்கள் இளைப்பாற தங்கள் கதைகள் ஒரு சுமைதாங்கியாக இருந்து வருகின்றன.நீ மௌனமாய்த் துயரப்படுவதை நான் அறிவேன் என்னும் பரிவு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2024 03:04
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.