தமிழ்க் கவிஞர்களில் கவிதைக்காரன் இளங்கோ தனித்துவமானவர். அபத்தங்களின் வழியாக வாழ்வின் இயல்பை கண்டடையும் தருணங்களை ஏராளமான கவிதைகளில் எழுதியிருக்கிறார். தத்துவ விசாரணைகளை சித்திரங்களாக ஆக்கி, அதனை ஒரு விளையாட்டாக மாற்றுகிறார். அரூபங்களையும், மாற்று மெய்மைகளையும், நிகழ்தகவுகளையும் தமிழ்க் கவிதையில் பரிசோதித்து பார்ப்பதில் கவிதைக்காரன் இளங்கோ சமகாலத்தில் முக்கியமானவர். அவதானிக்கப்படவேண்டிய தமிழ்க் கவி.
“வரலாறு கழுவப்படுகிறது
வரலாறு கழுவில் இருக்கிறது” என்ற அவரின் கவிதை வரிகள் எப்போதும் என் நினைவில் நிற்கும்.
கவிதைக்காரன் இளங்கோ – கவிதைகள்
The post கவிஞர் கவிதைக்காரன் இளங்கோ first appeared on அகரமுதல்வன்.
Published on January 28, 2024 10:16