குரு நித்யா காவிய முகாம் நித்ய சைதன்ய யதி வாழ்ந்த காலத்திலேயே தொடங்கப்பட்டது. அவருடைய மறைவுக்குப்பின் 1999 முதல் தொடர்ச்சியாக ஊட்டி குருகுலத்தில் நடைபெற்றது. தமிழ் – மலையாளக் கவிதைகளுக்கான உரையாடலாக தொடங்கப்பட்டமையால் அப்பெயர் பெற்றது
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் உருவான பின்னர் 2010 முதல் இலக்கிய கூடுகையாக நடைபெறத்தொடங்கியது. கோவிட் தொற்று தொடங்கியபின் 2020, 2021, 2022 ஆண்டுகளில் நடைபெறவில்லை.
இப்போது மே இரண்டாம் வாரம் 12, 13 மற்றும் 14 தேதிகளில் (வெள்ளி,சனி, ஞாயிறு) ஈரோடு அருகே மலையில் அதை மீண்டும் தொடங்கி நடத்தலாமென நினைக்கிறோம்.
பங்கேற்க ஆர்முள்ளவர்கள் programsvishnupuram@gmail.com என்னும் விலாசத்திற்கு எழுதலாம்
முன்னரே பதிவுசெய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பெயர்
வயது
ஊர்
தொலைபேசி எண்
ஆகியவற்றை மின்னஞ்சலில் குறிப்பிடவேண்டும்
ஜெ
Published on April 27, 2023 11:30