கலைஞனின் வற்றாத தன்னம்பிக்கையின் சின்னம் மனோகர் தேவதாஸ். உடல், சூழல் எதுவும் மெய்யான கலையின் விசையை குறைப்பதில்லை. மாறாக பலசமயம் கலைஞன் எதிர்ச்சூழ்நிலைகளில் கலையை அள்ளிப்பற்றிக்கொண்டு பலமடங்கு விசையுடன் வெளிப்படுகிறான். விழியிழந்தபின் மனோகர் தேவதாஸ் வரைந்த, அவர் இளமையில் பார்த்த மதுரையின் கோட்டோவியங்கள் படைப்புநினைவு எங்கே உள்ளது என்று காட்டுபவை. கனவில். இங்குள்ள எல்லாமே கனவென மட்டுமே கலைஞனுக்குப் பொருள்படுகின்றன
Published on December 07, 2022 01:48