துப்பறிதல், கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் மின்னூல் வாங்க ஜெயமோகன் நூல்கள் வாங்க பத்துலட்சம் காலடிகள் வாங்க

அன்புள்ள ஜெ

பத்துலட்சம் காலடிகள் கதைகளை இப்போதுதான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஔசேப்பச்சன் கதாபாத்திரம் அதற்குப்பிறகு மற்ற கதைகளில் வரவில்லை என்பது ஓர் இழப்புதான். நீங்கள் அதை தொடர்ச்சியாக எழுதவேண்டுமென விரும்புகிறேன்.

அந்தக்கதைகள் எல்லாமே துப்பறியும் கதை பாணியில் அமைந்தவை. ஆனால் எல்லா கதைகளுமே மனித மனதையும் வரலாற்றையும்தான் ஆழமாக ஆராய்கின்றன. எல்லாமே குற்றம் என்பதன் மனநிலைக்குள்ளும் வரலாற்றுக்குள்ளும் செல்கின்றன.

ஆனால் ஔசேப்பச்சன் அதைப் பற்றி அக்கறையே படாதவராக இருக்கிறார். அவர் போகிறபோக்கில் நையாண்டியும் நக்கலுமாக அதைச் சொல்கிறார். அந்த தீவிரமான கதையே ஒரு குடி அரட்டையில் சொல்லப்படுகிறது. இந்த விசித்திரமான கலவைதான் இந்தக்கதைகளின் அழகு என படுகிறது.

அன்புடன்

சந்திரகுமார்

***

அன்புள்ள ஜெ

பத்துலட்சம் காலடிகள் துப்பறியும் கதைகள் மிக நன்றாக இருந்தன. துப்பறிதலை விரிவாக, பல படிகளாகச் சொல்கின்றன. கூடவே துப்பறிவதிலுள்ள தியரியையும் சொல்கின்றன. சுவரசியமான கதைகள்.

பாண்டியராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.