தமிழ் எங்கள் உயிர்நிதி

[image error]

மலேசியாவில் தமிழர்கள், குறிப்பாக அடித்தளத் தமிழர்கள் நடுவே தமிழ் சார்ந்த ஒரு மிகையுணர்வு உண்டு. நான் முதலில் மலேசியா சென்றபோது சங்ககாலம் 2200 ஆண்டுகள் தொன்மையானது என்று சொன்னபோது ஒருவர் மேடைக்கு வந்து கொதிப்புடன் என்னை அவர் அடிக்காமல் விடுவது நான் விருந்தினர் என்பதனால்தான் என்றார். சங்க இலக்கியம் ஐந்து லட்சம் ஆண்டுகள் தொன்மையானது என்பது அவருடைய கருத்து. இன்றைக்கும் தேவநேயப் பாவாணரின் கால ஆராய்ச்சியை தலைக்கொண்டு திருக்குறள் பத்தாயிரம் ஆண்டு பழமையானது என நம்பும் மக்கள் ஏராளம்.

ஆனால் அதற்கான காரணம் அவர்களின் வரலாற்றில் உள்ளது. அங்கே குடியேறிய தமிழ் மக்கள் அந்நிலத்தில் தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்த கடுமையாக போராடியிருக்கிறார்கள். சாதிமத வேறுபாடுகளைக் கடந்து அவர்களை ஒருங்கிணைக்கும் அடையாளமாக தமிழ் இருந்துள்ளது. அன்று ‘நியூக்ளியர் மைனாரிட்டி’களாக இருந்த மலையாளிகள் தங்களை தமிழர்களுடன் இணைத்துக்கொண்டு காலப்போக்கில் தமிழர்களாகவே ஆகிவிட்டனர். அங்கே நான் சந்தித்த பல முக்கியமான விவிஐபிக்களின் வீட்டில் அவர்களின் பூர்விகம் மலையாளம் என அறிந்தேன்

 தமிழ் எங்கள் உயிர்நிதி – வரலாறு தமிழ் எங்கள் உயிர் நிதி வரலாறு தமிழ் எங்கள் உயிர் நிதி வரலாறு – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 18, 2022 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.