[image error]
வெளியே பொதுவாசகர்களுக்கோ உள்ளே இலக்கியவாதிகளுக்கோ அதிகம் தெரியாத ஓர் உலகம் தமிழில் செயல்பட்டுவரும் கிறிஸ்தவ இலக்கிய இயக்க்கம். கிறிஸ்தவ இலட்சியவாதம் ஒன்றை முன்வைப்பது. பெரும்பாலும் போதனைத்தன்மை கொண்டது. அந்த எழுத்துவகைமையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர் ஆர்.எஸ்.ஜேக்கப். நான் அவருடைய நூல்களை என் புகுமுக வகுப்பு நாட்களில் மார்த்தாண்டம் (நேசமணி நினைவு) கிறிஸ்தவக்கல்லூரியில் அன்றிருந்த அபாரமான நூலகத்தில் இருந்து வாசித்திருக்கிறேன். அன்று அவருக்கு ஒரு கடிதமும் எழுதி பதில் பெற்றிருக்கிறேன்
ஆர் எஸ். ஜேக்கப்
ஆர்.எஸ். ஜேக்கப் – தமிழ் விக்கி
Published on November 09, 2022 10:34