சாம்ராஜும் சினிமாவும்

அன்பு நிறை ஆசான் அவர்களுக்கு,

எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு..தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்…அது போல ,இந்த சமூக ஊடக உலகத்தில்,அலைபேசி வைத்திருப்பவன் எல்லாம் விமர்சகர்கள் ஆகிவிட்டனர்… யூட்யூப் தளத்திற்கு சென்றால் ,பல்வேறு வகையான விமர்சனம்..தாங்க முடியவில்லை…இந்த அபத்த உலகில்,அத்தி பூத்தார்போல,சில விதிவிலக்குகள் உண்டுதானே..

தற்பொழுது நடந்த ,சிவரஞ்சனியும்,சில பெண்களும் திரை விமர்சனம் சொற்பொழிவுகளை கேட்டேன்…அத்திப் பூக்களை காணும் பாக்கியம் கிடைத்தது.. எழுத்தாளர் அருண்மொழி பற்றி ஏற்கெனவே பலபேர் கூறிவிட்டதால்,சாம்ராஜ் உரையினைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிட்டே ஆகவேண்டும்..மிகச் செறிவான உரை..சினிமாவை நேசிப்பவர்,எழுத்தாளராக மேலும் கவிஞராக இருத்தல் கூடுதல் சிறப்பு…உரையை மேற்கோள் கொண்டு தொடங்கி, நல்ல இலக்கியம் சினிமாவில் என்ன பாடுபடும் என்பதை சுஜாதாவின் புத்தகத்திலிருந்து சில சம்பவங்களை குறிப்பிட்டு ,சாய் வசந்தின் மூன்று கதைகளை சினிமா மொழியில் காட்சியப் படுத்தியதை விளக்கி சென்றது அருமை..குறிப்பாக அ.மி யின் விமோசனம் கதையின் திரைமொழியில் நாம் கவனிக்க தவறிய காட்சிகளை குறித்து பேசியது மிக நன்றாக இருந்தது..சாம்ராஜ் சினிமா உலகில் வாழ்பவர்…எந்த அளவுக்கு நேசிப்பவர் என்பதை உரையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது..

அவர் எழுதிய மலையாளத் திரைப்படங்கள் விமர்சன தொகுப்பு புத்தகம்  நிலைக் கண்ணாடியுடன் பேசுபவன் ,தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான திரை விமர்சனம் புத்தகம்..விமர்சனம் என்பதை விட திரை ஆராய்ச்சி கட்டுரை என்றே சொல்வேன்..குறிப்பாக ரஞ்சித் (மலையாள ) இயக்கத்தில் வெளிவந்த படங்களை பற்றிய குறிப்புகள்,ஒரு திரை விமர்சனக் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழில் உள்ள நல்ல உதாரணங்கள் ( என்னுடைய சிறு வாசிப்பு அனுபவத்தில் )

அந்த புத்தகத்தை பற்றிய எனது குறிப்பு

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்

நன்றி

ஆனந்தன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.