தமிழில் தொடக்ககால இலக்கிய வரலாறுகள் பலவற்றில் கிருபா சத்தியநாதன் தமிழின் தொடக்ககாலப் பெண் எழுத்தாளராகக் குறிப்பிடப்பட்டிருந்தார். அந்த அளவுக்கு அவருடைய இரு நாவல்களும் தமிழ்த்தன்மை கொண்டவை. ஆனால் அவை ஆங்கில நாவல்கள், தமிழில் சாமுவேல் பவுல் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டவை.
அன்று அவை கிறிஸ்தவரால் மொழியாக்கம் செய்யப்பட்டன, இன்று எனில் நடந்திருக்காது. ஏனென்றால் அவை இலக்கியப்படைப்புகள். பிரச்சாரப்படைப்புகள் அல்ல. இந்துப்பெண்களின் அவலநிலையைச் சொல்லும்போதே மதம் மாறி கிறிஸ்தவர்களாகி வெள்ளையர்களுடன் பழகநேரும்போது அவர்களிடமிருந்து சந்திக்கநேரும் இனவெறியையும் விவரிப்பவை.
தேவதைபோல வந்து செல்லும் ஒருசில வாழ்க்கைகள் உண்டு. கிருபாவின் வாழ்க்கை அத்தகையது
கிருபா சத்தியநாதன்
கிருபா சத்தியநாதன் – தமிழ் விக்கி
Published on September 28, 2022 11:34