மலைக்குன்றுகள் நிறைந்த பிரதேசத்தில் பல உடைந்த கோவில்களும் இடிந்த கட்டிடங்களும் இருந்தன . அமெரிக்கர்கள் விமானத்திலிருந்து குண்டு வீசி உடைந்த கட்டிடங்கள். அந்தக் குண்டுகள் ஏற்படுத்திய பள்ளங்கள் தெரிந்தன . அங்குள்ள கட்டிட அமைப்பு, இந்து தெய்வங்களின் சிலைகள் எல்லாம் ஒரு மகோன்னதமான கலைஞர்கள் தங்கள் கலைத் திறமைகளை வெளிக்காட்டிய இடம் என நினைக்கவைத்தது. அங்குள்ள மியூசியத்தில் வரைபடங்கள் வைக்கட்டுள்ளன. சிலைகள் நகரத்திலுள்ளன. அத்துடன் அப்சரா நடனம் மற்றும் சங்கீத கலை நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. தற்பொழுது இந்திய அரசின் உதவியுடன் மீள் அகழ்வுகள் நடக்கின்றன.
வியட்நாமின், சம்பா இந்து அரசு
Published on September 23, 2022 11:31