ஆதிவண் சடகோபன் என்ற பெயர் தமிழகத்தில் வைணவர்கள் அல்லாதவர்கள் பெரும்பாலும் எவருக்குமே தெரிந்திருக்காது. ஆனால் ஆழ்வார்திருநகரி முதல் திருப்பதி வரை தமிழ்நிலத்திலுள்ள ஏறத்தாழ எல்லா வைணவப்பேராலயங்களும் நாம் இன்று காணும் நிலையில் எழ அவரே காரணமானவர். அக்கோயில்களை ஒட்டியே தமிழகத்தின் பண்பாடு, பொருளியல் வளர்ச்சியில் பெரும்பகுதி பதிநான்காம் நூற்றாண்டுமுதல் நிகழ்ந்தது.
அவர் கதையில் ஓர் அழகிய தருணம், ஒரு துறவியின் கையில் குழந்தையாக துள்ளி ஏறிக்கொண்டார் பெருமாள். பெருமாள் அல்ல, நரசிம்மர். சிங்கக்குட்டி. தன்னை தமிழகமெங்கும் கொண்டுசெல் என ஆணையிட்டார். ஆமாம். அத்தனை கைக்குழந்தைகளும் கையை திசைவெளி நோக்கி நீட்டி கால்களை உதைத்து எம்பிஎம்பிச் சொல்லும் ‘தூக்கிட்டுபோ’ என்ற அந்த மாறாத ஆணைதான்.
ஆதிவண் சடகோபன்
ஆதிவண் சடகோபன் – தமிழ் விக்கி
Published on September 19, 2022 11:34