இந்த வினோதமான பாடலை ஒருநாள் தற்செயலாக பார்த்தேன். அந்த இரவில் திடீரென என்ன ஏது என்றே தெரியாத ஒரு மொழிப்புலத்திற்குள் சென்று உலவி மீண்டேன். ஒரு விந்தையான அரைக்கிறுக்கு நிலை. இதன் வரிகளை கம்பதாசன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அவர் வசனமாகவே எழுதிக்கொடுக்க எவரோ எப்படியோ பாட ஏதோ ஒன்று நிகழ்ந்துவிட்டிருக்கிறது.
’உன்னை என் மனையாளாய் செய்யாவிடில்
ஒரு நாள் என் பெயரை மாற்றியழை
நான் கருங்கல்லை பாகாய் உருக்கிடுவேன் காண்பாயே
ஒன்றும் கடினமில்லை!’
*
படம் முரட்டு அடியாள் 1952
இசை நௌஷாத்
பாடகர் ஹூசைன்தீன்
கம்பதாசன் தமிழ் விக்கி
Published on September 13, 2022 11:33