நண்பர்களே,
வாசிப்பின் முதல் நிலையில் உள்ள வாசகன் தன் வாசிப்பை தீவிரப் படுத்தவும், ஒரு தீவிர வாசகன் தன் வாசிப்பை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ளவும் இம்முகாமை நடத்துகிறோம்.
இது அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் (சனி காலை 10.30 முதல் ஞாயிறு மதியம் 1.30 வரை) ஈரோடு அருகே நிகழும். புனைவு, கவிதைகள், அபுனைவு ஆகியவற்றை வாசிக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
தங்குமிடம் உணவு உட்பட கட்டணம் தலா ரூ 1200, பெண்களுக்கு தனி தங்கும் இடம் உண்டு.
போகன் சங்கர், அனீஷ், ராஜகோபால், எம் கோபால கிருஷ்ணன் ஆகியோர் அமர்வு நடத்த ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் சிலர் இணையக் கூடும்.
பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண், இதற்கு முன் கலந்துகொண்ட நிகழ்வுகள் ஆகியவற்றை தெரிவித்து முன்பதிவு செய்யலாம் :
கிருஷ்ணன்,
ஈரோடு.
98659 16970.
salyan.krishnan@gmail.com
Published on September 13, 2022 11:45
பாண்டிச்சேரி, கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறுமா ?