தமிழின் முதல் பேரகராதியை அமெரிக்க மிஷன் மதப்பணியாளரான மிரன் வின்ஸ்லோ தொகுத்தார். அதற்கு முன்பு பீட்டர் பெர்ஸிவல் போன்றவர்கள் தொடங்கிய பணியை அவர் முழுமை செய்தார். 30 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் அவர் செய்த பணி அது. அதன் விரிவாக்கமே நாம் இன்று பயன்படுத்தும் சென்னைப் பல்கலைக் கழக பேரகராதி. வின்ஸ்லோ பற்றிய ஏறத்தாழ எல்லா செய்திகளையும் தொகுத்திருக்கும் இப்பதிவு, இதிலிருந்து செல்லும் தொடுப்புகள் வழியாக ஒரு நூலாகவே விரியும்தன்மை கொண்டது.
வின்ஸ்லோ
Published on September 09, 2022 11:33