அந்த வளவின் வாசலுக்குப் போனதும் வராந்தாவிலிருந்த வயதான ஒருவர், சிரித்தபடி உற்சாகமாகச் சக்கர நாற்காலியிலிருந்து கொண்டு கையை அசைத்து வரவேற்றார். அவரது இரண்டு கைகளும் பறவையின் இறக்கையாக காற்றில் மேலும் கீழும் உற்சாகமாக அசைந்தது. அருகில் சென்று பார்த்தபோது அவரது இடுப்புக்குக் கீழ் அவரது கால்கள் அசையவில்லை என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. அவருக்குப் பாரிச வாதம். அவர் எமது நிறத்திலிருந்தார். ஆனால், கொஞ்சம் சப்பை மூக்கு. இடுங்கிய கண்கள். மொத்தத்திலொரு பால் கோப்பியாகத் தெரிந்தார்.
வியட்நாம் துரைசாமி – நோயல் நடேசன்
Published on August 18, 2022 11:33