குமரகுருபரன் விழா- கடிதங்கள்

ச.துரை விக்கி

குமரகுருபரன் விக்கி

ஆனந்த்குமார் விக்கி

அன்புள்ள ஜெ,

ஆனந்த்குமாருக்கு விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியை அளித்தது. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதை அறிந்தேன். வேறெந்த இதழிலும் செய்தி வரவில்லை என்றாலும் உங்கள் தளம் வழியாகவே அறிய முடிந்தது. அது மிகுந்த மனநிறைவை அளித்தது. ஒரு நாள் முழுக்க கவிதை பற்றிய உரையாடல் என்பது இன்றைய சூழலில் மிகப்பெரிய ஒரு நிகழ்வு. அரங்கிலும் மேடையிலும் தமிழின் முக்கியமான இளம் முகங்களை பார்க்க முடிந்தது. வாழ்த்துக்கள்.

எஸ்.ராஜ்குமார்

***

அன்புள்ள ராஜ்குமார்,

நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. வீரான்குட்டி மலையாளக் கவிஞர். மலையாள இலக்கியவாதிகள் ஒரு விழாவில் கலந்துகொண்டால் மலையாள இதழ்கள் அவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடாமலிருப்பதில்லை. ஆகவே விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா செய்தியை மாத்ருபூமி இதழ் வெளியிட்டிருக்கிறது. மகிழ்ச்சி அளிக்கும் செய்தி அது.

இளம்கவிஞர்கள், இளம் வாசகர்கள் என அரங்கு நிறைந்திருந்தது நாங்கள் செல்லும் பாதை பற்றிய நம்பிக்கையை உருவாக்குகிறது.

ஜெ

நிறைந்து நுரைத்த ஒரு நாள் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது, மதார் அரங்கு குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது வேணுவேட்ராயன் அரங்கு குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது, ச.துரை, பார்கவி, ஆனந்த்குமார் குமரகுருபரன் விழா, வீரான்குட்டி உரையாடலும் உரையும் குமரகுருபரன் விழா உரைகள்- போகன், ஜெயமோகன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 21, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.