ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது

தமிழிலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் உயரிய விருது இது.

ஆ.இரா.வேங்கடாசலபதியின் ஆய்வுக்களம் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பண்பாட்டு மறுமலர்ச்சி சார்ந்தது. பழந்தமிழ் இலக்கியமரபு மீட்டு எடுக்கப்பட்ட காலம் அது. நவீனத் தமிழிலக்கியம் உருவாகி வந்த காலமும்கூட. ஆகவே இன்றைய தமிழிலக்கியத்தின் இவ்விரு அடித்தளங்களைப் பற்றியும் மிகமுக்கியமான ஆய்வுகளை ஆ.இரா.வேங்கடாசலபதி செய்திருக்கிறார். இன்றைய புரிதல்கள் பலவற்றை வேங்கடாசலபதி உருவாக்கியிருக்கிறார் எனில் அது மிகையல்ல. பாரதி ஆய்வாளர்களின் வரிசையிலும் வேங்கடாசலபதிக்கு முக்கியமான இடம் உண்டு.

வேங்கடாசலபதிக்கு இயல் விருது தமிழ் பெருமைகொள்ளும் தருணங்களில் ஒன்று.

புனைவிலக்கியத்திற்கான விருது பா.அ.ஜெயகரனுக்கும் ,கவிதைக்கான விருது ஆழியாளுக்கும் , கட்டுரைக்கான விருது நீதிபதி சந்துருவுக்கும் மொழியாக்கத்திற்கான விருது மார்த்தா ஆன் செல்பிக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அளவில் சாதனையாளர்கள். ஆஸ்திரேலியா சென்றபோது ஆழியாளைச் சந்தித்து அவர் இல்லத்தில் நானும் அருண்மொழியும் தங்கியிருக்கிறோம். அவர்களுக்கு வாழ்த்துக்கள்

நடைபெறவிருக்கும் விருதுவிழாவில் சிறப்பு விருந்தினராக தாமஸ் புரூய்க்ஸிமா கலந்துகொள்கிறார்

மார்த்தா ஆன் செல்பி

தாமஸ் புரூய்க்ஸ்மா

Awards announcement FINAL 2021

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 18, 2022 15:22
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.