கொரியமொழி கற்றல் – கடிதம்

கொரியா ஒரு கடிதம்

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவரக்ளுக்கு

என்னுடைய கடிதத்தை கொரியா ஒரு கடிதம் உங்கள் தளத்தில் கண்டேன். ராஜன் சோமசுந்தரம் எழுதிய குறிப்பை, தளத்தில் வெளியான அன்றே படித்திருந்தேன். அந்த குறிப்பு முழுதும் உண்மையே. கொரியா எழுத்துக்கள் “ஹங்குல் 한글” என்று அழைக்கப்படுகிறது.

பழைய சீன மொழியே கொரியா முழுதும் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் பயன்படுத்த பட்டுள்ளது. அம்மொழியை கற்றுக்கொள்வதில் மக்களுக்கு இருந்த சிரமத்தை கருத்தில் கொண்டு 세종대왕 Sejong King (1397 – 1450) கொரியாவின் தற்போதய மொழியின் “ஹங்குகொ – 한국어” வை உருவாக்கி இருக்கிறார். இன்றைய கொரியாவின் 10,000 원- ஓன் நோட்டில் அவ்வரசரின் படம் அச்சிடப்பட்டு உள்ளது.

கொரியாவின் எழுத்துக்களை வெறும் ஒரு மணி நேரம் செலவிட்டால் தெரிந்து கொள்ள முடியும். உயிர் எழுத்துக்கள் (ㅏ ㅑ ㅓ ㅕ ㅗ ㅛ ㅜ ㅠ ㅡ ㅣ)  பத்தும், மெய்யெழுத்துக்கள் (ㄱ ㄴ ㄷ ㄹ ㅁ ㅂ ㅅ  ㅋ ㅌ ㅍ ㅈ ㅊ  ㅇ ㅎ) பதினான்கும் தான் மொத்த எழுத்துக்கள். இந்த இரண்டு எழுத்துருக்களை பயன்படுத்தி அணைத்து சொற்றடர்களையும் உருவாக்க முடியும். இதன் ஒலி வடிவம் கிட்டத்தட்ட நம் தமிழ் மற்றும் சமசுகிருத மொழிக்கு பக்கத்தில் தான் உள்ளது ஆனால் முற்றிலும் ஒன்றல்ல.

உதாரணமாக ( ㅏ அ, ㅑ யா,   ㅗ ஓ,  ㅛ யோ, ㅜ உ , ㅠ யு ㅣஇ)  (ㄱ க், ㄴ ன், ㄷத், ㄹ ர் / ல் ,ㅁ ம், ㅂ ப், ㅅ ஷ்,  ㅋ க்க், ㅌத்த், ㅍ ப்ப் ,ㅈ ஜ், ㅊ ஜ்ஜ்  ㅇங் , ㅎ ஹ). மற்ற மூன்று  எழுத்துக்களின் (ㅓ, ㅕ மற்றும் ㅡ),  உச்சரிப்பு முறையே வேறு அது முற்றிலும் நம் நாக்குக்கு பழக்கப்பட்ட தள்ள. இவை மூன்றும் தான் அதிக சொற்களில்  பயன்படுத்த படுகிறது.

முக்கியமான விஷயம் என்னவென்றால் , கொரியா எழுத்துக்களை அறிந்து கொள்வது என்பது மிக எளிது அனால் கொரியா மொழியை கற்றுக்கொள்வது என்பது மிகவும் கடினமான பணியாகவே உள்ளது. ஒரு வருடம் வெறும் கொரியா மொழியை மட்டுமே முழு நேரமாக கல்லூரி சென்று படிப்பவர்களால் கூட வெறும் 10 சதவீதத்தினரே சரளமாக பேசவும் வாசிக்கவும் முடிகிறது. கொரியாவில் KGSP என்ற ஸ்கேலர்ஷிப் இல் வருடத்திற்கு 15 இந்தியர்களை மேற்படிப்பிற்க்காக தேர்வு செய்கிறார்கள் ( உலகம் முழுதும் 400 நபர்கள் ), அவர்கள் முதல் ஒரு வருடம்  வெறும் மொழியை மட்டுமே கற்று மொழித்தேர்வில் லெவல் 6 இல் குறைந்தது  லெவல் 3 தேர்வாக வேண்டும்.  பிறகு மேற்படிப்பு விரும்பிய கல்லூரியில் படிப்பை தொடரலாம் . 5 வருடம் இந்த ஸ்காலர்ஷிப் இம்மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இம்மாணவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு வழி இல்லை என்பதனாலேயே மொழியை ஒரு குறிப்பிட்ட அளவு கற்கிறார்கள், மற்றவர்கள் எட்டு பத்து வருடம் இருந்தாலும் சிறுதும் கற்றுக்கொள்ளாமல் செல்கிறார்கள்.

நான் KGSP மாணவன் அல்ல,  தனியாகவே முயற்சி செய்து கற்று கொண்டிருப்பவன், பெரும் நேரத்தையும் உழைப்பையும் இம்மொழியை கற்பதற்காகவே கொடுத்திருக்கிறேன். அனைத்தும், எனக்கு இலக்கியத்தின் மீது இருக்கும் காதலாலே. உங்கள் பெரும் உழைப்பை பார்த்து வியந்து நிற்பவன் நான். என்னால் முடிந்ததை செய்து கொண்டிருப்பவன். பாதி தாண்டிவிட்டேன், இன்னும் கொஞ்சம் தான், இரண்டு மொழியின் இலக்கியத்தையும் நேரடியாகவே மொழியாக்கம் செய்வேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இது என் ஆணவத்தால் செய்யப்படுவது அல்ல  என்பதை உணர்கிறேன், “காலடிப்புழுதி  நான்” என்று தெளிந்து சொல்லப்பட்டதாகவே  உணர்கிறேன் .

தங்கள்

பாண்டியன் சதீஷ்குமார்

புதிய வாசிப்புகளின் வாசலில்…

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்

சுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்

இந்நாட்களில்…கடிதங்கள்

ஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2021 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.