பகலா அந்தியா அழகி?
ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பா ஆர்.கே.சேகர் மலையாளத்தில் இன்றும் இனிய நினைவுகளாக நீடிப்பவர். அரிய பல மென்மெட்டுக்கள் எப்போதுமே இசையுரையாடல்களில் எழுந்து வந்துகொண்டிருக்கின்றன. பின்னாளில் அவர் இசையொழுங்கு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டார். அவரே இசையமைப்பது குறைந்தது. அவர் உடல்நலம் ஓயாத உழைப்பால் அழிந்தது என்பார்கள்.
சேகரின் இந்தப் பாடல் அனேகமாக எல்லா குடிக்களியாட்டுகளிலும் ஏதோ ஒரு மல்லுப்பையனால் பாடப்படுகிறது. முக்கியமாக இது தாளமோ, பின்னணி இசையோ இல்லாமல் பாட ஏற்றது. ஹம்மிங் செவிக்கினியது. அத்துடன் எவரோ ஒரு பெண்ணைப் பற்றி ஒருவர் பாட அவரவர் பெண்ணைப்பற்றி அவரவர் நினைக்க இரவு மிக அழகானதாக ஆகிவிடுகிறது.
உஷஸோ சந்த்யயோ சுந்தரி?
ஓமனே நீ உணரும்போழோ உறங்கும்போழோ சுந்தரி?
பனிநீர் பூவோ பவிழாதரமோ
பரிமளம் ஆத்யம் கவர்ந்நெடுத்து?
அம்பர முகிலோ அம்பிளி குடமோ
நின் கவிளோ ஆத்யம் துடுத்து?
சந்தன முளயோ சந்திரிக தெளியோ
தென்னலோ மெய்யினு குளிரேகி?
வெண்ணநெய் அமிர்தோ கண்ணன்றே விருதோ
நின் உடல் ஈ விதம் மிருதுவாக்கி?
1971ல் வெளிவந்த சுமங்கலி என்னும் படத்தில் இடம்பெற்ற பாடல். சரியாக அரைநூற்றாண்டுக்கு முன்பு
ஆர்.கே.சேகர்
[தமிழில்]
காலையா அந்தியா அழகி?
இனியவளே நீ விழிக்கும்போதா உறங்கும்போதா அழகி?
ரோஜாமலரா பவள உதடுகளா
முதலில் நறுமணம் கொண்டன?
வான்முகிலா நிலவுக்குடமா
உன் கன்னமா முதலில் ஒளிகொண்டது?
சந்தனக்குருத்தா சந்திரனின் தெளிந்த ஒளியா
தென்றலா உன் மெய்யை குளிருள்ளதாக்கியது?
வெண்ணையின் அமுதா கண்ணனின் கையா
உன் உடலை இத்தனை மென்மையாக்கியது?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


