கதைகள், கடிதங்கள்

அமேசான் ஜெயமோகன் நூல்கள் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

கடந்த ஞாயிறு அன்று வீட்டில் இலவம் பஞ்சு மெத்தை தைத்துக்கொடுக்க பொள்ளாச்சியிலிருந்து மெத்தை கடைக்காரர் வந்திருந்தார். நல்ல சுத்தமான பஞ்சும், நியாயமான விலையும், வீட்டில் நம் கண்முன்னே பஞ்சை அடைத்து தைத்துத்தரும் தொழில் சுத்தமுமாக அவர் பிரபலம் தான் இந்த பகுதிகளில். பெயர் அபு, இஸ்லாமியர் கோவை, திருப்பூர் எல்லாம் கூட வீட்டுக்கே நேரில் சென்று தைத்து கொடுத்துவிட்டு வருவார்.

அன்று இங்கு வீட்டில் வேலை முடிய மதியமாகிவிட்டது எனவே மதியம் சாப்பிட்டு விட்டு போகச் சொன்னேன்  மறுத்தவர் 32 வருடங்களாக தனது நண்பரொருவர் தான் தனக்கும் சேர்த்து மதிய உணவு கொண்டு வருவதாகவும் அவர் காத்துக் கொண்டிருப்பார் என்றும் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது ஏழாம் கடலின் வியாகப்பனை, அவர் மீதிருக்கும் கோபத்தில் மகனிடம் சீறும் அந்த பெண்ணை என்று மனம் நூறு கதைகளுக்கு  சென்றது. அவரிடம் இன்னொரு நாள் இந்த நட்பை குறித்து விரிவாக  கேட்க வேண்டும் என இருக்கிறேன்.

ஏழாம் கடல் போல உண்மையாகவே வருடங்கள் தாண்டிய நட்பு இருப்பது பிரமிப்பளிக்கிறது. அத்தனை வருடங்களாக சமைத்து தரும் அந்த வீட்டுப் பெண்ணையும் நினைத்துக்கொண்டேன். குடும்ப உறவுகளே இப்போது பட்டும் படாமல்தான் இருக்கின்றது. சொந்த சகோதரர்களுக்குள்ளேயே சின்ன சின்ன மனஸ்தாபங்கள், வெட்டு குத்துபழிகள் என்று உறவு சீரழிகின்றது  திருச்செந்தாழையின் ஆபரணம்,  அதுகுறித்து எழுதிய ஒரு வாசகியின் குடும்பக்கதை இவற்றை  இந்த நட்புடன் பொருத்திப் பார்த்துக்கொண்டேன்.

உங்களின் நூறு கதைகளில் ஒன்று நேரில் எழுந்து வந்தது போல் இருந்தது.

அன்புடன்

லோகமாதேவி

ஏழாம்கடல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நூறு சிறுகதைகளில் வருவதுபோல ஒரு நிகழ்வு சமீபத்தில் நிகழ்ந்தது. மதுரம் கதையிலே வருவதுபோல. ஒரு கோசாலைக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு கன்றுக்குட்டியை பசுவின் வலப்பக்கம்தான் கட்டவேண்டும் என்றார்கள். ஏன் என்று கேட்டேன். அந்த பசுவுக்கு இடப்பக்கப் பார்வை கிடையாது. “வலதுபக்கம் அது இன்னொரு பசு. இடதுபக்கம் வேறே பசு” என்று அங்கிருந்தவர் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. நான் சொன்னேன் நீங்கள் கன்றை கொஞ்சநாள் கண் தெரியாத பக்கம் கட்டி அதை நக்கவையுங்கள் இடப்பக்கமும் அது சாந்தமான பசுவாக ஆகிவிடும் என்று.

ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ்க்கதையில் எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டது. இன்னும்கூட எவ்வளவோ மிச்சமிருக்கிறது.

ரவிக்குமார்

மதுரம் [சிறுகதை]

***

குமரித்துறைவி வான் நெசவு இரு கலைஞர்கள் பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் “ஆனையில்லா” முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில் உடையாள் கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள் பத்துலட்சம் காலடிகள் ஞானி குகை சாதி – ஓர் உரையாடல் வணிக இலக்கியம் வாசிப்பின் வழிகள் இலக்கியத்தின் நுழைவாயிலில் ஒருபாலுறவு இன்றைய காந்தி சங்கச்சித்திரங்கள் ஈராறுகால் கொண்டெழும் புரவி நத்தையின் பாதை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2021 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.