இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருதை இமையம் பெற்றிருக்கிறார். வழக்கமாக சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்களுக்கான பாராட்டுவிழாக்கள் எவையும் இப்போது நிகழமுடியாத நோய்ச்சூழல். ஆகவே பவா செல்லத்துரை திருவண்ணாமலையில் ஒரு கூடுகையை ஏற்பாடு செய்திருக்கிறார். செப்டெம்பர் 26 அன்று காலை 10 மணி முதல் மதியம் வரை. இமையத்திற்கும் மொழியாக்க விருது பெற்ற ஜெயஸ்ரீக்கும் பாராட்டுவிழா. நான் கலந்துகொள்கிறேன்.
Published on September 23, 2021 11:31