முதற்காதலின் தளிர்வலை- கடிதங்கள்

முதற்காதலின் பொன்மணிக்கிளை தளிர்வலையோ?

அன்புள்ள ஜெ

முதற்காதலின் பொன்மணிக்கிளை, தளிர்வலையோ இரு கட்டுரைகளையும் வாசித்தேன். அவை மலையாள சினிமாப்பாடல்கள் பற்றிய கட்டுரைகள் அல்ல. அவற்றில் பேசப்பட்டிருப்பது சினிமாவே அல்ல. வாழ்க்கை. ஒரு கட்டுரையில் நுட்பமாகவும் பூடகமாகவும் காமம் பேசப்பட்டிருக்கிறது. இன்னொன்றில் காதலும் அதன் சிதைவும். இரண்டுமே ஆழமான கதைகள் போல் இருக்கின்றன.

மலையாளப் பாடல்கள் பற்றிய கட்டுரைகளில் எல்லாமே இப்படி நுட்பமாக கதைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றைத்தான் நான் எப்போதுமே வாசிக்கிறேன்

ஜெயக்குமார்

***

அன்புள்ள ஜெ,

இன்று காலை ‘நினைவுகளை மனிதர்கள் எப்படி கடக்கிறார்கள்? அல்லது அவையே மனிதர்களை இயல்பாகக் கைவிட்டுவிடுகின்றனவா?’ என்ற வரி உலுக்கிவிட்டது. அன்புள்ள ஜெ, நினைவுகளால் கைவிடப்பட்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்லவா?

எம். ஆர்

***

அன்புள்ள ஜெ

முதற்காதலின் பொன்மணிக்கிளை, தளிர்வலையோ தாமரவலையோ எல்லாம் எத்தனை அற்புதமான சொல்லாட்சிகள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கவிதையாகவே நிலைகொள்கின்றன. சினிமாப்பாடல்களில் மலையாளத்தில் கற்பனாவாதம் மிக உச்சத்தில் உள்ளது

ராஜேஸ்வரி முருகப்பன்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.