யோகம்- ஒரு கடிதம்

கீதை : முரண்பாடுகள்

வணக்கம் ஜெ,

“கீதை : முரண்பாடுகள்” (https://www.jeyamohan.in/501/) என்ற கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு சந்தேகம்:

“யோகம்” என்ற சொல்லின் மூன்று வகையான அர்த்தங்களைப் பேசும் பகுதியில்,

அ. ஞானத்தேடலுக்காக உடலையும் மனதையும் பயிற்றுவிப்பதும் ஞானத்தை படிப்படியாக நம் சுயமாகவும் இருப்பாகவும் மாற்றிக்கொள்ளுதலும் (அதுவே ஆதல்) யோகம் என்று கூறப்படுகிறது. ‘யோகம் என்பது மனச்செயல் தடுத்தல்’ (யோக: சித்தவிருத்தி நிரோத என்று முதல் சூத்திரத்திலேயே பதஞ்சலி அதை வரையறை செய்கிறார்.

ஆ. ஆறு தரிசனங்களில் ஒன்று

இ.யோக மீமாம்சை நோக்கு – முரண்படும் இரு போக்குகளை இணைத்து அதன் மூல உருவாகும் ஒரு நோக்கு அது

இதில் “இரண்டாவது அர்த்த தளம்தான் தரிசனம் சார்ந்தது. மூன்றாவது அர்த்த தளம்தான் தியானப் பயிற்சி சார்ந்தது.” என்று வருகிறது.

பதஞ்சலி யோகம் சொல்லும் முதல் அர்த்தம் தியானம் சார்ந்ததுதான் இல்லையா? மூன்றாவது அர்த்த தளத்தை அறிதல் அணுகுமுறை எனப் புரிந்துகொள்வது சரியா?

சுபா

***

அன்புள்ள சுபா

ஆம், நீங்கள் புரிந்துகொண்டது சரி. யோகம் என்ற சொல் முதல் அர்த்தத்தில் பதஞ்சலி சொல்லும் தியானம், அகப்பயிற்சி சார்ந்தது. இரண்டாவது அர்த்தத்தில் அது ஒரு பிரபஞ்சதரிசனம், ஆறு தரிசனங்களில் ஒன்று. மூன்றாவது அர்த்தத்தில் தொன்மையான முரணியக்கப் பார்வை

ஜெ

***

யோக அறிமுகம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2021 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.