புதியகதைகளின் வருகை

சுசித்ராவின் ‘ஒளி’ புதிய தொகுப்புகளில் முதன்மை. இசை திறக்கும் புதிய வாசல்கள்

அன்புள்ள ஜெ

சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் நண்பர்களால் எழுதப்பட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டும் வெளிவந்த தொகுதிகளைப்பற்றிய கடிதங்களை வாசித்தேன். சுசித்ராவின் ஒளி, கிரிதரன் ராஜகோபாலனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை ஆகியவை தீவிரமான செறிவான கதைகளாலானவை. ராம்குமாரின் அகதி அசோகமித்திரனை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதப்பட்ட எளிமையான நுட்பமான கதைகள். நம் தமிழில் அதிகமாக எழுதப்படாத நிர்வாக உலகம் பற்றிய கதைகள் என்றவகையில் அவை முக்கியமானவை

அந்நூல்களில் மொழியாக்க நூல்களை நான் முக்கியமாக கருதுகிறேன். மொழியாக்கங்கள் என்றாலே வாங்கி வாசிப்பதற்குத் தயங்கும் சூழல்தான் இங்கே உள்ளது. ஏனென்றால் ஆங்கிலச் சொற்றொடரமைப்பை அப்படியே பின்பற்றியிருப்பார்கள். அது தமிழில் சுழித்துச் சுழித்துச் செல்லும் மொழியை உருவாக்கி மண்டையை குடையவைத்துவிடும். விஜயராகவன்,ஸ்ரீனிவாசன், காளிப்பிரசாத், நரேன் நால்வருமே மிக நுட்பமாகவும் தெளிவாகவும் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். எந்த தடையுமில்லாமல் வாசிக்கத்தக்க கதைகளாக அவை உள்ளன

விலாஸ் சாரங் தமிழுக்கு புதுவரவு. அவர் இந்தியமரபை ஐரோப்பியப்பார்வையுடன் பார்ப்பவர் என்று எனக்கு தோன்றியது. ஒருவேளை சுந்தர ராமசாமி இந்திய மரபைப்பற்றி எழுதியிருந்தார் என்றால் இப்படி எழுதியிருப்பார்.

நரேன் மொழியாக்கத்தில் எல்லா கதைகளுமே இலக்கியத்தரமானவை. தமிழில் நாம் இன்று எழுதிக்கொண்டிருக்கும் கதைகளுக்கு அப்பாலுள்ள களங்களை காட்டுபவை அவை. நாம் திரும்பத்திரும்ப எழுதும் சிலகதைக்கருக்கள், சில கதையுத்திகளுக்கு அப்பால் செல்ல அவை வழிகாட்டுகின்றன. இன்றைய மேலைநாட்டு இலக்கியத்தின் மிகச்சிறந்த ’சாம்பிள்கள்’ இக்கதையில் உள்ளன. இன்றைய அமெரிக்கா கலாச்சாரங்களின் ஆய்வுக்கூடமாக உள்ளது. ஆசிய ஆப்ரிக்க தென்னமேரிக்க கலாச்சாரங்கள் வந்து அங்கே ஒன்றையொன்று சந்திக்கின்றன. அந்த உரையாடலை முன்வைக்கும் முக்கியமான கதைகள்

விஜயராகவன் மொழியாக்கத்தில் ரேமண்ட் கார்வர் போன்று சென்ற தலைமுறையைச் சேர்ந்த, இன்றைக்கும் செல்வாக்கு செலுத்தும் படைப்பாளிகளின் கதைகள் அழகாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன

இந்த தொகுதிகள் மேலும் கவனிக்கப்படவேண்டும் என விரும்புகிறேன்

 

எம்.பாஸ்கர்

அன்புள்ள ஜெ

சென்ற ஆண்டு வெளியான பத்து தொகுதிகளில் மொழியாக்கக் கதைகள் அடங்கிய இரண்டு தொகுதிகளும் மிகவும் முக்கியமானவை. திரும்பத்திரும்ப செக்காவை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள் பலர். இந்தக்கதைகள் இரண்டு வகையான திசைகளை கொண்டிருக்கின்றன. நரேன் மொழியாக்கம் செய்த ’இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’ இன்றைய கதையின் போக்கு என்ன, என்னென்ன நிகழ்கிறது, என்னென்ன நிகழப்போகிறது என்று சொல்லும் கதைகளாக உள்ளது. விஜயராகவன் மொழியாக்கம் செய்த தேரையின் வாய் தொகுதியிலுள்ள கதைகள் நேற்றைய எழுத்தில் நாம் சாதாரணமாக கருத்தில்கொள்ளாத கதைகளையும் ஆசிரியர்களையும் காட்டுகின்றன. ரேமண்ட் கார்வர் தமிழிலே அதிகமாகப் பேசப்பட்டவர் அல்ல. அவரைப்போன்றவர்களின் கதைகளை இன்று வாசிக்கையில் இன்று அவரிடமிருந்தே ஒரு தொடர்ச்சி உருவாகியிருப்பதனைக் காணமுடிகிறது

செல்வக்குமார்

 

 

===================================

நூலாசிரியர்கள் Bala  பாலசுப்ரமணியம் முத்துசாமிஇன்றைய காந்திகள்

 

பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி விஜயராகவன்தேரையின் வாய்விஜயராகவன்தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

 

ஸ்ரீனிவாசன்கூண்டுக்குள் பெண்கள் ஸ்ரீனிவாசன்

 

நரேந்திரன்இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்நரேந்திரன்நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

 

சா.ராம்குமார்அகதி ராம்குமார்’அகதி’ ராம்குமார் முன்னுரை

 

சுசித்ராஒளி

 

 சுசித்ராபொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

 

காளிப்ரசாத் தம்மம் தந்தவன்காளிப்ரசாத்

 

கிரிதரன் ராஜகோபாலன்காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

 

ராஜகோபாலன்ஆட்டத்தின் ஐந்து விதிகள் ராஜகோபாலன்ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2021 10:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.