எனது சிறு வயதில், எங்கள் ஊரில் சுடலைமாடன் சாமி கொண்டாடி ஆராசனை வந்து ஆடுகிறபொழுது அதைப் பார்க்கும் எனக்குள் அந்தரங்கமானதொரு மெய்சிலிர்ப்பு, அதிர்வு, அச்சம், பக்தியுணர்வு இருக்கும். அவர் திரும்பினால் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து நிற்பேன். 2020இல் சுடலைமாடன் ஆராசனை வந்து ஆடுகிறபொழுது, தார்ரோட்டில் எதிரே பேருந்து வருகிறது. எனக்கு அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சில விஷயங்கள் சூழலுக்கு ஏற்றவாறுதான் மாறுகிறது. இப்பொழுது பெருநகரங்களில் சிறுதெய்வக் கோவில்களில் திருவிழா நடந்து, பால்குடம் எடுத்து, வேலாயுதம் சூலாயுதம் வைத்துக்கொண்டு சாலையில் நடந்து செல்கிறபொழுது அவர்கள் மீது அனுதாபம்தான் ஏற்படுகிறது.
நேர்காணல்: நாஞ்சில் நாடன்
Published on January 24, 2021 10:31