குறளுரை கடிதங்கள் 3

maxresdefault


 


ஆசிரியருக்கு,


அருமையான உரை. குறளின் வரலாற்று பார்வை அறிமுகம், குறள் தமிழில் பொருந்துமிடம், இந்திய தத்துவ புலத்தில் பொருந்திய இடம், சமணர்களின் பங்கு பற்றியெல்லாம் தெரிந்து கொண்டேன்.


அரசு, குடும்பம் பற்றியெல்லாம் மிக நன்றாக இருந்தது. மணிமேகலை முன் எழுந்த தெய்வம் மணிமேகலை, கல்வி பற்றி பேசியதெல்லாம் சிறப்பாக இருந்தன.


மிக்க நன்றி.


அன்புடன்


நிர்மல்


***


அன்புள்ள ஜெ


குறள் உரை மிக நீளமானது கிட்டத்தட்ட ஐந்தரை மணிநேரம். ஆகவே தொகுத்துக்கொள்வது மிகக் கடினமானது. நான் குறிப்புகளாக எழுதிவைத்தேன்.


முதல்நாள் உரை.



குறளை கவிதையாக வாசிக்கவேண்டும். அறிஞர்களுக்கு அதை அடைய தடை உள்ளது

2 குறளை மூலநூலாக கொள்ளக்கூடாது. மூலநூல்கள் ஒற்றையான வாசிப்பை சொல்பவை


4 ஆனால் குறள் ஜனநாயகக் காலகட்டத்தில் மதச்சார்பின்மைநோக்குடன் வாசிக்கப்பட்டதனால் முக்கியத்துவம் அடைந்தது. அது இயல்பானதுதான்


5 குறள் இரண்டுமுறை கண்டுபிடிக்கப்பட்டது


6 குறளை கைப்பற்ற முயல்பவர்களும் அதை பாதுகாக்க முயல்பவர்களும் உருவாக்கும் தகரடப்பாச்சத்தத்தைக் கடந்துசென்றாகவேண்டும்


7 குறளை ஒட்டி உள்ள அறிவுச்சிடுக்குகளுக்குள் சிக்காமல் அதை அணுகவேண்டும்


8 குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல். ஆகவே சமண நூல். சமணர்களின் பொற்காலத்தில் எழுதப்பட்டது


9 சமணரால் பொது நீதிநூலாக எழுதப்பட்டது குறள்.சமணர்கள் மதமாற்றம் செய்யவில்லை. அன்று ஒருவர் சமணராகவும் கூடவே இந்துவழிபாட்டுக்குள்ளும் இருக்கமுடியும்.


இரண்டாம்நாள் உரை



குறளை நாம் இன்று வாசிக்கிறோம். பழங்காலத்தில் அது பயிலப்பட்டது

2 அன்று செவிவழிக்கல்வி இருந்தது. நூல் கடைசியில்தான் முதலாதாரமாக இருந்தது


3 குறள் ஒரு பெரிய குருமரபின் நூல். அது தியான்நூலாகவும் ஞானநூலாகவும் பயிலப்பட்டது


4 குறளை வாசிக்கும் வழிக்கு அனுசிக்கி என்றுபெயர். அது மூன்று கட்டம் கொண்டது


5 மனப்பாடம் செய்தல்


6 சொல்லெண்ணி எல்லா சொல்லையும் புரிந்து வாசித்தல்


7 எல்லா அர்த்தங்களையும் எடுத்து வாசித்தல்


8 சொற்களை மாற்றிப்போட்டும் விலக்கியும் வாசித்தல்


9 வைப்புமுறையை கவனித்தல்


10 அதற்குமேல் தியானம். குறள் வாழ்க்கையின் தருணங்களில் இயல்பாக எழுந்துவரும் அனுபவங்கள்


மூன்றாம்நாள் உரை


1.குறளை ஒரு செவ்வியல் நூலாகச் சொல்லலாம். குறள் யானைபோல


2.செவ்வியல் என்றால் இரண்டுவகை. ஒரு பண்பாட்டின் ஆதாரநூல். ஒருபண்பாட்டின் உச்சநூல். குறள் இரண்டுவகையிலும் செவ்வியல்நூலே


3 குறள் ஏன் ஆதாரநூல் என்றால் சங்க இலக்கியத்தின் பொருண்மொழிக் காஞ்சித் திணை முதல் தொடங்கிய நீதி விவாதம் அதில்தான் முழுமை அடைந்தது. பின்னர் நூல்கள் அதனடிப்படையில் உருவாயின.


4 குறள் ஏன் முதன்மை நூல் என்றால் அதுதான் நாலடியார்போன்ற நூல்களுக்கு அடிப்படை



குறள் நீதியை கவிதையாகச் சொன்னது. கவிதையாகவே அதை புரிந்துகொள்ளமுடியும்

6 குறள் ஐந்து அடிப்படைகளை உருவாக்கியது.


1 நல்ல அரசு


2 நல்ல குடும்பம்


3 நல்ல ஆண்பெண் உறவு


4 அறம் என்னும் விழுமியம்


5 சான்றோன் என்னும் உருவகம்


சரியாகச் சொல்லியிருக்கிரேன் என நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் முந்தையநாள் உரையை நீங்கள் சுருக்கி அளித்தது மிகமுக்கியமானதாக இருந்தது


செல்வன்


***


அன்புள்ள ஜெமோ


உங்கள் உரையின் இரு முக்கியமான விஷயங்கள். ஒன்று, தமிழில் பதிப்பியக்கம் ஆரம்பித்து நூல்கள் அச்சில் வந்தபோது நிகழ்ந்த மனநிலைகலைப்பற்றிய உங்கள் கவனிப்புக்கள். அன்றிருந்த அம்னக்கிளர்ச்சி, பரவலான கல்வி இருந்தமையால் நூல்களை அனைவரும் வாசித்தது , சமணம் பௌத்தம் எல்லாம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது ஆகிய கருத்துக்கள் முக்கியமானவை.


அதோடு திருக்குறள் மூலநூலாக ஆனதனால் அதை கைப்பற்ற ஒருசாரார் முயல இன்னொருசாரார் அதைக் காப்பாற்ற முயல இருதரப்பிலும் அவரவருக்குப்பிடித்தமாதிரி நூல்களை விளக்கம் அளித்து ஒரு விவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அதைக் களையவேண்டும்.


இந்த இரு அடிப்படைகளில் வாசிக்கும்போது குறள் ஒரு ஞானநூலாகவும் கவிதையில் நீதியைச் சொல்வதாகவும் எஞ்சுகிறது. அதை நீங்கள் விரிவாக இரண்டாவது உரைகளில் விளக்கினீர்கள்.


முதல் உரையில் குரல் மைக் சரியாக ஒத்துழைக்கவில்லை. நிறைய சொற்களை விழுங்கி விழுங்கிப்பேசுகிறீர்கள். அதை கடந்து புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. இரண்டு மூன்றாம் உரைகளில் அந்தச்சிக்கல் இல்லை.


லட்சுமணன்


*


ஜெயமோகனின் குறள் உரை- ஆர் அபிலாஷ்


*


ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண


குறளினிதுஜெயமோகன் உரை – Playlist


https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2017 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.