ஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம்

reception


ஊட்டி நாராயணகுருகுலத்தை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். நித்ய சைதன்ய யதி இருந்த இடம். இப்போது சுவாமி வியாசப்பிரசாத் அவர்களால் பராமரிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் அங்குதான் குருநித்யா காவிய முகாம் நிகழ்கிறது. இவ்வாண்டும் ஏப்ரலில் நிகழ்த்துவதாக இருக்கிறோம்.


குருகுலம் முழுக்கமுழுக்க அறிவார்ந்த தத்துவவிவாதங்கள் மட்டுமே நிகழும் இடம்.பக்திமுறைகள்,மதச்சடங்குகள் ஏதுமில்லை. ஆகவே  அதிக வருகையாளர்கள் இப்போது இல்லை. ஆனால் நிறைய கட்டிடங்கள் இருப்பதனால் பராமரிப்பு சற்று கடினம்


குருகுலத்தைச் சுற்றி உயிர்வேலிதான் இருந்தது. ஆனால் சமீபமாக காட்டெருதுக்கள் உள்ளே வருகின்றன. நண்பர்கள் பலர் அவற்றைப் பார்த்திருப்பார்கள். அவை அவ்வப்போது ஆபத்தையும் விளைவிக்கின்றன அவற்றை உயிர்வேலியால் தடுக்கமுடியவில்லை. ஆகவே ஒரு முட்கம்பிவேலி அமைக்கத் திட்டமிருக்கிறார்கள்.


அதன்பொருட்டு ஒரு நிதிவசூலை சுவாமி வியாசப்பிரசாத் மேற்கொண்டுவருகிறார். குருகுல நெறிகளின்படி ஒரு குறிப்பிட்ட நோக்குடன் மட்டுமே நிதி வசூல்செய்யப்படும். நிரந்தர நிதி அமைக்கப்படாது. ஆகவே எப்போதுமே அன்றாட நிதியில்தான் குருகுலம் செயல்படும்


நிதியுதவி அளிக்கவிரும்பும் நண்பர்கள் அளிக்கலாம். வருமானவரி விலக்கு உண்டு. என் தனிப்பட்ட விண்ணப்பமாகவும் இதைக்கொள்க


 


ஜெ


 


 


Cheques are to be drawn in favor of Narayana Gurukulam


Postal Address:


Swamy Vyasaprasad


Narayana Gurukulam


Fern Hill PO


Nigiris District


Tamilnadu India


 


Bank Transfers can be made to the following account


AC Name: Narayana Gurukulam


Ac No: 10834912288


IFS Code: SBIN 0000891


State Bank of India Branch Udhagamandalam


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2016 10:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.