விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்

[image error]


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு


 


விஷ்ணுபுரம் விருது விழா இம்முறை இலக்கியத்தின் பெரும் கொண்டாட்டமான ஒன்றாக மாறிவிட்டிருந்தது. தமிழகத்தின்  அநேக முக்கிய எழுத்தாளர்களும் பிற மொழி எழுத்தாளர் என ஒட்டுமொத்த இலக்கிய ஆளுமைகளுடன் உரையாடலை நிகழ்த்துவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.


 


 


இம்முறையும் முதல் நாளை தவற விட்டதை எண்ணி வருத்தமடைந்தேன். ஞாயிறு அன்று எழுத்தாளர் சு.வேணுகோபாலோடு தொடங்கிய அமர்வில் பஷீர், தி.ஜா, கி.ரா என்று ஒவ்வொன்றாகத் தொட்டுச் சென்றது நிறைவாக இருந்தது. வண்ணதாசன் வாசகர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் ஒருவித ரசனையான புன்னகையில் அதைத் தொட்டு ஆரம்பித்தார்.. அதன்பிறகான அமர்வில் சிங்கம் போல H.S சிவப்ராகஷ் வந்தமர்ந்தார். அவரைப் பற்றி நீங்கள் வராண்டாவில் நினைவுகூர்வதற்கு முன்னே அவரின் கடந்த கால ஆளுமை பிம்பத்தை என்னால் உணர முடிந்தது.


[image error]


நீங்கள் சொன்னதுபோல கருத்துத்தளத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேர உரையாடல் நிகழ்ந்தது எங்களுக்கு புதிதுதான்.  படைப்புகளைப் பற்றியோ, இலக்கியத்தைப் பற்றியோ இல்லாமல் தனது கருத்துக்களால் மட்டுமே எங்களுடன் உரையாடினார். மார்க்ஸியத்தை அவரின் பார்வையில் தெரிந்துகொண்டதும் அத்வைதத்தையும் வைனவத்தையும் இப்படியும் புரிந்துகொள்ள முடியும் என்று அறியச் செய்தது எனக்கு புது அனுபவம். எளிமையான ஆங்கிலம், நிதானமான பதில், இதுபோன்ற பிற மொழி ஆளுமைகளுடன் பேசுவது புதிய தரிசனத்தை ஏற்படுத்துகிறது.


 


 


மதியம் எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பாவண்ணன், இரா.முருகன், தேவதேவன் என ஒவ்வொருவருடனும் தங்கள் அனுவங்கள் வழியே படைப்புகளைப் பார்க்கின்ற பார்வையைக் காடடினார்கள். நிபந்தனையற்ற அன்பு பற்றிய அனுபவத்துடன் தொடங்கிய பாவண்ணனை தமிழகத்தின் நாடகத்தின் போக்கைப் பற்றிய விவாதத்திற்கு திருப்பி விட்டதும் அரங்கம் சூடுபிடித்துவிட்டது.  எழுத்தாளர் பாவண்ணனுடனான உரையாடலில் நண்பர் அசோக்குமார் எழுப்பிய கேள்வியொன்று “கர்நாடகா மாநிலத்தில் நாடகக் கலைகளுக்கு இருக்கின்ற தீவிர ரசிகர்களோ பார்வையாளர்களோ இங்கு இல்லையே?” அதற்கு பாவண்ணன் இப்படி சொன்னார்: “இங்கு இப்போதே ஒரு நாடகம் போடப்படுகிறதென்றால் பார்ப்பதற்கு எத்தனை பேர் இருப்பார்கள்? ஐம்பது பேர் கூட தேறாது. காரணம் நம்மிடம் ரசனை சார்ந்த சிந்தனை குறைவு” இப்படித்தான் இந்த உரையாடல் தொடங்கி பின் விவாதமாகப் போய்க்கொண்டிருந்தது.


[image error]


 


உண்மையில் நம்மிடம் அப்படியொரு ரசனை உணர்வு என்பது இல்லையா? நம்முடைய தொன்மங்களின் மீதும் மரபின் மீதும் நமக்கேற்பட்ட அவநம்பிக்கை காரணமா? பெரியாரிஸத்தின் தாக்கமா? பாரதியும் புதுமைப்பித்தனும் தொடங்கிய வைத்த நவீன அலை நம்மை முன்னோக்கி தள்ளிவிட்டதா? வெஸ்டர்ன் கல்ச்சரை நோக்கி ஓடுகிறோமா? என்று பல எண்ணங்களை அக்கேள்வி தூண்டிவிட்டது….


 


 


 


இன்னும் அதிகம் பேசலாமென்றிருந்தபோது ஈரோடு கிருஷ்ணன் வந்து ‘கேட்’ போட்டு கிளப்பிவிட்டார். ஆனால் நானும் அசோக்குமாரும் விழா அரங்கம் வரை பாவண்ணனுடனும் நிர்மால்யாவுடனும் எம். கோபாலகிருஷ்ணனுடனும் அவ்விதாதத்தைத் தொடர்ந்தபடியே தான் வந்தோம்.


 


[image error]


ஜெ, உண்மையில் முதல் முறையாக என்னுடைய அனுபவத்தில் ஒரு எழுத்தாளனுக்கு அரங்கம் நிறைந்த வாசகர்களை இங்குதான் பார்த்தேன். எத்தனையோ பேர் இடம் கிடைக்காமல் கீழே அமர்;ந்திருந்தார்கள். பெண்கள் உட்பட நிறைய பேர் இரண்டு மணி நேரம் நின்றுகொண்டே பார்த்தார்கள். வண்ணதாசனின் ஏற்புரை வாசகர்களின் கண்களை நழுங்கத்தான் செய்தது. ஒருவித உணர்வெழுச்சி தூண்டப்பட்டு மனம் கொந்தளித்தது. உள்ளம் அடங்க சில கணங்கள்  தேவைப்பட்டன. என் அருகிலிருந்த நண்பர் அழுதே விட்டார்.


 


 


அடுத்த வருடம் இந்திய அளவில் இவ்விருது விழா இருக்கப் போகின்றதை எண்ணி பெருமை கொள்கிறேன்.  வெவ்வேறு மாநிலத்தில் இவ்விழாவைப் பற்றி பேசுவதும் இதைப் போன்று நடத்த முயற்சிப்பதற்கும் இது தொடக்கமாக அமையும். இலக்கியத்தின உச்சம் இதுதானே.


 


[image error]

தூயன் வண்ணதாசனுடன்


 


விழா முடிந்ததும் வண்ணதாசனை நெருங்கவே சில நேரம் பிடித்தது. என்னைக் கண்டதும் நினைவுகூர்ந்தார். கைகளைப் பிடித்துக்கொண்டு ‘நிறைய எழுதனும்’ என்றவர் என் தொகுப்பைப் பற்றி கேட்டறிந்தார். விருது, விழா என இத்தனை வேலையிலும் அவரின் ஞாபகம் எனக்கு பெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.


 


 


ஜெ, இவ்விழாவில் எனக்கு மறக்கமுடியாத தருணம் என்றால் எழுத்தாளர் பாவண்ணனை சந்தித்தது.  கிட்டத்தட்ட ஒரு வருடமாக நட்பில் இருக்கிறேன். எத்தனையோ கேள்விகளையும் எண்ணங்களையும் அவரிடம் பரிமாறியிருக்கிறேன். எனக்கு ஒருவித மனசாட்சியாகவே மாறிவிட்டிருக்கிறார்.  கடிதங்களுடன் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த எங்களின் பேச்சு, இங்குதான் சந்திப்பைக் கொடுத்திருக்கிறது.     இந்நினைவுகளை ஏந்திக்கொண்டிருக்கிறேன்.


 


 


என்றும் அன்புடன்


  தூயன்


 


===================================


முந்தைய பதிவுகள்


 


விஷ்ணுபுரம் விழாப்பதிவு1 விஷ்ணு


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2


விஷ்ணுபுரம் விழாப்பதிவு3 ராகேஷ்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு4 சுரேஷ் பிரதீப்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 5


விஷ்ணுபுரம் விழாப்பதிவு6


விஷ்ணுபுரம் விழாப்பதிவு7


விஷ்ணுபுரம் விழாப்பதிவு8 யோகேஸ்வரர்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 10 குறைகள்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு11 சசிகுமார்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 12


உரைகள்


இராமுருகன் உரை


சுப்ரபாரதிமணியன் உரை


 


காணொளிகள்


ஜெயமோகன் உரை


வண்ணதாசன் உரை


நாஸர் உரை


கு சிவராமன் உரை


பவா செல்லத்துரை உரை


இரா முருகன் உரை


எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை


 


 


புகைப்படங்கள்


 


புகைப்படங்கள் தங்கவேல் 1


புகைப்படங்கள் தங்கவேல் 2


 


புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்


 


புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1


புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2


 


 


=============================================================


 


விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு


 


============================================================


 


விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்


விலகும் திரை – ஏ வி மணிகண்டன்


சுவையாகி வருவது ஜெயமோகன் 1


சுவையாகி வருவது ஜெயமோகன் 2


மனித முகங்கள் வளவதுரையன்


வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்


 


வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்


 


வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா


 


வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்


 


வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு


 


==============================================================================


 


வண்ணதாசன் இணையதளம்


வண்ணதாசன் நூல்கள்


வண்ணதாசன் இணையப்பக்கம்


வண்ணதாசன் கதைகள்


வண்ணதாசன் கவிதைகள்


==============================================================================


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது


வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3


வண்ணதாசன் கடிதங்கள் 4


வண்ணதாசன் கடிதங்கள் 5


வண்ணதாசன் கடிதங்கள் 6


வண்ணதாசன் கடிதங்கள் 7


வண்ணதாசன் கடிதங்கள் 8


வண்ணதாசன் கடிதங்கள் 9


வண்ணதாசன் கடிதங்கள் 10


வண்ணதாசன் கடிதங்கள் 11


 மென்மையில் விழும்கீறல்கள்


சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்


வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2016 10:37
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.