விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 5

[image error]

இரண்டாம்நாள் மேலும் பெரிய அமர்வரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது


 


 


அன்புள்ள ஜெமோ,


விஷ்ணுபுர விருது விழா நிகழ்வுகள் கட்டுரைகள் இன்னும் வரவில்லை, நண்பர்களின் தனிபட்ட பங்குபெற்ற அனுபவ பதிவுகள் இன்னும் வரவில்லை, வீடியோ பதிவுகள் எதுவும் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் விழா எவ்வளவு சிறப்பாக நடந்தது என்பதை நண்பர்கள் குறிப்புகள் மூலம் இங்கிருந்தே உணரமுடிகிறது. மிக சிறப்பான முறையில் நடந்தேறிரிக்கிறது.


ஒவ்வொருவருடமும் மேலும் மேலும் சிறப்பாக செய்து போய்கொண்டே இருக்கிறோம். அமைப்புக்கு வெளியே இருந்து வரும் பாராட்டுக்களை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். கிட்டதட்ட ஒவ்வொருவருடமும் ஒரு “கல்யாண விழா” நடத்திக் கொண்டிருக்கிறோம், எந்த அமைப்பு பலமும் இல்லாமல் நண்பர்களின் தன்னியல்பான ஈடுபாட்டை முன்வைத்து மட்டுமே. இது அவ்வளவு எளிதல்ல.


 


kkk


சிங்கப்பூர் காவிய முகாம் நடத்தியபோது, அவ்வளவு பேர் இலக்கியத்திற்காக தன் காசு செலவழித்து சிங்கப்பூர் வந்து கலந்து கொண்டுவிட்டு, விழா முடிந்தவுடன் மறுநாளே திரும்பி சென்றதற்கான காரணம் இலக்கியம் மட்டும் என்று நினைக்கவில்லை, அதற்கு முதறகாரணமாக உங்களையே உணர்ந்தேன். ஜெமோ ஜெமோவாக இருப்பதே காரணம் என்று. இவ்வளவு நண்பர்கள் ஒன்றிணைந்து இயங்குவதற்கு காரணம் நீங்களாகவே இருக்கிறீர்கள். அதை தாண்டிய இரண்டாவது காரணம், நமது விஷ்ணுபுர நண்பர்களிடையேயான இந்த நட்பார்ந்த இந்த உறவு.


[image error]


சு வேணுகோபால்


 


 


ஒவ்வொருவருடமும் எந்த கட்டயபடுத்தல்களும் இல்லாமல் ஒரு குடும்ப விழாவாக இவ்வளவு நண்பர்கள் தமிநாட்டின் ஒரு மிகபெரும் விழாவை இலக்கியத்தை முன்னிருத்தி நடத்துவது, இந்த விழாவை முன்னிறுத்தி நடக்கும் “சீசனல் கேம்” இல்லை, உலகின் பல இடங்களில் இருந்தாலும் வருடம் முழுவதும் தொடர்ந்து பேசி, விவாதித்து, பகிர்ந்து கொண்டிருக்கும் விஷ்ணுபுர நண்பர்களிடையேயான தொடர்ந்த நட்பார்ந்த உறவு. அதுதான் இதை இன்னும் உற்சாகமான, ஆத்மார்த்தமான கூடுகையாக, ஒவ்வொருவரின் குடும்ப விழாவாக மாற்றுகிறது. தமிழ் இலக்கிய உலகில் முன்மாதிரி அற்ற ஒரு தனித்த பெரும் நிகழ்வு இது என்றே கொள்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.


அன்புடன்


சரவணன் விவேகானந்தன்


சிங்கப்பூர்


 


[image error]

சீனிவாசன்


 


அன்புள்ள ஜெ,


இந்த வருட விருதுவிழா மிகச் சிறப்பாக நடந்திருக்கிறதைக் கண்டு மிக மகிழ்ச்சியாய் உள்ளது. அதே சமயம் கலந்துகொள்ள முடியவில்லை என்கிற வருத்தமும் உள்ளது. விழாவும் கூடுகையும் பெரிதாகிக்கொண்டே வருவது சிறப்பு. அதே நேரம் நல்ல வளமான விவாதங்களும் உரைகளும் நிகழ்ந்துள்ளன என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. தேசிய அளவில் இது உயர்ந்து விரியும் நாள் தொலைவில் இல்லை.


இந்த வருட கிறிஸ்துமஸ் திருப்பலியில் ஃபாதர் உங்களுக்கு நிறைவான சந்தோஷத்தை தரும் மனிதர்களுக்காக செபியுங்கள் என்றபோது குடும்பத்தினருடன் உங்களையும் நம் நண்பர்களையும் நினைத்துக்கொண்டேன். உண்மையில் அப்போது எல்லோருடனும் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.


 


[image error]

கிருஷ்ணன்


 


இப்போது கொஞ்சம் அறிவியல் புத்தகங்களை வாசிக்கும் முயற்சியில் உள்ளேன். காலம் இதழுக்கு தொடுவுணர்வு குறித்த அறிவியல் தகவல்களுடன் ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன். தொடர்ந்து சில அறிவியல் கட்டுரைகள் எழுதத் திட்டம்.


இன்று துவங்கி நாங்கள் இத்தாலி பயணம் செல்லவுள்ளோம். ரோம், அசிசி, பிளாரன்ஸ், பிசா, பதுவா, வெனிஸ் என பயணம். ஒரு திருப்பயணம் என்றே சொல்லலாம். :)


வீட்டில் எல்லோருக்கும் எங்கள் அன்பை தெரிவிக்கவும்.


அன்புடன்


சிறில் அலெக்ஸ்


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 20:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.