கலந்துரையாடல் – மார்க் லின்லே


மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,


இந்த கணத்தில் எங்கள் வாழ்வினை திரும்பி பார்க்கும் போது ,காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் கிடைத்த தரிசனங்கள் உங்களின் எழுத்துக்களின் வழியே தான் முதன்மையாக கண்டடைந்தோம்.


யானை தன் குட்டிகளுக்கு தாகம் எடுத்தால் தண்ணீர் எங்கு கிடைக்கும், பசி எடுத்தால் உணவு எங்கு கிடைக்கும் என்பதற்கான அறிவை அதன் சிறு வயது முதலே மனதில் பதிய வைத்துவிடும். அத்தோடு மட்டுமில்லாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கு அந்த அறிவை கடத்திக்கொண்டே இருக்கும். அதுபோலதான் காந்தியத்தையும் சமதர்மத்தையும், இயற்கை பேணுதலையும், இறையை கண்டடைதலையும் நாங்கள் குழந்தை யானை போல குக்கூவின் தும்பிக்கையை பிடித்தே கற்றுக்கொண்டிருக்கிறோம்.


நல் அதிர்வுகளின் ஒத்திசைவிலும், தோழமைகளின் வழிகாட்டுதளிலும், தாய்மையின் அரவணைப்பிலும் நாங்கள் இத்தருணத்தில் எங்கள் தாகத்திற்காக கண்டடைந்த நீரூற்றுதான் மார்க்ஸ் லிண்ட்லே.


காந்தியத்தையும் அதன் முழு ஆன்மீகத்தையும் வாழ்வில் நிதர்சனமாய் உணர்ந்த ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகளை கற்றுணர்ந்து உலகம் முழுக்க கொண்டு சேர்த்துக்கொண்டிருப்பவர் மார்க்ஸ் லிண்ட்லே.


மதுரையில் உள்ள காந்தி நினைவகத்தில் மார்க்ஸ் லிண்ட்லே அவர்களுடனான சந்திப்பும் நம்மாழ்வார் அய்யாவை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு சூழலுக்கு ஏதுவாக தம் பணிகளை அமைத்துக்கொண்டு வாழ்வை சத்தியத்தை நோக்கி திசைதிருப்பி பயணித்துக்கொண்டிருக்கும் நல்லுள்ளங்களையும் கெளரவிக்கும் நிகழ்வும் நடைபெறுகின்றது.


நம்மில் ஏற்பட்ட மாறுதல்களை நம் சொந்தங்களுடன் பறிமாறிக்கொள்ளவும் மேலும் நம் பலத்தை அதிகரித்துக்கொள்ளவும் தோழமைகள் அனைவரையும் அழைக்கின்றோம்.


ஆதிநிலம் - பனை – நூற்பு


தொடர்புக்கு 9787978700


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2016 17:59
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.