Jeyamohan's Blog, page 39
September 6, 2025
போகன் சங்கர்
போகன்தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர் நாகர்கோயிலில் வசிக்கிறார். சுயஎள்ளலும், உணர்ச்சிகளை மிதமாக வெளிப்படுத்தும் தன்மையும் அகத்தேடலும் கொண்ட கவிதைகளுக்காகப் புகழ்பெற்றவர்.
போகன் சங்கர்
போகன் சங்கர் – தமிழ் விக்கிகவிதைத்தொகுப்புகள்எரிவதும் அணைவதும் ஒன்றேதடித்த கண்ணாடி போட்ட பூனைநெடுஞ்சாலையை மேயும் புள்சிறிய எண்கள் உறங்கும் அறைவெறுங்கால் பாதைதிரிபுகால ஞானிகுளம் போல் நடிக்கும் கடல்சதுக்கப்பூதம்சிறுகதைத் தொகுப்புகள்கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்போக புத்தகம்திகிரிமர்ம காரியம்
போகன் சங்கர்
போகன்தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர் நாகர்கோயிலில் வசிக்கிறார். சுயஎள்ளலும், உணர்ச்சிகளை மிதமாக வெளிப்படுத்தும் தன்மையும் அகத்தேடலும் கொண்ட கவிதைகளுக்காகப் புகழ்பெற்றவர்.
போகன் சங்கர்
போகன் சங்கர் – தமிழ் விக்கிகவிதைத்தொகுப்புகள்எரிவதும் அணைவதும் ஒன்றேதடித்த கண்ணாடி போட்ட பூனைநெடுஞ்சாலையை மேயும் புள்சிறிய எண்கள் உறங்கும் அறைவெறுங்கால் பாதைதிரிபுகால ஞானிகுளம் போல் நடிக்கும் கடல்சதுக்கப்பூதம்சிறுகதைத் தொகுப்புகள்கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்போக புத்தகம்திகிரிமர்ம காரியம்
இரவு- ஒரு காணொளி
இரவு நாவல் பற்றிய ஒரு காணொளி. அதை வாசித்து உருவான மனப்பதிவை பேசியிருக்கிறார். இரவு நாவல் அதன் கனவுத்தன்மையால் பெரும்பாலான வாசகர்களைக் கவர்கிறது. அதை இருபதாண்டுகளுக்கு முன் எழுதியபோது இருந்ததை விட அந்த பேசுபொருள் இன்று அழுத்தம் கொண்டதாக ஆகிவிட்டது. ஏனென்றால் இன்று அது பல லட்சம்பேரின் வாழ்க்கை முறை. இது ‘மிட்நைட் பிரியாணி’ களின் காலம். ஆகவே இன்றைய தலைமுறையினர் நடுவே பெரிதும் வாசிக்கப்படுவதாக உள்ளது. இப்படி ஒரு காலம் வரும் என அதை எழுதியபோது எண்ணியிருக்கவில்லை. ஒருவகையில் தெளிவற்ற ஓர் உள்ளுணர்வால் இந்தக் காலகட்டத்தை ஊகித்து எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். இரவுலாவி வாழ்வுக்கும் நவீனத் தொழில்நுட்பத்துக்குமான தொடர்பும் அந்நாவலில் உள்ளது.
இரவு- ஒரு காணொளி
இரவு நாவல் பற்றிய ஒரு காணொளி. அதை வாசித்து உருவான மனப்பதிவை பேசியிருக்கிறார். இரவு நாவல் அதன் கனவுத்தன்மையால் பெரும்பாலான வாசகர்களைக் கவர்கிறது. அதை இருபதாண்டுகளுக்கு முன் எழுதியபோது இருந்ததை விட அந்த பேசுபொருள் இன்று அழுத்தம் கொண்டதாக ஆகிவிட்டது. ஏனென்றால் இன்று அது பல லட்சம்பேரின் வாழ்க்கை முறை. இது ‘மிட்நைட் பிரியாணி’ களின் காலம். ஆகவே இன்றைய தலைமுறையினர் நடுவே பெரிதும் வாசிக்கப்படுவதாக உள்ளது. இப்படி ஒரு காலம் வரும் என அதை எழுதியபோது எண்ணியிருக்கவில்லை. ஒருவகையில் தெளிவற்ற ஓர் உள்ளுணர்வால் இந்தக் காலகட்டத்தை ஊகித்து எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். இரவுலாவி வாழ்வுக்கும் நவீனத் தொழில்நுட்பத்துக்குமான தொடர்பும் அந்நாவலில் உள்ளது.
இன்று காந்தி என்னவாக இருக்கிறார்?
எந்தக் கேள்வியோ தேடலோ இன்றி, காந்தி பற்றிய முன்முடிவுகள் கொண்டோருக்கு இன்னும் எத்தனை புத்தகங்கள் எழுதப்பட்டாலும் உதவப் போவதில்லை. அவரைப் பற்றிய புரிதலை சிறிதளவேனும் வளர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு ‘இன்றைய காந்தி’ ஒரு சிறந்த கையேடு.
இன்றைய காந்தி- இந்துமதி மனோகரன்இந்துமதியின் இப்பதிவை வாசித்தேன்.
வசைகள், அவதூறுகள் வழியாகவே நம்மில் பலரும் காந்தியை அறிந்திருக்கிறோம். நேற்று அவரை வசைபாடியவர்கள் இன்று இந்துத்துவர்களின் அதியுக்கிரமான அவதூறு மழையைக் கண்டு திகைத்துப்போய் காந்தியை நோக்கிச் செல்லும் காலம் இது. காந்தி வெறுமொரு சென்றகாலப் பெயர் அல்ல. காந்தி காங்கிரஸின் நிறுவனர் அல்ல. காந்தி ரூபாய்நோட்டின் முகம் அல்ல. அவர் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் என இன்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இன்று ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை, இந்த பெருநிலத்தின் அறம்சார்ந்த வாழ்வை மேலென நினைக்கும் ஒவ்வொருவருக்கும் உரியவராக அவர் ஆகிவிட்டிருக்கிறார்.
இன்றைய சூழல் உருவாவதற்கு முன் 2011 ல் எழுதப்பட்ட இன்றைய காந்தி காந்தியை தமிழ் நவீன சிந்தனைச்சூழலுக்கு முற்றிலும் புதிய முறையில் அறிமுகம் செய்தது. காந்தி பற்றிய எல்லா கேள்விகளுக்கும் வரலாற்றைக்கொண்டு, ஆதாரங்களைக்கொண்டு பதில் சொன்னது. சொல்லப்போனால் ஏற்கனவே தெரிந்த ஆதாரங்களையே தர்க்கபூர்வமாக அடுக்கி உண்மையை வெளிப்படுத்தியது. தமிழ்ச்சூழலில் காந்தி பற்றி இருந்த வழக்கமான புகழ்மொழிகள், வழக்கமான வசைமொழிகள் இரண்டுக்கும் அப்பால் சென்று அவருடைய பல முகங்களை அறிமுகம் செய்தது. இதில் காந்தியின் வெற்றிகளும் தோல்விகளும் ஆராயப்பட்டுள்ளன. வழிபாட்டுணர்வு இல்லாமல் அவர் மதிப்பிடப்படுகிறார்.
காந்தி வெள்ளையரை எதிர்த்து சுதந்திரம் பெற்றுத்தந்த அரசியல்தலைவர் மட்டும் அல்ல. அவர் சூழியல் முன்னோடி. இன்றைய நுண்ணலகு அரசியலின் கோட்பாட்டாளர். உலகமெங்கும் இன்று நிகழும் ஜனநாயகப்போராட்டங்களின் முதல்வடிவை உருவாக்கியவர். நிர்வாகவியலில் மையப்படுத்தலுக்கு எதிரான பார்வையை முன்வைத்த கருத்தாளர்.
இன்றைய வாசகர்கள் காந்தியை இந்நூல் வழியாகக் கண்டடையலாம்
ஜெ
இன்று காந்தி என்னவாக இருக்கிறார்?
எந்தக் கேள்வியோ தேடலோ இன்றி, காந்தி பற்றிய முன்முடிவுகள் கொண்டோருக்கு இன்னும் எத்தனை புத்தகங்கள் எழுதப்பட்டாலும் உதவப் போவதில்லை. அவரைப் பற்றிய புரிதலை சிறிதளவேனும் வளர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு ‘இன்றைய காந்தி’ ஒரு சிறந்த கையேடு.
இன்றைய காந்தி- இந்துமதி மனோகரன்இந்துமதியின் இப்பதிவை வாசித்தேன்.
வசைகள், அவதூறுகள் வழியாகவே நம்மில் பலரும் காந்தியை அறிந்திருக்கிறோம். நேற்று அவரை வசைபாடியவர்கள் இன்று இந்துத்துவர்களின் அதியுக்கிரமான அவதூறு மழையைக் கண்டு திகைத்துப்போய் காந்தியை நோக்கிச் செல்லும் காலம் இது. காந்தி வெறுமொரு சென்றகாலப் பெயர் அல்ல. காந்தி காங்கிரஸின் நிறுவனர் அல்ல. காந்தி ரூபாய்நோட்டின் முகம் அல்ல. அவர் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் என இன்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இன்று ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை, இந்த பெருநிலத்தின் அறம்சார்ந்த வாழ்வை மேலென நினைக்கும் ஒவ்வொருவருக்கும் உரியவராக அவர் ஆகிவிட்டிருக்கிறார்.
இன்றைய சூழல் உருவாவதற்கு முன் 2011 ல் எழுதப்பட்ட இன்றைய காந்தி காந்தியை தமிழ் நவீன சிந்தனைச்சூழலுக்கு முற்றிலும் புதிய முறையில் அறிமுகம் செய்தது. காந்தி பற்றிய எல்லா கேள்விகளுக்கும் வரலாற்றைக்கொண்டு, ஆதாரங்களைக்கொண்டு பதில் சொன்னது. சொல்லப்போனால் ஏற்கனவே தெரிந்த ஆதாரங்களையே தர்க்கபூர்வமாக அடுக்கி உண்மையை வெளிப்படுத்தியது. தமிழ்ச்சூழலில் காந்தி பற்றி இருந்த வழக்கமான புகழ்மொழிகள், வழக்கமான வசைமொழிகள் இரண்டுக்கும் அப்பால் சென்று அவருடைய பல முகங்களை அறிமுகம் செய்தது. இதில் காந்தியின் வெற்றிகளும் தோல்விகளும் ஆராயப்பட்டுள்ளன. வழிபாட்டுணர்வு இல்லாமல் அவர் மதிப்பிடப்படுகிறார்.
காந்தி வெள்ளையரை எதிர்த்து சுதந்திரம் பெற்றுத்தந்த அரசியல்தலைவர் மட்டும் அல்ல. அவர் சூழியல் முன்னோடி. இன்றைய நுண்ணலகு அரசியலின் கோட்பாட்டாளர். உலகமெங்கும் இன்று நிகழும் ஜனநாயகப்போராட்டங்களின் முதல்வடிவை உருவாக்கியவர். நிர்வாகவியலில் மையப்படுத்தலுக்கு எதிரான பார்வையை முன்வைத்த கருத்தாளர்.
இன்றைய வாசகர்கள் காந்தியை இந்நூல் வழியாகக் கண்டடையலாம்
ஜெ
ஆலயங்கள்- மகத்தான வகுப்பு
Your ideas on our land, Bharat, are subversive and false. You are abusing our greatest tradition and our great souls and leaders of mutts. I condemn your silly preaching and politely request you shut your nasty mouth.
You are not authentic!ஜெயக்குமார் அவர்களது ஆலயக்கலை வகுப்பு முடிந்து எழுதுகின்றேன். மிகச் சரியான நிபுணரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். கோவில் கலை, பக்தி இலக்கியம், கோவிலோடு சேர்ந்த மற்ற கலைகள், கல்வெட்டு படிக்கும் திறன், பாட்டு இப்படி பல கூட்டுக் கலைகளில் நிபுணராய் உள்ளார் ஜெ கே
ஆலயங்கள், மகத்தான வகுப்புஆலயங்கள்- மகத்தான வகுப்பு
Your ideas on our land, Bharat, are subversive and false. You are abusing our greatest tradition and our great souls and leaders of mutts. I condemn your silly preaching and politely request you shut your nasty mouth.
You are not authentic!ஜெயக்குமார் அவர்களது ஆலயக்கலை வகுப்பு முடிந்து எழுதுகின்றேன். மிகச் சரியான நிபுணரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். கோவில் கலை, பக்தி இலக்கியம், கோவிலோடு சேர்ந்த மற்ற கலைகள், கல்வெட்டு படிக்கும் திறன், பாட்டு இப்படி பல கூட்டுக் கலைகளில் நிபுணராய் உள்ளார் ஜெ கே
ஆலயங்கள், மகத்தான வகுப்புSeptember 5, 2025
நமக்கு உண்மையிலேயே ஆன்மிகம் உண்டா என்ன?
இந்தியர்களாகிய நமக்கு ஓர் எண்ணம் உண்டு. நாமெல்லாம் ஆன்மிகவாதிகள், வெளிநாட்டினர்தான் உலகியலில் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்று. அது உண்மையா? நமக்கு ஏதாவது ஆன்மிகம் உண்டா என்ன? நம சாமிகும்பிடுவதும், நோன்பு நோற்பதும், பரிகாரம் செய்வதும்தான் ஆன்மிகம் என நினைப்பவர்கள். அதற்கு அப்பால் நமக்கிருக்கும் ஆன்மிகம் என்ன?
ஒற்றைத்துளியில் மூழ்கிச் சாவது…
கடல் நாவலை வாசித்து முடித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடிக்கத்தக்க ஒரு நாவல் அத்தனை ஆழமும், அத்தனை அடுக்குகளும் கொண்டிருப்பது ஆச்சரியமானது. ஆழமான சிந்தனை, ஆன்மிகம் அல்லது வரலாறு பற்றிய பார்வை கொண்ட எழுத்தாளர்களால் ‘கதை’ சொல்ல முடிவதில்லை என்பதுதான் நான் புரிந்துகொண்டது. ஆனால் கதை என்னும் அபாரமான ஓட்டம் இருக்கும்போதே ஒரு படைப்பு சிந்தனையை உலுக்கி விரிவடையச் செய்யும் என்றும், ஒன்றுக்குமேல் ஒன்றாக பல அடுக்குகளை கொண்ட ஒரு பெரிய சித்திரத்தை அளிக்கும் என்றும் இந்நாவல் வழியாகவே அறிந்துகொண்டேன். இந்நாவலை வாசிக்க கடல் என்னும் சினிமாவின் பல காட்சிகளும் உதவின. உங்களுக்கு நன்றி.
சாம்– தாமஸ் இருவருக்குமான உரையாடல். அல்ல சாம்– பெர்க்மான்ஸுக்கான உரையாடலில் நடுவே ஊடகமாக தாமஸ். அவர்கள் வழியாக நிகழும் கட்டற்ற சொற்பெருக்குதான் இந்த நாவல். அதற்குள் வந்துசெல்லும் ஆழங்கள் அபாரமானவை. இந்த நாவல் சினிமாவாக வந்தபோது இத்தனை ஆழமான அடுக்குகள் இருக்கின்றன என்று தோன்றவில்லை. அந்த சதுரங்க விளையாட்டு ஒரு அபாரமான கற்பனை.
செலினா போன்ற ஒரு தேவதை. அவள்மேல் சாம் உள்ளுக்குள் உள்ளுக்குள் கொண்ட பிரியமே அவருக்கான மாபெரும் சிலுவையேற்றமாக ஆகிவிடுகிறது. இந்நாவலில் எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது இதுவே. இது என் வாழ்க்கையும்கூட. (மிகப்பெரிய அவமதிப்பு, வீழ்ச்சி. நேரில் சொல்லியிருக்கிறேன். இந்நாவலில் இந்த இடத்தை எழுத நான் சொன்னதை பயன்படுத்திக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்). நான் ஏன் ஏன் என்று பல ஆண்டுகள் எனக்குள் உழற்றிக்கொண்டிருக்கிறேன். அதில் நீங்கள் சாம் உணர்வதாகச் சொல்லும் அந்தப் பிரியம்தான் அவருக்கான தண்டனைக்கான காரணம். அதை நீங்கள் எனக்கான விடையாகச் சொல்கிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன். ஆனால் பிரியம் என்பது அத்தனை கொடியதா? சிலுவையேற்றத்துக்குரிய பாவமா அது?
எஸ்.கே
அன்புள்ள எஸ்.கே.
உங்கள் வாழ்வின் நிகழ்வாக நீங்கள் சொன்னவற்றை நான் இந்நாவலை எழுதும்போது நினைத்திருக்கவில்லை. ஆனால் இந்நாவலைப்பற்றி இப்போது நிங்கள் சொல்வதை வாசிக்கும்போது உண்மைதான் என்னும் எண்ணத்தை அடைகிறேன். இவை எப்படி நமக்குள் ஒன்றுகூடும் என்பதை நம்மால் சொல்லிவிட முடியாது.
நம்முடைய செவிகளை விட மிகமிக கூரிய செவித்திறன் கொண்ட விலங்குகள் நாம் அன்றாடம் கேட்கும் ஓசைகளை எப்படி எடுத்துக்கொள்ளும்? அவற்றுக்கு அவை மிகப்பெரிய ஒலித்தாக்குதல்களாக இருக்கும் இல்லையா? அவை வதைபடும் இல்லையா? அதைப்போல சராசரியை விட கூரிய உள்ளம் கொண்டவர்களுக்கு அனுபவங்கள் பலமடங்கு தீவிரமானவை. கூர்மை என்பது மென்மை என்றும் பொருள்படலாம். அங்கே மெல்லிய தொடுகைகள் கூட அடிபோல விழலாம். மலர் விழுந்தது தாளாமல் வலி கொண்டு கத்தினாள் காதலனுக்காகக் காத்திருந்த கன்னி ஒருத்தி என்று சம்ஸ்கிருதச் செய்யுள் ஒன்றுண்டு. அது ஓர் அதிமென்மை நிலை. அதுதான் ஆன்மிக சாதகர்களின் நிலையும். பிறருடைய பாவத்துளி அவர்களுக்கு பாவக்கடல். நம் கோப்பை சிந்தும் நீர்த்துளியில் எறும்பு மூழ்கிச்சாகக்கூடும்,
ஆன்மிகசாதகர்களை வழிபாட்டுணர்வுடனும் கூடவே சந்தேகத்துடனும் சாமானியர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வழிபாட்டுணர்வு அவர்களை தெய்வமாக ஆக்கச்செய்கிறது. துளி ஐயம் எழுந்ததும் இழுத்து மண்ணில் விழச்செய்கிறார்கள். எந்த ஆன்மசாதகனுடனும் ஜனங்கள் சிலுவையுடன், பிரார்த்தனை மாலையுடன் வந்துகொண்டிருக்கிறார்கள். சிலுவையை ஏந்தியிருப்பது இருள். பிரார்த்தனை மாலையை வைத்திருப்பது ஒளி. நீ எங்களைப் போன்ற சாமானியன் என்று அவர்களின் இருண்ட ஆழம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அந்த சாதகன் தன் மேன்மையை வெளிப்படுத்துந்தோறும் இருண்ட ஆழம் சீற்றம் கொள்கிறது. ஒளிகொண்ட பக்கம் நெகிழுந்தோறும் இருண்ட பக்கம் இறுகிக்கொண்டே செல்கிறது. இந்த உலகில் வாழ்ந்த எல்லா புனிதர்களும் சாமானியர்களின் கல்லடியை வாங்கியவர்களே. அந்தக் கற்களைச் சாமானியர் இயல்பாக பூக்களாகவும் ஆக்கிக்கொள்வார்கள்.
சாமானியரை அஞ்சியே பழங்காலத் துறவியர் மடங்களுக்குள் மறைந்துகொண்டனர். மலைக்குகைகளில் வாழ்ந்தனர். சாமானியர் முன் நின்றிருக்கையில் ஆன்மசாதகன் எப்படியோ தன்னை ஒருவகையில் சித்தரித்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். அடக்கம் கூட அப்படிப்பட்ட சித்தரிப்புதான். ஒரு சிறு கண்ணசைவு போதும். சாமானியர் அவனுள் உள்ள பாவத்தின் துளியை கண்டடைந்துவிடுவார்கள். ஏனென்றால் அப்படிக் கூர்மையாக அவர்கள் அவனை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சாம் பல்லாயிரம் சாத்தான்களால் கூர்ந்து பார்க்கப்பட்டுக்கொண்டே இருந்த தேவன் அல்லவா?
பிரியம் பாவம் அல்ல. ஆனால் எது பாவம்? நோன்பு என ஒன்றை கொண்டால் அதற்கு எதிரான எதன்மீது ஆர்வம்கொள்வதும் பாவமே. கிறிஸ்துவுக்காக இனிப்பை முழுமையாக துறப்பது ஒரு நோன்பு. அந்த துறவிக்கு ஒருதுளித் தேன் நஞ்சுக்கு நிகரான பாவம் அல்லவா?
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



