Jeyamohan's Blog, page 34
September 6, 2025
ஆலயங்கள்- மகத்தான வகுப்பு
Your ideas on our land, Bharat, are subversive and false. You are abusing our greatest tradition and our great souls and leaders of mutts. I condemn your silly preaching and politely request you shut your nasty mouth.
You are not authentic!ஜெயக்குமார் அவர்களது ஆலயக்கலை வகுப்பு முடிந்து எழுதுகின்றேன். மிகச் சரியான நிபுணரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். கோவில் கலை, பக்தி இலக்கியம், கோவிலோடு சேர்ந்த மற்ற கலைகள், கல்வெட்டு படிக்கும் திறன், பாட்டு இப்படி பல கூட்டுக் கலைகளில் நிபுணராய் உள்ளார் ஜெ கே
ஆலயங்கள், மகத்தான வகுப்புஆலயங்கள்- மகத்தான வகுப்பு
Your ideas on our land, Bharat, are subversive and false. You are abusing our greatest tradition and our great souls and leaders of mutts. I condemn your silly preaching and politely request you shut your nasty mouth.
You are not authentic!ஜெயக்குமார் அவர்களது ஆலயக்கலை வகுப்பு முடிந்து எழுதுகின்றேன். மிகச் சரியான நிபுணரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். கோவில் கலை, பக்தி இலக்கியம், கோவிலோடு சேர்ந்த மற்ற கலைகள், கல்வெட்டு படிக்கும் திறன், பாட்டு இப்படி பல கூட்டுக் கலைகளில் நிபுணராய் உள்ளார் ஜெ கே
ஆலயங்கள், மகத்தான வகுப்புSeptember 5, 2025
நமக்கு உண்மையிலேயே ஆன்மிகம் உண்டா என்ன?
இந்தியர்களாகிய நமக்கு ஓர் எண்ணம் உண்டு. நாமெல்லாம் ஆன்மிகவாதிகள், வெளிநாட்டினர்தான் உலகியலில் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்று. அது உண்மையா? நமக்கு ஏதாவது ஆன்மிகம் உண்டா என்ன? நம சாமிகும்பிடுவதும், நோன்பு நோற்பதும், பரிகாரம் செய்வதும்தான் ஆன்மிகம் என நினைப்பவர்கள். அதற்கு அப்பால் நமக்கிருக்கும் ஆன்மிகம் என்ன?
ஒற்றைத்துளியில் மூழ்கிச் சாவது…
கடல் நாவலை வாசித்து முடித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடிக்கத்தக்க ஒரு நாவல் அத்தனை ஆழமும், அத்தனை அடுக்குகளும் கொண்டிருப்பது ஆச்சரியமானது. ஆழமான சிந்தனை, ஆன்மிகம் அல்லது வரலாறு பற்றிய பார்வை கொண்ட எழுத்தாளர்களால் ‘கதை’ சொல்ல முடிவதில்லை என்பதுதான் நான் புரிந்துகொண்டது. ஆனால் கதை என்னும் அபாரமான ஓட்டம் இருக்கும்போதே ஒரு படைப்பு சிந்தனையை உலுக்கி விரிவடையச் செய்யும் என்றும், ஒன்றுக்குமேல் ஒன்றாக பல அடுக்குகளை கொண்ட ஒரு பெரிய சித்திரத்தை அளிக்கும் என்றும் இந்நாவல் வழியாகவே அறிந்துகொண்டேன். இந்நாவலை வாசிக்க கடல் என்னும் சினிமாவின் பல காட்சிகளும் உதவின. உங்களுக்கு நன்றி.
சாம்– தாமஸ் இருவருக்குமான உரையாடல். அல்ல சாம்– பெர்க்மான்ஸுக்கான உரையாடலில் நடுவே ஊடகமாக தாமஸ். அவர்கள் வழியாக நிகழும் கட்டற்ற சொற்பெருக்குதான் இந்த நாவல். அதற்குள் வந்துசெல்லும் ஆழங்கள் அபாரமானவை. இந்த நாவல் சினிமாவாக வந்தபோது இத்தனை ஆழமான அடுக்குகள் இருக்கின்றன என்று தோன்றவில்லை. அந்த சதுரங்க விளையாட்டு ஒரு அபாரமான கற்பனை.
செலினா போன்ற ஒரு தேவதை. அவள்மேல் சாம் உள்ளுக்குள் உள்ளுக்குள் கொண்ட பிரியமே அவருக்கான மாபெரும் சிலுவையேற்றமாக ஆகிவிடுகிறது. இந்நாவலில் எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது இதுவே. இது என் வாழ்க்கையும்கூட. (மிகப்பெரிய அவமதிப்பு, வீழ்ச்சி. நேரில் சொல்லியிருக்கிறேன். இந்நாவலில் இந்த இடத்தை எழுத நான் சொன்னதை பயன்படுத்திக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்). நான் ஏன் ஏன் என்று பல ஆண்டுகள் எனக்குள் உழற்றிக்கொண்டிருக்கிறேன். அதில் நீங்கள் சாம் உணர்வதாகச் சொல்லும் அந்தப் பிரியம்தான் அவருக்கான தண்டனைக்கான காரணம். அதை நீங்கள் எனக்கான விடையாகச் சொல்கிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன். ஆனால் பிரியம் என்பது அத்தனை கொடியதா? சிலுவையேற்றத்துக்குரிய பாவமா அது?
எஸ்.கே
அன்புள்ள எஸ்.கே.
உங்கள் வாழ்வின் நிகழ்வாக நீங்கள் சொன்னவற்றை நான் இந்நாவலை எழுதும்போது நினைத்திருக்கவில்லை. ஆனால் இந்நாவலைப்பற்றி இப்போது நிங்கள் சொல்வதை வாசிக்கும்போது உண்மைதான் என்னும் எண்ணத்தை அடைகிறேன். இவை எப்படி நமக்குள் ஒன்றுகூடும் என்பதை நம்மால் சொல்லிவிட முடியாது.
நம்முடைய செவிகளை விட மிகமிக கூரிய செவித்திறன் கொண்ட விலங்குகள் நாம் அன்றாடம் கேட்கும் ஓசைகளை எப்படி எடுத்துக்கொள்ளும்? அவற்றுக்கு அவை மிகப்பெரிய ஒலித்தாக்குதல்களாக இருக்கும் இல்லையா? அவை வதைபடும் இல்லையா? அதைப்போல சராசரியை விட கூரிய உள்ளம் கொண்டவர்களுக்கு அனுபவங்கள் பலமடங்கு தீவிரமானவை. கூர்மை என்பது மென்மை என்றும் பொருள்படலாம். அங்கே மெல்லிய தொடுகைகள் கூட அடிபோல விழலாம். மலர் விழுந்தது தாளாமல் வலி கொண்டு கத்தினாள் காதலனுக்காகக் காத்திருந்த கன்னி ஒருத்தி என்று சம்ஸ்கிருதச் செய்யுள் ஒன்றுண்டு. அது ஓர் அதிமென்மை நிலை. அதுதான் ஆன்மிக சாதகர்களின் நிலையும். பிறருடைய பாவத்துளி அவர்களுக்கு பாவக்கடல். நம் கோப்பை சிந்தும் நீர்த்துளியில் எறும்பு மூழ்கிச்சாகக்கூடும்,
ஆன்மிகசாதகர்களை வழிபாட்டுணர்வுடனும் கூடவே சந்தேகத்துடனும் சாமானியர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வழிபாட்டுணர்வு அவர்களை தெய்வமாக ஆக்கச்செய்கிறது. துளி ஐயம் எழுந்ததும் இழுத்து மண்ணில் விழச்செய்கிறார்கள். எந்த ஆன்மசாதகனுடனும் ஜனங்கள் சிலுவையுடன், பிரார்த்தனை மாலையுடன் வந்துகொண்டிருக்கிறார்கள். சிலுவையை ஏந்தியிருப்பது இருள். பிரார்த்தனை மாலையை வைத்திருப்பது ஒளி. நீ எங்களைப் போன்ற சாமானியன் என்று அவர்களின் இருண்ட ஆழம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அந்த சாதகன் தன் மேன்மையை வெளிப்படுத்துந்தோறும் இருண்ட ஆழம் சீற்றம் கொள்கிறது. ஒளிகொண்ட பக்கம் நெகிழுந்தோறும் இருண்ட பக்கம் இறுகிக்கொண்டே செல்கிறது. இந்த உலகில் வாழ்ந்த எல்லா புனிதர்களும் சாமானியர்களின் கல்லடியை வாங்கியவர்களே. அந்தக் கற்களைச் சாமானியர் இயல்பாக பூக்களாகவும் ஆக்கிக்கொள்வார்கள்.
சாமானியரை அஞ்சியே பழங்காலத் துறவியர் மடங்களுக்குள் மறைந்துகொண்டனர். மலைக்குகைகளில் வாழ்ந்தனர். சாமானியர் முன் நின்றிருக்கையில் ஆன்மசாதகன் எப்படியோ தன்னை ஒருவகையில் சித்தரித்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். அடக்கம் கூட அப்படிப்பட்ட சித்தரிப்புதான். ஒரு சிறு கண்ணசைவு போதும். சாமானியர் அவனுள் உள்ள பாவத்தின் துளியை கண்டடைந்துவிடுவார்கள். ஏனென்றால் அப்படிக் கூர்மையாக அவர்கள் அவனை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சாம் பல்லாயிரம் சாத்தான்களால் கூர்ந்து பார்க்கப்பட்டுக்கொண்டே இருந்த தேவன் அல்லவா?
பிரியம் பாவம் அல்ல. ஆனால் எது பாவம்? நோன்பு என ஒன்றை கொண்டால் அதற்கு எதிரான எதன்மீது ஆர்வம்கொள்வதும் பாவமே. கிறிஸ்துவுக்காக இனிப்பை முழுமையாக துறப்பது ஒரு நோன்பு. அந்த துறவிக்கு ஒருதுளித் தேன் நஞ்சுக்கு நிகரான பாவம் அல்லவா?
ஜெ
சுஷில்குமார்
சுஷில்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பான “மூங்கில்” பெரும்பாலாக கன்னியாகுமரி, நாகர்கோவில் என தான் புழங்கிய நாஞ்சில் நாடு சார்ந்தும், அதன் மக்கள், பண்பாடு, பாரம்பரியம், தொன்மம் சார்ந்து அமைந்தது. தொன்மங்களை ஒட்டிய நவீன இலக்கிய ஆக்கங்களை எழுதுகிறார். வரலாற்றுச் சம்பவங்கள், கல்வித்துறை சார்ந்த நுண்மைகள் ஆகியவற்றையும் படைப்புகளில் புனைவுக்குரிய மூலங்களாக எடுத்தாள்கிறார். நவீனச் சிறுகதையில் நாஞ்சில் நாட்டு மரபை தொடர்பவர், நாட்டார் தொன்மங்களை மறுஆக்கம் செய்பவர் என்ற அளவில் கவனிக்கப்படுகிறார்.
சுஷில்குமார்
சுஷில்குமார் – தமிழ் விக்கிநாவல்சுந்தரவனம் (2023)சிறுகதைத் தொகுப்புமூங்கில் (2021)சப்தாவர்ணம் (2021)அடியந்திரம் (2022)கன்னிகை (2024)மொழிபெயர்ப்புதெருக்களே பள்ளிக் கூடம் (2021)
லோகா,நீலி – கடிதம்
அன்புள்ள ஜெ,
லோகா படம் பார்த்தேன். உங்களுடைய கதைகளிலுள்ள அபாரமான நீலி உலகம்தான் மையம். அதை இன்றைய சூழலுக்கேற்ப கதையாக்கி முப்பது கோடி ரூபாய் செலவில் முந்நூறு கோடியை அடித்து தூக்கியிருக்கிறார்கள். அதிலுள்ள மையக்கருவை ஒட்டிய பல கதைகளை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.இன்னும்கூட தீவிரமாகவும், ஆழமாகவும் அவை உள்ளன. ஏன் அவற்றை தமிழில் சினிமாவாக ஆக்க முடியவில்லை. அந்தக்கதைகளெல்லாமே தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவைதானே? (நானும் கன்யாகுமரிக்காரன்தான்)
சிவன் மகாராஜன்
அன்புள்ள சிவன்,
அந்தப்படத்திலுள்ளது கள்ளியங்காட்டு நீலியின் கதை. கள்ளியங்காட்டில்தான் நான் வீடுகட்டி குடியிருக்கும் சாரதா நகர் உள்ளது. கள்ளியங்காட்டு நீலி கோயில் வழியாக அன்றாடம் காலைநடை, மாலைநடை செல்கிறேன். அக்கதையை சுதந்திர மறுஆக்கம் செய்துள்ளனர்.
நான் அக்கதைகளை கவித்துவமான, தத்துவார்த்தமான உட்கூறுகளுடன் மறு ஆக்கம் செய்துதான் என் கதைகளை எழுதியுள்ளேன். அவை பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும், பத்துலட்சம் காலடிகள், ஜெயமோகன் சிறுகதைகள் போன்ற பல தொகுதிகளில் உள்ளன. முப்பது கதைகளுக்கும் மேல் எழுதியுள்ளேன்.
முதன்மை நடிகர்களே இல்லாமல், ஒரு கதைக்காக மட்டும் முப்பதுகோடி முதலீடு செய்வதும், பத்துகோடி செலவழித்து ’பிரமோ’ செய்வதும் மலையாள சினிமாவில்தான் சாத்தியம். அதற்கான தயாரிப்பாளர்கள் அங்குண்டு. இங்குள்ள சினிமா செயல்படும் விதமே வேறு. இதன் முதலீட்டுக் கணக்குகள் முதன்மையாக நடிகர்களை மட்டுமே மையம் கொண்டவை.
ஜெ
சேலம் இலக்கியக்கூடுகை
சேலம் இலக்கியக்கூடுகை. வெண்முரசு வாசகர் வட்டம். விவாதம். அறிமுக உரை எம். பானுமதி. மற்றும் அ.முத்துலிங்கம் எழுதிய கடவுச்சொல் விவாதம். அறிமுக உரை ஆர்.என்.பிரேம்குமார் ராஜா. தொடர்புக்கு 9842713165, 9443357892
வடகிழக்கை நம்மிடம் மறைப்பது யார்?
வடகிழக்கும் இனவாதமும் பேச்சை வாசித்தேன். இங்கே தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்கு வடகிழக்கின் இனவாதச்சூழல் பற்றி அனேகமாக எதுவுமே தெரியாது. ஆனால் இங்குள்ள ஏதோ ஒரு கூட்டம் வடகிழக்கைப் பற்றி ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டே இருந்தது.
வடகிழக்கை நம்மிடம் மறைப்பது யார்?That being said, why not conduct classes in the cities, which will make them more accessible? I ask this in order to gain a better understanding, not to be provocative.
Education can’t be door delivered!
September 4, 2025
மதுரை புத்தகத் திருவிழா, விஷ்ணுபுரம் அரங்கு 44-45
மதுரை புத்தகவிழா 5 செப்டெம்பர் (வெள்ளி) முதல் 15 செப்டெம்பர் (திங்கள்) வரை நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அரங்கு எண் 44 மற்றும் 45. வாசகர்களை அரங்குக்கு வரவேற்கிறோம்.
எங்கள் நூல்கள்
ஜெயமோகனின் புதிய நாவல். கடல் என்னும் திரைப்படம் இந்நாவலை ஒட்டி உருவானது. செவ்வியல் தன்மை கொண்ட இப்படைப்பில் ஓர் ஆன்மாவின் கடலில் தெய்வமும் சாத்தானும் மோதிக்கொள்ளும் அலைகள் கொந்தளிக்கின்றன. மகாகவி தாந்தேயின் டிவைன் காமெடியின் நீட்சியென அமையும் படைப்பு இது.
ஜெயமோகன் கீதை பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். நான்கு நாட்களில் ஆற்றிய தொடர் உரை என்பதனால் எளிய நடையில், நேரடியாக வாசகனுடன் பேசும் தன்மைகொண்டது. கீதைக்குள் நுழைய இன்றைய நவீன வாசகனுக்கு திறக்கப்படும் மிகச்சிறந்த வாசல்.
பண்பாடு பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகளின் தொகுப்பு. நாம் ஆன்மிகம், பண்பாடு என எண்ணியிருப்பவை பலசமயம் சம்பிரதாயமான கருத்துக்கள். அவற்றை நவீன வாழ்க்கையுடன் இணைத்துப்பார்க்கும் பார்வைகள் கொண்ட நூல் இது.
சுந்தர ராமசாமியின் ஆளுமையை தன் நினைவுகளினூடாக ஜெயமோகன் சித்தரிக்கும் இந்நூல் அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அழகியல் விவாதங்களையும் தொட்டுக்கொண்டு ஒரு நாவலைப்போல் விரிவது. நுணுக்கமான காட்சிவிவரணைகளும், புன்னகைக்கவைக்கும் தருணங்களும் கொண்டது.
தமிழில் விஷ்ணுபுரம் அளவுக்கு எந்த நாவலும் அத்தனை கவனமான வாசிப்பைப் பெற்றதில்லை. பல கோணங்களில் அவரவர் அரசியலுக்கும் கருத்துநிலைக்கும் ஏற்ப அதை வாசித்துள்ளனர். இரண்டாவது தலைமுறையில் விஷ்ணுபுரம் குறியீடுகளின் அடுக்குகள் செறிந்த, உணர்வுநிலைகள் உச்சம் தொட்ட, ஒரு நவீன இந்தியக் காவியநாவலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் வாசிப்புக்குச் செல்லவுள்ளது.
குறைத்துச்சொல்லும் அழகியல் கொண்ட கதைகள். இளம்படைப்பாளியான விஷால்ராஜாவின் குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுதி இது. வாழ்க்கையின் மென்மையான புதிர்களைப் பேசும் கதைகள்
பின்தொடரும் நிழலின் குரல் தமிழின் முதன்மையான அரசியல் நாவலாக பல விமர்சகர்களால் மதிப்பிடப்பட்டது. அரசியலின் அடிப்படையாக உள்ள கருத்தியல் என்பதை ஆராயும் நாவல் இது. ஒரு கருத்துநிலைபாடு சாமானியனை எப்படி அபாயகரமான ஆயுதமாக ஆக்கிவிடுகிறது என்னும் கேள்வி வரலாற்றில் என்றும் உள்ள ஒன்று. அதை ஆராயும் படைப்பு இது.
மைத்ரி ஓர் உருவகக் கதை. ஒரு மலை. ஒரு பயணி. ஒரு காதல். ஆனால் இந்த பயணம் மலையின் ஆழங்களின் மடிப்புகளில் இருந்து மலையுச்சியின் வெறுமையின் பரவசம் வரை நீள்கையில் ஆன்மிகமான இன்னொரு பரிணாமத்தை அடைகிறது.
மருபூமி வைக்கம் முகமது பஷிர் தன்னந்தனியாக பாலைவனத்தை கடந்த அனுபவத்தைப் பற்றி எழுதிய சுருக்கமான குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட குறுநாவல். ஓர் அகப்பாலையை கடக்கும் ஒருவனின் அனுபவம் என வகைப்படுத்தலாம். புகழ்பெற்ற பல சிறுகதைகள் அடங்கிய நூல்.
அல்கிஸா தமிழின் முதல் இஸ்லாமிகேட் நாவல் என்று விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. இஸ்லாமிய அழகியல் உச்சம் என சொல்லத்தக்க கவாலி இசை, இஸ்லாமிய ஆன்மிக உச்சம் என சொல்லத்தக்க சூஃபி மரபு ஆகியவை ஓர் அழகிய காதல்கதையால் இணைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் விரைவில் வெளிவரவுள்ளது.
தமிழின் தலைசிறந்த நாவல் என வாசகர்கள் பலரால் கருதப்படும் காடு மனித உறவின் உருவகமான குறிஞ்சி நிலத்தில் நிகழும் ஒரு காதல்கதை. வாழ்க்கையில் பாலை வரலாம். காதல் என்றும் ‘வறனுறல் அறியாச் சோலை’தான் என இந்நாவல் காட்டுகிறது.
சினிமாப்பின்னணியில் எழுதப்பட்ட ஓர் இழந்த காதலின் கதை. கறுப்புவெள்ளை சினிமாவின் உலகம் கவித்துவக்குறியீடாக ஆக்கப்பட்டுள்ளது இந்நாவலில். கற்பனாவாத அழகியல் கொண்ட படைப்பு.
முதுநாவல் ஜெயமோகனின் 133 சிறுகதைகளின் தொகுப்புகளான 14 நூல்களில் ஒன்று. இந்திய சூஃபி மரபின் ஆன்மிகநிலைகளில் இருந்து இந்திய வாழ்க்கையை ஆன்மிகம் வந்து தொடும் தருணங்களைச் சொல்லும் மகத்தான சிறுகதைகள் அடங்கியது. இதில் பல கதைகள் இன்று உலகப்புகழ்பெற்ற அமெரிக்க இலக்கிய இதழ்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
கதாநாயகி ஓரு பேய்க்கதை. ஆனால் அந்தப் பேய்க்கதை சமகாலத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை அடைகிறது. அதற்கு முந்தைய லண்டனை ஊடுருவி ரோமாபுரிக்காலம் வரை நீள்கிறது. பல அடுக்குகளாலான நாவல் இது.
முற்றிலும் மங்கலத்தன்மை கொண்ட நாவல். மதுரை மீனாட்சி திருமணத்தின் அழகியபெருந்தோற்றம். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் வரவிருக்கிறது.
தமிழகத்தின் தலித் எழுச்சியின் தொடக்கப்புள்ளியை, இந்தியப்பெரும் பஞ்சங்களின் பின்னணியில் திகைப்பூட்டும் கச்சிதத்துடன் சொல்லும் படைப்பு. ஆங்கிலத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆண் -பெண் உறவின் நுணுக்கமான சில ஆழங்களுக்குள் ஊடுருவிச்செல்லும் கன்யாகுமரி இருபத்தைந்தாண்டுகளாகத் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் நாவல். காலம் மாறுந்தோறும் அதன் அடிப்படை வினாக்கள் கூர்கொள்கின்றன.
பி.கே.பாலகிருஷ்ணன் என்னும் மலையாளச் சிந்தனையாளரின் கட்டுரைகள். நாவல் என்னும் கலையை புரிந்துகொள்ள, அதை வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முறையாகப் பயன்படுத்த வழிகாட்டும் நூல். கட்டுரை நூலாயினும் உத்வேகமிக்க வாசிப்பை அளிப்பது.
தமிழில் இளைஞர்களிடையே மிக அதிகமாக வாசிக்கப்படும் ஜெயமோகனின் நூல் இரவு. இது அவர்களின் உலகம். இரவில் விழித்து பகலில் தூங்கும் ஒரு சிறு சமூகத்தை சித்தரிக்கும் படைப்பு.
இலக்கியத்தை வாசிப்பதெப்படி? எது நல்ல இலக்கியம்? எது வணிக எழுத்து? இலக்கிய அடிப்படைகள் பற்றிய பல கேள்விகளுக்கு விடைசொல்லும் கட்டுரைகள் கொண்ட நூல்.
காமம் பாவமென உருக்கொள்வது சமூக உறவுகள் வழியாக. காமத்தையும் பாவத்தையும் பிரித்திப்பார்ப்பது ஒரு மனமுதிர்ச்சி. அனுபவத்தினூடாக நிகழும் பரிமாணம் அது. அந்த விடுதலையைப் பேசும் நாவல் இது.
இந்து மெய்யியலை மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து விலக்கி தத்துவமாகவும் ஆன்மிகமாகவும் அணுக முற்படும் நவீன மனத்திற்குரியவை இந்தக் கட்டுரைகள். விரிவான விவாதங்களை உருவாக்கியவை.
அத்தனை கதைகளில் வாழ்தல்!
அன்புள்ள ஜெ,
புனைவுக்களியாட்டு சிறுகதைகளை நான் அப்போது தவறவிட்டேன். அப்போது நான் கல்லூரி மாணவன். வாசிப்புப்பழக்கம் இல்லை. இலக்கிய அறிமுகமும் இல்லை. பொன்னியின் செல்வன் வழியாகத்தான் உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டேன். அதன்பிறகு நான் வாசிக்க ஆரம்பித்தேன். இப்போது கதைகளை புத்தகங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். எட்டு தொகுதிகள் வாசித்துவிட்டேன்.
இந்தக் கடிதத்தை எழுதும்போது பெரிய திகைப்பு என்னுள் உள்ளது. இந்தக் கதைகளை எழுத ஒருவர் எந்த அளவுக்கு கற்பனையில் சென்றிருக்கவேண்டும் என்ற எண்ணம்தான். நான் வாசித்த எல்லாவகைக் கதைகளும் இந்த தொகுதிகளிலுள்ளன. இவற்றில் ஒரு பங்கு கதைகளை எழுதினாலே ஒரு பெரிய வாழ்நாள் சாதனையாக நினைக்கலாம்.
ஒவ்வொரு தொகுப்பும் ஒவ்வொரு வகையானவை. சம்பந்தமே இல்லாத வேறுவேறு எழுத்தாளர்கள் எழுதியதுபோல இவை உள்ளன. ஒரு தொகுப்பு முழுக்க உற்சாகமான இளமைக்கால நினைவுகள். இன்னொரு கதைகள் முழுக்க குற்றம், வன்முறை. ஒரு தொகுப்பு முழுக்க மேஜிக்கலான கதைகள். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொருவகையான மனநிலையும் தத்துவப்பார்வையும் உள்ளது. துப்பறியும் கதைகள், திகில்கதைகள், பேய்க்கதைகள் எல்லாமே எழுதியிருக்கிறீர்கள்.
என் கேள்வி இதுதான். இத்தனை வகையான கதைகளை ஏன் எழுதினீர்கள்? இப்படி வகைவகையாக எழுதுவதற்கான அடிப்படை என்ன?
சங்கு. திருமுகம்
அன்புள்ள சங்கு,
ஒரே மூச்சில், மிகக்குறுகிய காலகட்டத்தில் எழுதப்பட்ட இந்தக்கதைகள் இன்று ஆங்கிலம் வழியாக உலகம் முழுக்கச் சென்று வாசிக்கப்படுகின்றன. ஒரு கதையை அளிக்கக்கோரிய கிரண்டா என்னும் அமெரிக்க இலக்கிய இதழ் மேலும் கதைகளை கோரியது. அக்கதைகள் வெளியாகின்றன. தெலுங்கிலும் கன்னடத்திலும் மலையாளத்திலும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த கதைகள் எனக்கு மூன்று கோடி ரூபாய்க்குமேல் ஈட்டி அளித்துள்ளன. (கதைகளின் மதிப்பு வைரங்களின் மதிப்பை விட அதிகம்!.)
தெலுங்கில் வெளியாகவிருக்கும் தொகுப்புக்கு நான் ஒரு முன்னுரை எழுதினேன். (ஆங்கிலத்தில்) அதில் இந்த விஷயத்தை விவாதித்திருந்தேன். அந்த ஆங்கிலக் கட்டுரையை கூகிளைக் கொண்டு நானே தமிழில் மொழியாக்கம் செய்து அளிக்கிறேன். இங்கள் கேள்விக்கான பதில்களை அதில் காணலாம்.
ஜெ
ஆழ்ந்திறங்க ஆயிரம் வழிகள்
ஜெயமோகன்
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஓர் இளம் எழுத்தாளராக நிறைய கனவுகளுடனும் உற்சாகத்துடனும் தமிழ் இலக்கியத் துறையில் நுழைந்தபோது, ஓர் எழுத்தாளர் தான் தனிப்பட்ட முறையில் அறிந்த மற்றும் உணர்ந்ததைப் பற்றி எழுத வேண்டும் என்ற நம்பிக்கை சூழலில் இருந்தது. அது நவீனத்துவத்தின் நம்பிக்கை. அவர்களுக்கு எழுத்தாளரின் வாழ்க்கையும் ஆளுமையும் அவருடைய எழுத்தை விட முக்கியமானவை. ஒர் இலக்கியப்படைப்பு என்பது அந்த எழுத்தாளரின் ஆளுமையின் நேரடி வெளிப்பாடாகக் கருதப்பட்டது. காஃப்கா மற்றும் காமுவின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்களின் நூல்களை விட அதிகமாக விவாதிக்கப்பட்டது; வான்கோவின் வாழ்க்கை போன்ற சில வாழ்க்கைகள் புராணக்கதைகளைப் போல கொண்டாடப்பட்டன.
1988 ஆம் ஆண்டில், நான் தொடர்ந்து தொடர்பில் இருந்த சுந்தர ராமசாமியுடன் ஒரு சுவாரஸ்யமான உரையாடலில் ஈடுபட்டேன். வறுமை, வாழ்க்கையின் அர்த்தமின்மை மற்றும் ஏக்கம் போன்ற பிற அற்ப விஷயங்களை சித்தரிக்கும் வறண்ட, யதார்த்தமான கதைகளால் நான் மிகவும் சலித்துவிட்டிருந்த காலம் அது.
எடித் வார்டன் போன்ற பேய் கதைகளை எழுத விரும்புகிறேன் என்று நான் சொன்னபோது, சுந்தர ராமசாமி என்னிடம் பேய்களைப் பற்றி எழுத நான் தனிப்பட்ட முறையில் அவற்றைச் சந்தித்திருக்கிறேனா என்று கேட்டார். நான் பதிலளித்தேன், “நீங்கள் மரணத்தைப் பற்றி அடிக்கடி நிறைய எழுதியிருக்கிறீர்கள், நவீனத்துவத்தின் முக்கிய கருப்பொருள் மரணம். நேரடி அனுபவம் இல்லாமல் எப்படி எழுதுகிறீர்கள்?”
ஒரு எழுத்தாளர் தனக்கு நன்கு தெரிந்ததை எழுத வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது. ஆனால் நான் எனக்குத் தெரியாததையே எழுதுவேன் என்று பதிலளித்தேன். ஏனென்றால் எழுத்தினூடாக நான் கற்றுக்கொள்ள விரும்பினேன். எழுதுவதே என் தேடலும் கல்வியுமாகும். எழுத்து என்பது எழுத்தாளரின் நேரடி வெளிப்பாடு என்ற நவீனத்துவக் கருத்தை மறுக்கும் பின்நவீனத்துவத்தின் முக்கிய கருத்துக்களைப் பற்றித்தான் உண்மையில் நான் பேசுகிறேன் என்பதை பின்னர்தான் கண்டுபிடித்தேன். ‘ஆசிரியரின் மரணம்’ என்ற முழக்கம் அந்த நேரத்தில் எனக்கு உத்வேகம் அளித்தது.
குற்றம், புராணம், வரலாறு, திகில், நையாண்டி மற்றும் அறிவியல் புனைகதை போன்ற பல்வேறு வகைகளைச் சேர்ந்த கதைகளை எழுதத் தொடங்கினேன். நவீன தமிழ் இலக்கியத்தின் நிறுவனர் புதுமைப்பித்தன் அனைத்து வகையான கதைகளையும் எழுதியவர் என்பதைக் கண்டேன்.
அந்த காலகட்டத்தில், சில எழுத்தாளர்கள் “கதையிலிருந்து கதையை நீக்குதல்” என்று அழைக்கப்படும் ஒரு இயக்கத்தைத் தொடங்கினர். அவர்கள் எளிய சித்தரிப்புகளை மட்டும் எழுதினார்கள், அவை உரைநடைத் துண்டுகளைத் தவிர வேறில்லை. அந்தக் காலகட்டத்தில், கதைகளின் பொதுவான கருப்பொருள் ஒரு விவசாயி, வேலையற்ற இளைஞன் அல்லது ஒரு சலிப்படைந்த இல்லத்தரசியின் அன்றாட அனுபவங்களைச் வெறுமே சொல்லிவைப்பதாகவே இருந்தது.
‘கதை’ என்று நாம் அழைக்கும் குறிப்பிட்ட வடிவத்தில் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். இந்த எழுத்தாளர்கள் நம்புவது போல் அது அவ்வளவு எளிமையானது அல்ல. அது வெறும் சித்தரிப்பு வடிவம் அல்லது விவரித்துச் சொல்லும் நுட்பம் அல்ல. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகால பரிணாம வரலாற்றைக் கொண்டது அது. உண்மையில் அது மனித ஆன்மாவின் ஒரு பகுதி. அது வீடு, அல்லது கலப்பை அல்லது வண்டி போன்ற ஒரு மானுட சாதனை. கதை என்பது ஓர் அடிப்படை வடிவத்தைக் கொண்டுள்ளது, அதன் புதிய சாத்தியக்கூறுகள் நமக்கு திறந்துள்ளன.
எனவே நான் ஒரு திடமான கருப்பொருள் மற்றும் கட்டமைப்புடன் கதைகளை எழுதத் தொடங்கினேன். ஒரு நல்ல கதையை எந்தவொரு வெளிப்பாட்டு வடிவத்திலும் பெரிய இழப்பு ஏதும் இல்லாமல் திறம்பட மாற்றியமைத்து வெளிப்படுத்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனது கதைகள் வாய்மொழி கதைகளாகச் சொல்லப்பட்டன; அவை நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் உருவாக்கப்பட்டன. அவை ஒருபோதும் தங்கள் அசல் தீவிரத்தை இழக்கவில்லை, ஏனெனில் அவை வெறுமே கதை சொல்லும் நுட்பங்கள் அல்ல, அவை மனிதஉணர்ச்சிகளாக வெளிப்படுத்தப்படும் அடிப்படைத் தேடல்கள் மற்றும் தரிசனங்களைக் கொண்டுள்ளன. நான் எழுத்தை ஒரு தவமாகவே அணுகுகிறேன், வாசகர்களுடனான விளையாட்டாக அல்ல. நான் ஒரு தீராத் தேடலில் இருக்கிறேன், அதில் என் வாசகர்களை ஈடுபடுத்துகிறேன்.
பின்நவீனத்துவவாதிகள் கூறியது போல், இலக்கியம் என்பது கதை சொல்லலைத் தவிர வேறில்லை என்று நான் நம்புகிறேன்; வாழ்க்கை வரலாறுகள் மற்றும் சுயசரிதைகளும் வெறும் கதைகள்தான். அடிப்படையில் ஒரு நாவலுக்கும் சுயசரிதைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒவ்வொரு விவரிப்பு முறைக்கும் அதற்குரிய சொந்த முறை உள்ளது. அது நிகழ்வுகள், தரவுகள் மற்றும் உணர்ச்சிகளைக் கையாள்வதன் மூலம் தான் உணரும் அக உண்மையை வெளிப்படுத்துகிறது. எனவே வாழ்க்கையை ஒரு யதார்த்தவாத நாவலாக எழுதுவது என்பது தொலைதூர எதிர்காலத்தில் அல்லது கற்காலத்தில் நடந்ததாக எழுதுவதை விட வேறுபட்டதல்ல. ஒவ்வொரு வகையான புனைகதைகளிலும் எனது கற்பனையைப் பயன்படுத்தி மொழியில் எனது சொந்த யதார்த்தத்தை உருவாக்குவதன் மூலம் எனது அகஉண்மையை வெளிப்படுத்துகிறேன்.
நவீனத்துவவாதிகள் என்னை “சுவாரஸ்யமான புனைகதை” எழுதுவதற்காகக் குற்றம் சாட்டியபோது, நான் என்னை ஒரு கிளாசிக் எழுத்தாளராகக் கருதிக்கொண்டேன். இப்போது நான் “பின்னைப் பின்நவீனத்துவம்” அல்லது “டிரான்ஸ்மாடர்னிசம்” என்ற மேலும் பொருத்தமான வார்த்தையைக் கண்டடைந்துள்ளேன். நான் வரலாற்று நாவல்கள், அரசியல் நாவல்கள், இருண்ட யதார்த்தப் படைப்புகள் மற்றும் இனிமையான படைப்புகளை எழுதுகிறேன். நான் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக எழுதுகிறேன். ஓர் அக உண்மையை நோக்கிச் செல்லவேண்டும் என்றால் பாலியல் கதைகளையும் எழுதத் தயங்க மாட்டேன் என்று நான் ஒரு முறை கூறினேன்.
ஆனால், இந்தப் படைப்புகளை எளிய வணிக எழுத்திலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவது? பொதுவாசிப்புப் புனைகதைக்கும் இலக்கியத்திற்கும் இடையில் இன்னும் வேறுபாடு உள்ளதா? பின்நவீனத்துவவாதிகள் இல்லை என்று சொல்லலாம், ஆனால் நான் என்னை ஒரு டிரான்ஸ்மாடர்னிஸ்ட் என்று கருதுகிறேன். ஆகவே ஒரு பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் கூறுவேன்.
பரப்புக்கதைகள் முதன்மையாக வாசகரின் தேவைகள் மற்றும் ரசனைகளை அடிப்படையாகக் கொண்டவை. வாசகர் ஒரு நுகர்வோர்; அது ஒரு நுகர்பொருள். இலக்கியப் படைப்பும் விற்கப்பட்டு வாங்கப்படுகிறது, ஆனால் அது நுகர்பொருள் அல்ல, அது எழுத்தாளரையே அடிப்படையாகக் கொண்டது. அவர் தனது எழுத்து மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார், எழுதும்போது, அவருக்கு முன் வாசகர் எவரும் இல்லை. எழுதப்படும் போது அது மிகவும் தனிப்பட்ட விஷயம். ஒத்த எண்ணம் கொண்ட வாசகர் அதைக் கண்டறிந்த பின்னரே அது ஒரு பகிர்வு அல்லது உரையாடலாக மாறுகிறது. ஒவ்வொரு இலக்கிய எழுத்தாளரும் நன்றாக அறிந்திருப்பது இந்த வெளிப்படையான உண்மை. எந்த கல்வித்துறைப் பகுப்பாய்வும் இலக்கியத் தத்துவார்த்த விளக்கமும் இலக்கிய வாசகரிடமிருந்தும் இதை மறைக்க முடியாது.
வாழ்க்கையின் வெவ்வேறு தளங்களில் என்னை ஆழ்ந்து கண்டறியும்பொருட்டு மட்டுமே நான் எல்லா வகையான புனைகதைகளையும் எழுதுகிறேன்; மனித நனவின், மானுடக்கனவின் அனைத்து நிலைகளிலும் எனது அகவெளிப்பாட்டைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். உங்களை பயமுறுத்த நான் பேய் கதைகளை எழுதுவதில்லை. வார்த்தைகளால் ஒருவரை பயமுறுத்துவதனால் என்ன பயன்? ஒரு கதைவடிவம் நம்முன் உள்ளது. அந்தக் கதை வடிவம் மனிதர்களின் மனதில் ஏன் தோன்றியது, அது ஏன் நம் கலாச்சார நினைவுகளில் தொடர்கிறது? அதுதான் கேள்வி. அதில் விசித்திரமான ஒன்று இருக்கிறது – உளவியல், குறியீட்டு மற்றும் மறைஞானம்.
நம்மை பயமுறுத்தும் விஷயங்கள் உண்மையில் நமது தொன்மையான அச்சங்களின் வெளிப்பாடுகள். அவை மனித இருப்பு பற்றிய கொடிய உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. ஆகவே அவ்வகை கதைகள் வழியாக அந்த மனநிலைகளுக்குள் இருக்கும் ஆழத்தையும் உண்மையையும் ஆழ்ந்து சென்று ஆராய முயற்சிக்கிறேன். இந்தக் கண்ணோட்டம் எனது எல்லாக் கதைகளுக்கும் பொருந்தும் . அவை எனது உள்சுயத்திலும் எனது கலாச்சாரத்தின் ஆழத்திலும் பல்வேறு வழிகளில் நான் மேற்கொள்ளும் பயணங்கள். இந்தஅபூர்வமான அறுவை சிகிச்சையைச் செய்ய கத்திகள் இடுக்கிகள் என எல்லாவகையான கருவிகளையும் பயன்படுத்துகிறேன்.
இந்தக் கதைகள் ஒரு பொதுவான வாசகனை ஒருபோதும் சலிப்படையச் செய்வதிலை, ஏனெனில் அவற்றில் வலுவான கதைக்களங்களும் நுணுக்கமான விவரிப்புகளும் உள்ளன.ஆனால் ஒரு வாசகர் இந்தக் கதைகளை தனது ஆழங்களுக்கு பயணிக்கும் ஒரு வழியாகக் கருதினால் நான் மகிழ்ச்சியடைவேன்.
இங்கே நாம் வாழ்க்கை என்று குறிப்பிடும் தனிப்பட்ட நிகழ்வுகளின் எல்லையற்ற நெசவுப்பரப்பு உள்ளது, அதன் கீழ் ஒரு ஒத்திசைவுள்ள அர்த்தத்தை அமைப்பதன் மூலம் அதை தர்க்கரீதியாக ஒன்றோடொன்று இணைக்க முயற்சிக்கிறோம். இந்தக் கதைகள் இலக்கியம் என்று அழைக்கப்படும் அந்த எல்லையற்ற முயற்சியின் ஒரு சிறிய பகுதி.
எனது படைப்புகளை தெலுங்கில் மொழிபெயர்க்க தீவிரமான அர்ப்பணிப்புடன் இருக்கும் எஸ். குமார் மற்றும் பாஸ்கர் அவினேனி ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதைகளை வெளியிட்டதற்காக தா ராமசாமிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயமோகன்
A thousand ways to go deep in…குமரித்துறைவி வாங்கவான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்கபத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கதங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்கஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கவாசிப்பின் வழிகள் வாங்கஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்கஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்கதேவி சிறுகதைத்தொகுப்பு வாங்கஅந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்கஎழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்கமுதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்கபொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்கபின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்கஇருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்கமலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்கநத்தையின் பாதை அச்சு நூல் வாங்கமைத்ரி நாவல் வாங்கஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்கஇந்துமெய்மை ஆன்லைனில் வாங்கசாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்கவணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்கஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்ககதாநாயகி ஆன்லைனில் வாங்கஒருபாலுறவு ஆன்லைனில் வாங்கஅனல் காற்று ஆன்லைனில் வாங்கவெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்கஞானி ஆன்லைனில் வாங்கநான்காவது கொலை ஆன்லைனில் வாங்கவிசும்பு ஆன்லைனில் வாங்கவெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers




