Jeyamohan's Blog, page 1698

December 27, 2016

விஷ்ணுபுரம் விருதுவிழா, சுப்ரபாரதிமணியன் பேச்சு

ttt


 


 


 


கலை என்பது பிரச்சனையை சுற்றி எழுப்பப்படும் புனைவே” என்ற  சார்த்தரின் வாசகம் கடந்த சில நாட்களாய் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.


 


இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்தப் பிரச்சினைகளை எழுத்தாளன் தான் ஊடுருவிப்பார்க்கவேண்டியிருக்கிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் பணமாற்றங்களும்  மனிதனின் முன்னேற்றத்திற்கானதல்லாமல் சுய சிதைவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்பதை என் சொந்த ஊரின் மக்களின் வாழ்க்கை திரும்பத் திரும்ப உணர்த்திக் கொண்டே இருக்கிறது. . அந்தச் சிதைவு தரும் கண்ணோட்டம் அபத்தம் சூன்யம் என்று வாழ்க்கை பற்றி வழக்கமான சொற்களாலேயே இறுதியில் புரிந்து கொள்ளப்படுகிறது. கடவுள் இருக்கிற உலகு என்று இதை  பெரும்பான்மையான உழைக்கும் மனிதனும் நம்புகிறான்.


[image error]


நிச்சயமற்றதான வாழ்வில் மனிதனின் இருத்தலுக்கு இருக்கும் ஏதோ அர்த்தத்தை சின்ன வட்டங்களுக்கும் அடைத்துக் கொள்கிறான்.எந்த வித அர்த்தமும் இல்லாத உலகில்  கடவுள் பற்றின கருத்துக்கள் கொஞ்சம் பிடிமானதாய் தற்காலிகமாய் இருக்கிறது கொஞ்ச காலம்.சமூகத்தையும்  ம்னிதனையும் மாற்றி அமைக்க்க் கூடிய தத்துவ விசாரங்களோ  அறிவியல் தேடல்களோ பாடத்திட்டத்தோடு நின்று விடுகின்றன அந்தப்பாடத்திட்டங்களுக்கு கூட கட்டுப்பாடு என்பது போல் குழந்தைகளை குழந்தைத் தொழிலாளி ஆக்கிவிடுகிறோம் எங்கள் ஊரில். .எந்த உலகம் மனிதனின் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளதோ அது அவனிடமிருந்து உழைப்பிலும் வாழ்வதிலும் அந்நியப்பட்டு நிற்கிறது. அர்த்தமற்ற உலகம். அர்த்தத்தைத் தேடும் மனித மனம் தடுமாறிக்கொண்டே இருக்கிறது.இந்தத் தடுமாற்றம்தான்  ஒரே ஒரு தீவிரமானப் பிரச்சினை தற்கொலையில் சென்று முடிவதுதான் வாழக்கையில் ஏதோ கணத்தில்  நம்புகிறான். அந்த தற்கொலைக்குமுன்பாக கொஞ்சம் வாழ்ந்து பார்க்கிற ஆசையில் நாட்களைக் கடத்துகிறன்.


 


 


மனிதனின் மனதை  நிரப்புவதற்கு   ஏதோ மலை உச்சியை அடைகிற பிரயத்தனத்தில் ஈடுபடுகிறான். அந்த மலை உச்சிக்கு காவடி எடுத்துக் கொண்டு போகிறான். அங்கு போகையில் தீர்த்த செம்புகள், அலங்காரங்கள் அவன் எடுத்துச் செல்லும் காவடியை கனமாக்குகின்றன.கீழே இறங்கும் போது தீர்த்த கலசங்களில் இருந்த தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அலங்காரங்கள். , விபூதி, பஞ்சாமிர்தம் என்று எடை குறைவதில்லை.மகிழ்ச்சியுடன் இருப்பதாக தனக்குத்தானே  கற்பனை செய்து கொள்கிறான். குசிப்படுத்திக் கொள்கிறான்.அதற்குத்தான்  கெடாவெட்டுகளும், கிரகப்பிரவேசங்களும், கருமாதி முற்றங்களும் இருக்கவே செய்கின்றன. புலனின்பங்களில்   கிடைக்கும் ஆனந்தம் பெரிய  ஆறுதலாகிறது. யதார்த்த உலகின் மீது காட்டப்படும் அலட்சியம் அவனை உறுத்துவதேயில்லை. ஆனால் உயிர்த்தெழுதுவிடலாம் என்ற நப்பாசை இருந்து கொண்டே இருக்கிறது.  கல் நெஞ்சம் சாதாரணமாகவே உருவாகி விடுகிறது .  சகமனிதர்களைப் பற்றிய  அனுதாபம் கூட இருப்பதில்லை.கடவுள் குறித்த அனுதாபம் இருக்கும் அளவுக்குக் கூட…. யதார்த்தத்தின் உண்மை அவன் தனக்குள்ளாகவே  வாழ்ந்து கொண்டிருப்பதைச் சொல்கிறது. இறந்து போகிறவர்களின் கதையை ஒவ்வொருவரும் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள்.  அவனின் வார்த்தைகளை யாரோ இட்டு நிரப்பிக் கொள்கிறார்கள். அந்த வார்த்தைகள் சாதாரண மனிதனின் வார்த்தைகள்.


[image error]


அழுக்கடைந்த சிறு நதிகளின் பரப்புகளுக்கு இடையே கொலைகளாலும் துக்கங்களாலும் தன்னை நிறுத்திக் கொள்கிறான.  தேவதூதர்களும் கடவுள்களும் சாத்தான்களும் மதுப்போத்தல்களும் கொஞ்சம் அபூர்வமாய் புத்தகங்களும் கடைசிப்புழுக்கள் தின்ன யாரின் பின்னாலோ அணிவகுத்து நிற்கிறான். விசாரணை என்பதெல்லாம் இல்லை. அதற்கான நிதானமான மொழி என்று எதுவும் இல்லை என்பதும் தெளிவாகிறது.மொழி இழந்த்து போல் இயந்திரங்களுடன் உரையாடிக் கொண்டே இருக்கிறான். வார இறுதியில் சம்பளப் பணத்துடன்  அதிகமாகவே உரையாடுகிறான். நேசம் கொள்கிறான். வருடம் ஒருதரம் போனஸ்.( அதுவும் பீஸ் ரேட், தினசரி கூலி என்றாகி விட்ட99 சதம் தொழிலாளிக்கு வெறும்  பிஸ்கட்) என்பதெல்லாம் அவனின் கனவுக்குள்தான் இருக்கிறது.


 


ஆன்மீக ஆறுதல் தர நிரம்பப்பேர் தென்படுகிறார்கள் ஒரு சூரியனைப்போல் சுற்றிதிரிகிறார்கள். கடவுளின் இருப்பு பற்றி கேள்வி எழுப்புகிறவர்களின் குரல் உரக்க இல்லாமல் போகிறபடியாகிறது . ஒழுங்கமைக்கப்பட்ட பயணத்திற்கு கூட கடவுள் வருவார் என்றே சில சமயங்களில் நம்பி நடக்கிறான்.சுதந்திரத்தின் பொருளை அற்ப போதைக்குள்ளும் தள்ளாடல்களுக்குள்ளும் மலை ஏறுவதிலும் மலைப்பிரசங்கத்திலும் கண்டடைகிறான். .   ஒப்புதல் வாக்குமூலம் என்ற் ஒன்று நிரந்தரமாக்க் கல்லில் பொதிக்கப்பட்டே இருக்கிறது,


 [image error]


“மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் பணியை மேற்கொண்டபோது, அது மிகவும் கடின மானது என்று நினைத்தேன்; மனிதர் யாரும் தங்களுடைய ரகசியத்தைக் காப்பாற்றும் திறனற்றவர்கள். ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான்; அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறது” என்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது..அந்தக்கசிவை கொஞ்சம் கதைகளாய் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.15 நாவல்களும் 200 கதைகளும் 52 புத்தகங்களும் என்று அவை என் முன் நின்று எனக்கே ஆச்சர்யம் தந்தாலும் என் நகரத்தில்  சாதாரண தொழிலாளி வார சம்பளத்தை மனதில் கொண்டு செயல்படுவதைப் போல கூட இல்லாமல்  எந்த நப்பாசையுமின்றி   தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.


 விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்  சுப்ரபாரதிமணியன் கருத்தரங்கில் பேசியது.


 


சுப்ரபாரதிமணியன் வலைத்தளம்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2016 10:31

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70

[ 14 ]


உக்ரனின் குரல் மிக மெல்லிய ஊழ்க நுண்சொல் போல் முதலில் எழுந்தது “அடிமுடி”. அவன் அதையே சொல்லிக்கொண்டிருக்க பைலனின் உள்ளத்தில் அச்சொல் குழம்பிப்பரவியது. அடிதல், முடிதல். அடித்து அடித்து அடிமையெனப் பணிந்து அடிதொழுது முடிந்தமைந்த முடி. முடிந்த முடி, முதலென முடியென எழுதல். அடியென அமைவென விழுதல். சொல் எங்கெல்லாம் சென்று தொடுகிறது! நச்சுக்கொடுக்கு இல்லாத சொல்லென ஏதுமில்லை. அத்தனை சொற்களும் ஊழ்கநுண்சொற்களே. மொழி என்பது ஓர் ஊழ்கவெளி. மொழிப்படலம். அடிமுடி காணாத அனல்வெளி. மொழியாகி நின்றிருக்கும் இதில் எல்லா சொற்களும் அடிமுடியற்றவை.


உக்ரனின் சொற்கள் நஞ்சுண்டு மயங்கி காலிடறி நடக்கும்  வெள்ளாட்டுநிரைகளென ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு ஒன்றை ஒன்று சார்ந்தும் சரித்தும் நிரைகொண்டன. நிரைகலைந்து மீண்டும் கண்டுகொண்டன. என்ன சொல்கின்றான்? அவன் விரல்கள் தவிப்பதை பைலன் கண்டான். வைசம்பாயனன் அவன் கையில் அரணிக்கட்டையை எடுத்து அளித்தான். அச்செயல் பைலனை மெல்லிய அதிர்வுக்குள்ளாக்கியது. அறியாப்பொருள்கொண்ட ஒரு செயல். மானுடர் கைகளை தெய்வங்கள் எடுத்துக்கொள்ளும் தருணம். எப்போதும் முள்முனைமேல் நிலைபிறழாதிருக்கிறான் இவ்விளையசூதன். சொல்லே அருளென்றாகுமா? சொல்லிலே விசும்பு வெளித்தெழலாகுமா?


அரணிக்கட்டையின் மென்மரப்பரப்பில் உக்ரனின் விரல்கள் ஓடலாயின. தொட்டுத்தொட்டு அவை தாவ மென்மரம் தோற்பரப்பென ஒலிகொண்டது. அறிதல்களுக்குரிய அடி. அடிதாளம். அறிந்தறிந்து செல்லும் முடி. முடிதாளம். “அவ்வண்ணம் எழுந்தான் அனலுருக்கொண்ட முதலோன்!” என்றான் உக்ரன். “அது அறியவொண்ணா அப்பழங்காலத்தில் நிகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் அவனை அழகுருவனாக தன் அருகே கண்டுகொண்டிருந்தாள் அன்னை. அருள்புரிக் கைகளுடன் அவனை தங்கள் தவத்திற்குப்பின்  எழுப்பினார்கள் முனிவர்கள். ஆட்டன் என அவனை அறிந்துரைத்தனர் கவிஞர்.”


ஆனால் அனைவரும் அறிந்திருந்தனர், அனலென்பது என்னவென்று. தங்கள் காதலை, தவத்தை, சொற்களைக் கடந்து அரைக்கணத்தின் ஆயிரத்தில் ஒரு மாத்திரையில் அடிமுடி அறியவொண்ணா அப்பெருங்கனலைக்கண்டு அஞ்சிப்பின்னடைந்து அறிந்தவற்றுள்  மீண்டமைந்தனர். அறியவொண்ணாமையும் அறிதலுமாக நின்றிருந்தது அது. அதன் நிழலில் வாழ்ந்தது விசும்பு.


அந்நாளில் ஒருமுறை விண்ணுலாவியாகிய நாரதர் பிரம்மனின் அவைக்கு சென்றார். அங்கு தன் தேவியுடன் அமர்ந்து படைப்பிறைவன் தாயம்  விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். ஒருமுகம் சிரிக்க இன்னொன்று கணிக்க இன்னொன்று வியந்து நோக்கியிருக்க பிறிதொன்று ஊழ்கத்திலமைந்திருக்க ஒருகையில் தாமரையும் மறுகையில் மின்படையும் கொண்டு கீழிருகைகளால் எண்களத்தில் பகடை உருட்டிய பிரம்மன் திரும்பி “வருக நாரதரே, இங்கு விசைமுற்றிய ஓர் ஆடல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வெற்றியும்தோல்வியும் வாள்முனைகொண்டுள்ளன” என்றார்.


“ஆம், இருவர் முகத்திலும் அதன் உவகை உள்ளது” என்றபடி அருகணைந்தார் நாரதர். பகடையை உருட்டிவிட்டு புன்னகையுடன் பின்சாய்ந்து “ஆம், ஆடுக!” என்றார் பிரம்மன். திரும்பி நாரதரிடம் கண்சிமிட்டி “ஒவ்வொரு பகடையும் ஒரு புதுப்படைப்பு. பகடை நின்றபின்னரே படைக்கப்பட்டது என்ன என நான் அறிவேன். காலம், இடம், பரு, பொருள் என நான்கு பக்கங்களின் ஆடல் மட்டுமே இப்பகடை” என்றார். உதடுகோட்டி பகடையின் எண்களை நோக்கிய கலைமகளைச் சுட்டி “என் படைப்புக்கு இவள் சொல்நிகர் வைக்கவேண்டும். அவள் சொல்லுக்கு நான் படைத்தளிக்கவேண்டும் என்பதே ஆடல்நெறி” என்றார்.


தேவி அக்களங்களை சுட்டுவிரலால் தொட்டு எண்ணி காய்களை கருதிக்கருதி நகர்த்தி வைத்தாள். பின்னர் “ஆம்” என தலையசைத்து காய்நிரைத்து நிமிர்ந்து புன்னகைத்தாள். “நன்று” என்றார் நாரதர். குனிந்து நோக்கிய  பிரம்மன் “ஆம், அது தன்பெயரைப் பெற்றுவிட்டது” என்றார். “சொல்சூடுவதுவரை பொருள் நின்று பதைக்கிறது. சொல் அதன் அடையாளம் ஆனதும் பிற அனைத்து அடையாளங்களையும் அதற்கேற்ப ஒடுக்கி அதற்குள் நுழைந்து ஒடுங்கிக்கொள்கிறது. விந்தைதான்!” என்றார் நாரதர். “சொல்லெனும் சரடால் பொருள்வெளியுடன் இணைந்து தானில்லாதாகிறது” என்றாள் கலைமகள்.


“இனி உன் ஆடல்” என்றார் பிரம்மன். பகடையை கையில் எடுத்து மெல்லிய சீண்டலுடன் நகைத்து கலைமகள் அதை உருட்டினாள். புரண்டு விழுந்த எண்களை நோக்கி பிரம்மன் குனிய நாரதரிடம் “ஒலி, வரி, பொருள், குறிப்பு என நான்குபட்டைகளால் ஆன புதிய ஒரு சொல், அதற்குரிய பொருளைப் படைத்தமைப்பது அவர் ஆட்டம்” என்றாள். தலையில் மெல்ல சுட்டுவிரலால் தட்டியபடி இடக்கையால் காயொன்றை நகர்த்தி தயங்கி பின்னெடுத்து மீண்டும் தயங்கி மீண்டும் வைத்தார் நான்முகன். மீண்டும் நகர்த்தியபோது முகம் தெளிந்தது. “இதோ” என்றார்.


“ஆம் பொருள் பிறந்து சொல்லென்றாகிவிட்டது” என்றார் நாரதர். “விந்தை, பொருள் தனக்குமுன்னரே இருந்த சொல்லை நடிக்கிறது.” மீண்டுமொரு ஆடலுக்கென அன்னை பகடையை எடுத்தபோது “மொழி தொடாத பொருளொன்று புடவியில் இல்லை என்பார்கள். மொழியிலிருந்து பொருளுக்கோ பொருளிலிருந்து மொழிக்கோ சென்று கொண்டிருக்கிறது நில்லாப்பெருநெசவு” என்று தனக்குத்தானே என சொன்னார். “சொற்பொருள் என விரியும் இதை தன் ஆடையென்றாக்கி அணிந்து நின்றாடுகிறான் ஒருவன். அவனுக்கு சிவம் என்று சொல். அச்சொல்லுக்கு ஆடல் என்று பொருள். அச்சொல்லுக்கும் பொருளுக்கும் அப்பால் அவனொரு அடிமுடியிலி மட்டுமே” என்றார்.


பிரம்மன் திரும்பி நோக்கி “அடிமுடி காணவொண்ணா ஒன்று என்றால் அது பிரம்மம் மட்டுமே. அதுவன்றி பிறிதேதும் ஆக்கப்பட்டதும் அழிவுடையதுமேயாகும்” என்றார். நாரதர் “ஆம், அதையே நானும் எண்ணினேன். தங்கள் படைப்பிலிருந்து எழுந்தது புடவி. புடவியிலிருந்து எழுந்தது சிவம் என்பது தொல்கூற்று. அவ்வண்ணமெனில் அடியிலிருப்பது தங்கள் படைப்பே. அதன் சுழியத்தில் எழுந்த அனல் எப்படி அடியிலியாகும்?” என்றார். பிரம்மன் நகைத்து “ஆம், அதை நீர் சென்று கேளும்” என்றார். “சென்று கேட்கலாம், ஆனால் நான் விழைந்த வடிவில் அவன் வரும்போது அவ்வினாவுக்கு பொருளே இல்லை. அனைத்து உசாவல்களுக்கும் அப்பால் எழுந்து நிற்கும் அந்த அனற்பெருந்தூணிடமல்லவா அதை நாம் கேட்க வேண்டும்?” என்றார்.


கையில் பகடையுடன் புன்னகைத்து நின்ற தேவி “இவர் அறியாத ஒன்றுள்ளது, முனிவரே. படைப்பின் முன் படைத்தவன் மிகச்சிறியவன். தன்னை நிகழ்த்தி வளர்ந்தெழும் படைப்புக்கு வேரும் கிளையும் முடிவடைவதே இல்லை. எனவே அதற்கு மண்ணும் வானும் இல்லை” என்றாள். “அது நீ படைக்கும் சொல்லுக்கு. அது உளமயக்கு. நான் படைப்பவை காலமும் இடமும் கொண்ட இருப்புக்கள். அவை என் கைக்கு அடங்குபவை” என்றார். “நீங்கள் அதை அறியமுயல்கையிலேயே அது அறிபடுபொருள் என்றாகிவிடுகிறது. அறிவை மட்டுமே அறியமுடியும் என்பதனால் அனைத்து அறிபடுபொருட்களும் அறிவை அளித்து அறிவுக்கு அப்பால் நின்றிருப்பவை மட்டுமே” என்றாள் கலைமகள்.


அச்சிரிப்பால் சீண்டப்பட்டு சினம்கொண்டு “அறிந்து வந்து உனக்கு அறிவென்பது பொருள் அளிக்கும் தோற்றம் மட்டுமே என்று காட்டுகிறேன்” என்றபடி பிரம்மன் எழுந்துகொண்டார். அவருடைய களிமுகம் சினத்தில் வெறித்தது. கணித்த முகம் தன்னுள் ஆழ்ந்தது. வியந்த முகம் பதைக்க ஊழ்கமுகம் விழித்தெழாதிருந்தது. “அளிகூர்ந்து அமருங்கள், படைப்பவரே!  ஒரு சொல்லாடலின் பொருட்டு நான் சொன்னது இது. சென்று அம்முடிவிலியை அடி தேடுவதென்பது வீண் வேலை. அத்துடன்…” என்றார் நாரதர்.


“அத்துடன் எனில்? சொல்க!” என்றார் பிரம்மன். “ஒருவேளை அடி சென்று தொடமுடியாவிடில்…” என நாரதர் தயங்க “வீண்சொல்!” என்று பிரம்மன் சீறினார். “அடியென அமைந்திருக்கிறது என் படைப்பு. சொல் எத்தனை வளர்ந்தாலும் ஆணி வேரிலிருக்கிறது விதையின் முதல் துளி. சென்று அதைத் தொடுவதொன்றும் எனக்கு அரிதல்ல. வருக, சென்று தொட்டுக் காட்டுகிறேன்” என்றார். நாரதர் உடனெழுந்து “நான் இதை எண்ணவில்லை, தேவி” என்றார். கலைமகள் சிரித்து “நன்று, சிலவற்றை அவர் கற்கலுமாகும்” என்றாள். “வந்து நான் என்ன கற்றேன் என்று சொல்கிறேன். இங்கு படைத்தவன் நானே, எனவே மூவரில் முதல்வனும் நானே” என்றபின் நாரதரிடம் “வருக!” என்று சொல்லி பிரம்மன் நடந்தார்.


விண்வெளியில் பிரம்மனுடன் நடக்கையில் நாரதர் “தாங்கள் அடிதேடலாகும். அடிதொடுவதும் உறுதி. ஆனால் அதற்கு முடியுமில என்று சில நூல்கள்  உரைக்கின்றன. விண்வடிவோன் அறியாத முடியென்று இருக்கலாகுமா என்ன?” என்றார். ”ஆம், முடியென்று ஒன்றெழுந்தால் அவர் விண்வடிவப்பேருடலிலேயே அது சென்றமையலாகும்” என்றார் பிரம்மன். “அவரிடம் முடி சென்று தொடமுடியுமா என்று கேட்போம்” என்ற நாரதர் “ஒருவேளை தொடமுடியாமலானால் அதையும் தாங்களே தொட்டுக்காட்டலாம்” என்றார். நகைத்து “ஆம், அடியும் முடியும் அறிந்தபின் அவன் எல்லையை நான் வகுப்பேன்” என்றார் பிரம்மன்.


அவர்கள் சென்றபோது நாரணனும் நங்கையும் பாற்கடலின் கரையில் கரந்தறிதலை விளையாடிக்கொண்டிருந்தனர். அவரை கண்மூடச்செய்துவிட்டு மணல்கூட்டி வைத்து தன் கையிலிருந்த அணி ஒன்றை திருமகள் ஒளித்துவைத்தாள். அவர் அவள் விழிநோக்கி சிரித்தபடி கைவைத்து அதை எடுத்தார். “எப்படி எடுத்தீர்கள்? கண்களை நீங்கள் மூடவில்லை” என்று அவள் சினந்தாள். “மூடிக்கொண்டுதான் இருந்தேன்…” என்றார் நாரணன். “மீண்டும்… இம்முறை நீங்கள் அறியவே இயலாது” என்றபடி அவள் தன் கணையாழியின் சிறிய அருமணி  ஒன்றை மண்ணில் புதைத்தாள். “சரி விழிதிறவுங்கள்… தேடுங்கள்” என்றாள்.


அவர் அவளைநோக்கி நகைத்தபின் அந்த மணல்மேல் கையை வைத்தார். “இல்லை” என அவள் கை கொட்டி நகைத்தாள். மீண்டும் ஓர் இடத்தில் கை வைத்தார். “இல்லை… இன்னும் ஒரே முறைதான்… ஒரேமுறை… தவறினால் நான் வென்றேன்” என்றாள். அவர் கையை வைத்ததும் முகம் கூம்பி “ஆம்” என்றாள். அவர் எடுப்பதற்கு முன் தானே மணலைக் கலைத்து அருமணியை எடுத்தபடி “ஏதோ பொய்யாடல் உள்ளது. எப்படி உடனே கண்டுபிடிக்கிறீர்கள்?” என்றாள். நாரணன் சிரித்தார். அவர்களை நோக்கி பிரம்மனும் நாரதரும் வருவதைக் கண்டு தேவி முகம் திருப்பிக்கொண்டாள்.


அருகணைந்த நாரதர் “தேவி சினந்திருக்கிறார்” என்றார். “ஆம், அவள் மறைத்துவைத்தவற்றை நான் எளிதில் கண்டுபிடிக்கிறேன் என வருந்துகிறாள்” என்றார் நாரணன். நாரதர் “தேவி, செல்வங்களை மண்ணிலன்றி எங்கும் ஒளித்துவைக்கமுடியாது. அவரோ மண்மகளின் தலைவர்” என்றார். தேவி சினத்துடன் திரும்ப “அறிவிழிகொண்டவர் முன் எதை மறைக்கமுடியும் என சொல்லவந்தேன்” என்றார். பிரம்மன் “நாம் வந்ததை சொல்லும், முனிவரே” என்றார்.


“முழுமுதன்மைக்கு ஒருஅணு குறைவென்றே மும்மூர்த்திகளும் அமையமுடியுமென தாங்களும் அறிந்திருப்பீர்கள்” என்றார் நாரதர். “ஆனால் சிவப்படிவர் தங்கள் இறைவன் அடியும்முடியுமற்ற பெருநீட்சி என எழுந்தவர் என்கிறார்கள். அது ஆணவம் என அனைத்தையும் படைத்தவர் எண்ணுகிறார். அடிதேடிக் கண்டடைந்து இவ்வளவுதான் என அவரை வகுத்துரைக்க சென்றுகொண்டிருக்கிறார்.” நாரணன் “முடிதேடி நான் செல்லவேண்டியதில்லை. அது என் அடிவரை வந்து நின்றிருக்கும் என அறிவேன்” என்றார். “ஆம், அதை அறியாதோர் எவர்?” என்றார் நாரதர். “ஆனால் ஆற்றப்படாதவை அனைத்தும் விழைவுகளும் கூற்றுகளுமென்றே பொருள்படும் என்று நான் சொல்லவில்லை என்றாலும் நூலோர் பின்னர் சொல்லக்கூடும்.”


“அதை ஆற்றிவிடுகிறேன். அவன் முடிதொட்டு மீள்கிறேன்” என்று விஷ்ணு எழுந்தார். “நன்று, ஆனால் முன்னரே நீங்கள் மூன்றடியால் அளந்த விண் அது. அதை மீண்டும் அளப்பதில் விந்தை என்ன இருக்கிறது? அன்று அளக்காது எஞ்சியது அவுணன் சென்றமைந்த ஆழம். அதை அளந்து மீள்கையில்தான் உங்கள் மூன்றாம் அடியும் முழுதமைகிறது” என்றார் நாரதர். பிரம்மன் ஏதோ சொல்ல முயல அதைமுந்தி “பருவுருக்கொண்டவை அனைத்தும் நான்முகன் படைப்பென்று அனைவரும் அறிவர். பரு அனைத்திலும் உறையும் விண்ணையும் படைத்தவர் முழுதளந்துவிட்டால் அதன்பின் அவரை முனிவர்கள் முழுமுதலுக்கு நிகர் என்றே போற்றுவர்” என்றார் நாரதர்.


தேவி புன்னகையுடன் “இங்கு கைப்பிடி மண்ணை அகழ்ந்து மணி தேர்வதுபோல் அல்ல அது. அடியிலா ஆழம். அங்கே அனலென அகழ்ந்து ஆழ்ந்துசெல்கிறது அவர் அடி என்கிறார்கள்” என்றாள். சினத்துடன் திரும்பி “அளந்து மீள்கிறேன். அது நான் என்னையும் அறிந்துகொள்ளுதலே” என்றார் விஷ்ணு. “நன்று, இதோ நூலோர் நவின்றுமகிழும் ஒரு நூலுக்கான கதை” என்று நாரதர் சொன்னார்.


அவர்கள் கயிலாய மலைக்குச் சென்றபோது அங்கே தன் இரு இளமைந்தருடன் ஆடிக்கொண்டிருந்தாள் அன்னை. “தேவி, உங்கள் கொழுநன் எங்கே?” என்று நாரதர் கேட்டார். “இங்கு இவர்களின் தந்தையென இருப்பவர் நினைத்தபோது எழுந்தருள்வார். அயனும் அரியும் சேர்ந்து தேடுபவர் எவரென நான் அறியேன். அவரை நீங்களே கண்டடைக!” என்றாள் தேவி. “திசையிலியின் மையத்தில் அடியிலியில் தொடங்கி முடியிலியில் ஓங்கி நின்றிருக்கும் அனலே அவர் என்றனர் நூலோர். அடிமுடிகாண சென்றுகொண்டிருக்கிறார்கள் இவர்கள். அவர்கள் காண்பதைக்காண சென்றுகொண்டிருக்கிறேன் நான்” என்றார் நாரதர்.


“நானும் உடன்வருகிறேன்” என தன் வேலுடன் எழுந்தான் இளையமைந்தன். “அது முறையல்ல, மைந்தா” என்றாள் அன்னை. “எந்தையென வந்தவரை நான் இன்றுவரை முழுதாகக் கண்டதில்லை.” தேவி அவனைத் தடுத்து “தனயர் தந்தையரை முழுதுறக் காணலாகாது, மைந்தா. அவர் அளிக்கும் முகமே உனக்குரியது” என்றாள். உணவுண்டுகொண்டிருந்த மூத்த மைந்தன் “ஆம், அன்னை சொல்லியே தந்தைமுகம் வந்தமையவேண்டும்” என்றான்.


அவர்கள் செல்லும்வழியில் விண்கடல் கரையோரம் அமர்ந்து தன் சிறுகமண்டலத்தில் மணலை அள்ளி அப்பாலிட்ட அகத்தியரைக் கண்டனர். “என்ன செய்கிறீர்கள், குறுமுனியே?” என்றார் நாரதர். தலைதூக்கி நோக்கியபின் அதே கூருள்ளத்துடன் மணல் அள்ளிக் கொட்டியபடி “அளந்துகொண்டிருக்கிறேன்” என்றார் அகத்தியர். “கடல்மணலையா? நன்று” என நகைத்தார் பிரம்மன். “அதை அளந்து முடித்துவிட்டு கடலை அளப்பீர் அல்லவா?” என்றார் விஷ்ணு. “இல்லை, நான் அளந்துகொண்டிருப்பது என்னை. எனக்கு எப்போது சலிக்கிறதென்று பார்க்கிறேன்” என்றார் அகத்தியர். “சலிக்காத ஒன்றை அளக்கச்செல்கிறோம். உங்கள் கமண்டலத்துடன் வருக!” என்றார் நாரதர். அவர்  ஆவலுடன் எழுந்து “செல்வோம்… நான் திரும்பி வந்து இதை அளக்கிறேன்” என்றார்.


[ 15 ]


ஆசிரியனை அளக்க நான்கு மாணவர்கள் கிளம்பிச்சென்றனர். ஒருவர் தன் ஆணவத்தால், பிறிதொருவர் தன் அறிவால், மூன்றாமவர் தன் ஆர்வத்தால் சென்றனர். நான்காமவர் சென்றது அளந்து விளையாடும்பொருட்டு. பதினான்கு வெளிகளை, இறத்தல் நிகழ்தல் வருதல் நுண்மை இன்மை எனும் ஐந்து காலங்களை,  காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருஷன், மாயை, துரியம் என்னும் எட்டு தன்னிலைகளை அவர்கள் கடந்துசென்றனர். நால்வரும். அப்பால் அப்பாலெனச் சென்று அவர்கள் உற்றதெல்லாம் அகன்றபின் கடுவெளியின் மையப்பெரும்பாழில் முழுமுதன்மை என எழுந்த அனல்பேருருவைக் கண்டு நின்றனர்.


“நான் சென்று அடியளந்து மீள்கிறேன்” என்றார் பெருமாள். தன் உருப்பெருக்கி கொடுந்தேற்றையும் மதவிழியும் கொண்டு பன்றி வடிவெடுத்தார். அவ்வுருக்கண்டதும் நீரென புகையென நெகிழ்ந்து அவரை தன்னுள் அணைத்துக்கொண்டாள் புவிமகள். “நான் விண்சென்று முடிதொடà

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2016 10:30

December 26, 2016

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 5

[image error]

இரண்டாம்நாள் மேலும் பெரிய அமர்வரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது


 


 


அன்புள்ள ஜெமோ,


விஷ்ணுபுர விருது விழா நிகழ்வுகள் கட்டுரைகள் இன்னும் வரவில்லை, நண்பர்களின் தனிபட்ட பங்குபெற்ற அனுபவ பதிவுகள் இன்னும் வரவில்லை, வீடியோ பதிவுகள் எதுவும் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் விழா எவ்வளவு சிறப்பாக நடந்தது என்பதை நண்பர்கள் குறிப்புகள் மூலம் இங்கிருந்தே உணரமுடிகிறது. மிக சிறப்பான முறையில் நடந்தேறிரிக்கிறது.


ஒவ்வொருவருடமும் மேலும் மேலும் சிறப்பாக செய்து போய்கொண்டே இருக்கிறோம். அமைப்புக்கு வெளியே இருந்து வரும் பாராட்டுக்களை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். கிட்டதட்ட ஒவ்வொருவருடமும் ஒரு “கல்யாண விழா” நடத்திக் கொண்டிருக்கிறோம், எந்த அமைப்பு பலமும் இல்லாமல் நண்பர்களின் தன்னியல்பான ஈடுபாட்டை முன்வைத்து மட்டுமே. இது அவ்வளவு எளிதல்ல.


 


kkk


சிங்கப்பூர் காவிய முகாம் நடத்தியபோது, அவ்வளவு பேர் இலக்கியத்திற்காக தன் காசு செலவழித்து சிங்கப்பூர் வந்து கலந்து கொண்டுவிட்டு, விழா முடிந்தவுடன் மறுநாளே திரும்பி சென்றதற்கான காரணம் இலக்கியம் மட்டும் என்று நினைக்கவில்லை, அதற்கு முதறகாரணமாக உங்களையே உணர்ந்தேன். ஜெமோ ஜெமோவாக இருப்பதே காரணம் என்று. இவ்வளவு நண்பர்கள் ஒன்றிணைந்து இயங்குவதற்கு காரணம் நீங்களாகவே இருக்கிறீர்கள். அதை தாண்டிய இரண்டாவது காரணம், நமது விஷ்ணுபுர நண்பர்களிடையேயான இந்த நட்பார்ந்த இந்த உறவு.


[image error]


சு வேணுகோபால்


 


 


ஒவ்வொருவருடமும் எந்த கட்டயபடுத்தல்களும் இல்லாமல் ஒரு குடும்ப விழாவாக இவ்வளவு நண்பர்கள் தமிநாட்டின் ஒரு மிகபெரும் விழாவை இலக்கியத்தை முன்னிருத்தி நடத்துவது, இந்த விழாவை முன்னிறுத்தி நடக்கும் “சீசனல் கேம்” இல்லை, உலகின் பல இடங்களில் இருந்தாலும் வருடம் முழுவதும் தொடர்ந்து பேசி, விவாதித்து, பகிர்ந்து கொண்டிருக்கும் விஷ்ணுபுர நண்பர்களிடையேயான தொடர்ந்த நட்பார்ந்த உறவு. அதுதான் இதை இன்னும் உற்சாகமான, ஆத்மார்த்தமான கூடுகையாக, ஒவ்வொருவரின் குடும்ப விழாவாக மாற்றுகிறது. தமிழ் இலக்கிய உலகில் முன்மாதிரி அற்ற ஒரு தனித்த பெரும் நிகழ்வு இது என்றே கொள்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.


அன்புடன்


சரவணன் விவேகானந்தன்


சிங்கப்பூர்


 


[image error]

சீனிவாசன்


 


அன்புள்ள ஜெ,


இந்த வருட விருதுவிழா மிகச் சிறப்பாக நடந்திருக்கிறதைக் கண்டு மிக மகிழ்ச்சியாய் உள்ளது. அதே சமயம் கலந்துகொள்ள முடியவில்லை என்கிற வருத்தமும் உள்ளது. விழாவும் கூடுகையும் பெரிதாகிக்கொண்டே வருவது சிறப்பு. அதே நேரம் நல்ல வளமான விவாதங்களும் உரைகளும் நிகழ்ந்துள்ளன என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. தேசிய அளவில் இது உயர்ந்து விரியும் நாள் தொலைவில் இல்லை.


இந்த வருட கிறிஸ்துமஸ் திருப்பலியில் ஃபாதர் உங்களுக்கு நிறைவான சந்தோஷத்தை தரும் மனிதர்களுக்காக செபியுங்கள் என்றபோது குடும்பத்தினருடன் உங்களையும் நம் நண்பர்களையும் நினைத்துக்கொண்டேன். உண்மையில் அப்போது எல்லோருடனும் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.


 


[image error]

கிருஷ்ணன்


 


இப்போது கொஞ்சம் அறிவியல் புத்தகங்களை வாசிக்கும் முயற்சியில் உள்ளேன். காலம் இதழுக்கு தொடுவுணர்வு குறித்த அறிவியல் தகவல்களுடன் ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன். தொடர்ந்து சில அறிவியல் கட்டுரைகள் எழுதத் திட்டம்.


இன்று துவங்கி நாங்கள் இத்தாலி பயணம் செல்லவுள்ளோம். ரோம், அசிசி, பிளாரன்ஸ், பிசா, பதுவா, வெனிஸ் என பயணம். ஒரு திருப்பயணம் என்றே சொல்லலாம். :)


வீட்டில் எல்லோருக்கும் எங்கள் அன்பை தெரிவிக்கவும்.


அன்புடன்


சிறில் அலெக்ஸ்


 


முந்தைய பதிவுகள்


 


விஷ்ணுபுரம் விழாப்பதிவு1 விஷ்ணு


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2


விஷ்ணுபுரம் விழாப்பதிவு3 ராகேஷ்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு4 சுரேஷ் பிரதீப்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 5


விஷ்ணுபுரம் விழாப்பதிவு6


விஷ்ணுபுரம் விழாப்பதிவு7


விஷ்ணுபுரம் விழாப்பதிவு8 யோகேஸ்வரர்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 10 குறைகள்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு11 சசிகுமார்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 12


உரைகள்


இராமுருகன் உரை


சுப்ரபாரதிமணியன் உரை


 


காணொளிகள்


ஜெயமோகன் உரை


வண்ணதாசன் உரை


நாஸர் உரை


கு சிவராமன் உரை


பவா செல்லத்துரை உரை


இரா முருகன் உரை


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 20:32

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 5

[image error]

இரண்டாம்நாள் மேலும் பெரிய அமர்வரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது


 


 


அன்புள்ள ஜெமோ,


விஷ்ணுபுர விருது விழா நிகழ்வுகள் கட்டுரைகள் இன்னும் வரவில்லை, நண்பர்களின் தனிபட்ட பங்குபெற்ற அனுபவ பதிவுகள் இன்னும் வரவில்லை, வீடியோ பதிவுகள் எதுவும் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் விழா எவ்வளவு சிறப்பாக நடந்தது என்பதை நண்பர்கள் குறிப்புகள் மூலம் இங்கிருந்தே உணரமுடிகிறது. மிக சிறப்பான முறையில் நடந்தேறிரிக்கிறது.


ஒவ்வொருவருடமும் மேலும் மேலும் சிறப்பாக செய்து போய்கொண்டே இருக்கிறோம். அமைப்புக்கு வெளியே இருந்து வரும் பாராட்டுக்களை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். கிட்டதட்ட ஒவ்வொருவருடமும் ஒரு “கல்யாண விழா” நடத்திக் கொண்டிருக்கிறோம், எந்த அமைப்பு பலமும் இல்லாமல் நண்பர்களின் தன்னியல்பான ஈடுபாட்டை முன்வைத்து மட்டுமே. இது அவ்வளவு எளிதல்ல.


 


kkk


சிங்கப்பூர் காவிய முகாம் நடத்தியபோது, அவ்வளவு பேர் இலக்கியத்திற்காக தன் காசு செலவழித்து சிங்கப்பூர் வந்து கலந்து கொண்டுவிட்டு, விழா முடிந்தவுடன் மறுநாளே திரும்பி சென்றதற்கான காரணம் இலக்கியம் மட்டும் என்று நினைக்கவில்லை, அதற்கு முதறகாரணமாக உங்களையே உணர்ந்தேன். ஜெமோ ஜெமோவாக இருப்பதே காரணம் என்று. இவ்வளவு நண்பர்கள் ஒன்றிணைந்து இயங்குவதற்கு காரணம் நீங்களாகவே இருக்கிறீர்கள். அதை தாண்டிய இரண்டாவது காரணம், நமது விஷ்ணுபுர நண்பர்களிடையேயான இந்த நட்பார்ந்த இந்த உறவு.


[image error]


சு வேணுகோபால்


 


 


ஒவ்வொருவருடமும் எந்த கட்டயபடுத்தல்களும் இல்லாமல் ஒரு குடும்ப விழாவாக இவ்வளவு நண்பர்கள் தமிநாட்டின் ஒரு மிகபெரும் விழாவை இலக்கியத்தை முன்னிருத்தி நடத்துவது, இந்த விழாவை முன்னிறுத்தி நடக்கும் “சீசனல் கேம்” இல்லை, உலகின் பல இடங்களில் இருந்தாலும் வருடம் முழுவதும் தொடர்ந்து பேசி, விவாதித்து, பகிர்ந்து கொண்டிருக்கும் விஷ்ணுபுர நண்பர்களிடையேயான தொடர்ந்த நட்பார்ந்த உறவு. அதுதான் இதை இன்னும் உற்சாகமான, ஆத்மார்த்தமான கூடுகையாக, ஒவ்வொருவரின் குடும்ப விழாவாக மாற்றுகிறது. தமிழ் இலக்கிய உலகில் முன்மாதிரி அற்ற ஒரு தனித்த பெரும் நிகழ்வு இது என்றே கொள்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.


அன்புடன்


சரவணன் விவேகானந்தன்


சிங்கப்பூர்


 


[image error]

சீனிவாசன்


 


அன்புள்ள ஜெ,


இந்த வருட விருதுவிழா மிகச் சிறப்பாக நடந்திருக்கிறதைக் கண்டு மிக மகிழ்ச்சியாய் உள்ளது. அதே சமயம் கலந்துகொள்ள முடியவில்லை என்கிற வருத்தமும் உள்ளது. விழாவும் கூடுகையும் பெரிதாகிக்கொண்டே வருவது சிறப்பு. அதே நேரம் நல்ல வளமான விவாதங்களும் உரைகளும் நிகழ்ந்துள்ளன என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. தேசிய அளவில் இது உயர்ந்து விரியும் நாள் தொலைவில் இல்லை.


இந்த வருட கிறிஸ்துமஸ் திருப்பலியில் ஃபாதர் உங்களுக்கு நிறைவான சந்தோஷத்தை தரும் மனிதர்களுக்காக செபியுங்கள் என்றபோது குடும்பத்தினருடன் உங்களையும் நம் நண்பர்களையும் நினைத்துக்கொண்டேன். உண்மையில் அப்போது எல்லோருடனும் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.


 


[image error]

கிருஷ்ணன்


 


இப்போது கொஞ்சம் அறிவியல் புத்தகங்களை வாசிக்கும் முயற்சியில் உள்ளேன். காலம் இதழுக்கு தொடுவுணர்வு குறித்த அறிவியல் தகவல்களுடன் ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன். தொடர்ந்து சில அறிவியல் கட்டுரைகள் எழுதத் திட்டம்.


இன்று துவங்கி நாங்கள் இத்தாலி பயணம் செல்லவுள்ளோம். ரோம், அசிசி, பிளாரன்ஸ், பிசா, பதுவா, வெனிஸ் என பயணம். ஒரு திருப்பயணம் என்றே சொல்லலாம். :)


வீட்டில் எல்லோருக்கும் எங்கள் அன்பை தெரிவிக்கவும்.


அன்புடன்


சிறில் அலெக்ஸ்


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 20:32

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவு 4- சுரேஷ் பிரதீப்

அன்புடன் ஆசிரியருக்கு,


வெள்ளிக்கிழமை நள்ளிரவு  பதிவினை பார்த்த போது கரூர் தாண்டி வந்து கொண்டிருந்தேன். உண்மையில் இறங்கி ஓடி விடலாமா என்ற மனநிலைக்கு சென்று விட்டேன். நாஞ்சில் நாடன் தொடங்கி ஒரு பெரும் பட்டியலை அளித்திருந்தீர்கள். நாஞ்சிலையும் கொஞ்சம் தேவதேவனையும் கொஞ்சம் முருகவேளையும் மட்டுமே அதுவரை வாசித்திருந்தேன். அதுவும் “ஒண்ணுமே வாசிச்சதில்லை சார்” ரொம்பவும் நம்பிக்கை இழக்க செய்திருந்தது.


குஜராத்தி சமாஜில் செந்தில் முதன்முதலில் கை கொடுத்து வரவேற்றார். அதன்பிறகு அதற்கு முந்தைய தயக்கங்கள் இப்போது தான் நினைவுக்கு வருகின்றன. கொல்லிமலை சந்திப்பு போலவே இரண்டு நாட்கள் இடையூறில்லாமல் கடந்தது மகிழ்ச்சியை தந்தது. வாசித்த ஆளுமைகளை அருகிருந்து பார்ப்பதே பிரமிப்பு தருகிறது. உங்களையும் நாஞ்சிலையும் வண்ணதாசனையும் பார்ப்பதில் அந்த பிரமிப்பை நான் அடைந்தேன். எழுத்தாளரை நேரில் சந்திப்பதில் என்ன கிடைக்கும் என்று புரிந்தது.


 


[image error]


பவாவையும் இரா.முருகனையும் வாசித்திருந்தேன். ஆனால் கேட்க வேண்டும் என்பதற்காக வலிய வரவழைத்துக் கொண்டு கேள்விகளை அவர்களிடம் கேட்க விழையவில்லை. கிட்டத்தட்ட அந்த தாடகை மலையடிவாரத்தவரை நாஞ்சில் நாடனிடம் காண முடிந்தது. சுவை குறித்து அவர் சொன்ன போது நீங்கள் சொன்னதைத் தான் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டேன். நேர் உரையாடலிலும் தீதும் நன்றும் தொடரின் சரளமும் அவர் புனைவுகளை இயல்பாக ஊடறுக்கும் அங்கதத்தையும் சுவையையும் அவரிடம் காண முடிந்தது.


தேவதேவன் இணையத்தில் கிடைக்கும் “வால்பேப்பர்” கவிதைகளை மட்டும் வாசித்திருக்கிறேன். ஜினுராஜும் நானும் தேவதேவனை தனியே சந்திக்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான முழுமையான “முன் தயாரிப்புகளுடன்” கவிஞரிடம் பேசுவதே சரியென்பதால் அவரிடம் அறிமுகம் செய்து கொள்ளவில்லை. வினாடி வினாவிலும் மிகக் கூர்மையான கேள்விகள். பவாவின் கதை சொல்லல் குறித்து இணையத்தில் வாசித்திருக்கிறேன். நேரில் கேட்பது உற்சாகமூட்டும் அனுபவமாக இருந்தது. அதுவும் சரியாக அவர் கதை சொல்லும் நேரத்தில் கீழே அமர்ந்திருந்தோம். சம்மணமிட்டு அண்ணாந்து பார்த்து கதை கேட்பது சிறுவர்களுக்குரிய குதூகலத்தை அளிக்கிறது.


மறுநாள் சு.வேணுகோபலைத் தொடர்ந்து வண்ணதாசன் உரையாடல்களில் பங்கேற்றார். மிக மெல்லியவற்றால் ஆன மனிதர். தனுமை தொடங்கி சமீபத்தில் வாசித்த பூரணம் வரை அவரிடம் அந்த மென்மை தக்க வைக்கப்பட்டிருப்பதை காணும் போது வியப்பே ஏற்படுகிறது.


 


 


[image error]


“உள்ளே பெருமழைக்கு சற்றே நலுங்கும் கிணற்றுநீர் போல அந்தரங்கங்களை மட்டுமே எழுதும் எழுத்தாளருடன் உரையாடல்”. எனக்குப் பிடித்திருந்த உங்களுடைய வார்த்தைகளை அவரும் குறிப்பிட்டது நிறைவளித்தது. சிவபிரகாஷின் நேரடி உரையாடல் சற்றே அதிர்ச்சி கொள்ள வைத்தது. பாசங்கற்ற பேச்சுகளுக்கு பழகிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. பாவண்ணனும் சிலவற்றை பகிர்ந்து கொண்டார். நான் நினைத்தது போலவே தேவதேவன் அதிகம் பேசவில்லை. இரண்டாம் நாள் அமர்வுகளில் அடிக்கடி நீங்கள் எழுந்து வெளியே சென்று விட்டீர்கள்.


மாலையின் மேடை நிகழ்வுகளும் அலங்காரங்களும் செயற்கை தன்மைகளும் இன்றி அரங்கேறின.. வண்ணதாசனின் உரை நெகிழ வைத்து விட்டது. பேசிக் கொண்டிருக்கும் போது கொந்தளித்து தத்தளித்து மீண்டும் தன்னை தொகுத்துக் கொண்டு அவர் ஆற்றிய உரையை அப்படியே நினைவு மீட்ட முடியவில்லை எனினும் அவர் எழுத்துகளின் அழுத்தத்தை இவ்வுரையிலும் உணர முடிந்தது. இரா..முருகனின் வருகை அறிவித்தலுக்கு அடுத்த கடிதமாக செல்வராஜ் அவர்களின் கடிதம் இடம் பெற்றிருந்தது. மேடையில் வண்ணதாசன் சொன்னதையே ஒருவேளை செல்வராஜ் இதை படிப்பாரானால் நானும் அவரிடம் சொல்கிறேன். வண்ணதாசன் உங்களை சந்திக்க விரும்புகிறார். அதுவொரு வித ஏக்கமும் கூட.


 


[image error]


காசர்கோடு வி.மலையப்பனை உங்கள் மூலமாக வண்ணதாசன் சந்தித்தது போல செல்வராஜையும் சந்தித்தால் மகிழ்ச்சி.


எச்.எஸ்.சிவபிரகாஷ் விரும்பியது போல விஷ்ணுபுரம் விருது ஒரு இந்திய நிகழ்வாக விரியும் எனில் முதல் ஆளாக துள்ளிக் குதிப்பவன் நானாகவே இருக்கும்.


அன்புடன்


சுரேஷ் ப்ரதீப்


 


 


222222


அன்புள்ள சுரேஷ்


நான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு சார்ந்து வெளியே செல்ல நேரிட்டது. அத்துடன் ஒன்றும் தோன்றியது, நான் அரங்கிலிருக்கையில் எப்படியோ நானும் விவாதங்களுக்குள் பேசுபொருளாகிறேன் என. பேசுபவர்கள் என் நெடுங்கால நண்பர்கள், அவர்களால் என்னை நோக்கிப்பேசுவதைத் தவிர்க்கமுடியாது. ஆகவே அரங்கை கூடுமானவரை தவிர்க்கவேண்டுமென்று தோன்றியது


ஆனால் எச்.எஸ் சிவப்பிரகாஷின் அரங்கில் முழுமையாக இருந்தேன். அது ஒரு மாபெரும் ஞானசபையாக ஆகியதை கண்டேன்


ஜெ


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 20:31

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -3 ,ராகேஷ்

 


[image error]

மருத்துவர் கு சிவராமன் உரையாடல்


 


அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,


சுமார் ஏழரை மணியளவில் நான் குஜராத்தி சமாஜம் இருந்த இடத்திற்கு வந்தடைந்தபோது வாசலில் தான் சகோதரர் சுநீல் கிருஷ்ணன் அவர்களும், சகோதரர் கடலூர் சீனு அவர்களும் சிரித்துக்கொண்டே இன்னும் இருவேறு நபர்களுடன் நின்றிருந்தனர். வந்தவர்களுக்கும், வந்துக்கொண்டே இருந்தவர்களுக்கும் துணை புரிந்தனர். சுமார் எட்டரை மணியளவில் நீங்கள் மீனாம்பிகை அவர்களுடன் என்ட்ரி கொடுத்தீர்கள்.


காலை உணவை ருசியுடன் சுவைத்து முடிந்தவுடன் முதல் அமர்வு சரியாக ஒன்பதரை மணிக்குள் தொடங்கியது. நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்துலகம், அதோடு சொல் சேர்க்கை முறை மற்றும் அதன் சுவை வேறுபாடு மற்றும் கடவுளை அவர் பொதுவாக வணங்கும் முறையை பற்றி சொன்னபோது எழுந்த சிரிப்பலை அணைய வெகுநேரம் பிடித்தது. அவர் மிகவும் கோபமாய் சொன்ன பல தமிழ் வார்த்தைகளின் மறைவு மற்றும் சங்க இலக்கியத்தின் கொடை பற்றி பேசியது, தமிழை விரும்பி படிக்காமல் போகும் பலரை நினைத்து அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் வேதனை உண்டானது.


 


 


11


பின் சின்னதொரு தேநீர் இடைவெளி. அதற்கு பின் தொடங்கிய பாரதி மணி அவர்களின் அனுபவ பேச்சும், அவர் சொன்ன ரசவடை கதைமுதல், ராயல் சல்யூட் கதை வரை உள்ள பல அனுபவ கதைகளும் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர் சொன்ன பல உண்மைகள் பல பேருக்கு மன நெருடலை தந்தது உண்மைதான். அதிலும் நாடகத்துறையை பற்றி ஐயா சொன்னது. அவர் ஏன் அவரது நாடகத்துறை பற்றிய அனுபவத்தை மட்டும் கொண்டு தனியாக ஒரு புத்தகம் இன்னும் ஏன் எழுதாமல் இருக்கிறார் என வருத்தமும், வியப்பும் உண்டாகியது.


பின்னர் மதிய உணவை முடித்தபின் S.ராம்குமார் I.A.S  அவர்களின் தொகுப்புரையுடன் நடந்த இரா.முருகன் அவர்களின் கதைகளின் மீதான உரையாடல் மற்றும் அவரது பேச்சு ,அதிலும் அவரது கதைகளின் களம் மற்றும் பின்புலம் அதோடு அவரது மேஜிக்கல் ஸ்டோரிகளின் போக்கு பற்றி உரையாடியதும் பல கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்களும் அவரை நெருங்கி அறிவதற்கு உறுதுணையாக இருந்தது.


 


[image error]

தேவதேவனிடமிருந்து ராஜமாணிக்கம் விருதுபெறுகிறார்


அதன்பின் பவா அவர்களின் பேச்சு அக்கூட்டத்தில் இருந்த மனிதர்களை எழும்ப விடாமல் கட்டி போட்டது என்று சொன்னால் அது ஒவ்வொருவரும் ஆமோதிப்பர். அவர் சொன்ன ஒவ்வொரு கதையும். அப்பப்பா…! மனிதர் பல உலகங்களுக்குள் அழைத்து சென்றுவிட்டார். அவர் வீட்டில் கிணறு வெட்டிய கதையில் நான் அவருடனே அந்த முதல் நீரை முகத்தில் வாங்கிக்கொண்டேன். பால் சக்கிரியாவின் கரடி கதை, சுவாமிஜியுடனான அவரது சந்திப்பு மற்றும் எத்தனையோ கதைகள். hats off to you பவா sir. நீங்கள் நிச்சயம் ஒரு பெரும் கதைசொல்லி தான். பல நாட்களுக்கு நண்பர்களிடம் சொல்ல பல பல கதைகளையும்  மனித மனங்களின்  ஓட்டங்களையும் கண்முன்னே கொண்டு வந்தீர்கள். முடிவில் அவர் முடித்த போது மனம் ஏங்கியது.


இலக்கிய வினாடி வினா. கடவுளே …. கையளவு கூட கற்கவில்லை என்று புரிந்தபோது மனம் தவித்த தவிப்பும், நம்மிடம் ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று பயந்த நிமிடமும் , அதே நேரம் ஒரு வெறியும் ஏறியதை சொல்லாமல் முடியாது.


 


 


[image error]

ராஜகோபாலன் தொகுத்து அமைத்த அமர்வு. இரா முருகன்


 


இரவுணவுக்கு பின்னர் தொடங்கிய Dr.சிவராமன் அவர்களின் மருத்துவ கேள்வி-பதில் மற்றுமல்லாது அவர் சொன்ன பல புதிய தகவல்கள் நிச்சயம் எங்களை போன்ற இளம் வாசகர்களுக்கு புதிய அனுபவம் தான். கலந்துரையாடல் வேளையில் Dr.சுநீல் அவர்களின் சில வாதங்களும் நிச்சயம் பல புரிதல்களை அனைவருக்கும் வழங்கியது. அதோடு quiz செந்தில் அவர்கள் சொன்ன இந்திய அரசு ஆராய்ந்து கண்டடைந்த முடிவுகளை நாம் செயல்படுத்தாமல் குப்பையில் போட்டதையும் ஆனால் அந்த தரமுடிவுகளை பக்கத்து நாடான பங்களாதேஷ் உபயோகித்து கொண்டிருப்பதையும் நினைத்த போது பலருக்கும் இந்திய அரசின் மேல் கோபத்தை வரவழைத்தது.


சு.வேணுகோபால் அவர்களது உரையுடன் தொடங்கிய மறுநாள் காலை அமர்வு விவசாயத்தை பற்றியும், அதன் வலிகளையும், நுட்பங்களையும், அதன் முறைகளையும் அதோடு அவர் பஷீர் மற்றும் பல எழுத்தாளர்களை பற்றியும் பேசியது பலரது எண்ணங்களை திருப்பிப் போட்டது. அவரின் பேச்சின் இடையில் வந்து சேர்ந்தார் இவ்விழாவின் நாயகன் “வண்ணதாசன்” என்ற அவர்களின் உயரம் ஒரு கம்பீரம் தான்.


வண்ணதாசன் ஐயாவின் பேச்சு கனிவுடன், மன நிறைவுடன், ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் வாழவேண்டிய அவசியத்தை, அதன் அபத்தத்தை, அதன் சுருள்களையும் அவர் சொல்லியது ஆழ்மனதில் அவரது மெல்லிய வருடும் குரலினாலான பேச்சு சுமார் இரண்டு மணிநேரம் கடந்ததையே அறிய முடியவில்லை. இன்னும் அவர் நிறைய பேசமாட்டாரா …? என அனைத்து உள்ளங்களும் விருப்பப்பட்டது.


 


 


[image error]

மாணவர் பாரதி அனேகமாக எல்லா இலக்கிய வினாடிவினாக்களுக்கும் பதில்சொல்லி புத்தகப்பரிசுகளைப் பெற்றுக்கொண்டே இருந்தார். ’சக்கு இப்ப எப்டி இருப்பா?” என்னும் வரி எந்த நாவலில் பயின்றுவருவது என்னும் கேள்விக்கு பதிலாக அபிதா லா.ச.ரா என்று சொல்லி லா.சராவின் மகன் சப்தரிஷியிடமிருந்து பரிசைப்பெற்றுக்கொண்டார்


 


எச்.எஸ். சிவப்பிரகாஷ் அவர்களின் ஆங்கில உரை மற்றும் அவர் சொன்ன பல பதில்கள். மதுரை காண்டத்தை பற்றி அவர் சொன்ன விஷயங்கள் மற்றும் தமிழ் ,கன்னட இலக்கிய மரபு பற்றியும் அவர் நிறைய நிறைய தகவல்களை சொன்னது நிறைவாக இருந்தது.


மதியம் உணவை பீடாவுடன் முடித்த பிறகு நடந்த எழுத்தாளர்களுடனான கேள்வி-பதில் மற்றும் அதில் சுப்ரபாரதி மணியன், பாவண்ணன், தேவதேவன்  மற்றும் நாஞ்சில்நாடன் ஆகியோர் அளித்த பல பதில்கள் மிகவும் சுவையுடனும், வாசகர்களுக்கு உதவியாகவும் இருந்தது.


[image error]


எம் கோபாலகிருஷ்ணனிடமிருந்து பரிசுபெறுகிறார் சேலம் பிரசாத்


பின்னர் மாலையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய அனைவரது பேச்சும் “வண்ணதாசன்” என்ற ஆளுமையின் எழுத்துலகத்தை பற்றியும், ஒவ்வொரு கதையின், கவிதையின் தாக்கத்தையும் உணர முடிந்தது. ஆனால் இரண்டு நாள் இரு மணித்துளிகள் போல அதிலும் குறைந்த பட்சம் அங்கு நான் இருந்த நாற்பது மணி நேரத்தில் முப்பது மணி நேரத்துக்கும் மேல் எழுத்துலக ஆளுமைகளுடனும் அவர்களது எண்ணங்களையும், அறிவுரைகளையும் நெருக்கத்தில் இருந்து அறிந்துகொள்ள கிடைத்த வாய்ப்பும் அதற்கு உதவி புரிந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் மிக பெரிய நன்றிகளை அனைவர் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.


ராகேஷ்


கன்யாகுமரி


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 19:52

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -2

[image error]அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு ,


வணக்கம்


முதன் முதலாக விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். வளரும் தரமான வாசகர் வட்டத்தை வளர்த்து வருகிறீர்கள். பாராட்டுக்குரிய விஷயம்’. தமிழ் சமூகம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது !


இரண்டு நாளும் இந்த இலக்கிய சந்திப்பு படைப்பாளி வாசகர் இருவரையுமே வளப்படுத்தும் வாய்ப்பாக அமைந்துள்ளது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அன்பர்களின் ஏற்பாடுகள், இன்முக சேவை பசுமையாக நெஞ்சில் பதிந்துள்ளது


நெஞ்சார்ந்த நன்றி !


அன்பினில்


விசிறி சங்கர்


[image error]


அன்புள்ள ஜெ


இரண்டு மகிழ்ச்சிகரமான நாட்கள்.


உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. (செந்தில், ரங்கா, காளி பிரசாத், மீனாம்பிகை, கடலூர் சீனு மற்றும் பெயர் தெரியாத நண்பர்கள் பலர் ).


நான் எந்த வகையில் பங்கேற்க முடியுமென்றாலும், பளுவை பகிர முடியும் என்றாலும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். வெறுமே வந்து விருந்தோம்பலை மட்டும் நுகர்ந்து சென்றதில் ஒரு guilty உணர்வு.


கேட்க நினைத்ததில், பகிர நினைத்ததில் சில மட்டுமே கேட்க முடிந்தது. பகிர முடிந்தது. இதையே ஆரம்ப படிக்கல்லாக கொண்டு, தொடர எண்ணம் இருக்கிறது. இரா.முருகன் சிறந்த நண்பராகிவிட்டார். நாஞ்சிலுடன் சற்று கூடுதலாகவே பேச முடிந்தது.


பாரதி மணி, பவா செல்லத்துரை, சிவப்ரகாஷ், வேணுகோபால், டாக்டர் சிவராம் முதலியோருக்கு வணக்கங்கள்.


தேவதேவனுடன் ஒரு நீண்ட உரையாடல். பாதி உறக்கத்திலும் பேசிக் கொண்டே இருப்பது போல உணர்வு.


நன்றி


அன்புடன்


முரளி


 


[image error]


அன்புள்ள ஜெ


விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வுகளுக்கு எல்லா வருடமும் வந்துகொண்டிருப்பவன் நான். தமிழகத்தில் மிகச்சிறந்த இலக்கியவிழா என்று இதைச் சந்தேகமில்லாமல் சொல்வேன். விழா மட்டும் அல்ல ஒரு கல்யாண வீடு போல இரண்டுநாட்கள் சேர்ந்து அமர்ந்து பேசி சிரித்து சாப்பிட்டு கடைசியில் ஒரு பெரிய நிகழ்ச்சி. இந்த வருடம் இருமடங்கு பெரியதாகவும் இருமடங்கு சிறப்பாகவும் அமைந்துவிட்டது. அரங்குகளில் ஒன்றுகூட சோடை போகவில்லை. நாஞ்சில்நாடன் நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே களைகட்டிவிட்டது. இந்த முறை நிகழ்ச்சிகள் உச்சநிலையில் இருந்ததற்குக் காரணம் பங்கெடுத்தவர்களின் நகைச்சுவை உணர்ச்சிதான். பாரதிமணி நாஞ்சில் பவா செல்லத்துரை இரா.முருகன் சு.வேணுகோபால் அத்தனைபேரின் நிகழ்ச்சிகளும் உச்சகட்ட நகைச்சுவையுடன் கொண்டாட்டமான அனுபவங்களாக இருந்தன. மறக்கமுடியாத நிகழ்ச்சி. மறக்கமுடியாத நாட்கள்


மகாதேவன்


[image error]


ஜெ


இந்தவருடம் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சிதான் சென்ற பத்தாண்டுகளில் நான்கலந்து கொண்ட மிகமிகச்சிறந்த இலக்கிய நிகழ்ச்சி மட்டும் அல்ல பொது நிகழ்ச்சி என்றே சொல்வேன். இரண்டு நாட்கள். முதல்நாள் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை 13 மணிநேரம். மறுநாள் 9 மணிக்குத்தொடங்கி மாலை 430 வரை ஏழரை மணிநேரம். அத்தனை நேரம் நிகழ்ச்சிகள் ஒரு கணம்கூடத் தொய்வடையவில்லை. ஒரு நிமிடம் கூட வீணாகச் செல்லவில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததை ஒரு பெரிய சாதனை என்றுதான் சொல்வேன். உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் நிகழ்ச்சியை அமைத்ததை நினைக்கையில் இப்படி ஒரு குழு வேறு உண்டா என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது


எஸ்.சிவக்குமார்


[image error]


 


அன்புள்ள ஜெயமோகன்


விஷ்ணுபுரம் விழா இம்முறை ஒரு உச்சகட்ட வெற்றி சார். ஒவ்வொரு ஆண்டும் இதற்காகக் காத்திருந்து வந்து கொண்டாடி கண்கலங்கி நெகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வதே வழக்கமாக ஆகிவிட்டது. ஆனால் இந்தமுறை கூட்டம் பலமடங்கு. அரங்கு போதாமல் இடம்மாற்றிக் கொண்டே இருந்தீர்கள். அதன்பின்னரும் அரங்குகள் போதாமல் நின்றுகொண்டே இருந்தார்கள். விவாத அரங்கிலேயே முந்நூறுபேர். விழாவில் ஆயிரம்பேர் அரங்கில். கீழே காணொளி இணைக்கப்பட்ட இடத்தில் முந்நூறு பேர். இத்தனைபேர் நின்றுகொண்டும் தரையில் அமர்ந்தும் ஒரு இலக்கிய விழாவை கொண்டாடுவதென்பது இதுவரை காணமுடியாத அனுபவம். அதுவும் வெற்றுப்பேச்சு சம்பிரதாயங்கள் ஆடம்பரங்கள் என்று ஒன்றுமே இல்லை. எந்தவகையான நாடகத்தனமும் இல்லை. அறிவுத்தீவிரம் மட்டும்தான். இதைப்போல ஒரு நிகழ்வு மனதிலிருந்து இறங்க இன்னும் பலவாரங்களாகும்


செல்வராஜன் சாம்


[image error]


அன்புள்ள ஜெ சார்


விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே மிகச்சிறப்பாக இருந்தன. அத்தனை அரங்குகளும் கிளாஸிக் என்று சொல்லும்படி இருந்தன. ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்தவேண்டும் என்று உங்கள் அமைப்பினரிடம்தான் பாடம் கேட்கவேண்டும். இப்படி ஒரு இலக்கியத் திருவிழாவை இனிமேல் வேறு எவராவது அமைக்கமுடியுமா என்பது ஒரு சவால்தான். அற்புதம்.


ஆனால் உச்சம் என்பது அந்த இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சி. இனி அதைப்போல எல்லா இடத்திலும் நிகழ்ச்சி செய்வார்கள் என நினைக்கிறேன். இலக்கியத்தை துளித்துளியாக அங்கே இங்கே என்று தொட்டுச்செல்லும் ஒரு பெரிய பரவசம் எனக்கு ஏற்பட்டது


முரளிதரன்


1


அன்புள்ள ஜெ


இந்த வருடம் விஷ்ணுபுரம் விருதுவிழாதான் இதுவரை நடந்ததிலேயே மிகச் சிறந்தது. கூட்டம் பலமடங்கு. பலரும் வெளியூரிலிருந்து வந்தவர்கள். ஆனால் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ஒரு துளிகூட வீணாகாமல் கொண்டு சென்ற விதத்தால்தான் இந்த விழா சிறப்பாக அமைந்தது என நினைக்கிறேன். இது போல ஒரு நிகழ்ச்சி நூறு புத்தகங்களை வாசித்ததற்குச் சமானமானது


நிகழ்ச்சியின் உச்சகட்டம் என்றால் பாவண்ணனின் பேச்சுதான். நான் நெகிழ்ந்துபோய்விட்டேன்


பரவசத்துடன்


குமாரசாமி அருண்


 


படங்கள்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 19:40

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -1, விஷ்ணு

111


அன்புள்ள ஆசிரியருக்கு,


இந்த ஆண்டு விருது வண்ணதாசனுக்கு என்ற அறிவிப்பு வந்ததும் மகிழ்வாக இருந்தது. என்னை பாதித்த முதல் எழுத்தாளர் வண்ணதாசன். அவரின் அகம் புறம் தொடர் விகடனில் வரும்போது எனக்கு 17 வயது. ஒரு அட்டைப்பட சினிமா செய்திக்காக தற்செயலாக ஆனந்த விகடன் வாங்கியபோது கடைசியாக வாசித்த பகுதி தான் அகம்புறம் கட்டுரையின் முடிவில் ஏதோ இனம் புரியாத ஒரு அழுத்தம் மனதை நெகிழ்வாக்கியது. அதை வாசிப்பதற்காகவே ஆனந்த விகடனை தொடர்ந்து வாங்கினேன். அதன் பின் துரதிர்ஷ்டவசமாக வண்ணதாசனை விட்டுவிட்டு ஆனந்த விகடனை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அதன் பின் ஒரு எழுத்து என்னை பாதிக்க ஏழு ஆண்டு காலம் ஆகியது.


ஜெயமோகனின் நவீன தமிழ் இலக்கியம் அறிமுகம் என்ற புத்தகத்தை தோழி தற்செயலாக பரிசளிக்க அது இன்னொரு திறப்பாக என் உடைதலாக இருந்தது. இதுவும் தற்செயல் நிகழ்வு தான். இவை எனக்கு நிகழவே இல்லையென்றால் நான் எதையும் வாசித்திருப்பேனா என்பது சந்தேகம் தான். அதன் பின் இலக்கியம் வரலாறு ஆன்மிகம் தத்துவம் என ஜெ எனக்கு ஒவ்வொன்றாக அறிமுகம் செய்தார். நான் தவறவிட்டுவிட்ட ஒரு எழுத்தாளரை திரும்பவும் வாசிக்க விஷ்ணுபுரம் விருது ஒரு வாய்ப்பாக அமைந்தது. அவ்வகையில் இதுவும் எனக்கு ஒரு நிமித்தம் தான். நான் ஒரு நல்ல வாசகனா? என்பது எனக்கே இன்னமும் தெரியவில்லை. ஆனால் நான் தொடர்ந்து வாசித்து கொண்டு இருக்கிறேன். என்றாவது ஒருநாள் அந்த நிலையை அடையக்கூடும்.


வண்ணதாசனின் கதைகள் மென்மையாக தொடங்கிய போதும் என்னை அதன் ஆழத்திற்கு இழுத்துச் சென்று நான் அறியாத கணத்தில் என்னை நெகிழச் செய்துவிடுகின்றன. ஐம்பது சிறுகதைகளை வாசித்திருப்பேன் அவற்றில் பெரும்பாலானவற்றில் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன். அவற்றின் நுண்மைகளை அறிந்து கொள்ளும் அளவிற்கு வாசித்திருக்கிறேன் என்பதை பவா அவர்கள் எச்சம் சிறுகதையை வைத்து பேசும்போது உணர்ந்தது கொண்டேன். மீண்டும் அவற்றையெல்லாம் வாசிக்க வேண்டும் என்ற தூண்டுதல் இருக்கிறது.


விஷ்ணுபுரம் விருதிற்காக வெள்ளிக்கிழமை காலையிலேயே நாகர்கோவில் பேசேன்ஜர் ரயிலில் கிளம்பிவிட்டேன். கிறிஸ்துமஸ் வருவதால் ஜெமோவின் இதுவரை இணையத்தில் சில கட்டுரைகளை மட்டுமே வாசித்திருந்த சிலுவையின் பெயரால் புத்தகத்தை பயணத்தின் போதே வாசித்து முடித்தேன். கிருஸ்துமஸ் நாளில் ஒரு வாசகனாக கிறிஸ்துவை நினைத்துக் கொள்ள வேறென்ன செய்துவிட முடியும்.


 


[image error]


இரவு நன்றாக உறங்கினால் தான் மறுநாள் நடக்கும் நிகழ்வுகளை நன்றாக கவனிக்க முடியும் என்பதற்காகவே வெள்ளிக்கிழமையே கிளம்பியிருந்தேன். கோவையில் எனது டிப்ளமோ வகுப்பை படிக்கும் போதுதான் வண்ணதாசனை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அதே கோவையில் அவருக்கான விழா. மார்கழியின் இரவு மெல்லிய குளிரோடு இருக்க வேடிக்கை பார்த்து கொண்டே சற்று நேரம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுற்றினேன். எனது கல்லூரி காலங்களில் எந்த கவலையும் இன்றி சுற்றிய இடங்கள் சற்றே மாறித்தான் போய் இருந்தன முழுவதும் மாற்றமடையவில்லை என்பது ஒரு ஆறுதல் தான் இன்னமும் நான் பழைய எச்சங்களை கண்டுகொள்ள முடிந்தது. கோயம்புத்தூர் என்றாலே அழகான பெண்களும் நினைவில் வரும். நான் இருக்கும் இந்த வெள்ளிக்கிழமை இரவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இளைஞர்களும் அழகான பெண்களும் வெளியேறி சென்று கொண்டிருந்தார்கள். நானோ அவர்களின் எதிர்திசையில் ஊரினை விட்டு வெளியேறி வந்திருந்தேன். அவரவருக்கு அவரவர் கொண்டாட்டங்கள்.


நவீனமான கவர்ச்சியான விடுதிகளை பார்த்துக் கொண்டே ஒரு குறைந்த வாடகையில் விடுதியின் அறையை தேடிக்கொண்டிருந்த காந்திபுரம் சந்துகளில் அந்த முதியவரின் அழைப்பை ஏற்று அவரின் விடுதியில் ஒரு படுக்கையுள்ள ஒரு அறையை கேட்டேன். எல்லா அறையிலும் இரண்டு படுக்கைகள் தான் இருந்தன. நான் எனக்கு ஒரு படுக்கை போதும் என்று வலியுறுத்தி மாடிப்படிக்கு கீழே ஒரு அறையை பெற்றுக்கொண்டேன். அதன் ஓரத்தில் பழைய மர சாமான்கள் போட்டு வைத்திருந்தார்கள். ஒரு இரவுக்கு இது போதும் என நினைத்து அந்த அறையை பெற்றுக்கொண்டேன். பின்னிரவில் ஒரு சத்தத்தை கேட்டு கண்விழித்த போது கட்டிலின் ஓரத்திலிருந்து கதவில் தனக்கான பாதையை அமைக்கும் பணியில் அந்த பெருச்சாளி ஈடுபட்டிருந்தது. நல்ல வேளை காலை கடிக்கவில்லை என்பது சற்றே நிம்மதி தான்.


உறக்கம் கலைந்த இரவில் பெருச்சாளியின் பணிக்கு எந்தவித தொந்தரவும் தராமல் கட்டிலில் படுத்தபடியே அதை பார்த்துக் கொண்டிருந்தேன். என் தலை சற்றே அசையும் அதிர்வுகளை கூட உணர்ந்து ஓடி ஒளிவதும் பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து தன் பணியை தொடர்வதுமாக சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது பெருச்சாளி. ஒருபக்கம் தூக்கம் கலைந்த எரிச்சல் இந்த இரவில் ஒரு பெருச்சாளியை கொல்ல வேண்டுமா என்ற கேள்வி. தூங்கினால் கடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு. ஏறத்தாழ ஒருமணி நேரம் சென்றிருக்கும் அந்த பெருச்சாளியின் செயல்களிலிருந்து அது கருமமே கண்ணாக இருப்பது தெரிந்தது. ஒரு வேளை அந்த பெருச்சாளியும் கீதையை வாசித்திருக்கலாம். அதன் பின் என்னையெல்லாம் ஒரு தடையாகவே பொருட்படுத்தாமல் வேலையை தொடர்ந்தது. நானும் காலையில் இன்னும் அதிகமான எழுத்தாளர்களை இலக்கியவாதிகளை எதிர்கொள்ள வேண்டியதிருப்பதால் சாரி பெருச்சாளி உன்னை மட்டுமே என்னால் இந்த இரவில் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.


 


 


[image error]


மார்கழி குளிரில் நான் எதிர்பார்த்து காத்திருந்த அந்த தினம் விடிந்துவிட்டது. வடகோவை பேருந்தில் ஏறி குஜராத்தி சமாஜை அடைந்தேன். எதிர்கொண்டழைத்த ஒரு நண்பர் ஒரு அறையில் எனக்கும் ஒரு படுக்கையை ஒதுக்கி தந்தார். சகஜமாக நண்பர்களை அறிமுகம் செய்து கொண்டேன். கடலூரில் இருந்து வந்த ஒரு வாசகர், சுரேஷ் பிரதீப், சுசில் அவர்களையும் அறிமுகம் செய்து கொண்டேன். ஜெயும் உள்ளே வந்து எங்களை வரவேற்றார். ஊட்டியில் எங்களுக்காக நிகழ்வுகளை ஒருங்கமைத்த மீனா அக்காவிற்கும் என் வருகையையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டேன்.


முதல் அமர்வு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் முதல் அமர்வு. சுற்றிலும் வாசகர்கள் சூழ நாஞ்சில் அவர்களுடன் உரையாடல் தொடங்கியது. அவரின் படைப்பை பற்றி ஆரம்பித்த உரையாடல் அவரின் தலைப்புகளில் வழக்கத்தில் இருந்து மறைந்த பழம் தமிழ் சொற்களை பயன்படுத்துவது குறித்த வாசகர் ஒருவரின் கேள்வி அவரை பழந்தமிழ் இலக்கியத்திற்கும் இட்டுச் சென்றது. தமிழின் சொல்வளம், கவிதைகளில் உள்ள இசைநயம், அதற்கு தேவைப்படும் ஒரு பொருட் பன்மொழி போன்ற மொழியை செழுமைப்படுத்தும் சொற்கள் குறித்து நாஞ்சிலின் உரை ஆழமாக சென்றது.


சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம் என செய்யுள்களில் இருந்து ஏராளமான எடுத்துக்காட்டுகள் கூறி நாஞ்சில் வேறொரு உலகில் நிகழ்ந்துகொண்டிருந்தார். வட்டார வழக்கு பற்றிய நண்பரொருவரின் கேள்விக்கு பெரும்பாலான வட்டார வழக்கு சொற்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டவைதான் என்ற நாஞ்சிலின் பதிலும் அதற்கு நாஞ்சில் அளித்த எடுத்துக்காட்டுகளுமாக உரை சுவாரஸ்யமாக அவ்வப்போது “ஆறு மலையாளிகளுக்கு நூறு மலையாளம்” என ஜெமோவும் அவ்வப்போது சொல்ல அவை அதிர்ந்து கொண்டிருந்தது.


பாரதியாரின் வார்த்தைகளிலுள்ள இணைவுகள் பற்றிய அராத்துவின் கேள்விக்கு நாஞ்சில் பாரதியின் பாடல்களையும் அவற்றில் பாரதியின் ஆழ்மனதில் நிகழ்ந்த சொற்களின் இணைவும், பாஞ்சாலி சபதம் பற்றிய அவரது முயற்சியையும் பாரதி ஒரு யுகத்தின் திருப்புமுனை கம்பனைப் போல அது எப்போதாவது நிகழ்வது என்றார். நாஞ்சில் அவர்கள் மஹாராஷ்டிராவில் இருந்த போது அந்த மனிதர்களை பற்றியும் அவர்களின் விருந்து உபசாரம் (அந்த சோள ரொட்டியை நானும் பகிர்ந்து கொண்டேன்) பற்றியும் ஈரானிய தேநீர் கடைகளில் நுழைய தயங்கும் அவர்களின் சமூக பழக்கவழக்கங்கள் குறித்தும் கல்லூரியில் சேர முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த அவரின் நண்பருக்கு உதவிசெய்த கல்லூரி கிளார்க் பின் அவரோடு அவர் நண்பர் அருந்திய தேனீர் எல்லாம் நெகிழச் செய்தன. சகமனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள் அன்போடு, நாம் தான் அவர்களை காணத்தவறுகிறோம் என்ற நாஞ்சிலின் சொற்களும் அதுவே வண்ணதாசனின் படைப்புலகமும் கூட அல்லவா? சரியான தொடக்கம் தான் என நினைத்துக் கொண்டேன்


 


 


[image error]


நவீன கவிதையில் இசைநயம் இல்லாதது அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள இயலாதது பற்றியும் சொற்களின் முக்கியத்துவம் பற்றியும் நாஞ்சில் கவிஞர் தேவதேவனிடம் ஒரு கேள்வியையும் முன்வைத்தார். மறுநாள் கடைசி அமர்வில் தேவதேவன் சொற்கள் வெறும் கருவிதான் சொற்களை கடந்திருக்கும் மௌனம் தான் மிக முக்கியம் என்கிற பொருளில் தன் பதிலை சொன்னார் (எனக்கு புரிந்த அளவு). திரும்ப நாஞ்சில் அவர்கள் அப்படியென்றால் மௌனத்தால் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ளுங்கள் மௌனத்தால் கேள்விகளை கேட்டு மௌனத்தால் பதில்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.


இரண்டாவது அமர்வு எழுத்தாளர் இரா. முருகன் அவர்களுடன் தொடங்கியது. அவருடைய எழுத்துலகம் பற்றிய அறிமுகத்திலிருந்து அவரின் படைப்புகளுக்கான களம் அவற்றின் மாய எதார்த்தம் போன்றவை பற்றிய கேள்விகளும் பதிலுமாக உரையாடல் நீண்டது. இரா.முருகன் அவர்களின் சில சிறுகதைகள் மட்டுமே வாசித்திருந்ததால் என்னால் அவ்வளவாக உரையாடலுடன் இணைய முடியவில்லை.


பாட்டையாவிற்கு என்பது வயதை கடந்திருந்தாலும் இளைஞர்களை விட அவர்தான் நிகழ்வுகளில் சுறுசுறுப்பாக கலந்து கொண்டவர். தன் நாடக உலகத்தைப் பற்றியும் அதில் அவர் வளர்ந்து வந்த இளமை பொழுதுகளையும் பின்னர் அவரின் டெல்லி வாசம் அங்கு நிகழ்ந்த தமிழ் நாடகத்திற்கான முயற்சி இந்திரா பார்த்தசாரதி அவர்களின் நாடகங்கள், மற்றும் க.ந.சு. விற்கும் அவருக்குமான உறவு என பல செய்திகளை பகிர்ந்து கொண்டார். இடையிடையே கலகலப்பான சிரிப்புகளுக்கிடையே அரங்கு நிறைந்திருந்தது.


கடைசியாக அவரின் பார் பற்றி சொல்லும் போது அரங்கு மேலதிக கவனத்தோடு கடந்த காலத்திற்குள் சென்று அங்கே ராயல் ஸ்காட்ச் அருந்திக் கொண்டிருந்தது. அதையும் பாட்டையா ஜெமினி கணேசனுக்கு பாடம் எடுப்பது எங்களுக்கெல்லாம் பாடம் எடுப்பது போல இருந்தது ராயல் ஸ்காட்சிற்கான வணக்கங்களை நாங்கள் தெளிவாக கற்றுக்கொண்டோம். எங்கே நம்மக்கள் டாஸ்மாக்கிற்கு கிளம்பி விடுவார்களோ ஒரு கணம் யோசித்தேன் மறுகணம் ராயல் ஸ்காட்ச்யை குடித்தவர்களால் எப்படி டாஸ்மாக்கிற்கு செல்ல முடியும் என்றும் தோன்றியது. அதிகார உலகத்தில் அவரின் தொடர்புகள் என அனைத்தையும் ஒளிவு மறைவின்றி சொல்லிய அவரது பண்பும் என்னை கவர்ந்தது. அவரின் புள்ளிகள் கோடுகள் கோலங்கள் புத்தகத்தை வாசிக்க வேண்டும். உற்சாகமான மனிதர்கள் அந்த நெருப்பை தான் செல்லுமிடம் எல்லாம் பரவச் செய்கிறார்கள் ஜெமோவின் உவமை போல அது மின்மினி நெருப்பு போல சுகமானது.


 [image error]


ஆஜானுபாகுவான கருத்த மனிதரின் வெள்ளை சிரிப்புகளும் கைகளை விரித்து அவர் சொல்லிய கதைகளும் என்னையே அப்படியே அனைத்துக் கொள்வதை போலவே இருந்தன. அந்த அணைப்பின் கனிவில் இருந்து இன்னமும் நான் வெளியே வரவில்லை என்பதை இந்த பதிவை எழுதும் போதும் உணருகிறேன். பால் சக்கரியாவின் ஒரே ஒரு கதையை மட்டும் நான் வாசித்திருந்தேன் (மூன்று குழந்தைகள்). பவா இன்னொரு உலகத்திற்குள் காட்டிற்குள் என்பதே பொருத்தமாக இருக்கும் அழைத்துச் சென்றார். எல்லா ஆண்களையும் ஒரு கணம் அந்த கரடியின் மீது பொறாமை படுமளவிற்கு செய்து விட்டார். அந்த மாலையில் நண்பர்கள் அனைவரும் அவர்களின் மனதின் ஆழத்திலிருந்து சிரித்திருப்பார்கள்.


பவா தன் மனிதர்களை பற்றி சொல்லிய நீர் கதையும் வேறு ஒரு உலகிற்குள் அழைத்துச் சென்றது. அறம் மானுடர் மேல் தன்னை நிகழ்த்திக் கொள்ளும் கணங்களில் கண்ணீர் துளிர்க்காமல் நான் கடந்து போனதில்லை. அவ்வாறே பவாவின் கதையிலும் நிகழ்ந்தது.


அசோகமித்திரனுக்கான பாராட்டுவிழாவில் அவரின் கரங்களை பற்றி மேடையில் அமர்ந்திருக்கும் பவாவையும் அந்த இரவில் அவர் முன் விரிந்திருக்கும் மக்கள் கூட்டத்தினையும் நினைத்துக்கொள்கிறேன்.


யோகிராம் அவர்களுடன் பவாவின் அனுபவம், திருவண்ணாமலையின் கலை இலக்கிய இரவுகள் என பவாவின் சொற்களின் வழியே அவர் வாழும் உலகத்திற்குள் அந்த மாலையில் சென்று வாழாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன். இறுதியாக பவா அவர்களின் கைகளை பற்றிக்கொண்ட தருணங்கள் அப்படியே இருக்கட்டும் ஒரு உயிருள்ள சித்திரமாக.


இரவு உணவு முடிந்த பின் மருத்துவர் கு.சிவராமானுடன் கலந்துரையாடல் நிகழ்ந்தது. அலோபதிக்கு மாற்றாக உள்ள மருத்துவ முறைகள் அலோபதியுடன் இணையும் புள்ளிகளையும் விலகும் புள்ளிகளையும் குறிப்பாக புத்தூர் கட்டு தொடர்பான பதிலில் விளக்கினார். அவர் மாற்று மருத்துவ அடிப்படைவாதிகளிலிருந்தும் அலோபதி அறிவியல் அடிப்படைவாதிகளிலிருந்தும் வேறுபட்டு தேவைப்படும் இடங்களில் இரண்டும் இணைந்து செயல்படும் முறையினை பற்றியும் சமகால பேலியோ டயட்டினால் பிற்காலத்தில் உருவாகும் பிரச்சனைகளை பற்றியும் கீடோசிஸ் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பேலியோ எந்த விளக்கத்தையும் தராதது பற்றியும் அதன் மூலம் ஏற்படும் மறைமுக பிரச்சனைகள் தொடர்பாகவும் கவனப்படுத்தினார்.


இந்தியாவில் மருத்துவ முறையிலுள்ள சிக்கல்கள் ஊட்டச்சத்து தொடர்பான தேசிய கொள்கைகள் (Iodine and Vitamin D) வகுக்கப்படுவதில் கார்பொரேட் நிறுவனங்களுக்கு உள்ள பங்கு மற்றும் சித்தா ஆயுர்வேத மருத்துவ முறைகளில் கார்போரேட் நிறுவனங்களால் ரெடிமேடு மருந்துகள் தயாரிக்கும் விதத்தில் உள்ள அபத்தங்கள் என உரையாடல் நீண்டுகொண்டே சென்றது. தற்கால ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட புற்றுநோய்க்கான வாய்ப்புகள் தினந்தோறும் உணவில் இறைச்சி (red meat) சேர்த்துக் கொள்வதால் அதிகமாவது பற்றியும் பேசினார். நவீன அறிவியல் முறையிலுள்ள மருந்து சோதனைகளுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை உட்படுத்த சொல்வதிலுள்ள அபத்தத்தையும் சிக்கல்களையும் எடுத்துக் கூறினார்.


சித்த மருத்துவக் கல்லூரிகளிலுள்ள நோயை கண்டறிவதற்கான பயிற்சி முறைகளில் உள்ள சிக்கல்கள் என துறை சார்ந்து அவருடைய உரையாடல் நீண்டது. நண்பர்களில் இருந்த அலோபதி மற்றும் சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் துறை சார்ந்து பேசிய விஷயங்கள் புரியா விட்டாலும் எனக்கு புரிந்த அளவு பெற்றுக்கொண்டேன். நவீன அறிவியலின் அடிப்படைகளையே நாம் முறையாக கற்காத போது அதனுடைய போதாமைகளை வரையறைகளை கடந்து பார்க்கும் பார்வையெல்லாம் சாத்தியமாக இன்னமும் நெடுங்காலம் ஆகக் கூடும். அதுவரை அறிவியலையும் நம்பிக்கை சார்ந்து மட்டுமே அணுகிக் கொண்டிருப்போம் என்று தோன்றியது.. அவருக்கு என்னுடைய நன்றிகள்.


 


 


 


[image error]


ஒருநாள் தொடக்கத்திலிருந்து முடிவுவரை வெவ்வேறு ஆளுமைகளுடன் செறிவான உரையாடல்கள் நிகழ்ந்து அதில் நான் பங்கு கொண்டு என்னை செறிவாக ஆக்கிக் கொண்டேன். இரவில் படுக்கையில் விழுந்தும் களைப்படையாமல் மனம் முழுக்க சொற்கள் நிரம்பியிருந்தது.


அதிகாலையில் ஜெ நடைப்பயிற்சிக்கு வழக்கமாக உரையாடல் நிகழும் என்பதை ஊட்டி சந்திப்பில் அறிந்திருந்த போதும் எப்படியோ மறந்து விட்டேன். காலையில் தொடங்கிய உரையாடலில் நான் செல்லும் போதே எழுத்தாளர் சு.வேணுகோபால் பேச ஆரம்பித்திருந்தார். இயல்பாக மனிதர் போகிற போக்கில் மாடுகளையும் வயல் வரப்புகளையும் சித்திரமாக காட்டி வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றார். பஷீர் பற்றிய உரையாடல் நீண்டு சென்றது.


இறுதியாக ஜெமோ பஷீர் ஒரு சூபி ஞானி எனக்கூறி அவரின் தரிசனத்தை அடைய மீண்டும் குழந்தைகளாக வேண்டும் அல்லது ஞானமடைய வேண்டும். அவரின் கதைகள் அத்தகைய தரிசனத்திலிருந்து உருவானவை. பஷீர் தான் தீவிரமாக எழுதியவற்றையெல்லாம் தீக்கிரையாக்கியது பற்றியும் அதன் பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொண்டது பற்றியும் ஜெ மூலமாக அறிந்து கொண்டேன். பாத்திமாவின் ஆடு என்ற அவரது நாவலை மட்டுமே படித்திருக்கிறேன். அந்த ஆடு கதையில் வரும் இடங்களையும் பஷீரிடமிருந்து எல்லோரும் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்ட பின்பு கடைசியாக இருந்த அந்த நாற்காலியிலும் ஒரு கோழி அமர்ந்து சாவகாசமாக ஒருகண்ணை திறந்து பார்க்கும் இடத்தையும் ஜெ சுட்டிக் காட்டினார். வாசிப்பை மெருகேற்றிக் கொள்ள இதுபோன்ற உரையாடல்கள் எனக்கு பயனுள்ளதாக இருந்தன.


பின்னர் தொடர்ந்த எழுத்தாளர் சு.வேணுகோபால் தன்னுடைய உலகங்களுக்கு மீண்டும் இழுத்துச் சென்றார். அவர் எழுதிய முதல் நாவல் தொடர்பான சுவாரஸ்யமான செய்தியையும் விவசாயியின் வீழ்ச்சியை ஒரு விவசாயியாக வாழ்ந்து பார்த்த அனுபவத்தையும் அவருக்கும் அண்ணனுக்கும் உள்ள தொடர்பையும் காளைகளை பற்றியும் அவரின் சொற்கள் மிக அருகாமையை உணரச் செய்தது. பின்னர் தனக்கும் வண்ணதாசன் கதைகளுக்கும் உள்ள தொடர்பையும் பற்றி சொல்லிச் சென்றார். இன்னமும் அவரின் படைப்புகளை வாசித்திருக்கவில்லை வாங்கி வைத்த நிலம் என்னும் நல்லாள் புத்தகம் திறக்கப் படாமல் காத்திருக்கிறது. வெகு சீக்கிரத்தில் அந்த கணம் எனக்கு அமைவதாக.


 


[image error]


வண்ணதாசன் அவர்கள் எழுத்தாளர் சு வேணுகோபால் அவர்களை தொடர்ந்து பேச ஆரம்பத்தில் ஜெ, வண்ணதாசனின் வாசகர் மலையப்பனைப் பற்றி நினைவுப்படுத்த தன் கனவுகளில் மெல்ல அவர் ஆழ்ந்து கடந்த காலத்தின் நினைவு அடுக்குகளில் எங்கோ மறைந்திருந்த அந்த வாசகரின் அன்பையும் அதன்பின் அவருடனான கடிதப் போக்குவரத்தையும் சொல்லிச் சென்றார். காசர்கோட்டில் ஜெ அந்த வாசகரை அவரின் சலூனில் சந்தித்து பின் வண்ணதாசனுக்கு எழுதியதை பற்றியும் உரையாடல் மெல்ல மெல்ல பற்றிக்கொண்டது.


வண்ணதாசனின் பெண்கள் எங்கும் இருக்கிறார்கள். இரண்டு பெண்கள் அரங்கில் அவரின் எழுத்துக்கள் தங்களை பாத்தித்ததைப் பற்றியும் அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை பற்றிய பார்வைகள் மாறியதையும் அன்பின் கணங்களில் நெகிழ்ந்து கொண்டிருந்தார்கள். பறவையின் மிகச் சிறந்த இறந்தகாலம் பறந்தகாலமாக தானே இருக்க முடியும்.


கன்னட எழுத்தாளர் H.S.சிவப்ரகாஷ் அவர்களுடனான உரையாடல் தமிழ் மொழியின் பழந்தமிழ் இலக்கியங்கள் பக்தி இலக்கியங்கள் மற்றும் இந்திய தத்துவ மரபுகளின் மேலுள்ள ஆழமான புரிதல்களும் அவரின் பதிலில் வெளிப்பட்டன. சிலப்பதிகாரத்தில் தான் முதல் முதலாக பிருந்தாவனம் பற்றி சொல்லப்பட்டிருப்பதாகவும் அதன் பின்னரே பக்தி இலக்கியங்களிலும் பாகவத மரபிலும் எடுத்தாள பட்டதையும் சுட்டிக் காட்டினார். சைவ மதம் பற்றியும் குறிப்பாக காஸ்மீர் சைவம் குறித்தும் ஒரு வாசகர் கேட்க அதை பற்றி அவர் விளக்கியதும் தொடர்ந்த உரையாடலில் சாத்தியப்பட்டது. மிகுந்த நிதானத்துடன் ஆழமான புரிதலுடன் கம்பீரமாக வெளிப்பட்ட அவரின் சொற்களையே இதை எழுதும் போதும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


அய்யா பாரதிமணி அவர்கள் கேட்டே தமிழ் நாடகத்தின் மீது ஒளிவுமறைவற்ற விமர்சனத்தை கேட்டபோது. தான் அவ்வாறு முழுவதும் தமிழ் நாடகங்களை பற்றி கூர்ந்து நோக்கியிருக்காததால் அதைப்பற்றி வேறு எதையும் சொல்வது சாத்தியமில்லை என கடந்து சென்ற விதமும் என்னை கவர்ந்தது. அவரின் படைப்புகளுக்காக லிங்காயத் அடிப்படைவாதிகள் தந்த நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளையும் வெறுப்பின்றி கடந்தவர் என்பது அவரின் நிதானமே காட்டுகிறது.


தேர்ந்த ஞானத்தின் கரைகளில் அவர் அவ்வாறு தான் இருக்க முடியும். காந்தியை போல எதிரிகளின் செயலின் முறைகளின் மேல்தான் வெறுப்பே தவிர எதிரிகளின் மீது அல்ல. தன் படைப்பை அவர்கள் எதிர்த்ததைப் பற்றியல்ல எதிர்த்த முறைகளையே அவர் விமர்சிக்கிறார். அவரை அரசியலில் இருந்து காப்பாற்றிய இ எம் எஸ் நம்பூதிரி பாடு பற்றியும் மரபில் தேர்ந்த அறிவு பற்றியும் சொன்னபோது தமிழகத்திற்கு அவ்வாய்ப்பு அமைவதற்கான சாத்திய கூறுகளே இல்லை.


விழாவில் பேசும்போது விஷ்ணுபுரம் இலக்கிய செயல்பாடுகளின் மீது அவர் திருப்தியுற்றிருப்பதையும் தேர்ந்த வாசகர்களால் அளிக்கப்படும் விருது அரசாங்கத்தாலோ அதன் நிதியுதவியிலோ பன்னாட்டு நிறுவனங்களின் பின்புலத்திலோ நிகழாத இந்த விழா அபூர்வமானது தான். அவரின் கோரிக்கையான வேற்று மொழி எழுத்தாளர்களுக்கும் இது அளிக்கப்பட வேண்டும் என்பதும் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் கூறிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அவரை சிறந்த முறையில் கௌரவித்திருக்கிறது.


 


[image error]


 


பின்னர் மத்திய உணவு இடைவேளைக்குப் பின் தொடர்ந்த உரையாடலில் எழுத்தாளர் பாவண்ணன் கன்னடத்தின் நாடகங்களை போல தமிழ் நாடகங்கள், நிகழ்த்து கலைகள் ஏன் வளரவில்லை என்பதற்கு அவர் சொன்ன பதில் கன்னடத்தில் பெரும்பாலான யக்ஷகான குழுக்களின் முன்பதிவு 2022 வரை முடிந்துவிட்டதாகவும் அதை போன்ற வரவேற்புகள், அதன் மக்கள் கொண்டுள்ள ஈடுபாடு போன்றவையே அவற்றை அழியாமல் வைத்திருப்பதாகவும் கூறினார்.


மேலும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற ஒரு வருடத்திற்கு மேலாக பயிற்சி செய்து பின் அடுத்த வருடம் முழுவதும் கன்னட நிலமெங்கும் அந்த நாடகத்தை அவர்கள் நடத்துவது பற்றியும் கேட்டபோது நான் ஒரு நவீன நாடகம் கூட பார்த்தது இல்லை என்பதையும் நினைத்துக்கொண்டேன். இறுதியாக பாவண்ணன் அவர்கள் பேசிய unconditional love பற்றி பேசும்போது மனிதர்கள் இன்னமும் ஈரத்தோடு இருக்கிறார்கள் என நிறைய எடுத்துக்காட்டுகள் கூறினார். ஒருவகையில் எழுத்தாளர்களும் அவர்களில் சேர்த்திதானே சமூகத்தின் மீதும் மனிதர்கள் மீதும் unconditional love இல்லையென்றால் வாழ்க்கையை உயிரை பணையம் வைத்து ஏன் எழுத போகிறார்கள்?


[image error]


விழா முடிந்ததும் மெல்ல மெல்ல திருவிழாவின் முடிவுதரும் வெறுமைகள் என்னை சூழ எனது ஊருக்கான பயணத்தை தொடங்கினேன். விழா அரங்கு நிறைந்ததை போலவே என் மனமும் கூடவே வயிறும் நிறைந்திருந்தது. முதல் நாள் மதியம் உணவு ஏறத்தாழ நம் மக்களுக்கே சரியாக இருந்தது. உணவு பரிமாறி விட்டு இறுதியாக சாப்பிடும் போது தான் பார்த்தேன் அங்கே துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு உணவில்லை என்பதை உடனே சக நண்பர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது முன்னரே அவர்கள் வெளியில் சென்று சாப்பிட போதுமான பணத்தை வழங்கி விட்டதாக கூறினார். இப்படி எல்லா விதங்களிலும் பூரணமாய் தன் பங்களிப்பை வழங்கி எனது வாழ்வின் மிகச்சிறந்த இரண்டு நாட்களை தங்கள் இடைவிடாத உழைப்பின் மூலம் கனிய செய்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்து கூடவே கடமையும் பட்டுள்ளேன் என்பதையும் நினைவில் கொள்கிறேன்.


அன்புடன்


விஷ்ணு


 


மேலும் படங்கள்


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 19:02

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.