Jeyamohan's Blog, page 1697

December 28, 2016

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 13 ,ராஜீவ்


 


அன்புள்ள ஜெ,


 


ஒரு வருடமாவது விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை இம்முறை நிகழ்ந்தது. எங்கள் ஊர் சீனு அண்ணாவுடன் உங்களிடம் அறிமுகம் செய்துகொண்டபோது இதுபோன்ற ஒரு விழாவை கடலூரில் நடத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.


 


முதல் அமர்வில் நாஞ்சில் நாடனுடன் அமைந்த உரையாடலில் நுணா மரம் வந்தபோது எங்கள் நிலத்தை உழும் ஏரில் நுவத்தடி பயன்படுத்தியதை நினைவு கூர்ந்தேன். நுணா மரத்தின் பழச்சுவை என்னை ஒரு காலத்தில் அதற்கு அடிமை ஆக்கியது. சிறு வயதில் காலை வேளையில் வயலுக்கு சென்று முதல் ஆளாக நுணா பழத்தை பொறுக்கி தின்பது எனக்கு கிடைத்த வெற்றி என்ற நினைத்த காலம் உண்டு. நாஞ்சில் சொன்ன வடநாட்டு மக்களின் அறத்தை நானும் ஒடிசா, மே.வங்கம் மற்றும் ஜார்கண்டில் பலமுறை அனுபவித்துள்ளேன்.


[image error]


பாரதி மணியின் நக்கலும் நையாண்டியுமான பேச்சு அருமை. அவரது மது குறித்த பேச்சு அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். மணி சொல்வது போன்று குடிப்பதிலும் ஒரு ஒழுங்கு வேண்டும் என நினைக்கிறேன். முருகனிடம் எனக்கு பிடித்தது அவரது வெளிப்படையான பேச்சுதான். பவா.செல்லதுரை சிறந்த கதை சொல்லி என்று சொன்னார்கள். அன்றுதான் முதல் முறை அனுபவித்தேன். என்னாமா கதை சொல்றார் அந்த மனுசன் என்ற எண்ணம் வந்தது.


[image error]


மருத்துவர் கு.சிவராமன் சொல்லிய தகவல் கொஞ்சம் அதிர்ச்சி அளித்தது. அவரிடம் தனியாக ஹீலர் பாஸ்கரின் செவி வழி தொடு சிகிச்சை குறித்து தெரிந்துகொண்டேன்.


அடுத்த நாள் காலை டீ கடை மற்றும் நடைபயணத்தின்போது நீங்கள், விஜயராகவன் மற்றும் சீனு அண்ணாவுடன் அமைந்த உரையாடல் மறக்க முடியாதவை. அறிவியல் பூர்வமான கொலை முதல் கர்னாடக எழுத்தாளர்கள் அறிமுகம் வரை அனைத்தும் அருமை. அரங்கநாதன் அண்ணா சொன்னதுபோல் முதல் நாள் வினாடி வினாவில் அதிக புத்தகங்கள் பரிசு பெற்ற மாணவன் எனது தூக்கத்தையும் கெடுத்து இருந்தான்.


 


சிவபிரகாஷ் உரையாடல் ஞானியுடன் இருந்தது போன்ற ஒரு தருணம். அவருக்கு எதிராக வந்த எதிர்வினையை கையாண்டது குறித்து அவர் சொன்னபோது காந்தியின் ஞாபகம் வந்தது. விழா முடிந்து ஊருக்கு திரும்பிய பயணம் முழுக்க YOUTUBE-இல் அவரது பேச்சுகளை கேட்டு வந்தேன். நிச்சயம் அவர் ஒரு மானுட அறிஞர்.


[image error]


வண்ணதாசனுடனான உரையாடலில் அவரது நிலை என்ற சிறுகதையில் வரும் கோமதிக்கு நிகழும் அனுபவம் எனது உறவுகார பெண்ணுக்கு நிகழ்ந்ததை பகிர்ந்து கொண்டேன். கிராம குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்கள் அனைவரும் என்ன பாவம் செய்தார்கள் என்றுதான் தெரியவில்லை. எந்த திருவிழாவுக்கு சென்றாலும் பெண்கள்தான் வீட்டில் இருக்க வேண்டும் என்ற எழுத படாத விதி இன்னும் இருக்கிறது. உரையாடல் முடிந்து வண்ணதாசனை சந்தித்தபோது அவர் தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த அனுபவத்தை பகிர்ந்தற்கு நன்றி சொன்னது மிகவும் நெகிழ்வான ஒரு தருணம். ஆசிர்வதிக்கபட்டவன் போன்று இருந்தது.


 


நண்பர் எழுதிய (விழா பதிவு-8) அந்த ஏழாம் உலகம் அனுபவம் ஏற்பட்டது எனக்குதான். பின்னாளில் அறம் படித்த பின்னர் அவள் உங்கள் சிறந்த வாசகியானாள்


 


அனைத்து ஏற்பாடுகளும் மனநிறைவை அளித்தது. முக்கியமாக உணவு நன்றாகவே அமைந்தது. விழா ஏற்பாடுகளை செய்த அனைவருக்கும் நன்றி.


 


 


-மா.பா.இராஜீவ்


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2016 10:34

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 12 ,சசிகுமார்


“ஒண்ணுமே வாசிச்சதில்லை சார்” கட்டுரையை வாசித்துவிட்டு விருதுவிழவுக்கு வர மனமில்லாமல் தான் இருந்தேன், (தங்களையும், எஸ் ரா மற்றும் சில சம கால எழுத்தாளர்களை தவிர்த்து அதிகம் வாசிக்க இயலாத சூழ்நிலையால்). ஆனால் தங்களின் தனிப்பட்ட விழா அழைப்பிதழை கண்டவுடன், பிரம்மத்தின் நுண்சொல் கண்ட சூதன் போல், மாற்று எண்ணமின்றி விழவில் பங்குபெற இடைப்பட்ட ஒருவார காலத்தில் விழவுகளில் பங்குபெரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொடர்ந்து வாசிக்க நேர்ந்தது இவ்வாழ்வின் நிகரற்ற அணுபவம்,. (ஜெய் உங்களின் சந்திப்பின் பின்பும் உங்கள் கடிதங்களின் ஒவ்வொறு முறையும் என் இத்துணை வருட வாசிப்பின்மின்மையின் எடை கூடி நிற்கிறது.)


சனிக்கிழமை காலை கோவை வந்தடைந்து நிகழ்வு அரங்கின் வரவேற்பில் என் கொல்லிமலை அமர்வின் நண்பர்கள் வரவேற்றது ஒர் ஊழின் கணம், அன்று நாஞ்சிலின் முதல் அமர்விலேயே தெரிந்துவிட்டது, இரு நாட்கள் சொற்களின் அறியா தெய்வங்களின் அளி சூழ இருப்பேன் என்று, நாஞ்சில் நாடனின் பேச்சை முதன் முதலில் கேட்டது பெரும் பரவசம் (அந்த தடாகை மலையடிவாரத்துகாரரிடம் சென்று கணிப்பொறியில் மாட்டியது என்ன சிடி என்று கேட்க மனம் குறுகுறுத்தது), தேனீர் இடைவெளியில் அவரின் ”சூடிய பூ சூடற்க” புத்தகத்தை பற்றிய தனி உரையாடலும், அதை என் அன்னைக்கு அவர் பெயரிலேய பரிசளிக்க வேண்டும் என்று அவரிடம்சொல்லி நாஞ்சிலின் கையெழுத்து வாங்கும் பொழுது அவர் திருமதியா என்று கேட்டதும், அதற்கு நான் அதனால் தானே அம்மா என்று பணிவான துடுக்குடனும் சொன்னது இனி என் நினைவின் அழிய பொற்கணங்கள்.


[image error]


தொடர்ந்து பாரதி மணி அவர்களின் நாடக அனுபவங்களின் ஊடாக அவர் கூறிய ராயால் சல்யூட் அருந்திய அனுபவம், மது தவிர்ப்பாளனாகிய என்னையும் கற்பனையில் அருந்த செய்தது அவரின் பேச்சின் வல்லமை, மேலும் இரா. முருகன் அவரின் சில சிறுகதைகளை வாசித்த அனுபவத்தின் ஊடே, அங்கு வாசகர்கள் கூறிய அரசூர் வம்சம் நாவலை வாசிக்கும் ஆவல் அதிகமாகி உள்ளது.


ஜெய் என்வாழ்வில் மறக்க இயாலாத கதை சொல்லியை அறிந்த நாள் அது. பவா செல்லதுரை, உண்மையில் அன்று நான் மிகவும் மானசீகமாக வருந்த நேரிட்டது. அவர் கூறிய கரடி கதையை அதை மூலத்தில் எழுதிய பால் சக்கிரியா அவர்களே அவ்வாறு பேச்சில் கூறமுடியுமா என்பது சந்தேகமே .


தொடர்ந்து நிகழ்ந்த வினாடி வினா நிகழ்ச்சி கல்லாத உலகளவை கண்முன் காட்டியது. (வாசக மாணவர் பாரதி எங்கள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டார் என்பது மாற்றுக்கருத்தில்லாதது), அன்று இரவு மருத்துவர் சிவராமன் அவர்களுடனான உரையாடல் என் தனிப்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடாக நிகழ்ந்தது.


[image error]


தங்களுடன் நடை செல்லும் ஆவலில் இரவு சரியாக தூங்காமல் காலை 5 மணிக்கு எழுந்து குளித்து தயாராகி வெளியே வந்து தாங்கள் முன்னமே சென்றுவிட்டதை கண்டு வருந்தி பின் தேனீர் கடையில் சந்தித்த நிகழ்வில் இருந்து தொடங்கிய இரண்டாம் நாள்


சு.வேணுகோபால் அவர்கூறிய விவசாய வாழ்வின் உன்மத்தங்கள் (காளையை அவர் அண்ணன் பராமரிக்கும் செயல்), தொடர்ந்து விழா நாயகர் வர அவரைபற்றிய அவரின் அனுபவம் மிகசிறப்பு.


ஜெய் உண்மையில் உங்கள் கடிதத்துக்கு பின்தான் வண்ணதாசனை வாசிக்க ஆரம்பித்தேன், என்ன ஒரு நெகிழ்வு மலையப்பனுக்காக அவரின் கைகளுக்கு முத்தம் வைக்க தூண்டிய உங்களுக்கு நன்றியின் சிறு சொல்லில் உரைக்க மனமில்லை.


 


[image error]


 


அன்று இடைவெளியில் என் பாலிய காலத்து மாணவர் ஒருவரை காணக் கிடைத்து மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, நாங்கள் ஒன்றாக படித்த பள்ளி, நாங்கள் ஓடி விளையாடிய வீதிகள் என்று ஒருவருக்கு ஒருவர் இத்துணை நாள் தெரியாமல் இருந்து, இங்கு இந்நிகழ்ச்சியில் அறிந்துகொண்ட அந்நபர் சேலம் பிரசாத் என்பது ஒரு பெரும் நெகிழ்ச்சி, ஜெய் ஆசிரியராக நீங்கள் தந்தது இதையும் சேர்த்து ஈடில்லாதது.


சிவபிரகாஷ் அவர்களின் சமரசமற்ற உரை சற்று திகைப்பை ஏற்படுத்தியது, அன்றைய அனைவருடனான இறுதி அமர்வின் முடிவில் தமிழகத்தில் நாடகதுறையின் அடுத்த கட்ட எழுச்சி பற்றிய தெளிவின்மை சற்றே வருத்தம் கொள்ளச்செய்தது. இறுதியில் விழவானது அதன் தெய்வங்கள் வகுத்த அதற்கே உரிய முறையில் சிறப்பாக முடிந்தது. ஜெய் இவ்விழவின் பெரும் பணி எவ்வாறு என்று, இது போல் பல நிகழ்ச்சிகளை குழுவுடன் இணைந்து நடத்திய நான் நன்கு அறிவேன், இப்பெரும் நிகழ்ச்சியை குறைந்த நிகழ்ச்சியாளர்களை கொண்டு மிக சிறப்பாக செய்த செல்வேந்திரன், செந்தில், மீனாம்பிகை, ராஜகோபாலன், விஜய சூரியன், அரங்கசாமி, மற்றும் அனைத்து விஷ்ணுபுரம்  வாசகர் வட்ட நண்பர்களுக்கும் நன்றியோ வாழ்த்தோ​சொல்வதை விட அடுத்த இந்திய அளவிலான விஷ்ணுபுரம் விருதுவிழாவில் உடன் பங்காற்ற விழைகிறேன்.


நன்றி


சசிகுமார்


சேலம்


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2016 10:33

விஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள் 11 [குறைகள்]

[image error]


ஜெ


விஷ்ணுபுரம் விருதுவிழா அருமையாக இருந்தது. ஒவ்வொன்றும் பார்த்துப்பார்த்துச் செய்யப்பட்டிருந்தது. நான் ஏற்பாடுகளைச் செய்திருந்தீர்கள். ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் இருந்த கவனம் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. இதைப்போல துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒரு விழாவைச் சமீபத்தில் பார்த்ததில்லை.


எனக்குக் குறையாகத்தெரிந்த சிலவிஷயங்களை மட்டும் சொல்லவேண்டும். அதைச் சொல்வது குறைசொல்வதற்காக அல்ல. பெர்ஃபெக்‌ஷன் உங்கள் எண்ணம் என்றால் அதற்காக. இதெல்லாம் சின்ன விஷயங்கள்.


முதலில் விவாத அரங்கத்திற்கு வெளியே தெரியும்படியாகக் குடிநீர் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதைக் கேட்டு பல பேர் அலைந்தார்கள். இரண்டு கழிப்பறை செல்வதற்கான இடம் அம்புக்குறி போட்டு பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டிக் காட்டியிருக்கலாம். அதையும் விசாரித்தபோது தெரியவில்லை


[image error]


அரங்கிலே சிலர் சலசலத்துக்கொண்டிருந்தார்கள். தொடர்ந்து உள்ளே உட்கார்ந்து பேசிக்கொண்டே இருந்தவர்களை மட்டுறுத்துநர்கள் கட்டுப்படுத்தியிருக்கலாம். அவர்கள் சிலர்தான். ஆனால் அந்த நிகழ்ச்சிகள் மிகத்தீவிரமாக இருந்தன. ஆகவே அது மிகவும் தொந்தராவாக இருந்தது.


அதைப்போல அழையாவிருந்தாளிப் பேச்சாளர்கள். வண்ணதாசனின் அற்புதமான உரையின் உணர்ச்சித்தீவிரம் அடங்குவதற்குள் ஒருவர் எழுந்து கண்டபடி பத்துநிமிடம் பேசி அந்த மனநிலையையே சீரழிக்கமுற்பட்டார். நல்லவேளையாக அவரை தொகுப்பாளர் பத்து நிமிடத்தில் கட்டுப்படுத்திவிட்டார்.  .


 


[image error]


அதேபோல படைப்பாளிகளிடம் கேள்விகள் கேட்கும்போது ஒருவரே நிறையகேள்விகள் கேட்பதை கட்டுப்படுத்தி கேட்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். பேசுபவர்களிடமும் கேள்விகளுக்கான பதில்களைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும்படி கேட்டுக்கொண்டால் நல்லது. பல எழுத்தாளர்கள் மிகநீண்டபதில்களைச் சொன்னார்கள். அது உரையாடலின் அழகைக் கொஞ்சம் குறைத்தது


விழாவில் பேச்சுக்களை வாசிக்கவே கூடாது. தொழில்முறைக் கருத்தரங்குகளிலே மட்டும்தான் கட்டுரை வாசிக்க வேண்டும்.  இரா முருகனின் உரையாடல் சிறப்பாக இருந்தது. மேடையில் அவர் பேசியிருக்கலாம்


இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் என்னைப் போன்றவர்கள் வெளியூரிலிருந்து வந்து இந்த விழாவிலே கலந்துகொள்கிறோம். இதிலுள்ள ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு முக்கியம். வெற்றுச் சம்பிரதாயங்களுக்கும் வழக்கமான மரியாதைப்பேச்சுகளுக்கும் எங்களுக்கு நேரமில்லை.


ஆனால் மிக அற்புதமான இருநாட்களாக இருந்தது. ஒவ்வொரு அரங்கும் ஒரு மின்னலடித்துபோல. சிவப்பிரகாஷின் அரங்குதான் உச்சகட்டம்


வாழ்த்துக்கள்


ரவீந்திரன் பி.எஸ்.என்.எல்


***


lllllll


ஜெ


செல்வேந்திரன் எடுத்த ஆவணப்படம் அழகாக வண்ணதாசனைக் காட்டியது. அவருடைய கைகளை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம் என நினைத்தேன்


வண்ணதாசனிடம் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். நிறையக்கூட்டம். ஆகவே தவிர்த்துவிட்டேன். அவரை நேரில் சந்திக்கவும் போட்டோ எடுத்துக்கொள்ளவும் முன்னாடியே ஒரு மணிநேரம் ஒதுக்கியிருக்கலாம்


முருகேஷ்,


[image error]


 


அன்புள்ள ஜெ,


விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக அமைந்தது. நேரக்கட்டுப்பாடும் வீண்சொற்கள் இல்லாத நிகழ்ச்சிகளும் பேச்சாளர்கள் அனைவரும் சுருக்கமாகவும் உணர்வுபூர்வமாகவும் பேசியதும் மிகச்சிறப்பான அனுபவங்களாக அமைந்தன


ஆனால் ஒரு சின்னக்குறை. இப்படிப்பட்ட ஒரு விருதுக்கு விருதுச்சின்னம் கம்பீரமாக இருக்கவேண்டும். அவசரமாக உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பொம்மை போல இருந்தது பரிசு. வெண்கலச்சிலைதான் இலக்கியத்திற்கு உருவாக்கப்படும் நல்ல விருது. ஒரு நல்ல சிற்பியைக்கொண்டு வடிவமைக்கவேண்டும். அதில் பெரிய சிம்பல்கள் எல்லாம் தேவையில்லை. எளிமையாக வாக்தேவி சிலை போல ஒரு சிலைபோதும். இதை விமர்சனமாகச் சொல்லவில்லை


மகேஷ்


[image error]


ஜெ


 


விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக அமைந்தது. குறை என்று சொல்லவேண்டும் என்றால் இடைவேளைகள் மிகக்குறைவாக இருந்ததனால் ஒருவருக்கொருவர் நிறையப்பேசமுடியாதபடி இருந்தது. அதோடு  நின்று பேசவும் அமர்ந்திருக்கவும் வராந்தா மாதிரி இல்லாமலிருந்தது. கிவிஸ் நிகழ்ச்சிதான் டாப். அதில் நான் பங்கெடுக்க ஆசைப்பட்டேன். அனைவரையும் அழைப்பார்கள் என நினைத்தேன். ஆனால் கேள்விகளை பார்த்ததும் பங்கெடுத்திருந்தால் மானம்போயிருக்கும் என்று தோன்றியது. செந்தில் இந்த நிகழ்ச்சியை டிவியில் நிகழ்த்தலாம். கல்லூரிகளில் நடத்தலாம். பொதுவாக நடத்துவதைவிட இப்படி குறிப்பாக நடத்துவது நல்லது


 


அடுத்த முறை கோவைக்கு வெளியே உள்ள புதிய எழுத்தாளர்களுடன் சந்திப்புகள் ஏற்பாடுசெய்தால் சிறப்பாக இருக்கும். இந்த முறை வந்தவர்கள் சிறப்பாகப் பேசினார்கள். ஆனால் அவர்களே மறுபடி பேசும்படி ஆகக்கூடாது


 


அருண்


 


[image error]

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2016 10:32

விஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள்-10

[image error]


கோவையில் 24,மற்றும் 25 சனி ஞாயிறு இரு நாள்களும் அந்த மழையில் நனைந்தேன். முதல்நாள் நாஞ்சில் நாடன், பாரதி மணி, இரா. முருகன், பவா. செல்லதுரை, கன்னட எழுத்தாளர் ஹெ.எச். சிவப்பிரகாஷ் ஆகியோர் நெறிப்படுத்திய அமர்வுகளும், மறுநாள் சு.வேணுகோபால், வண்ணதாசன், ஆகியோரின் அமர்வுகளும் நடைபெற்றன.


இரண்டாம் நாள் இறுதி அமர்வாக சுப்ரபாரதிமணியன், நாஞ்சில் நாடன், தேவதேவன், பாவண்ணன், ஆகியோரை முன்னிலைப்படுத்திய நிகழ்வில் எழுத்தாளன் ஏன் எழுதுகிறான் என்பதும் தற்கால இலக்கியப் போக்குகள் என்பதும் பேசுபொருள்களாக இருந்தன. 


ஓர் இலக்கிய வினாடிவினாவும் நடத்தப்பட்டு சுமார் 30000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வெற்றி பெற்றோர்க்கு வழங்கப்பட்டன. எல்லா அமர்வுகளும் காலத்தில் தொடங்கிக் காலத்தில் முடிக்கப்பட்டது குறுக்கப்பட்டது. ஒவ்வொரு அமர்விலும் சுமார் 300 சுவைஞர்கள் கலந்து கொண்டதோடு எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி ஆக்க பூர்வமாக விவாதித்தது அவர்களின் வாசிப்பு அனுபவத்தை வெளிப்படுத்தியது. அவர்கள் அனைவருக்கும் தங்கும் இட வசதி, மற்றும் உணவு ஏற்பாடுகளை விஷ்ணுபுரம் வட்டமே செய்திருந்தது.


[image error]


இரண்டாம் நாள் மாலை விழாவில் வண்ணதாசனுக்கு ஒரு லட்சம் ரூபாய் விஷ்ணுபுரம் விருதாக வழங்கப்பட்டது. அவரைப்பற்றிய ஆவணப்படம் ஒன்று செல்வேந்திரன் இயக்கியதில் ஒரு பகுதி காண்பிக்கப்பட்டது. வண்ணதாசனைப் பற்றிப் பலரும் எழுதிய ஒரு தொகுப்பு நூல் ஒன்றும் “தாமிராபரணம்” எனும் பெயரில் வெளியிடப்பட்டது. அதில் என் கட்டுரையும் உள்ளது.


விழாவை இரண்டு மணிநேரத்தில் நடத்தி முடித்தது சாதனையே! நடிகர் நாசர் உட்பட அனைத்து வாழ்த்துரையாளர்களும் குறிப்பிட்ட காலத்தில் தங்கள் உரையை முடித்துக் கொண்டனர். விழா அரங்கம் வந்திருந்த இலக்கிய விரும்பிகளால் நிரம்பியதால் அரங்கத்திற்க்குக் கீழேயும் காணொளி வசதி செய்யப்பட்டிருந்தது. சுமார் 2000 பேர்கள் வந்திருக்கலாம்.


ஓர் எழுத்தாளரை எப்படிப் பாராட்டவேண்டும் என்பதும், ஓர் இலக்கிய விருது அளிக்கும் விழாவை எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கும் இந்த விழா மட்டுமே எடுத்துக் காட்டாகும். எந்தப் பலனையும் எதிர் நோக்காமல் 2010-லிருந்து தொடர்ந்து இவ்விருது விழாவை நடத்தும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும், அது தொடங்கியதிலிருந்து வழி நடத்திச் செல்லும் ஜெயமோகனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். வளர்க அவர்தம் பணி!


வளவ துரையன்


[image error]


அன்புள்ள ஜெ,


நலமுடன் பெங்களூரு வந்துவிட்டேன். தொடர் அலுவலக வேளைகளாலும், பயணங்களாலும் சற்று உடல்நல குறைவுடன் தான் சனிக்கிழமை இரவு கோவை வந்து சேர்ந்தேன். சுனில் அண்ணனின் உதவியால் தான் என்னால் அங்கு முழு நேரமும் இருக்க முடிந்தது. இந்த உடல்நல குறைவும் நல்லதிற்கு தான் என்னும் எண்ணம் கொள்ளும் அளவிற்கு நெகிழ்ச்சியான தருணம், அந்த பென்னாகரம் நண்பனின் வருகை. சனிக்கிழமை இரவு மருத்துவருடன் நடந்த கலந்துரையாடலில் பல அறியாத விஷயங்களை அறிந்து கொண்டேன்.


மறுநாள், சு.வேணுகோபால் தன் அண்ணனை பற்றி பேசிய நொடிகளிலும் சரி, வண்ணதாசன் பேசிய பல இடங்களிலும் என்னையும் மீறி ஒரு உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தேன். அடுத்த அமர்வில் பாவண்ணன் பேசிய பொழுது கண்களில் நீர் திரண்டுவிட்டது. வாழ்வின் உன்னதமான நொடிகள் இவை. விருதுவிழாவில் வண்ணதாசன் பேசிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் ஞாபகபடுத்தி கொள்கிறேன். இன்னும் நான் கோவையிலே இருப்பதாய் உணர்கிறேன். பல அரங்குகளில் பங்கேற்காமல், விழா சிறப்பாக நடைபெறுவதற்காக செயலாற்றிய நம் நண்பர்கள் அனைவருக்கும் என் மரியாதையும், நன்றிகளும்.


ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா


 


888


அன்புள்ள ஜெ


வண்ணதாசன் ஆவணப்படத்தின் சிலகாட்சிகளை பார்த்தேன். வண்ணதாசன் என்ற ஆளுமையை அருகே இருந்து பார்க்கும்போது எனக்குத்தோன்றிய இரு விஷயங்கள் அவருடைய நெர்வஸ்நெஸும் அவருடைய அன்பான சிரிப்பும்தான். ஆவணப்படத்தில் அவருடைய கைகள் வழியாக அந்த நெர்வஸ்நெஸையும் சிரிப்பின் உற்சாகத்தையும் மாற்றி மாற்றிக் காட்டி அழகான ஒரு தொகுப்பைச் செய்திருந்தார் செல்வேந்திரன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்


செண்பகமூர்த்தி


[image error]


அன்புள்ள ஜெயமோகன்


இந்தமுறை விஷ்ணுபுரம் விருதுவிழாவில் [விருந்து விழாவும்கூட] என்னை மிகவும் கவர்ந்தது இளம் வாசகர்களின் பங்கேற்புதான். பலரை சிறுபையன்கள் என்றுதான் சொல்லத்தோன்றியது. அதிலும் பாரதி என்ற பையன் பங்கேற்றது மிக ஆச்சரியமானது. அற்புதமான வாசிப்பு. நல்ல மொழி. அவர்களைப் போன்ற இளைஞர்களைப் பார்க்கையில் இலக்கியத்தின்மீதே பெரிய நம்பிக்கை ஏற்படுகிறது


உணவு சுவையானதாக இருந்தது. எந்த ஓட்டல் என்று சொன்னால் நல்லது


செல்லப்பா


 


[image error]


 


 


அன்புள்ள ஜெமோ ஸார்,


“கவிதையை நம்ம அனுபத்தோட பொறுத்தி பாக்கணும்.. நம் அனுபவமாக இருக்கணும் என அவசியமில்லை. நாம் சந்தித்த பிற மனிதர்களின் அனுபவங்களாகக் கூட இருக்கலாம். அனுபத்தோட பொறுந்துரப்பதான் கவிதை வாசிப்பு முழுமை பெறும்” இது நீங்கள் ஊட்டி முகாமில் சொன்னது. இதிலிருந்துதான் கவிதை திறந்துகொண்டது. அன்று விஜயராகவன் ஸார், தேவதேவனின் சிறு கவிதைத் தொகுதிகளை கைபோன போக்கில் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் கிடைத்த கவிதைத் தொகுதியே நான் வாசிக்க நேர்ந்த முதல் கவிதைத் தொகுதி.


பல கவிதைகள் அர்த்தமாயின. அறிதலின் கணங்களை கடந்துகொண்டிருந்தேன். அதன் இன்பமே அலாதி. பின்பு மனுஷ்யபுத்திரனை நீராலானது தொகுதி வாசித்தேன். ரொம்பவும் ஈர்த்தது. “மனுஷ்யபுத்திரனின் ஆரம்ப காலக் கவிதைகள்” என நீங்கள் பலமுறை குறித்துச் சொல்வதுண்டு. ஆனாலும் அவரது நீராலானதும் அந்நிய நிலத்துப்பெண்ணும், கவிதை வழக்கமாய் செய்யும் காற்றில் மேலெழுப்புதலை செய்யத்தான் செய்தது. பின்பு சுகுமாரனின் கோடைக்காலக் குறிப்புகள் வாசித்தேன். பின்பு எதேச்சையாக கல்யாண்ஜி….


[image error]


வண்ணதாசனும் கல்யாண்ஜியும் ஒருவரே என்பது நான்கைந்து வருடம் முன்பு நான் செவி வழி அறிந்து சேமித்துக் கொண்டது தகவல். தகுந்த நேரத்தில் இது போன்ற தகவல்களை நண்பர்கள் மத்தியில் சொல்வது மூலம் என்னை இலக்கிய லங்கோடு என நிறுவிக்கொள்ளலாம். அப்டியாப்பட்ட நண்பர்கள் எனக்கு. அவரது முகப்புத்தகக் கவிதைகளை வாசித்துவிட்டு, அவரது கவிதைத் தொகுதிகள் சில வாங்கினேன். இதில் முரண் என்னவெனில் சுகுமாரனுக்கு அடுத்த படியாக கல்யாண்ஜிக்கு தாவினதுதான்.


இருவருக்குமான வித்தியாசம் பெரியது. பாம்புகள் நிறைந்த அறையில் ஒரு கோப்பை விஷத்தை வெறித்திருந்த நான், சட்டென குளத்தங்கரையில் காதலி வரக் காத்திருக்கலானேன். மைனா இறந்து கிடப்பதாக நினைத்து வேலை மெனக்கெட்டு வந்து பார்த்துவிட்டு பிய்ந்த செருப்புதான் என தன் வழி செல்லும் மனிதர்கள், மரத்திற்கு வழிவிட்டு காம்பவுண்டு சுவற்றை இடித்தவர், காற்றினால் விசிறி சிரிக்கும் பூக்கள், மரத்திலிரங்கும் தலை கீழ் அணில், கதவு திறக்கையில் சரியும் வளையல்… எனக்கு இவ்விடத்திலேயே நிற்க வேண்டும்போலிருந்தது.


அழகு, அன்பு…இரண்டுமாக கல்யாண்ஜியின் கவிதைகள் தெரிந்தன. நேற்று பவா மேடையில் பேசிய போய்க்கொண்டிருப்பவளை முன்பு வாசித்திருக்கிறேன்… பவா ஸாரின் கோணம் புதியதாய் இருந்தது. அன்னம் ஜூடியின் வீட்டிற்கு முன் திரண்டு நிற்கும் சாக்கடை ஒன்றிருக்கும். அந்த சாக்கடைக்கு இப்பக்கமே ஆண்கள் நிற்பதாக எனக்குப் பட்டது. அன்னம் ஜூடியின் வீட்டை அடைய சாக்கடையைக் கடக்க வேண்டும். உடலளவில் கடக்கலாம், மனதளவில் ஆண் சாக்கடையில்தான் நிற்கிறான். சாக்கடையைக் கடக்காத வரை அன்னம் ஜூடியை அறிய முடியாது…இப்படியாக அக்கதையை அறிந்தேன்.


நவீன இலக்கியம் தோறும் கொட்டிக் கிடக்கும் வாழ்வின் மீதான வெறுப்பும் காழ்ப்பும் கல்யாண்ஜியிடம் இல்லை. தற்கொலைக்கு முயன்று தோற்றவன் இங்கில்லை, மாறாக ஒரு மரத்தடியில், மரமோடு மரமாய் நிற்கும் ஒருவன்தான் உள்ளான். பாம்பு ஊர்ந்து சென்ற தடமுள்ள ஒரு தகிக்கும் பாறையருகே நின்று அவனைப் பார்ப்பது எனக்கு ரொம்பவும் முக்கியமானதாகப் படுகிறது.


 


[image error]


நண்பன் எனக்கு விளைவித்த ஒரு அவமானத்தின் அன்று காலை கல்யாஜியைத்தான் வாசித்திருந்தேன். அவமானத்தில் குறுகிய என்னால் துரோகத்தின் சிறு முள் உணடாக்கிய சிறு ரணத்தையும் பொறுக்க முடியவில்லை. இவர் காட்டும் மனிதர்கள் உண்மை இல்லை. அன்று அவேசமாக “அன்புள்ள கல்யாண்ஜி,” எனத் தொடங்கி கடிதம் எழுதினேன். இன்று வரை அது என் லாப்டாப்பில் உறங்குகிறது. பின் என் இலக்கிய நண்பன் ஒருவனை கல்யாண்ஜியை அவர் வீட்டுக்கே சென்று சந்திக்கலாம் என அழைத்தேன். ஆனால் அவர் எழுதிய கடைசி வார்த்தை வரை வாசித்துவிட்டுத் தான் செல்லவேண்டும். எண்ணற்ற முறை மானசீகமாக அவர் வீடு சென்று திரும்பினேன்…மானசீகமாக மட்டும். கல்யாண்ஜி என்னை ஈர்த்துவிட்டிருந்தார். அவருக்கு வாசகனாகிவிட்டிருந்தேன்.


விழாவின் போது மொத்த அரங்கும் எழுந்து நின்று கைத்தட்டி, கல்யாண்ஜிக்கு விருது அளிக்கப்பட்ட போது, சுர்ர்ரென உடல் சிலிர்த்தடங்கியது. முதுகுத் தண்டிலிருந்து மேலேறிய இந்த சிலிர்ப்பலை, என் கன்னம் தொட்டேறி கீழிமைக் கடந்து கண்ணில் நீர்ப்படலமாக பரவி, கீழிமை மேல் தேங்கித் திரண்டது. நன்றியால் பொங்கினேன். மானசீகமாக பலருக்கு நன்றி சொன்னேன். தூய்மையான இக்கணத்தினூடே நவீன இலக்கியத்தால் வளர்த்தெடுக்கப் பட்ட குரூரமான ஒருவன் உள்ளிருந்து கொண்டு “அடங்குறியா…மங்கல பிப்பீ டும் டும் போட்டதும்,, எல்லாரும் கைதட்டவும், கண்ல தண்ணி வருது, அவ்ளோதான்…ரொம்ப அலட்டிக்காத” என்றான். இந்த குரலை என்னதான் செய்வது. இந்த அவநம்பிக்கையின் குரல்…இதோடேதான் பயணிக்க வேண்டியுள்ளது.


 


[image error]


இந்த நவீன அவநம்பிக்கைக்கு எதிரான குரலாக பவா செல்லதுரையின் உரையை உள்வாங்கிக்கொண்டேன். பஷீரிடம் திருடிய திருடன்தான்…ஆனால் அவன் பெயர் அறம் அல்லது கருணை அல்லவா?? தூய்மையின் கணங்கள் தோன்றி மறைபவை. ஒவ்வொரு மனிதனும் அதனூடே பயணித்து மீள்கிறான். என்ன….அக்கணத்தில் நீடிக்கத்தான் முடியவில்லை. மனிதனிடம் தான் காண விரும்புவது அன்பையும் அறத்தையும்தான் என்று பவா சொன்ன போது அவரை இதுவரையில் வாசிக்காமல் போனதற்கு வருந்தினேன். ஊருக்கு திரும்புகையில் “ஏழுமலை ஜமா” சிறுகதையை வாசித்துவிட்டுத்தான் உறங்கினேன். விரைவில் மற்றவை.


ஊட்டியிலும் சரி, கோயம்பத்தூரிலும் சரி…  ஒவ்வொரு விஷ்ணுபுரம் கூடலுக்குப் பின்னும், என் வாசிப்பெனும் செயல்பாட்டை மெருகேற்றுவதற்கான வழிகளை அறிந்து திரும்புகிறேன். படிக்கவேண்டிய எழுத்தாளர் பட்டியலுடன் திரும்புகிறேன். இம்முறையும் அப்படியே. ஒரு வாசகனாக கோடி நன்றிகள், விஷ்ணுபுரம் கூடல் நிகழ்ந்தேறக் காரணமாகும் ஒவ்வொருவருக்கும். இந்தப் பிரதான இலக்கியப் பெருக்கில் மிகச் சிறிய குமிழியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.


அன்புடன்,

’மோட்டார்’ ஸ்ரீநிவாஸ்.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2016 10:31

December 27, 2016

விஷ்ணுபுரம் விருதுவிழா-பகடி குசும்பன்,

துபாயில் வசிக்கும் நண்பர் சரவணன் எனும் குசும்பனின் பகடிப்பதிவுகள்.


 


1 2 3 4 5 6 7 8 9 10 11


முந்தைய பதிவுகள்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 1 விஷ்ணு


விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 2


விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 3 ராகேஷ்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 4 சுரேஷ் பிரதீப்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 5


விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 6


விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 7


விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 8 யோகேஸ்வரன்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 9 சிவமணியன்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 10 குறைகள்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு-11 சசிகுமார்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 12


உரைகள்


இரா.முருகன் உரை


சுப்ரபாரதிமணியன் உரை


காணொளிகள்


ஜெயமோகன் உரை


வண்ணதாசன் உரை


நாஸர் உரை


கு சிவராமன் உரை


பவா செல்லத்துரை உரை


இரா முருகன் உரை


எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை


புகைப்படங்கள்


புகைப்படங்கள் தங்கவேல் 1


புகைப்படங்கள் தங்கவேல் 2


புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்


புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1


புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2


=============================================================


விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு


============================================================


விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்


விலகும் திரை – ஏ வி மணிகண்டன்


சுவையாகி வருவது ஜெயமோகன் 1


சுவையாகி வருவது ஜெயமோகன் 2


மனித முகங்கள் வளவதுரையன்


வண்ணதாசன்- கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்


வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்


வண்ணதாசன்- குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா


வண்ணதாசன்- வண்ணமும் மென்மையும் – சௌந்தர்


வண்ணதாசன்- சிவசக்தி நடனம் கடலூர் சீனு


==============================================================================


வண்ணதாசன் இணையதளம்


வண்ணதாசன் நூல்கள்


வண்ணதாசன் இணையப்பக்கம்


வண்ணதாசன் கதைகள்


வண்ணதாசன் கவிதைகள்


==============================================================================


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது


வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 5


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 8


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11


 மென்மையில் விழும்கீறல்கள்


சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்


வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2016 18:33

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -9 -சிவமணியன்

photo


விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றி நண்பர் சிவமணியன் என்னும் சிவக்குமார் எழுதும் பதிவு. முதல்நாள் நிகழ்வைப்பற்றி விரிவாக பதிவுசெய்திருக்கிறார். அனேகமாக பேசப்பட்ட அனைத்தையும்.


 


சிவமணியன் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வுகள் பதிவு. நாள் ஒன்று

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2016 10:35

விஷ்ணுபுரம் விருது விழா பதிவுகள் 8- யோகேஸ்வரன்

[image error]


24.12.2016 சனி அதிகாலை முதல் வடகோவைவிலுள்ள குஜராத்தி சமாஜ் நண்பர்களால் நிறைந்துகொண்டிருந்தது. “மக்களே” என்ற பெருவொலியோடு தங்குமிடத்தின்

கதவுகளை அகல திறந்தபடி உள்ளே நுழைந்தார் ஜெ. அறிமுகப்படலத்திற்குப்பின் நின்றவாக்கில் ஒரு சிறு உரையாட.ல்.


காலை உணவிற்குப்பின் முதல் அமர்வு. 9.55 மணியளவில் அரங்கம் நிறைந்து தயாராக, மிகச்சரியாக 10 மணிக்கு “இந்த ரெண்டுநாள் முடிஞ்சி நீங்க சோகமா கிளம்புனீங்கன்னா, அது எங்களுக்கு கிடைத்த வெற்றி, அப்பாடா டார்ச்சர் முடிஞ்சிருச்சிடா அப்படீன்னு நினைச்சி கிளம்புனீங்கன்னா அது எங்களுக்கு கிடைத்த மிகபெரிய வெற்றி” என்ற கிருஷ்ணனின் வரவேற்புரையோடு ஆரம்பித்தது முதல்நாள் முதல் அமர்வு.


நகைச்சுவைத் துணுக்கு ஒன்றோடு தன் உரையை ஆரம்பித்தார் நாஞ்சில்நாடன். அங்குமிங்கும் அலைபாய்ந்த கேள்விபதில் உரையாடல் சற்றைக்கெல்லாம் ஒரு ஒழுங்குபெற்று அழகாய் முன்னேறிக்கொண்டிருந்தது. “நல்லா இருக்கியாடா” தோளில் வேகமாய் தட்டியபடி அருகில் வந்தமர்ந்தார் பாட்டையா பாரதிமணி.


சற்றைக்கெல்லாம் சுகாவுடன் உள்ளே நுழைந்தார் வண்ணதாசன், நாஞ்சிலின் அருகில் சென்றமர்ந்து கைபற்றி காதோரம் சேதி சொல்கிறார்.


 


 


[image error]


RISK என்ற ஆங்கில வார்த்தைக்கான சரியான தமிழ்சொல்லை கடந்த பத்துநாட்களாக தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார் நாஞ்சில்.


தமிழ் சொற்கள் மற்றும் சொல்லாடல்கள் குறித்த நீண்ட உரையாடல்கள், “கள்ள மவுனம்” என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியது பற்றி பகிர்ந்துகொண்டார். தொடர்ச்சியா, ஜெ தனது சொல் (‘பரப்புரை’?) ஒன்று தமிழ் பத்திரிக்கைகளில் கையாளப்படுவது பற்றி பேசினார். அவ்வப்போது குறிக்கிடும் ஜோக்குகளால் அரங்கம் அதிர்ந்து அடங்கியது.


காலை தேநீர் இடைவேளை 333


அடுத்து பாரதிமணியின் நாடக அனுபவங்கள்.


பாட்டையாவின் நினைவலைகளை தூண்டி சுவாரஸ்ய பதில்களை பெற சில கேள்விகளை இடையிடையே வீசினார் ஜெ.


நாடக அனுபவத்தை பகிர்ந்துகொள்வதற்காக மேடையேறியவர் ஒரு கட்டத்தில் தனது வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.


க.நா.சு தொடங்கி, அவரின் “புள்ளிகள், கோடுகள், கோலங்கள்” புத்தகத்தில் இடப்பெற்றுள்ள சுவாரஸ்ய சம்பவங்களை தொடர்ந்து ராயல் சல்யூட்டில் நின்றது.


மதிய உணவு இடைவேளை


இரா.முருகன் உடன் சந்திப்பு. தன்னுடைய படைப்புகள், அவற்றிற்கிடையேயான சங்கிலி தொடர்புகள் குறித்து முன்னுரைத்தார். ”என்னுடைய படைப்புகள் குறித்து நிறைய தகவல்களை நானே வியக்குமளவிற்க்கு இன்று

தெரிந்துகொண்டேன்”- இரா.முருகனே வியக்குமளவிற்க்கு அமைந்தது நண்பர்களின் சுவாரஸ்ய உரையாடல்கள்.


மாலை தேநீர் இடைவேளை


 


[image error]


தான் ஒரு சிறந்த கதைசொல்லி என்பதை மீண்டும் மீண்டும் அழகாய் நிறுவும் பவா செல்லதுரை. மூன்றாம் அமர்வாய் அமைந்த இந்நிகழ்வு பங்கேற்பாளர்கள் அனைவரையும் கூர்ந்து கவனிக்க வைத்து, புருவத்தை உயர்த்த வைத்து, மனம்விட்டு சிரிக்க வைத்தது என்றே சொல்லவேண்டும்.


”தேன்” என்ற மலையாள கதையில் ஆரம்பித்து “முற்றம்” நிகழ்வின் செயல்பாடுகளோடு முடிந்தது.


 


[image error]


மாலை இரண்டாம் இடைவேளை


அனேகமாக இதுவே உலகத் தமிழிலக்கியவரலாற்றில் நிகழ்ந்த முறையாக வினாடி வினாவாக இருக்க வேண்டும். நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள். சில கடினமான கேள்விகளை முடிக்கும் முன் பதில் வந்து விழுந்தது ஆச்சரியம்தான்.


கல்லூரி மாணவர் பாரதியின் பங்களிப்பு அருமை. கேட்ஜெட்டுகளில் நத்தைபோல் தங்களை சுருக்கிக் கொள்ளும் இன்றைய தலைமுறைக்கிடையே புத்தகத்தை புதையலாய் பார்க்கும் பாரதியை போன்றவர்கள் அரிது.


இரவு உணவு இடைவேளை


மருத்துவர் கு.சிவராமனுடனான கலந்துரையாடல். கேன்சரின் காரணிகள், பேலியோ டயட்டின் சாதக பாதகங்கள், essential drugsல் தங்க புஷ்பம் நுழைக்கப்பட்ட நுண்ணரசியல் உள்ளிட்ட பல தகவல்கள்.


தூக்கம் கவ்வும் கண்களோடு முதல் நாள் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.


 


[image error]


 


விழாவின் இரண்டாம் நாள்.


சு.வேணுகோபாலோடு தொடங்கிய இரண்டாம் நாள் அமர்வு, ஏதோ ஒரு புள்ளியில் பஷீரின் படைப்புகள் தொடப்பட, உரையாடல்கள் அனைத்தும் பஷீர், அவருடைய கடைசிகால வாழ்க்கை மற்றும், தி.ஜா, கி.ராவுடனான ஒப்பீடாகவே சுழல ஆரம்பிக்க வேணுகோபால் அவர்களுடன் படைப்புகள் குறித்து உரையாட மடைமாற்றப்பட்டது.


பலத்த கரவொலிக்கிடையே வந்தமர்ந்தார் வண்ணதாசன். வண்ணதாசனின் ஒரு சிறுகதை தொகுப்பு தான் முதல் நாவல் ஒன்றினை எழுதி அது போட்டிக்கான முதல்பரிசை வென்றதைப் பற்றி சிலாகித்து முடித்துக்கொண்டார்.


”ஓரமாய் அமர்ந்திருக்கும் என்னை நடு இருக்கைக்கு மாறச்சொல்கிறார் வேணுகோபால், எனக்கு ஓரமாக இருக்கவே பிடித்திருக்கிறது. ஓரமாய் அமர்ந்தபடி ஆர்ப்பரிக்கும் கடலை, கரையை, மனிதனை கவனிக்கவே எனக்கு விருப்பம்” என்று தொடங்கினார் வண்ணதாசன்.


இவ்விருநாட்களுக்கான மிகச்சிறந்த நிகழ்வாக நான் கருதுவது இதுவே. மாலை நடைபெற்ற விருதுவிழாவில் டிசம்பர் மாத முதல் வாரத்தில் செல்வேந்திரன், சக்தி கிருஷ்ணன், மீனாம்பிகை எனது வீட்டிற்கு வந்தபோதே விஷ்ணுபுர விருதினை நான் பெற்றுவிட்டேன், இந்நிகழ்வு ஒரு மீள்நிகழ்வே என்று வண்ணதாசன் குறிப்பிட்டார். இந்த அமர்வையும் நான் அவ்வேறே கருதினேன்.


[image error]


மலையப்பனில் தொடங்கி கோமு வரை வண்ணதாசனின் கதைமாந்தர்களும், கல்யாண்ஜியின் கவிதை மாந்தர்களும் அரங்கினுள் ஆர்ப்பாட்டமின்றி அரவம் செய்தார்கள்.காசர்கோட்டு மலையப்பனை நினைவுபடுத்திய ஜெ. பணிசுமை நிறைந்த ஒரு வேலைநாளில், வண்ணதாசனை வங்கியில் சந்திக்க சென்றதை தர்மபுரி வாசகியொருவர். ஜெயமோகனின் ஏழாம்அறிவு புத்தகத்தை தனது காதலிக்கு கொடுத்து அதனால் ஏற்ப்பட்ட பிரளயத்தை வண்ணதாசனின் கதை தொகுப்பின் மூலம் சரி செய்த கடலூர் நண்பர் ஒருவர் (கடலூர் சீனு அல்ல).


முதல் நாள் முதல் தனது மகனோடு வந்தமர்ந்து, இத்தருணத்திற்க்காகவே காத்திருந்ததைப்போல, வண்ணதாசனின் கதைகளை வகைப்படுத்தி, கைகளை கட்டியபடி மிக நிதானமாய் பேசியமர்ந்த வாசகியொருவர், தலையுயர்த்தி தனது தாயின் நிதான பேச்சை ஒருவித திகைப்போடு உள்வாங்கியமர்ந்திருந்த அவ்வாசகியின் மகன்.


பரவசநிலையடைந்திருந்த அரங்கு. தரிசனம் முடித்த தேர் நிலைகொள்ளத்தானே வேண்டும், வண்ணதாசனின் “நிலை” பற்றிய கதையோடு நிறைவுபெற்றது.


கொடுக்கப்பட்ட பரிசுகளையும், போர்த்தப்பட்ட பொன்னாடைகளையும் சுகா வற்புறுத்தி கேட்டும் கொடுக்க மறுத்து, கைகொள்ளாது தன் நெஞ்சில் அணைத்தபடி அரங்கை விட்டு வெளியேறினார் வண்ணதாசன்.


 


[image error]


காலை தேநீர் இடைவேளை


”எனக்கு தமிழ் புரியும் ஆனா பேச வராது, தேவைப்பட்டால் மொழிபெயர்த்துக்கொள்ளலாம்”, கன்னட எழுத்தாளர் H.S.சிவப்பிரகாஷ் முடிக்கும்வரை மொழிபெயர்ப்பாளர் தேவைப்படவே இல்லை. மிக நிதானமாக தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.


தனது படைப்புகள் குறித்தான தடைகள் குறித்து பேசுகையிலும் அதே நிதானம். கடைசியாக பேசிய பாவண்ணன் இதை தொட்டு பேசினார், இருபது வருடங்களுக்கு முன் மொழிபெயர்ப்புக்காக தான் சந்தித்த அதே சிவப்பிரகாஷ் இன்றும் அதே ரெஸ்பான்ஸிபில் பர்சனாக உள்ளார் என்று உணர்வுப்பூர்வமாக பேசினார்.


முடிவுக்கு முன் கேள்வி கேட்க மைக் பிடித்த ஒரு இங்கிலீஷ் புரொபசர் தனது மேதாவிதனத்தை காட்ட முயற்சித்து ஜெமோவிடம் நன்றாக வாங்கிக்கட்டிகொண்டார்.


 


[image error]


மதிய உணவு இடைவேளை


பாக்குத்தோட்டம் பற்றிய பேச்சுக்களோடு பாவண்ணன், நாஞ்சில், பாட்டையாவுடன் முடிந்தது மதிய சாப்பாடு.


இறுதி அமர்விற்காக அரங்கில் காத்திருக்கையில் இரா.முருகன், லா.சா.ராவின் மகன் சப்தரிஷி தனது தந்தையுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். முக்கியமான சிந்தனையோட்டத்தில் இருந்த லா.சா.ராவை “ஓரம்போ ருக்குமணிவண்டி வருது” என்று அவரும் அவருடன் பிறந்தவர்களும் இம்சித்ததை, அவர் சொல்ல சொல்ல “துளசி” கதையை செப்பனிட்டதை சிலாகித்தபடி இருந்தார்..


திருப்பூர்  சுப்ரமணியம், நாஞ்சில், இரா.முருகன், தேவதேவன், பாவண்ணன் ஆகியோருடன் இறுதி அமர்வு.


பெரும்பாலான கேள்விகளுக்கு நாஞ்சிலும் இரா.முருகனும் பதில்சொல்ல, சுப்ரமணியம் எழுதியெடுத்து வந்த தனதுரையை வாசித்தார். “எனக்கு பக்கத்துல ஒக்காந்திருக்கவன் நல்லவனா, நாதாரியான்ன்னு இப்ப என்னால தெரிந்து கொள்ள முடியுதுன்னு” நாஞ்சில் சொல்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த இரா.முருகன் ஒரு கணம் ஆடித்தான் போனார். அரங்கத்தின் சிரிப்பலை சகஜமாக்கியது.


unconditional love பற்றிய பரிமாற்றங்களுடன் தனது பேச்சை தொடங்கி அதிலேயே முடித்தார் பாவண்ணன்.


ஒவ்வொரு முறை மைக் தன்பக்கம் வரும்போதெல்லாம் அதை கடத்தியபடி இருந்த தேவதேவன் கடைசியாக பேசி நிறைவுசெய்தார்.


 


[image error]


மாலை விருது வழங்கும் விழா. மிகச்சரியாய் 5.55 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.


வழக்கம்போல பின்வரிசையில் அமரச்சென்ற பாவண்ணனை கைபிடித்து பக்கத்து இருக்கையில் இருத்தினேன். முன்னால் ஒரு வரிசை சேர் போடப்பட்ட பிறகே ஆசுவாசமானார்.


விருந்தினர்கள் ஒவ்வொருவராக வந்தமற ஆரம்பித்தார்கள். முன் வரிசையில் வந்தமர்ந்தார் நாசர். மிகச்சமீபமாய் அவரது மூக்கு. கிள்ள நினைத்த ஆசையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினேன்.


“நதியின் பாடல்” ஆவணப்படத்தின் சில பகுதிகள் திரையிடப்பட்டபின் விருந்தினர்கள் மேடையேறினார்கள்.


பேசுபவரின் தாய்மொழியிலுமில்லாமல், கேட்பவரின் தாய்மொழியிலுமில்லாமல் வேறொருமொழியில் பேசுவதற்க்கு மன்னிப்புக்கோரியபடி ஆரம்பித்த சிவப்பிரகாஷ் மழை பற்றிய வண்ணதாசனின் கவிதையொன்றோடு நிறைவு செய்தார்.


தன் எழுத்துரையை வாசித்தமர்ந்தார் இரா.முருகன்.


”பாடாத பாட்டெல்லாம்” கதை தன்னை பாடாய் படுத்தியதை நினைவுகூர்ந்த நாசர், அவதாரம் படத்தில் அதை பயன்படுத்தியதற்க்கு வண்ணதாசனுக்கு நன்றி தெரிவித்தார் (இப்பவாவது நன்றி சொன்னதுக்கு நாம சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்).


வழக்கம்போல கதைசொல்லியாய் பவா, அருமையான பேச்சில் தனக்கும் வண்ணதாசனுக்குமான உறவை மிக அழகாய் விவரித்தார்.


மருத்துவர். கு.சிவராமனின் எதார்த்த பேச்சு, எந்த குறிப்பும் இல்லாமல் இலகுவாக எல்லோரையும் கவர்ந்த பேச்சு.


 


[image error]


இறுதி வாழ்த்துரை ஜெமோ…


H.S.சிவப்பிரகாஷை காலபைரவராக சித்தரித்து, பிற விருந்தினர்களை பற்றியும் குறிப்பிட்ட பிறகு வண்ணதாசனைத் தொட்டார். சுருக்கமான, ஆழமான பேச்சு. மின்மினி பூச்சுகள் மொத்தமாய் கிளம்பி உருவாக்கும் வெளிச்ச வெள்ளத்தில் விரியும் காட்டை விவரித்தபடி “மின்மினித்தீ” என முத்தாய்ப்பாய் வாழ்த்தியமர்ந்தார்.


இறுதியாக வண்ணதாசனின் ஏற்புரை.


ஆர்ப்பாட்டமில்லாத, சற்றே சோகம் கவிழ்ந்த ஆரம்ம பேச்சு, சற்றே இலகுவாகிறார். சாகித்ய அகாடமி விருதின் தொடர்ச்சியாய் தன்மீது பாய்ச்சப்பட்ட வெளிச்சக்கூற்றுகளிலிருந்து தன்னை வெளியேற்றிக்கொள்ள விஷ்ணுபுர விருதுவிழா துணை நின்றதாய் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் அவரது படைப்புகளைப் போலவே சட்டென்று முடிந்துவிட்டதாய் தோன்றவைத்த பேச்சு…..கரவொலிகள் அடங்க நீண்ட நேரமாயிற்று. விழிகளின் ஓரம் கண்ணீருடன் இருகரம் கூப்பியபடி எழுந்தமர்கிறேன் நான்.


நாற்காலிகள் நகரும் சத்தம், கேமிராக்களின் பளிச் வெளிச்சம், புரட்டப்படும் புத்தகங்களின் சரசரப்பு….


திடீரென சூழும் வெறுமை, ஒரு தியான நிலையிலிருந்து சராசரி மாலை நேரத்துக்கு ராட்டின சுற்றலாய் கீழிறங்கும் மனோநிலை. IRCTC பிரிண்ட்அவுட்டுகளையும், REDBUS மெசேஜ்களையும் வெறித்தபடி நிலைகொள்ளாமல் இங்குமங்கும் அலைபாயும் நண்பர்கள்,.


”10 மணிக்கு பஸ்” என்றபடி விடைபெறுகிறார் பாவண்ணன். “போன் பண்ணிட்டு வீட்டுக்கு வாடா”. கைத்தடியை கவனமாய் ஊன்றியபடி கடந்துசெல்லும் பாட்டையாவை பார்த்து மௌனமாய் தலையசைக்கிறேன். மௌனத்தை கலைக்க விரும்பாமல் கை அசைத்து விடைபெறுகிறார் நண்பர் முரளி சுந்தரம்.


மேடைப்படிகளில் மெதுவாய் ஏறுகிறேன் நான்.


 


[image error]


லாடம் போன்ற வரிசை வண்ணதாசனை நோக்கி மெதுவாய் நகர்கிறது. என்முறை வர அவரது கைகளை அழுந்த பற்றிக்கொள்கிறேன். கண்ணாடி வழியே கண்களை ஊடுருவுகிறார். காலை உரையாடலில் பேசியவற்றை நினைவுகூறுகிறார். கைகளை இன்னும் அழுந்தப்பற்றி விடைபெறுகிறேன்.


“சார், நம்ம நண்பர் ஒருத்தர் மலை வாழைப்பழம் கொண்டுவந்திருக்கிறார்” என்றபடியே பழங்கள் நிரம்பிய காதிதப்பையை வண்ணதாசனிடம் நீட்டுகிறார் பவா செல்லதுரை.


“என்ன, செம்பகப்பூ வாசமடிக்கி……”


அருகிலிருக்கும் அனைவரும் காதிதப்பையினுள் பார்வையை செலுத்துகிறோம்…..


“அது………………….. நா தலயில வச்சிருக்கேன் சார்………..” சற்றே வெக்கத்தோடு புன்னகைத்தபடி கையெழுத்துக்காக புத்தகத்தை நீட்டுகிறார் வாசகியொருவர்.


”நீங்கள் கல்யாணியை தொடுங்கள். நான் கல்யாணியாகவே இருக்க ஆசைப்படுகிறேன்”. இடதுகை விரல்களால் மைக்கின் அடிப்பகுதியை திருகியபடியே காலையமர்வில் வண்ணதாசன் பேசியது காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.


இந்த செம்பகப்பூவின் வாசனை திருநெல்வேலியின் பெருமாள்புரத்துக்கு இந்நேரம் சென்றடைந்து கல்யாணிக்காக காத்துக்கொண்டிருக்கும்.


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2016 10:32

விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிப்பதிவு -1

maxresdefault


விஷ்ணுபுரம் விருதுவிழாக் காணொளிகள்.


 


விஷ்ணுபுரம் விருது – 2016
நிகழ்வில்
எழுத்தாளர் வண்ணதாசன் உரை
https://www.youtube.com/watch?v=XGXhV-8bCtA



விஷ்ணுபுரம் விருது – 2016 நிகழ்வில்
எழுத்தாளர் ஜெயமோகன் உரை
https://www.youtube.com/watch?v=ZFvSYdIhm4U


சுருதி டிவி சார்பில் இப்பதிவுகளை உருவாக்கிய நண்பர் கபிலன் அவர்களுக்கு நன்றி.

விஷ்ணுபுரம் நண்பர்கள்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2016 10:32

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -7

uuu


அன்புள்ள ஜெ


 


மிகச்சிறப்பான விழா அதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு விஷயமும் கச்சிதமாகப் பார்த்துப்பார்த்து செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான வேலைகள் கொடுக்கப்பட்டிருந்தன. விருந்தினரை உபசரித்துக்கூட்டிவர ஒரு குழு சென்றுகொண்டே இருந்தது. இன்னொரு குழு உள்ளூர வேலைகளைச் செய்துகொண்டே இருந்தது. அங்கே சாப்பாடு விஷயங்களைக் கவனித்துக்கொண்டவர் விஜயன் சூரியன் என்பவர். அவர்தான் முதல்பாராட்டுக்குரியவர். அவர்தான் இத்தனை கூட்டத்தையும் சாப்பிடவைத்தவர். அவர் செய்தபணி பெரியது. ஏனென்றால் நினைத்ததைவிட பலமடங்குக்கூட்டம் வந்துகொண்டே இருந்தது. அற்புதமான நிகழ்ச்சி


 


 


சிவக்குமார்


[image error]

நாஸர் ,வண்ணதாசன், இயககோ சுப்ரமணியம்


 



வணக்கம்.

சீரான திட்டமிடலில் தொடங்குகிறது இலக்கியப் பயணம். பலவேறுப்பட்ட ஆளுமைகளை சந்திக்கவும் உரையாடவுமான வாய்ப்பு.. இலக்கிய வயப்பட்ட பேச்சு.. சிரிப்பு.. உரையாடல்.. உறவாடல்.. எல்லாமே புத்தம்புது சூழலுக்குள். அனைவரிடமும் வெகு எளிமையாக பழகும் தங்களின்  இயல்பு.. விழாவை அர்த்தப்படுத்தும் அத்தனை நிகழ்வுகளும் வழுக்கி சென்று விழாவில் விழ.. இலக்கிய உலகம் தங்களுக்கு நிறைய கடமைப்பட்டுள்ளது. (நான் தவறவிட்டவைகளை தகவல்களாகவும்.. புகைப்படங்கள் மூலமாகவும் அறிந்துக் கொண்டேன்.)



அன்புடன்
கலைச்செல்வி.


[image error]



அன்புள்ள ஜெயமோகன்


வணக்கம்.


நேற்றைய நிகழ்ச்சி வாழ்விலே மறக்கமுடியாத ஒரு பேரனுபவமாக பதிந்துவிட்டது. எத்தனை எத்தனை வாசகர்கள். பார்த்துப்பார்த்து மனம் பூரித்தபடி இருந்தேன். மலரைத்தேடி வரும் தேனீக்களென எழுத்தை விரும்பி, எழுத்தை நுகர, எழுத்துக்கு அருகில் வட்டமிட, எழுத்தை நோக்க, எழுத்தில் அமர என எத்தனை எத்தனை உள்ளங்கள். வண்ணதாசனுடைய ஐம்பத்து சொச்ச ஆண்டு கால உழைப்பின் பலனாகவே அதைக் காண்கிறேன். அவருக்கு அணுக்கமான உள்ளங்களை ஒன்றிணைத்து அவருக்கே சுட்டிக் காட்டும் தருணமாகவும் அமைந்துவிட்டது. உங்களுக்கும் அமைப்பினர் அனைவருக்கும் தமிழ் இலக்கிய உலகம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.


அன்புடன்


பாவண்ணன்



[image error]

அன்புள்ள ஜெ


 


 


 


விஷ்ணுபுரம் விழா அற்புதமான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு கணமும் வாழ்ந்த நாட்கள் அவை. சென்றவருடம் வரவேண்டுமென நினைத்தேன். ஏதோ ஒரு சோம்பலால் வராமலிருந்தேன். ஏன் வரவில்லை என்று எண்ணி எண்ணிச் சோர்வு அடைந்தேன். ஏன் வரவில்லை என்றால் இந்தமாதிரி விழாக்களில் இருக்கும் சம்பிரதாயமான பேச்சுக்கள் அர்த்தமில்லாத உபச்சாரங்கள் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை என்பதனால்தான். இந்த விழா தான் நான் உண்மையில் ஒரு விழா எப்படி இருக்கவெண்டும் நினைக்கிறோமோ அப்படி இருந்த விழா


 


 


 


முதல் விஷயம் யாரும் யாரையும் அர்த்தமில்லாமல் பாராட்டிக்கொண்டிருக்கவில்லை. மிகப்பெரிய படைப்பாளிகளை அறிமுகம் செய்யும்போதுகூட அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை மட்டுமே தொகுப்பாளர்கள் சுருக்கமாக முன்வைத்தார்கள். முன்னுரை வழங்கி தொகுப்புரை செய்தவர்கள் அர்த்தமில்லாமல் வளவளவென்று பேசுவது நம் கூட்டங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் சாபக்கேடு அந்த விஷயம் நிகழவே இல்லை. இரண்டாவதாக கேள்விகேட்கிறோம் என்று மைக்கை வாங்கும் அற்பங்கள் பேசிப்பேசிக் கழுத்தறுப்பார்கள். அவர்களுக்கு பேசவும் தெரிந்திருக்காது. பேச விசயமும் இருக்காது. ஆனால் அமைப்பாளர்கள் அவர்களைக் கட்டுபப்டுத்த முடியாது. அந்த வகையறாக்கள் அறவே இல்லை. சம்பந்தமில்லாமல் மேடை ஏறிப் பேச ஆரம்பிப்பவர்களும் இல்லை. இதெல்லாம் மிகப்பெரிய சாதனைகள்.


 


 


 


பேசிய அத்தனைபேருமே மிகத்திறமையாகப்பேசினார்கள். பவா செல்லத்துரை, நாஞ்சில்நாடன் இருவரும் பேசியது உச்சகட்ட பேச்சு. எனக்கு எச் எஸ் சிவப்பிரகாஷ் ஆங்கிலத்தில் பேசியதுமுழுமையாகப்புரியவில்லை. ஆனால் நல்ல பேச்சு என்று சொன்னார்கள். முக்கியமாக நீங்கள் எங்குமே தென்படவில்லை. உங்களைப்பற்றிய பேச்சே இந்த விழாவிலே இல்லை. அதுதான் மிக ஆச்சரியமாக இருந்தது


 


 


 


செல்வக்குமார்


 


[image error]

எழுத்தாளர் தூயன் வண்ணதாசனுடன் [தூயனின் முதற்சிறுகதைத் தொகுதி வெளியாகியுள்ளது]




அன்புள்ள ஜெயமோகன்,


 


விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு வாழ்த்துகள். என் பிரிய எழுத்தாளருக்கு எனும்போது மனம் முழுதும் மகிழ்ச்சி. வாழ்வின் சிறிய விஷயங்களில்கூட மகிழ்வடையும் மனதும் அதை பிறர்க்கு சுவைபட கடத்தும் கலையும் வண்ணதாசனுக்கே வாய்த்த ஒரு அதிசயம்.


 


எப்போதும் போல் அவர் நினைவு வரும்போதும் மனதில் தோன்றும் வரி “கனியான பின்பும் நுனியில் பூ”. தினமும் காணக்கிடைக்கும், அண்டை வீட்டு வாசலில் பழுக்கும் அதே மாதுளை தான். ஆனால் அதையே இவ்வளவு சுவையாக கூற அவரால் தான் ஆகிறது.  கடையில் வாங்கும் போதும் நல்ல பழங்களை அவருக்கு தேர்ந்து கொடுத்தவர் தன பெரிய விழிகளுடைய மகளுடன் நிற்கிறாரா என்று அவ்வவ்போது தேடுவேன். விகடனில் வெளியான இந்த ஒரு சிறுகதையே அவருடனான என் அனுக்கதிற்கு போதுமானதாக இருக்கிறது.


 


2014 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அக்கதை பிரசுரமான தொகுப்பில் அது இடம்பெற்றிருந்த பக்கத்தில் கையெழுத்து கேட்டேன். காரணம் கேட்டால் என் மகளைப் பற்றி சொல்ல எண்ணியிருந்தேன். கண்களும் சேர்ந்து சிரிக்கும் ஒரு புன்னகையுடன் “உங்களுக்கும் மகள் இருக்காளா தம்பி?” என்றார். வேறென்ன சொல்வது, “ஆமா சார், அவளும் வளர்ந்தபின் தினகரி மாதிரி என் கையைப் பிடிச்சுக்கற மாதிரி வாழ்ந்துட்டேன்னா போதும் சார்” என்றேன்.  எழுந்து என்னை அவர் அனைத்துக் கொண்ட இதம் இன்றும் நினைவில் உறைந்து போயிருக்கிறது. அவர் தகுதிக்கும் என் வயதிற்கும் அவர் அவ்வாறு செய்ய வேண்டுமா என்ன? ஆம், அதுதான் அவர்.


 


என் பிரிய எழுத்தாளருக்கு வணக்கங்களும் முத்தங்களும். உங்களுக்கு நன்றி.


 


என்றென்றும் அன்புடன்,


மூர்த்திஜி


பெங்களூரு


 


===================================


முந்தைய பதிவுகள்


 


விஷ்ணுபுரம் விழாப்பதிவு1 விஷ்ணு


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2


விஷ்ணுபுரம் விழாப்பதிவு3 ராகேஷ்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு4 சுரேஷ் பிரதீப்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 5


விஷ்ணுபுரம் விழாப்பதிவு6


விஷ்ணுபுரம் விழாப்பதிவு7


விஷ்ணுபுரம் விழாப்பதிவு8 யோகேஸ்வரர்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 10 குறைகள்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு11 சசிகுமார்


விஷ்ணுபுரம் விழாப்பதிவு 12


உரைகள்


இராமுருகன் உரை


சுப்ரபாரதிமணியன் உரை


 


காணொளிகள்


ஜெயமோகன் உரை


வண்ணதாசன் உரை


நாஸர் உரை


கு சிவராமன் உரை


பவா செல்லத்துரை உரை


இரா முருகன் உரை


எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை


 


 


புகைப்படங்கள்


 


புகைப்படங்கள் தங்கவேல் 1


புகைப்படங்கள் தங்கவேல் 2


 


புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்


 


புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1


புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2


 


 


=============================================================


 


விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு


 


============================================================


 


விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்


விலகும் திரை – ஏ வி மணிகண்டன்


சுவையாகி வருவது ஜெயமோகன் 1


சுவையாகி வருவது ஜெயமோகன் 2


மனித முகங்கள் வளவதுரையன்


வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்


 


வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்


 


வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா


 


வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்


 


வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு


 


==============================================================================


 


வண்ணதாசன் இணையதளம்


வண்ணதாசன் நூல்கள்


வண்ணதாசன் இணையப்பக்கம்


வண்ணதாசன் கதைகள்


வண்ணதாசன் கவிதைகள்


==============================================================================


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது


வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2


வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3


வண்ணதாசன் கடிதங்கள் 4


வண்ணதாசன் கடிதங்கள் 5


வண்ணதாசன் கடிதங்கள் 6


வண்ணதாசன் கடிதங்கள் 7


வண்ணதாசன் கடிதங்கள் 8


வண்ணதாசன் கடிதங்கள் 9


வண்ணதாசன் கடிதங்கள் 10


வண்ணதாசன் கடிதங்கள் 11


 மென்மையில் விழும்கீறல்கள்


சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்


வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?


 


 


 



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2016 10:32

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 6

IMG_8351


அன்பிற்கினிய ஜெ சார்


கிட்டத்தட்ட இந்த வருடத்தையே எனக்கு இனிப்பாக்கியுள்ளீர்கள். என்னால் முழுவதுமாக ஈடுபட முடியாவிட்டாலும் இன்று வரை வாசிக்கவும் எழுதவுமே எப்போதும் விரும்பியிருக்கிறேன். இந்த வருடத்தில் நான்கு நாட்களை தங்களுக்கு அருகில் வாழ்ந்திருக்கிறேன். எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் இந்த நான்கு நாட்கள்தான் என் வாழ்வின் திசைகளை, இலக்குகளை தீர்மானிக்கும்.


பெரும்பாலும் ஆளுமைகள் பேசும்போது என்னை நான் ஊமையாக்கி கொள்வேன். படைப்பாளிகளிடம் பேச வாசகர்கள் போட்டி போட்டதை பார்த்து நான் மேலும் ஊமையாகிப்போனேன். இரா.முருகன், ஹெச். எஸ்.சிவப்பிரகாஷ், பாவண்ணன் அவர்களிடமெல்லாம் கேட்க என்னிடம் சில கேள்விகள் இருந்தன. கேட்கவே இல்லை. பதில் கண்டிப்பாக கிடைக்கும் கேட்காமல் போனாலும். அது போல் நிறைய பதில்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன.


ஒரு நாவலிலோ, சிறுகதையிலோ வரும் கதா பாத்திரங்களை எழுதுகையில், எழுதுவோரின் மனதில் ஒரு உருவம் கண்டிப்பாக இருக்கும். எழுத்தில் நாம் அதை வாசிக்கும் போது அந்த கதா பாத்திரத்திற்கு ஒரு குறியீட்டு தன்மை வந்துவிடும். அந்த குறியீட்டுத்தன்மை வந்துவிடுகையில் அக்கதாபாத்திரம் ஒரு கோட்பாட்டுக்கே பிரதிநிதியாகிவிடும். அதுதான் பெரும்பாலும் படைப்பாளிகளின் நோக்கம் என்பது என் எண்ணம்.


வாசகன், படைப்பாளியின் சித்தரிப்பு கொண்டு தனக்குள் ஒரு சித்திரத்தை வரைகையிலேயே அது சாத்தியம். வாசகன் ஒரு நாவலையோ, சிறுகதையையோ அந்த படைப்பாளியின் அனுபவம் மட்டுமே என்று கருதி அவ்வனுபவம் குறித்த கேள்விகளை கேட்பது அவ்வளவு சரியென்று தோன்றவில்லை. எழுதுபவருக்குத்தான் அது அவசியம். வாசிப்பனுக்கல்ல. நிறைய கேள்விகள் அவ்வாறிருந்தன.


எழுத்து என்பது எழுதுபவரின் அனுபவங்களை கிரகித்து கொண்டு தாளில் எழுதுவதல்ல. தன் கதாபாத்திரங்கள், சித்தரிப்புகள் வாயிலாக வாசிப்பவனின் மனதுள் எழுதுவதுதான் படைப்பாளியின் நோக்கம் என்பது என் கருத்து. தவறெனின் அறிவுறுத்தவும்.


திரு.அரங்கசாமி, ராஜகோபால், விஜயசூரியன், மீனாம்பிகை, செல்வேந்திரன், சுகா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் யாவருக்கும் என் இதயப்பூர்வ நன்றிகள்.


நாஞ்சில்நாடன்,எஸ்.ஹெச் சிவப்பிரகாஷ், பவா.செல்லத்துரை மற்றும் தங்களின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுகிறேன்.


அன்பன்


அ மலைச்சாமி


[image error]


அன்புள்ள ஜெ


விஷ்ணுபுரம் விழா அற்புதமான ஒரு நிகழ்வாக அமைந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் நுணுக்கமாக முன்னாடியே பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருந்தது. உணவு இருப்பிட விஷயங்களில் உள்ளச் சிக்கல் என்னவென்று எனக்குத்தெரியும். நானும் நிகழ்ச்சிகளை அமைப்பவன். எத்தனைபேர் வருவார்கள் என்று தெரியாமல் ஒரு நிகழ்ச்சியை அமைப்பது மிகப்பெரிய சிக்கல். பணம் நிறைய வீணாகும். ஆனால் அனைத்தும் மிகச்சரியாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.


சில விஷயங்களைச் சுட்டிக்காட்டலாம்.


1 இன்னும் கொஞ்சம் கூடுதலாக டீ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம். பலருக்கு டீ ரொம்ப முக்கியம்.


2. கழிப்பறை அருகே இல்லை எழுந்துசென்று திரும்பிவந்தால் நாற்காலி பறிபோய்விட்டது


3. கேள்விகளை கேட்க கொஞ்சம் தயங்குபவர்களையும் கேட்டு கேள்விகேட்க வைத்திருக்கலாம். ஒருவரே அதிகமும் கேள்விகேட்க விட்டிருக்கவேண்டம்


மற்றபடி நினைத்து நினைத்து ஏங்கவைக்கும் அனுபவம்


அமர்நாத்


[image error]


அன்புள்ள ஜெ,


விழா மிகச் சிறப்பாக நடந்தேறியதை புகைபடங்கள் மூலமும் நண்பர்கள் வழியாகவும் அறிய முடிகிறது.  பலமுறை திட்டமிட்டும் இந்த வருடம் கடைசிகட்ட வேலைபளுவினால், கலந்துகொள்ளமுடியாமல் போய்விட்டது. எனது இனிய ஆசிரியர்களில் ஒருவரான வண்ணதாசனுக்கு விருது வழங்கபடும்போது கலந்துகொள்ளமுடியாமல் போனது குறையாகவே உள்ளது.


இருப்பினும் நேற்றிரவே ஸ்ருதி தொலைகாட்சியின் வழியாக வண்ணதாசனின் உரை, மற்றும் உங்களது உரை என தொடர்ந்து பார்த்தேன். பத்து நிமிடத்தில் மிகச்சரியான உவமை மூலம் மையத்தை தொட்டுகாட்டி விடைபெறும் உங்களது விஷ்ணுபுரம் விழா உரைகள் ஒரு அற்புதம் ஜெ. மூங்கிலிருந்து கிளம்பும் மின்மினிபூச்சிகள், கொலைசோறு என தொடர்ந்து இது ஒவ்வொரு வருடமும் இது நிகழ்வதை கண்டு வியக்கிறேன்.


வண்ணதாசன் நெகிழ்ந்திருந்ததை காண முடிந்தது. விழா ஏற்பாடு துல்லியம் என நண்பர்கள் பலரும் வியப்பதை கண்டு மகிழ்கிறேன். மிகப்பெரிய இலக்கிய நிகழ்வாக, பெருமைபடும் வண்ணம் இது ஒவ்வொரு வருடமும் வளர்வதும், மேலும் மேலும் புதிய நண்பர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வதும், இந்த நிகழ்ச்சிக்கான மிகப்பெரிய தேவை இங்கிருந்ததையே காட்டுகிறது.


நண்பர்கள் அனைவருக்கும் இனிய நன்றி.


அன்புடன்


டோக்கியோ செந்தில்குமார்


[image error]


அன்புள்ள ஜெ


விழா மிகச்சிறப்பு. பலருடைய பங்களிப்புடன் மிகச்சிறப்பான ஒத்திசைவுடன் நடந்து முடிந்தது. 13  மணிநேரம் உற்சாகமாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதெல்லாம் என் வயதினருக்கு இப்படியெல்லாம் சாத்தியமா என்றே நினைக்கவைத்தது


அதிலும் இலக்கியவினாடிவினா ஒரு பெரியநிகழ்ச்சி. எனக்கு திகிலாக இருந்தது. என் ஆதர்சமான லா.ச.ரா, ஜானகிராமன் பற்றியெல்லாம் இன்றுள்ள பையன்கள் சட் சட் என கேள்விக்குப்பதில் சொல்லி அசத்தியபோது வாயடைந்துபோனேன். இலக்கியம் வாழும் என நினைத்தேன்


ராஜசேகரன்


[image error]


அன்புள்ள ஜெமோ


வாழ்த்துக்கள்.


மகத்தான விழா. மிகச்சிறப்பான ஒருங்கிணைப்பு. உறுதியகாச் சொல்கிறேன். எச்.எஸ்.சிவப்பிரகாஷ் சொன்னதுபோல இதுபோல ஒரு வாசகர் திருவிழா இந்தியாவில் எங்கும் இல்லை. உலகளவில் வாசகர்களே எடுக்கும் விழா எங்கே உள்ளது என்று கேட்டுத்தான் அறியவேண்டும்


அடுத்தாண்டு முதல் ஓர் இந்தியமொழி எழுத்தாளருக்கும் விருது என்று சொன்னார்கள். அது நிகழ்ந்தால் மேலும் சிறப்பு


எஸ்.செந்தில்


 


புகைப்படங்கள் இரண்டாம் நாள்


புகைப்படங்கள் இரண்டாம்நாள்


புகைப்படங்கள் முதல் நாள்


புகைப்படங்கள் முதல்நாள்


 


=======================================


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2016 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.