Jeyamohan's Blog, page 689

November 1, 2022

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, கார்த்திக் புகழேந்தி

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 எழுத்தாளர் மேடையில் வாசகர்களைச் சந்திப்பவர்களில் ஒருவர்  கார்த்திக் புகழேந்தி. இலக்கியவாதி, பதிப்பாளர், நாட்டார் வரலாற்று ஆராய்ச்சியாளர் என செயல்பட்டுவருபவர்.

கார்த்திக் புகழேந்தி தமிழ் விக்கி

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2022 11:31

காந்தாராவின் தெய்வம்

மலை பூத்தபோது வாங்க 

அன்புள்ள ஜெ

காந்தாரா பார்த்தீர்களல்லவா? அதிலுள்ள நாட்டார்வழிபாடு ஒரு உக்கிரமான மனநிலையை உருவாக்குகிறது. நமக்கு எத்தனையோ நாட்டார்த்தெய்வங்கள் உள்ளன. ஏன் சினிமாவில் அவை இடம்பெறுவதில்லை?

சிவக்குமார் ராஜாமணி

***

அன்புள்ள சிவக்குமார்,

காந்தாராவுடன் பலவகையிலும் ஒப்பிடவேண்டிய இரு கதைகள் தூவக்காளி, புழுக்கச்சோறு. அத்தகைய நாட்டாரியல் தெய்வங்கள் பற்றிய பல கதைகளை எழுதியுள்லேன். மலைபூத்த போது தொகுப்பில் உள்ளன.

வெந்து தணிந்தது காடு படத்தின் கருவே நாட்டார்த்தெய்வமான சுடலைமாடனை ஒட்டியதுதான். ஐந்து நெருப்பு நடுவே தவம் செய்யும் சுடலைமாடனின் உக்கிரமான ஆட்டத்தில் தான் அந்தப்படம் எழுதப்பட்ட முதல் வடிவில் தொடங்குகிறது. சுடலைமாடனின் உக்கிரமான தீ முத்துவை தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் மையக்கருவாக திரைக்கதையில் இருந்தது.

அதற்கான ஒரு பாடலும் பாடி பதிவுசெய்யப்பட்டது. முத்தம்பெருமாள் கணியார் அதை பாடியிருந்தார். அதை முன்னரே இந்த தளத்தில் குறிப்பிட்டிருந்தேன் (முத்தம்பெருமாள், நடிகர் சிம்பு)அதற்கான ஆராய்ச்சிகளும் இயக்குநரால் செய்யப்பட்டன. ஆனால் இறுதியில் அது தவிர்க்கப்பட்டது. ‘சாமிப்படம்’ போல் ஆகிவிடும், பகுத்தறிவுள்ள தமிழ்மக்களுக்கு பிடிக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. அந்த ஐயமும் கேள்வியும் எப்போதும் இங்குள்ளது. ஆகவேதான் மொத்த நாட்டார்ப்பண்பாடும் படங்களில் இருந்து நீக்கப்படுகிறது.

அந்த அம்சம் இருந்திருந்தால் படம் தெற்குநாட்டில் மாபெரும் வெற்றி அடைந்திருக்குமென இப்போது மட்டுமல்ல முன்னரும் நான் உறுதியாகவே நம்பினேன். ஆனால் நான் எதையுமே சினிமாவில் வற்புறுத்துவதில்லை.

இப்போது காந்தாராவின் பெருவெற்றிக்குப்பின் தெரியாத தெய்வங்களை எல்லாம் இழுத்துவந்து சினிமாக்களில் நிறைக்கப்போகிறார்கள் என நினைக்கிறேன்.

ஜெ

*

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2022 11:30

October 31, 2022

யோகப்பயிற்சி முகாம்

குருஜி சௌந்தர் நடத்தும் யோகப்பயிற்சி முகாம் சென்ற அக்டோபர் இறுதியில் நடைபெறுவதாக இருந்தது. அது கடும் மழையால் ஒத்திவைக்கப்பட்டு நவம்பர் 4,5.6 தேதிகளில் நடைபெறுகிறது. முதல்வாரம் ஆகையால் சிலர் வர இயலாத நிலை என தெரிவித்தனர். ஆகவே மேலும் சிலருக்கு இடமுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எழுதலாம்

ஜெயமோகன்

jeyamohan.writerpoet@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2022 23:33

சினிமா, நுகர்வோரும் பயில்வோரும்

சில தருணங்களில் நாம் ஏன் எரிச்சல் கொள்கிறோம் என நாமே எண்ணி பின்னர் வியந்துகொள்வதுண்டு. நேற்று (30-10-2022) ஒரே நாளில் இரண்டு முறை எரிச்சல். இரண்டுமே மெல்லிய எரிச்சல்கள்தான். ஆனால் ஒன்று இன்னொன்றை இழுத்துவந்தது.

பொதுவாகச் சந்திப்புகளை எண்ணி எண்ணி ஒப்புக்கொள்வது என் வழக்கம். ஏனென்றால் சென்னையில் நான் எப்போதுமே ஏதோ ஒரு தயாரிப்பாளரின் செலவில் இருக்கிறேன். என் நேரம் அவருக்குரியது. இருந்தாலும் நட்பின் அடிப்படையில் இரண்டு இளம் உதவி இயக்குநர்களைச் சந்தித்தேன்.

ஒருவர் வந்தமர்ந்ததுமே நான் எழுதிய 2.0 படத்தைப் பற்றிப் பேசினார். ‘அந்தப்படம் ஏன் தோல்வியடைஞ்சுதுன்னா…’ என தொடங்கி எனக்கு திரைக்கதை ஆலோசனைகள் சொல்ல ஆரம்பித்தார். நான் என் புன்னகையை தக்கவைத்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஏனென்றால் தமிழகத்தில் எவர் வேண்டுமென்றாலும் திரைக்கதை ஆலோசனை சொல்லலாம். ஒரு சினிமா பார்த்துவிட்டு வெளியே வரும் எந்தப் பாமரனும் உடனடியாகச் சொல்ல ஆரம்பிப்பது அந்த திரைக்கதையில் என்னென்ன செய்திருக்கவேண்டும் என்றுதான். டிக்கெட் எடுத்து படம் பார்க்கும் எவரும் எதுவும் சொல்லலாம் என்பதுதான் என் எண்ணம். ஏனென்றால் இது தொழில். அவர்கள் சொல்லும் கருத்துக்கள் வழியாகவே இங்கே பணம் திரள்கிறது. எந்தக்கருத்தும் நல்லதுதான்.

மேலும் அது மானுட இயல்பு. ஒரு சினிமாவைப் பார்க்கும் எவரும் கூடவே அவர்களும் ஒரு கதையை கற்பனை செய்துகொண்டே இருக்கிறார்கள். அது அவர்களின் கதை என்பதனால் அதுதான் சரியானது, உயர்வானது என்னும் நம்பிக்கையும் அவர்களிடமுண்டு. அதை வைத்துத்தான் அவர்கள் சினிமாவின் கதையை புரிந்துகொள்வார்கள். அதை வைத்துத்தான் சினிமாவின் சுவாரசியத்தை மதிப்பிடுவார்கள். ஆகவே கதை அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்தமாதிரியும் இருக்கவேண்டும், கொஞ்சம் புதியதாகவும் இருக்கவேண்டும். முழுமையாகவே புதியது என்றால் புரியாது.

கவனியுங்கள், உண்மையில் நடந்த நிகழ்ச்சியை கண்கூடாக பார்க்கும்போதே மக்கள் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். ஒரு நிகழ்வில் ‘நீங்க என்ன செஞ்சிருக்கணும்னா…’ என அங்கேயே பேச ஆரம்பிப்பார்கள். ‘ஆக்சுவலி இது அப்டி நடந்திருக்கணும்…’ என அந்த நிகழ்ச்சியையே திருத்தியமைக்க முயல்வார்கள். மனித உள்ளம் செயல்படும் இயல்பு அது. எளிய மக்கள் தங்களின் அவ்வியல்பை தாங்களே பார்க்கும் பார்வையும் இல்லாதவர்கள்.

ஆகவே நான் வழக்கமாக எல்லா ‘திரைக்கதைத் திருத்தங்களை’யும் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருப்பேன். அது அந்த நபரை புரிந்துகொள்வதற்காகத்தான். என் பெருநாவல்களுக்கு அத்தகைய வாசகர்கள் வருவதில்லை. ஏனென்றால் அவற்றை ஐம்பது பக்கம் படிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி கொண்டவர்களுக்கு கொஞ்சம் ‘கூறு’ இருக்கும். ஆனால் அனல்காற்று, இரவு போன்ற ஒப்புநோக்க எளிய நாவல்களுக்கு ‘கிளைமாக்ஸை இப்டி வைச்சிருந்திருக்கலாம் சார்’ வகை வாசகர்கள் வந்துவிடுவதுண்டு. அவர்களை வேடிக்கை பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்கும்.

இந்த இளைஞர் உற்சாகமே உருவானவராக இருந்தார். அவருடைய தரப்பு இதுதான். 2.0 படத்தில் வில்லன் சரியாக எழுதப்படவில்லை. வில்லன் என்றால் கொடியவன், தீங்கிழைப்பவன், அச்சம் அளிப்பவன். அப்படி இருந்தால்தான் அவனை எதிர்க்கும் ஹீரோ தீவிரமானவனாக இருக்க முடியும். உலகத்தையே அழிக்கும் கொடுமையை வில்லன் அவிழ்த்துவிட்டிருக்கவேண்டும். “தவற விட்டிட்டீங்க சார்” என்றார். “சரி, சங்கரிடம் சொல்கிறேன்” என நான் பணிவாக பதிலளித்தேன். “இப்ப பொன்னியின் செல்வனிலேகூட வில்லன் சரியில்லை…பழுவேட்டையர் (அப்படித்தான் சொன்னார்) கெட்டவனா காட்டப்படலை” என்றார். “சரிங்க, நோட் பண்றேன்” என்றேன்.

“சுஜாதா இல்லாமத்தான் 2.0 அப்டி தடுமாறிச்சுன்னு சொல்றாங்க. சுஜாதான்னா அப்டி எழுதியிருக்க மாட்டார். சுஜாதாவோ பாலகுமாரனோ இல்லாம சங்கர் குழம்பிப்போயிருக்கார்னு தெரியுது சார்”

அப்படியே பேச்சு சென்றது. நடுவே அவர் ‘உங்க படங்கள்லாம் தோல்வி அடையறது இதனாலேதான் சார்’ என்றார்.

நான் “எந்தப்படம் தோல்வி?” என்று கேட்டேன்.

“2.0 தோல்வின்னுதான் சொன்னாங்க…” என்றார்

“யாரு?”

“மீடியாவிலே பாத்தேன்… 2.0 தோல்வி. அதனாலே நீங்க சங்கர் வாழ்க்கையை அழிச்சிட்டதாக்கூட பலபேர் ஃபேஸ்புக்லே எழுதினாங்க. அடுத்தாப்ல மணி ரத்னம் வாழ்க்கையை அழிக்கப்போறீங்கன்னுகூட பலபேர் எழுதினாங்க…வேணுமானா காட்டுறேன்…”

“இப்ப பொன்னியின் செல்வன் வந்து கலெக்‌ஷன் ரிப்போர்ட் வந்திட்டிருக்கு…. ஆனா இப்பகூட 2.0 குளோபல் வசூலை பொன்னியின் செல்வன் எட்டலை. அதுக்கு இன்னும் ஒருமாசம் வரை ஆகலாம். பொன்னியின்செல்வன் இரண்டாவது இடத்திலேயே இருக்கு. அதை பாத்திருப்பீங்கள்ல?”

“ஆமா, அதை எழுதியிருக்காங்க… நெறைய எடத்திலே பாத்தேன்”

“தமிழ் சினிமாவோட நூறுவருசத்து வரலாற்றிலேயே அதிகமா வசூல் பண்ணின 2.0 படம் எப்டி ஃப்ளாப் படம் ஆகும்? யோசிச்சுப் பாத்தீங்களா?”

“அது, வந்து, அப்டித்தான் எழுதறாங்க…”

“சரி, அவனுங்க சாமானிய ஃபேஸ்புக் கூட்டம். நீங்க இண்டஸ்ட்ரிக்குள்ள இருக்கிறவர்ல?”

“ஆமா சார்” என்றார்.

“சுஜாதா வசனம்   எழுதின எந்தப் படமாச்சும் 2.0 வசூலிலே பாதியாவது வசூலிச்சிருக்கா? சரி, மூணில் ஒரு பங்காவது வசூலிச்சிருக்கா? விசாரிச்சு பாருங்க….”

அவர் பேசாமலிருந்தார்.

”சுஜாதா கதை எழுதின எந்தப்படம் ஓடின படம்? அவரே தயாரிச்ச மீடியா டிரீம்ஸ் படங்களிலே எது ஓடின படம்?”

அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அதன்பிறகு “ஆனா ஃப்ளாப்னுதான் எல்லாரும் சொல்றாங்க” என மீண்டும் ஆரம்பித்தார். “2.0 லே வில்லன சொதப்பினதனாலேதான்…”

நான் அங்கேதான் எரிச்சலடைந்திருக்கவேண்டும். “அந்தப்படம் அவ்ளவு பெரிய வசூலை அடைஞ்சதுக்கு காரணம் அதோட வசூலிலே பாதிக்கும் மேலே தமிழகத்துக்கு வெளியிலே கிடைச்சதுங்கிறதுதான். இந்தி பெல்டிலே அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி. அதுக்குக் காரணம் அக்ஷய்குமார். அவர் அப்ப இந்தியிலே உச்சத்திலே இருந்தார். இல்லியா?”

“ஆமா சார்” என்றார்

“அக்ஷய்குமார் கதாபாத்திரத்தை ஒரு சாதாரண வில்லனா ஆக்கியிருந்தா இந்தி பெல்ட்லே ஓடியிருக்குமா?”

அவர் திகைத்தார்.

“அதிலே அக்ஷய்குமார் கதைநாயகனுக்கு எதிர்க்கதைநாயகன். கதைநாயகனே கடைசியிலே எதிர்கதைநாயகன் சொல்றதுதான் சரி, அவரு செஞ்சதுதான் சரின்னு சொல்றார்… அதனாலேதான் அந்தப்படம் அப்டி இந்தி பெல்டிலே ஓடிச்சு…உலகமெங்கும் பெரிய வசூல் வந்தது… வெறும் வில்லனா அவரை காட்டியிருந்தா அது நடந்திருக்காது. இல்லியா?”

“ஆமா”

“அப்ப, அதை யோசிச்சுத்தானே சங்கரோ நானோ எழுதியிருப்போம்? அந்த அளவுக்கு யோசிக்கிற திறமைகூட எங்களுக்கு இருக்காதுன்னு நினைக்கிறீங்களா? இங்க ஒவ்வொரு சாமானியனும் நினைக்கிறது எங்க மண்டையிலே உதிக்காதுன்னு சொல்ல வரீங்களா?”

அவர் வாயை மட்டும் திறந்து மூடினார்.

“ஒரு மேஜர் ஹீரோ படத்திலே ஹீரோவை எதிர்க்கிறார். இந்தப்பக்க ஆடியன்ஸுக்கு அவர் வில்லனா தெரியறார், அந்தப்பக்க ஆடியன்ஸுக்கு அவரே ஹீரோவா தெரியறார்னா, அந்த திரைக்கதையை சும்மா உக்காந்து காலாட்டிட்டு எழுதியிருப்பாங்களா? அதுக்கு வேலை செஞ்சிருக்க மாட்டாங்களா? சரி, நீங்க எழுதமுடியுமா அப்டி?”

அவர் “நான் அப்டிச் சொல்ல வரலை” என்றார்

“ஒரு சின்ன சினிமா முழுத்திரைக்கதையும் எழுதி எடுக்கப்படலாம். பெரிய ஹீரோக்களோட கமர்ஷியல் சினிமான்னா அவரோட இமேஜ் முக்கியம். அதிலே நடிக்கிற ஒவ்வொருத்தரோட இமேஜும் முக்கியம். அதுக்கு ஏற்றபடித்தான் திரைக்கதையை எழுதுவோம். சிலசமயம் திரைக்கதை முடிஞ்சு நடிகர்கள் உள்ள வர்ரப்ப அவங்களுக்கு ஏற்ப திரைக்கதை மாறும். படப்பிடிப்பிலே நடிப்புக்கு ஏற்ப திரைக்கதை மாறும். கடைசியிலே எடிட்டிங் பண்றப்ப திரைக்கதை மாறும். எழுதறப்ப அற்புதமா இருக்கிற சில இடங்கள் எடிட்டிங் டேபிளிலே தப்பா இருக்கும். அத தூக்கி போட்டிருவாங்க. கதைக்கு அது முக்கியமா இருந்தாலும் நடிப்பு தப்பா இருந்தா சினிமாவுக்கு சுமைதான்… கடைசியிலே நீங்க பாக்கிற திரைக்கதைங்கிறது இவ்ளவுபேர் கை பட்டு, ஃபில்டர் ஆகி வந்து சேருற வடிவம்…சினிமாவிலே இருக்கிற நீங்க இதையாவது தெரிஞ்சுகிடணும்ல?”

“ஆமா சார்”

“திரைக்கதையிலே ரெண்டு வகை இருக்கு. சீரான ஓட்டமா எல்லாத்தையும் தொட்டுத்தொட்டுச் சொல்லிட்டு போற திரைக்கதை. அதான் பழைய பாணி. அங்கங்க புள்ளிவைச்சுக்கிட்டே போற திரைக்கதைதான் புதிய பாணி. அதையெல்லாம் இணைக்கவேண்டியவர் ரசிகர்தான். திரைக்கதையிலே அது இல்லை இது இல்லைன்னு அங்க ரசிகர் சொல்லக்கூடாது. இணைச்சு புரிஞ்சுகிடணும்… பெரிய கதைகளை சினிமாவா ஆக்குறப்ப ரெண்டாவது பாணிதான் சரிவரும்… இடைவெளிகளிலேதான் உண்மையான கதையே இருக்கும்…. உலகம் முழுக்க அப்டித்தான் நாவல்கள் சினிமாவா ஆகியிருக்கு…”

கொஞ்சநேரம் அமைதி.

“நான் வர்ரேன் சார்” என்றார்

“சரி” என்றேன்

அவர் கிளம்பும்போது “சரி, நான் ஹார்ஷா சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… சும்மா யோசிச்சுப்பாருங்க. அதான்” என சொல்லி அனுப்பினேன்.

ஏன் எரிச்சல் கொண்டோம் என என்னையே வினவிக்கொண்டு ஒரு டீ போட்டு குடித்தேன். அடுத்த நண்பர் வந்துவிட்டார். இவரும் இளம் உதவி இயக்குநர்.

அறிமுகம் முடிந்ததுமே “பொன்னியின் செல்வன் பாத்தேன் சார். நல்லா இருந்தது” என்றார்.

நான் “சரி” என்றேன்

உடனே அவர் ”ஆனா” என ஆரம்பித்து அதில் கண்ட  ‘குறைகளை’ சொல்ல ஆரம்பித்தார். அதுதான் இங்கே பொதுவான ‘டெம்ப்ளேட்’ நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டு உடனே ஆனா என ஆரம்பிப்பது

அவர் சொன்னார். பாட்டு தேவையில்லை, கிறிஸ்டோபர் நோலன் படம் போல பல உள்ளடுக்குகளாக படத்தை அமைத்திருக்கலாம்…

முந்தைய எரிச்சலை உடனே மீட்டுக்கொண்டேன்.

“மத்தபடி அதிலே நீங்க கத்துக்க ஒண்ணுமே இல்லியா?” என்றேன்

”அதாவது, சில விஷயங்களைச் சரியா பண்ணியிருக்கலாமேன்னுதான்…”

சாமானிய ரசிகர்கள் ’நுகர்வோர் மனநிலை’ கொண்டவர்கள். அது சினிமாவில் எல்லாருக்குமே தெரியும். அதை எதிர்கொள்ளவும் தெரியும். நுகர்வோர் மனநிலை என்பது மூன்று அடிப்படைகள் கொண்டது.

அ. இதை நான் வாங்கியிருக்கிறேன், ஆகவே இது நான் எதிர்பார்த்தபடி இருக்கவேண்டும் என்னும் நிபந்தனை. அவர்கள் ஏற்கனவே அது எப்படி இருக்கவேண்டும் என எண்ணியிருந்தார்களோ அப்படி அது இருந்தாலொழிய நிறைவடைய மாட்டார்கள். எவ்வகையிலும் ஒரு புதிய விஷயம் நோக்கி நகர மாட்டார்கள். அதற்கான முயற்சியே இருக்காது.

’நுகர்வோரே தீர்மானிப்பவர்’ என்னும் இந்த மனநிலை உண்மையில் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சேர்ந்து உருவாக்கி நுகர்வோரிடம் நிறுவியிருப்பது. இந்த மனநிலை இருந்தால் நுகர்வோரின் தேவையை நிறைவுசெய்ய வேண்டியதில்லை, அகங்காரத்தை நிறைவுசெய்தால் போதும். அதை விளம்பரம் வழியாக எளிதில் செய்துவிடலாம்.

ஆ. இன்னும் தேவை என்னும் மனநிலை. நுகர்வோர் தன் பணத்திற்கான மதிப்பு கிடைக்கவேண்டும் என நினைப்பார்கள். ஆகவே தனக்கு அளிக்கப்பட்டதைவிட இன்னும் மேலான ஒன்றுக்கு தனக்கு தகுதி உள்ளது என நம்புவார்கள். ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என எண்ணி, கண்காணித்தபடியும் கணக்குபோட்டபடியும் இருப்பார்கள். இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்றே எந்த ஒன்றைப்பற்றியும் சொல்வார்கள்

உண்மையில் இந்த மனநிலையும் விற்பனையாளர்கள் உருவாக்குவதே. இந்த மனநிலையால்தான் நுகர்வோர் ஒரு பொருளை வாங்கியதுமே அதிருப்தி அடைகிறார். அடுத்ததை வாங்குவதைப்பற்றி கனவு காண்கிறார். ‘இதோ இன்னும் பெரிய, இன்னும் புதிய’ என ஒன்றை முன்வைத்தால் அதை வாங்கிவிடுவார். ஆகவே இங்கே எல்லா டூத்பேஸ்டும் ’புதிய’ டூத்பேஸ்ட்தான்.

இ. நுகர்வோர் எப்போதுமே ‘எல்லாரும் வாங்கும்’ பொருளையே தானும் வாங்குவார். பொதுப்போக்கிலேயே தானும் செல்வார். ஆனால் தனக்கு தனியான ரசனையும் தேவையும் இருப்பதாகவும் எண்ணிக்கொள்வார்.

இதையும் விற்பனையாளர்களே உருவாக்குகிறார்கள். மிகச்சிறிய கூடுதல் வசதிகளை அல்லது தனித்தன்மைகளை அளிக்கிறோம் என்று சொல்லி ஒரே பொருளையே திரும்பத் திரும்ப விற்க முடியும். விளம்பரங்களில் எப்போதுமே வாங்குபவரை பிடிவாதமான தனித்தன்மை கொண்டவராகவே காட்டுவார்கள். எல்லா ’புதிய’ பொருளும் முன்பு இல்லாத ஒரு விசேஷத்தன்மை கொண்டிருக்கும். டூத்பிரஷின் அடியில் நாக்கை உரச வசதி கொடுத்தால் அது புதிய ‘மேம்படுத்தப்பட்ட’ டூத் பிரஷ்.

இந்த மூன்று மனநிலைகளுமே சினிமா ரசிகர்களிடமும் உண்டு. ஆகவே அவர்கள் எந்த சினிமாவும் அவர்கள் ஏற்கனவே நினைத்ததுபோல் இருக்கவேண்டுமென்றே எண்ணுவார்கள். ஒரு புதிய விஷயம் அளிக்கப்பட்டால் அதை நோக்கி நகர எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள். சினிமா ரசிகர்களின் எல்லா விமர்சனங்களிலும் உள்ளது தன் ரசனையும், தன் அறிவுமே எல்லாவற்றையும் விட மேலானது என்னும் நம்பிக்கைதான். ஆகவே மணி ரத்னத்துக்கு ஷாட் வைக்க ஆலோசனை சொல்ல ரசிகன் தயங்குவதில்லை.

எந்த சினிமாவை ரசித்தாலும் உடனே அதில் ஒரு சில குறைகளைத்தான் சொல்லவேண்டும், அதுதான் சரியான மனநிலை என நம் சினிமா நுகர்வோர் பயின்றிருக்கிறார்கள். குறைகாணும் மனநிலையிலேயே நீடிக்கிறார்கள். ’நல்லா இருக்கு, ஆனா…’ இதுதான் வழக்கமான வசனம். அவர்கள் தங்களுக்கான தனி ரசனையை நாடுவதில்லை. எவரும் ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ தேடிப்போய் பார்ப்பதில்லை. அது ஏன் பிடிக்கிறது என எழுதுவதும் இல்லை. அவர்கள் பீஸ்ட் அல்லது விக்ரம் அல்லது பொன்னியின் செல்வன்தான் பார்ப்பார்கள். ஆனால் நாலைந்து குறைகளைச் சொல்லி தாங்கள் வேறு என காட்டவும் முயல்வார்கள்.

சினிமா நுகர்வோர் அப்படி இருக்கட்டும். அப்படி இருப்பதே வணிகத்துக்கு நல்லது. அவர்களைக் கையாள சினிமாத் தொழிலில் இருப்பவர்களுக்கும் தெரியும். ஆனால் ஒரு சினிமா விமர்சகர் இந்த நுகர்வோர் மனநிலைகள் கொண்டிருப்பார் என்றால் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை. சினிமாவில் இருக்கும் ஒருவர் இந்த நுகர்வோர் மனநிலையில் இருந்தால் அவர் சினிமாவை கற்றுக்கொள்ளவே போவதில்லை.

நான் அந்த இளம் நண்பரிடம் சொன்னேன். ”நான் பல முக்கியமான இயக்குநர்களிடம் பேசினேன். அவர்கள் பொன்னியின் செல்வனை பலமுறை பார்த்திருக்கிறார்கள். ஒரு மாஸ்டர் எடுத்த படத்தை கூர்மையாக பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் கற்க ஒன்றுகூட இல்லையா?”

பொன்னியின் செல்வன் படத்தின் ஷாட்களை வரைந்து பைண்ட் செய்து வைத்திருந்தார் இயக்குநர் ஒருவர். நான் அவரிடம் கேட்டேன். ‘இதையே ஆங்கிலப் படங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள முடியாதா?”

அவர் சொன்னார் “முடியாது. ஏனென்றால் நமக்கு அந்தக் கலாச்சாரத்தின் உள்ளடுக்குகளும் நுட்பங்களும் தெரியாது… சும்மா பார்க்கலாம். இந்தவகையான ஒரு உள்ளூர் படத்தில் ஒரு மாஸ்டர் என்ன செய்கிறார் என்பது மட்டும்தான் கற்றுக்கொள்ள ஒரே வழி”

சாதனையாளர் என ஏற்கனவே பெயர் வாங்கியவர்கள் ஷாட் ஷாட்டாக பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். ஒன்றுமே தெரியாதவர்கள், இன்னும் கற்க ஆரம்பிக்காதவர்கள் அதீத நம்பிக்கையுடன்  ‘இப்டி செஞ்சிருக்கலாம் மணி ரத்னம், ப்ச’ என பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இளைஞனரிடம் நான் சொன்னேன். “பாடல்கள் வேண்டாம் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் படத்தில் சோழநாட்டு மக்களின் வாழ்க்கையை வேறெங்கும் காட்ட இடமில்லை. பொன்னிநதி பாக்கணுமே என்னும் ஒரு பாட்டில் மட்டும்தான் வாழ்க்கை வருகிறது. அரசிகளின் அந்தப்புர வாழ்க்கை காட்டப்படுவது ராட்சச மாமனே பாட்டில் மட்டும்தான். போர்க்களத்தின் அமலையாட்டம் காட்டப்படுவது சோழா சோழா பாட்டில் மட்டும்தான். அதையெல்லாம் மேலைநாட்டுச் சினிமாவில் மாண்டேஜ் காட்சியாகக் காட்டுவார்கள். பொன்னியின் செல்வனிலும் மாண்டேஜ்தான் உள்ளது.  ஆனால் மேலைநாட்டு சினிமாவில் மாண்டேஜுக்கு வெறும் இசை போதும். இங்கே அதற்கு பாட்டு தேவை

ஏன் அப்படி? மேலைநாட்டு இசை கருவியிசையாலேயே நிகழ்த்தப்படுவதாக மாறி முந்நூறாண்டுகள் ஆகிறது. பியானோதான் அங்கே இசையின் அடிப்படையே. நமக்கு இன்றுவரை கருவியிசை என்பது வாய்ப்பாட்டின் பக்கவாத்தியம்தான். நம் மனம் சொற்களாலான இசையையே பழகியிருப்பது. இங்கே வெறும் கருவியிசையை பத்துநிமிடம் இசைரசனைக்காகக் கேட்பவர் மிகமிகமிக அரிய சிலர் மட்டுமே. தப்போ சரியோ இது நம் பண்பாடு. ஆகவேதான் மாண்டேஜுக்கு பாட்டு தேவையாகிறது. குந்தவை வந்தியத்தேவனை சந்திக்கும்போதுகூட பின்னணியில் பாடல்தான் ஒலிக்கிறது. நம் நாடகம் கூத்து எல்லாமே இப்படித்தான் இருந்துள்ளன. இதற்கு நமக்கு ஐநூறாண்டுக்கால மரபு உள்ளது. சினிமா என்பது பதிவுசெய்யப்பட்ட நிகழ்த்துகலை. அது தன் நிகழ்த்துகலையின் மரபில் இருந்து முற்றிலும் விலக முடியாது

கிறிஸ்டோபர் நோலன் மாதிரி படம் எடுக்கலாமென சொல்லலாம். இங்கே பொன்னியின் செல்வனிலுள்ள எளிய கவித்துவமே பெரும்பாலானவர்களுக்கு பிடிகிடைக்கவில்லை. நோலன் படங்கள் சினிமாக்கலையில் தேறிய, மிகச்சிறந்த விமர்சகர்கள் உடைய மேலைச்சூழலுக்காக எடுக்கப்படுபவை. இங்கே நோலன் படங்களை ரசிப்பதாகச் சொல்பவர்கள் அங்கிருந்து வரும் விமர்சனங்கள், ரசனைக்குறிப்புகள் வழியாகவே அவற்றை புரிந்துகொண்டு அதன்பின் ரசிக்கிறார்கள். ஆனால் கதைக்குறிப்புகள் எழுதுவார்களே ஒழிய ஒரு நல்ல விமர்சனக்கட்டுரை எழுத அவர்களால் முடியாது. இங்கே நோலன் படங்களின் பத்தில் ஒருபங்கு சிக்கலுடன் ஒரு திரைக்கதை எழுதப்பட்டாலும் அதே நபர்கள் கதை புரியவில்லை என்பார்கள்.”

நான் அந்த இளைஞரிடம் பொன்னியின் செல்வன் படத்தில் இயக்குநர்கள் முக்கியமெனக் கருதிய பல ஷாட்கள் பற்றி கேட்டேன். ”சதுரங்க ஷாட் எனப்படும் ஒன்று உள்ளது, எங்கே?”என்றேன். அவருக்கு தெரியவில்லை. ”நந்தினியும் குந்தவையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. அது ராணி ராணியை சந்திக்கும் களம்” என்று சுட்டிக்காட்டினேன்.

”புலி வாய்திறந்து ஈழத்தை விழுங்கப்போகும் காட்சியையாவது கவனித்தீர்களா?” என்றேன். நான் சொன்னபின் நினைவுகூர்ந்து ”ஆம்” என்றார். ஆனால் அதுவே இரண்டு இடங்களில் இரண்டு வகைகளில் உள்ளது என்றேன். அவர் அதை கவனிக்கவில்லை. ’ஹெவென்லி ஷாட்’ அல்லது ’டிவைன் ஷாட்’ என பொதுவாகச் சொல்லப்படும் ஒன்று உண்டு. ஒரு கதாபாத்திரம் தெய்வத்தன்மை கொண்டது, அல்லது அப்படி ஆகப்போகிறது என்பதை காட்டும் ஷாட் அது. அக்கதாபாத்திரம் தோன்றும்போதே அப்படித்தான் காட்டப்படும். பொன்னியின்செல்வனில் அது எங்கே இருக்கிறது கவனித்தீர்களா என்றேன். இல்லை என்றார். கவனியுங்கள் என்றேன்.

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனால் குந்தவையின் கணவனாகவே அனுப்பப்படுகிறான். அதற்குத்தான் உடைவாள் கொடுக்கிறான். அதுதான் கதையின் மையச்சரடே, அது நாவலில் இல்லை. நாவல் வாசித்தவர்கள்கூட அதை கவனிக்கவில்லை. அவ்வாறு செறிவாக்கப்பட்ட பல விஷயங்கள் உள்ளன. பல விஷயங்கள் தொட்டுத் தொட்டுச்செல்லப்படுகின்றன. ரசிகர்கள் தாவித்தாவி உடன் வந்தாகவேண்டும். அதற்காக ரசிகனை பயிற்றுவிப்பதே விமர்சகனின் முதல் வேலை. ஆனால் சில்லறை குறைகளை இட்டுகட்டிச் சுட்டிக்காட்டி ‘ஆளாக’த்தான் பெரும்பாலானவர்கள் முயன்றனர்.

“இந்தியாவில் கலைச்சினிமா தனியாக உள்ளது. அதில் பல மாஸ்டர்கள் உள்ளனர். பொதுப்போக்கு சினிமாவில் மாஸ்டர்கள் என சிலரே உள்ளனர். முதலிடம் மணிதான். அதை சொல்லாத எந்த இயக்குநரும் இந்தியாவில் இல்லை. முதலில் நாலைந்துமுறை படத்தைப் பார்த்து அதன் தொழில்நுட்பத்தை புரிந்துகொள்ள முயலுங்கள்” என்றேன்.

“ஒரு சினிமாவை புரிந்துகொள்வது சாதாரணமானதல்ல. கருத்து தெரிவிப்பது எளிது. விமர்சனம் செய்வதற்கு கொஞ்சம் விஷயம் தெரிந்திருக்கவேண்டும். உதாரணமாக, George W. M. Reynolds ஆங்கிலத்தில் தொடக்ககால நாவல்களை எழுதியவர். அவர் எழுதிய லண்டன் அரண்மனை ரகசியங்கள், லண்டன் ரகசியங்கள் என்னும் நாவல்வரிசை  மிகப்பிரபலம். அவருடைய நாவல்களின் செல்வாக்கு உலகமெங்கும் சரித்திரநாவல்களை எழுதியவர்களிடம் உண்டு.

ரெய்னால்ட்ஸின் நாவல்களில் அரண்மனைகளில் ஏராளமான சுரங்கவழிகள், நிலவறைகள் உண்டு. கதையில் பாதி அங்கேதான் நடக்கும். அவை அந்த அரண்மனையின் ஆழங்கள். அந்த அரண்மனையின் ’சப்கான்ஷியஸ்’ போல. பின்னர் எழுதியவர்களில் இந்த சுரங்கவழிகள் என்பவை ஒருவகை உருவகங்களாகவே பதிந்துவிட்டன. அவர்களெல்லாருமே சுரங்கப்பாதைகளைப் பற்றி நிறைய எழுதினார்கள். இன்றுவரை இலக்கியத்தில் சுரங்கப்பாதை என்பது ஒரு பெரிய உருவகம். உலகமெங்கும்.

இதை அறிந்த ஒருவர் கல்கியின் நாவலில் ஏன் சுரங்கப்பாதை அந்த அளவுக்கு முக்கியத்துவம் வகிக்கிறது என உணர்ந்துகொள்ள முடியும். வாசகன் உணரவேண்டியதில்லை, ஆனால் விமர்சகன் அறிந்திருக்கவேண்டும். அவ்வாறு அறிந்த ஒரு மலையாள விமர்சகர் பொன்னியின் செல்வன் சினிமா விமர்சனத்தில் reynoldsian tunnel என எழுதுகிறார், அவருடைய வாசகர்களுக்கும் அது புரியுமென நினைக்கிறார். இங்கே ஒரு விமர்சகர் ’அரண்மனைக்குள் அவ்வளவு பெரிய சுரங்கப்பாதை இருக்குமா? ஹெஹெஹெ’ என எழுதுகிறார். இதுதான் வேறுபாடு” என்றேன்.

“குறைசொல்லக்கூடாது என்று சொல்லவில்லை. நீங்கள் சினிமா எடுக்க எண்ணுபவர் என்றால் கொஞ்சம் கற்கவும் முயலுங்கள். சினிமாவை முன்னோடிகளிடமிருந்து கற்பதில் உங்கள் கௌரவம் ஒன்றும் பெரிதாகக் குறைந்துவிடாது. சினிமாவின் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளுங்கள்’ என்றேன்.

அவர் கிளம்பிப்போனபின் சட்டென்று ஒரு சோர்வை அடைந்தேன். சலிப்பு என்றும் சொல்லலாம். இதேபோல உதாசீனமான புரிதல்கள் தத்துவத்தில் எழுந்தால் அதை விளக்குவதில் எனக்கு பெரிய அளவில் சோர்வோ சலிப்போ ஏற்படுவதில்லை. சினிமா என்பது என் பார்வையில் ஒரு தொழில், ஆகவே உலகியல். அதனால் வரும் சலிப்பு என நினைக்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2022 11:35

சினிமா, நுகர்வோரும் பயில்வோரும்

சில தருணங்களில் நாம் ஏன் எரிச்சல் கொள்கிறோம் என நாமே எண்ணி பின்னர் வியந்துகொள்வதுண்டு. நேற்று (30-10-2022) ஒரே நாளில் இரண்டு முறை எரிச்சல். இரண்டுமே மெல்லிய எரிச்சல்கள்தான். ஆனால் ஒன்று இன்னொன்றை இழுத்துவந்தது.

பொதுவாகச் சந்திப்புகளை எண்ணி எண்ணி ஒப்புக்கொள்வது என் வழக்கம். ஏனென்றால் சென்னையில் நான் எப்போதுமே ஏதோ ஒரு தயாரிப்பாளரின் செலவில் இருக்கிறேன். என் நேரம் அவருக்குரியது. இருந்தாலும் நட்பின் அடிப்படையில் இரண்டு இளம் உதவி இயக்குநர்களைச் சந்தித்தேன்.

ஒருவர் வந்தமர்ந்ததுமே நான் எழுதிய 2.0 படத்தைப் பற்றிப் பேசினார். ‘அந்தப்படம் ஏன் தோல்வியடைஞ்சுதுன்னா…’ என தொடங்கி எனக்கு திரைக்கதை ஆலோசனைகள் சொல்ல ஆரம்பித்தார். நான் என் புன்னகையை தக்கவைத்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஏனென்றால் தமிழகத்தில் எவர் வேண்டுமென்றாலும் திரைக்கதை ஆலோசனை சொல்லலாம். ஒரு சினிமா பார்த்துவிட்டு வெளியே வரும் எந்தப் பாமரனும் உடனடியாகச் சொல்ல ஆரம்பிப்பது அந்த திரைக்கதையில் என்னென்ன செய்திருக்கவேண்டும் என்றுதான். டிக்கெட் எடுத்து படம் பார்க்கும் எவரும் எதுவும் சொல்லலாம் என்பதுதான் என் எண்ணம். ஏனென்றால் இது தொழில். அவர்கள் சொல்லும் கருத்துக்கள் வழியாகவே இங்கே பணம் திரள்கிறது. எந்தக்கருத்தும் நல்லதுதான்.

மேலும் அது மானுட இயல்பு. ஒரு சினிமாவைப் பார்க்கும் எவரும் கூடவே அவர்களும் ஒரு கதையை கற்பனை செய்துகொண்டே இருக்கிறார்கள். அது அவர்களின் கதை என்பதனால் அதுதான் சரியானது, உயர்வானது என்னும் நம்பிக்கையும் அவர்களிடமுண்டு. அதை வைத்துத்தான் அவர்கள் சினிமாவின் கதையை புரிந்துகொள்வார்கள். அதை வைத்துத்தான் சினிமாவின் சுவாரசியத்தை மதிப்பிடுவார்கள். ஆகவே கதை அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்தமாதிரியும் இருக்கவேண்டும், கொஞ்சம் புதியதாகவும் இருக்கவேண்டும். முழுமையாகவே புதியது என்றால் புரியாது.

கவனியுங்கள், உண்மையில் நடந்த நிகழ்ச்சியை கண்கூடாக பார்க்கும்போதே மக்கள் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள்.ஒரு நிகழ்வில் ‘நீங்க என்ன செஞ்சிருக்கணும்னா…’ என அங்கேயே பேச ஆரம்பிப்பார்கள். ‘ஆக்சுவலி இது அப்டி நடந்திருக்கணும்….’ என அந்த நிகழ்ச்சியையே திருத்தியமைக்க முயல்வார்கள். மனித உள்ளம் செயல்படும் இயல்பு அது. எளிய மக்கள் தங்களின் அவ்வியல்பை தாங்களே பார்க்கும் பார்வையும் இல்லாதவர்கள்.

ஆகவே நான் வழக்கமாக எல்லா ‘திரைக்கதைத் திருத்தங்களை’யும் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருப்பேன். அது அந்த நபரை புரிந்துகொள்வதற்காகத்தான். என் பெருநாவல்களுக்கு அத்தகைய வாசகர்கள் வருவதில்லை. ஏனென்றால் அவற்றை ஐம்பது பக்கம் படிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி கொண்டவர்களுக்கு கொஞ்சம் ‘கூறு’ இருக்கும். ஆனால் அனல்காற்று, இரவு போன்ற ஒப்புநோக்க எளிய நாவல்களுக்கு ‘கிளைமாக்ஸை இப்டி வைச்சிருந்திருக்கலாம் சார்’ வகை வாசகர்கள் வந்துவிடுவதுண்டு. அவர்களை வேடிக்கை பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்கும்.

இந்த இளைஞர் உற்சாகமே உருவானவராக இருந்தார். அவருடைய தரப்பு இதுதான். 2.0 படத்தில் வில்லன் சரியாக எழுதப்படவில்லை. வில்லன் என்றால் கொடியவன், தீங்கிழைப்பவன், அச்சம் அளிப்பவன். அப்படி இருந்தால்தான் அவனை எதிர்க்கும் ஹீரோ தீவிரமானவனாக இருக்க முடியும்.உலகத்தையே அழிக்கும் கொடுமையை வில்லன் அவிழ்த்துவிட்டிருக்கவேண்டும். ‘தவற விட்டிட்டீங்க சார்’ என்றார். ‘சரி, சங்கரிடம் சொல்கிறேன்’ என நான் பணிவாக பதிலளித்தேன். “இப்ப பொன்னியின் செல்வனிலேகூட வில்லன் சரியில்லை…பழுவேட்டையர் (அப்படித்தான் சொன்னார்) கெட்டவனா காட்டப்படலை’ என்றார். ‘சரிங்க, நோட் பண்றேன்’ என்றேன்.

“சுஜாதா இல்லாமத்தான் 2.0 அப்டி தடுமாறிச்சுன்னு சொல்றாங்க. சுஜாதான்னா அப்டி எழுதியிருக்க மாட்டார். சுஜாதாவோ பாலகுமாரனோ இல்லாம சங்கர் குழம்பிப்போயிருக்கார்னு தெரியுது சார்”

அப்படியே பேச்சு சென்றது. நடுவே அவர் ‘உங்க படங்கள்லாம் தோல்வி அடையறது இதனாலேதான் சார்’ என்றார்.

நான் ‘எந்தப்படம் தோல்வி?’ என்று கேட்டேன்.

“2.0 தோல்வின்னுதான் சொன்னாங்க…” என்றார்

“யாரு?”

“மீடியாவிலே பாத்தேன்… 2.0 தோல்வி. அதனாலே நீங்க சங்கர் வாழ்க்கையை அழிச்சிட்டதாக்கூட பலபேர் ஃபேஸ்புக்லே எழுதினாங்க. அடுத்தாப்ல மணி ரத்னம் வாழ்க்கையை அழிக்கப்போறீங்கன்னுகூட பலபேர் எழுதினாங்க…வேணுமானா காட்டுறேன்…”

“இப்ப பொன்னியின் செல்வன் வந்து கலெக்‌ஷன் ரிப்போர்ட் வந்திட்டிருக்கு…. ஆனா இப்பகூட 2.0 குளோபல் வசூலை பொன்னியின் செல்வன் எட்டலை. அதுக்கு இன்னும் ஒருமாசம் வரை ஆகலாம். பொன்னியின்செல்வன் இரண்டாவது இடத்திலேயே இருக்கு. அதை பாத்திருப்பீங்கள்ல?”

“ஆமா, அதை எழுதியிருக்காங்க… நெறைய எடத்திலே பாத்தேன்”

“தமிழ் சினிமாவோட நூறுவருசத்து வரலாற்றிலேயே அதிகமா வசூல் பண்ணின 2.0 படம் எப்டி ஃப்ளாப் படம் ஆகும்? யோசிச்சுப் பாத்தீங்களா?”

“அது, வந்து, அப்டித்தான் எழுதறாங்க…”

“சரி, அவனுங்க சாமானிய ஃபேஸ்புக் கூட்டம். நீங்க இண்டஸ்ட்ரிக்குள்ள இருக்கிறவர்ல?”

“ஆமா சார்” என்றார்.

“சுஜாதா வசனம்   எழுதின எந்தப் படமாச்சும் 2.0 வசூலிலே பாதியாவது வசூலிச்சிருக்கா? சரி ,மூணில் ஒரு பங்காவது வசூலிச்சிருக்கா? விசாரிச்சு பாருங்க….”

அவர் பேசாமலிருந்தார்.

”சுஜாதா கதை எழுதின எந்தப்படம் ஓடின படம்? அவரே தயாரிச்ச மீடியா டிரீம்ஸ் படங்களிலே எது ஓடின படம்?”

அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அதன்பிறகு “ஆனா ஃப்ளாப்னுதான் எல்லாரும் சொல்றாங்க” என மீண்டும் ஆரம்பித்தார். “2.0 லே வில்லன சொதப்பினதனாலேதான்…”

நான் அங்கேதான் எரிச்சலடைந்திருக்கவேண்டும். “அந்தப்படம் அவ்ளவு பெரிய வசூலை அடைஞ்சதுக்கு காரணம் அதோட வசூலிலே பாதிக்கும் மேலே தமிழகத்துக்கு வெளியிலே கிடைச்சதுங்கிறதுதான். இந்தி பெல்டிலே அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி. அதுக்குக் காரணம் அக்ஷய்குமார். அவர் அப்ப இந்தியிலே உச்சத்திலே இருந்தார். இல்லியா?”

“ஆமா சார்” என்றார்

“அக்ஷய்குமார் கதாபாத்திரத்தை ஒரு சாதாரண வில்லனா ஆக்கியிருந்தா இந்தி பெல்ட்லே ஓடியிருக்குமா?”

அவர் திகைத்தார்.

“அதிலே அக்ஷய்குமார் கதைநாயகனுக்கு எதிர்க்கதைநாயகன். கதைநாயகனே கடைசியிலே எதிர்கதைநாயகன் சொல்றதுதான் சரி, அவரு செஞ்சதுதான் சரின்னு சொல்றார்…. அதனாலேதான் அந்தப்படம் அப்டி இந்தி பெல்டிலே ஓடிச்சு…உலகமெங்கும் பெரிய வசூல் வந்தது…வெறும் வில்லனா அவரை காட்டியிருந்தா அது நடந்திருக்காது. இல்லியா?”

“ஆமா”

“அப்ப, அதை யோசிச்சுத்தானே சங்கரோ நானோ எழுதியிருப்போம்? அந்த அளவுக்கு யோசிக்கிற திறமைகூட எங்களுக்கு இருக்காதுன்னு நினைக்கிறீங்களா? இங்க ஒவ்வொரு சாமானியனும் நினைக்கிறது எங்க மண்டையிலே உதிக்காதுன்னு சொல்ல வரீங்களா?”

அவர் வாயை மட்டும் திறந்து மூடினார்.

“ஒரு மேஜர் ஹீரோ படத்திலே ஹீரோவை எதிர்க்கிறார். இந்தப்பக்க ஆடியன்ஸுக்கு அவர் வில்லனா தெரியறார், அந்தப்பக்க ஆடியன்ஸுக்கு அவரே ஹீரோவா தெரியறார்னா, அந்த திரைக்கதையை சும்மா உக்காந்து காலாட்டிட்டு எழுதியிருப்பாங்களா? அதுக்கு வேலை செஞ்சிருக்க மாட்டாங்களா? சரி, நீங்க எழுதமுடியுமா அப்டி?”

அவர் “நான் அப்டிச் சொல்ல வரலை” என்றார்

“ஒரு சின்ன சினிமா முழுத்திரைக்கதையும் எழுதி எடுக்கப்படலாம். பெரிய ஹீரோக்களோட கமர்ஷியல் சினிமான்னா அவரோட இமேஜ் முக்கியம். அதிலே நடிக்கிற ஒவ்வொருத்தரோட இமேஜும் முக்கியம். அதுக்கு ஏற்றபடித்தான் திரைக்கதையை எழுதுவோம். சிலசமயம் திரைக்கதை முடிஞ்சு நடிகர்கள் உள்ள வர்ரப்ப அவங்களுக்கு ஏற்ப திரைக்கதை மாறும். படப்பிடிப்பிலே நடிப்புக்கு ஏற்ப திரைக்கதை மாறும். கடைசியிலே எடிட்டிங் பண்றப்ப திரைக்கதை மாறும். எழுதறப்ப அற்புதமா இருக்கிற சில இடங்கள் எடிட்டிங் டேபிளிலே தப்பா இருக்கும். அத தூக்கி போட்டிருவாங்க. கதைக்கு அது முக்கியமா இருந்தாலும் நடிப்பு தப்பா இருந்தா சினிமாவுக்கு சுமைதான்… கடைசியிலே நீங்க பாக்கிற திரைக்கதைங்கிறது இவ்ளவுபேர் கை பட்டு, ஃபில்டர் ஆகி வந்து சேருற வடிவம்…சினிமாவிலே இருக்கிற நீங்க இதையாவது தெரிஞ்சுகிடணும்ல?”

“ஆமா சார்”

“திரைக்கதையிலே ரெண்டு வகை இருக்கு. சீரான ஓட்டமா எல்லாத்தையும் தொட்டுத்தொட்டுச் சொல்லிட்டு போற திரைக்கதை. அதான் பழைய பாணி. அங்கங்க புள்ளிவைச்சுக்கிட்டே போற திரைக்கதைதான் புதிய பாணி. அதையெல்லாம் இணைக்கவேண்டியவர் ரசிகர்தான். திரைக்கதையிலே அது இல்லை இது இல்லைன்னு அங்க ரசிகர் சொல்லக்கூடாது. இணைச்சு புரிஞ்சுகிடணும்….பெரிய கதைகளை சினிமாவா ஆக்குறப்ப ரெண்டாவது பாணிதான் சரிவரும்… இடைவெளிகளிலேதான் உண்மையான கதையே இருக்கும்…. உலகம் முழுக்க அப்டித்தான் நாவல்கள் சினிமாவா ஆகியிருக்கு…”

கொஞ்சநேரம் அமைதி.

“நான் வர்ரேன் சார்” என்றார்

“சரி” என்றேன்

அவர் கிளம்பும்போது “சரி, நான் ஹார்ஷா சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… சும்மா யோசிச்சுப்பாருங்க. அதான்” என சொல்லி அனுப்பினேன்.

ஏன் எரிச்சல் கொண்டோம் என என்னையே வினவிக்கொண்டு ஒரு டீ போட்டு குடித்தேன். அடுத்த நண்பர் வந்துவிட்டார். இவரும் இளம் உதவி இயக்குநர்.

அறிமுகம் முடிந்ததுமே ‘பொன்னியின் செல்வன் பாத்தேன் சார். நல்லா இருந்தது” என்றார்.

நான் “சரி” என்றேன்

உடனே அவர் ”ஆனா” என ஆரம்பித்து அதில் கண்ட  ‘குறைகளை’ சொல்ல ஆரம்பித்தார். அதுதான் இங்கே பொதுவான ‘டெம்ப்ளேட்’ . அதாவது பாட்டு தேவையில்லை, கிறிஸ்டோபர் நோலன் படம் போல பல உள்ளடுக்குகளாக படத்தை அமைத்திருக்கலாம் ….

முந்தைய எரிச்சலை உடனே மீட்டுக்கொண்டேன்.

“மத்தபடி அதிலே நீங்க கத்துக்க ஒண்ணுமே இல்லியா?” என்றேன்

”அதாவது, சில விஷயங்களைச் சரியா பண்ணியிருக்கலாமேன்னுதான்…”

சாமானிய ரசிகர்கள் ’நுகர்வோர் மனநிலை’ கொண்டவர்கள். அது சினிமாவில் எல்லாருக்குமே தெரியும். அதை எதிர்கொள்ளவும் தெரியும். நுகர்வோர் மனநிலை என்பது மூன்று அடிப்படைகள் கொண்டது.

அ. இதை நான் வாங்கியிருக்கிறேன், ஆகவே இது நான் எதிர்பார்த்தபடி இருக்கவேண்டும் என்னும் நிபந்தனை. அவர்கள் ஏற்கனவே அது எப்படி இருக்கவேண்டும் என எண்ணியிருந்தார்களோ அப்படி அது இருந்தாலொழிய நிறைவடைய மாட்டார்கள். எவ்வகையிலும் ஒரு புதிய விஷயம் நோக்கி நகர மாட்டார்கள். அதற்கான முயற்சியே இருக்காது.

’நுகர்வோரே தீர்மானிப்பவர்’ என்னும் இந்த மனநிலை உண்மையில் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சேர்ந்து உருவாக்கி நுகர்வோரிடம் நிறுவியிருப்பது. இந்த மனநிலை இருந்தால் நுகர்வோரின் தேவையை நிறைவுசெய்ய வேண்டியதில்லை, அகங்காரத்தை நிறைவுசெய்தால் போதும். அதை விளம்பரம் வழியாக எளிதில் செய்துவிடலாம்.

ஆ. இன்னும் தேவை என்னும் மனநிலை. நுகர்வோர் தன் பணத்திற்கான மதிப்பு கிடைக்கவேண்டும் என நினைப்பார்கள். ஆகவே தனக்கு அளிக்கப்பட்டதைவிட இன்னும் மேலான ஒன்றுக்கு தனக்கு தகுதி உள்ளது என நம்புவார்கள். ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என எண்ணி, கண்காணித்தபடியும் கணக்குபோட்டபடியும் இருப்பார்கள். இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்றே எந்த ஒன்றைப்பற்றியும் சொல்வார்கள்

உண்மையில் இந்த மனநிலையும் விற்பனையாளர்கள் உருவாக்குவதே. இந்த மனநிலையால்தான் நுகர்வோர் ஒரு பொருளை வாங்கியதுமே அதிருப்தி அடைகிறார். அடுத்ததை வாங்குவதைப்பற்றி கனவு காண்கிறார். ‘இதோ இன்னும் பெரிய, இன்னும் புதிய’ என ஒன்றை முன்வைத்தால் அதை வாங்கிவிடுவார். ஆகவே இங்கே எல்லா டூத்பேஸ்டும் ’புதிய’ டூத்பேஸ்ட்தான்.

இ. நுகர்வோர் எப்போதுமே ‘எல்லாரும் வாங்கும்’ பொருளையே தானும் வாங்குவார். பொதுப்போக்கிலேயே தானும் செல்வார். ஆனால் தனக்கு தனியான ரசனையும் தேவையும் இருப்பதாகவும் எண்ணிக்கொள்வார்.

இதையும் விற்பனையாளர்களே உருவாக்குகிறார்கள். மிகச்சிறிய கூடுதல் வசதிகளை அல்லது தனித்தன்மைகளை அளிக்கிறோம் என்று சொல்லி ஒரே பொருளையே திரும்பத் திரும்ப விற்க முடியும். விளம்பரங்களில் எப்போதுமே வாங்குபவரை பிடிவாதமான தனித்தன்மை கொண்டவராகவே காட்டுவார்கள். எல்லா ’புதிய’ பொருளும் முன்பு இல்லாத ஒரு விசேஷத்தன்மை கொண்டிருக்கும்.டூத்பிரஷின் அடியில் நாக்கை உரச வசதி கொடுத்தால் அது புதிய ‘மேம்படுத்தப்பட்ட’ டூத் பிரஷ்.

இந்த மூன்று மனநிலைகளுமே சினிமா ரசிகர்களிடமும் உண்டு. ஆகவே அவர்கள் எந்த சினிமாவும் அவர்கள் ஏற்கனவே நினைத்ததுபோல் இருக்கவேண்டுமென்றே எண்ணுவார்கள். ஒரு புதிய விஷயம் அளிக்கப்பட்டால் அதை நோக்கி நகர எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள். சினிமா ரசிகர்களின் எல்லா விமர்சனங்களிலும் உள்ளது தன் ரசனையும், தன் அறிவுமே எல்லாவற்றையும் விட மேலானது என்னும் நம்பிக்கைதான். ஆகவே மணி ரத்னத்துக்கு ஷாட் வைக்க ஆலோசனை சொல்ல ரசிகன் தயங்குவதில்லை.

எந்த சினிமாவை ரசித்தாலும் உடனே அதில் ஒரு சில குறைகளைத்தான் சொல்லவேண்டும், அதுதான் சரியான மனநிலை என நம் சினிமா நுகர்வோர் பயின்றிருக்கிறார்கள். குறைகாணும் மனநிலையிலேயே நீடிக்கிறார்கள். ’நல்லா இருக்கு, ஆனா…’ இதுதான் வழக்கமான வசனம். அவர்கள் தங்களுக்கான தனி ரசனையை நாடுவதில்லை. எவரும் ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ தேடிப்போய் பார்ப்பதில்லை. அது ஏன் பிடிக்கிறது என எழுதுவதும் இல்லை. அவர்கள் பீஸ்ட் அல்லது விக்ரம் அல்லது பொன்னியின் செல்வன்தான் பார்ப்பார்கள். ஆனால் நாலைந்து குறைகளைச் சொல்லி தாங்கள் வேறு என காட்டவும் முயல்வார்கள்.

சினிமா நுகர்வோர் அப்படி இருக்கட்டும். அப்படி இருப்பதே வணிகத்துக்கு நல்லது. அவர்களைக் கையாள சினிமாத் தொழிலில் இருப்பவர்களுக்கும் தெரியும். ஆனால் ஒரு சினிமா விமர்சகர் இந்த நுகர்வோர் மனநிலைகள் கொண்டிருப்பார் என்றால் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை. சினிமாவில் இருக்கும் ஒருவர் இந்த நுகர்வோர் மனநிலையில் இருந்தால் அவர் சினிமாவை கற்றுக்கொள்ளவே போவதில்லை.

நான் அந்த இளம் நண்பரிடம் சொன்னேன்.”நான் பல முக்கியமான இயக்குநர்களிடம் பேசினேன். அவர்கள் பொன்னியின் செல்வனை பலமுறை பார்த்திருக்கிறார்கள். ஒரு மாஸ்டர் எடுத்த படத்தை கூர்மையாக பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் கற்க ஒன்றுகூட இல்லையா?”

பொன்னியின் செல்வன் படத்தின் ஷாட்களை வரைந்து பைண்ட் செய்து வைத்திருந்தார் இயக்குநர் ஒருவர். நான் அவரிடம் கேட்டேன். ‘இதையே ஆங்கிலப் படங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள முடியாதா?”

அவர் சொன்னார் “முடியாது. ஏனென்றால் நமக்கு அந்தக் கலாச்சாரத்தின் உள்ளடுக்குகளும் நுட்பங்களும் தெரியாது….சும்மா பார்க்கலாம். இந்தவகையான ஒரு உள்ளூர் படத்தில் ஒரு மாஸ்டர் என்ன செய்கிறார் என்பது மட்டும்தான் கற்றுக்கொள்ள ஒரே வழி”

சாதனையாளர் என ஏற்கனவே பெயர் வாங்கியவர்கள் ஷாட் ஷாட்டாக பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். ஒன்றுமே தெரியாதவர்கள், இன்னும் கற்க ஆரம்பிக்காதவர்கள் அதீத நம்பிக்கையுடன்  ‘இப்டி செஞ்சிருக்கலாம் மணி ரத்னம், ப்ச’ என பேசிக்கொண்டிà®

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2022 11:35

ஸ்வாமிநாத ஆத்ரேயன்

தமிழ்ச்சூழலில் திராவிட இயக்கக் கருத்தியல் வலுவடைவதற்கு முன்னர் சம்ஸ்கிருதத்துடனான உரையாடலுக்கு நவீன தமிழிலக்கியத்தில் ஓர் இடமிருந்தது. அந்த இடத்தை நிரப்பியவர்களில் ஒருவர் ஸ்வாமிநாத ஆத்ரேயன். தி.ஜானகிராமனின் அணுக்கமான நண்பர். ஆனால் ஜானகிராமனைப் போல புதிய தேடல்களோ மீறல்களோ இல்லாத ஆசாரவாத நோக்கு கொண்டவர். இருவருக்கும் பொதுவாக இருந்தது இசையாகத்தான் இருந்திருக்கவேண்டும்

ஸ்வாமிநாத ஆத்ரேயன்

ஸ்வாமிநாத ஆத்ரேயன் ஸ்வாமிநாத ஆத்ரேயன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2022 11:34

ஸ்வாமிநாத ஆத்ரேயன்

தமிழ்ச்சூழலில் திராவிட இயக்கக் கருத்தியல் வலுவடைவதற்கு முன்னர் சம்ஸ்கிருதத்துடனான உரையாடலுக்கு நவீன தமிழிலக்கியத்தில் ஓர் இடமிருந்தது. அந்த இடத்தை நிரப்பியவர்களில் ஒருவர் ஸ்வாமிநாத ஆத்ரேயன். தி.ஜானகிராமனின் அணுக்கமான நண்பர். ஆனால் ஜானகிராமனைப் போல புதிய தேடல்களோ மீறல்களோ இல்லாத ஆசாரவாத நோக்கு கொண்டவர். இருவருக்கும் பொதுவாக இருந்தது இசையாகத்தான் இருந்திருக்கவேண்டும்

ஸ்வாமிநாத ஆத்ரேயன்

ஸ்வாமிநாத ஆத்ரேயன் ஸ்வாமிநாத ஆத்ரேயன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2022 11:34

மா.ந.ராமசாமி- கடிதங்கள்

ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு, வணக்கம், நலம்தானே?

ம.ந.ராமசாமி பற்றிய குறிப்பு படித்தேன். அவரை  நான் நன்கு அறிவேன். அவர் பெங்களூரில் இருந்தபோது பாவண்ணன் அறிமுகப்படுத்தினார். சங்கு இதழை அவருக்கு அனுப்பி வைத்தேன். சங்கு இதழில் இரண்டு மூன்று சிறுகதைகள் எழுதி உள்ளார். பின்னால் அவர் கோவை வந்து வசித்தபோது ஒரு முறை அவரைப் பார்க்க என் மகனுடன் காரில் சென்றிருந்தேன். ஏன் போனோம் என்றாகி விட்டது. அவர் இல்லமே ஒரு முதியோர் இல்லம் போலிருந்தது. அவருக்குக் காது சரியாகக் கேட்கவில்லை. அவர் மகள்தான் அருகிலிருந்தார். மகளின் மூலம்தான் பதில் பேசினார்.  அவரின் தம்பியோ அண்ணாவோ அவர்களும் மிகவும் மூத்த வயதில் இருந்தார்கள்.

அச்சூழலிலும்  அவர் இலக்கியம் பற்றி நன்கு  கலந்துரையாடினார். நல்ல நினைவாற்றல் இருந்தது. வேண்டாம் வேண்டாமெனத் தடுத்தும் எங்களுடன் காரில் ஏறி தமிழ்நாடு சிற்றிதழ் சங்கத்தலைவர் பூ.அ.இரவீந்திரனைச் சந்திக்க வந்தார். அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் பின் அவரை வீட்டிற்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தோம்.

அவர்  முற்போக்கு சிந்தனை உள்ளவர். அவரின் கதைக்கருக்கள் எல்லாமே  புதுத்தளங்களில்தான் இருக்கும். சைதன்யா சொன்னது போல ஆண்களின் கருத்தே தம் பெருமையைக்  காக்கவே பெண்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான். வள்ளுவர் கூறும் புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறு போல் பீடு நடை என்பதும் அதைத்தானே காட்டுகிறது, நன்றி

வளவ துரையன்

*

அன்புள்ள வளவதுரையன்

வள்ளுவரிலோ அல்லது பிற நீதிநூல்களிலோ உள்ள ‘வகுத்துரைக்கும்’ தன்மை இது சரி, இது அல்லது பிழை என்றே சொல்லும். அந்தக்காலத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இணையாகவே அதற்கு முந்தைய தொல்குடிக்காலம் அனைத்தையும் உள்ளடக்கும், ஒன்றைக்கூட வெளியேதள்ளாத inclusive தன்மை கொண்டிருக்கும். அதையும் புரிந்துகொள்ள முடியும்போதே வரலாற்றுச் சித்திரம் உருவாகிறது.

ஜெ

*

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வேத காலத்து மகாபாரத இதிகாச காலத்து (மகாபாரதக் கதை நிகழ்வு சிறிய அளவில் நடந்திருக்க வேண்டும் என்பது என் நிலை) பெண்கள் கற்பு நிலை பற்றி தங்களது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளீர்கள்.

ஒரு தாயின் இறப்பு குறித்து நீத்தார் சடங்கு செய்கையில் ‘எனது தாய் அறிந்தும் அறியாமலும் உடலுறவு கொண்ட. அனைத்து ஆண்களையும் எனது தந்தையாக கருதி அவர்களுக்கும் நான் அளிக்கும் பிண்டம் சென்று சேரட்டும்’ என ஒரு மகன் கூறும் மந்திரம் பற்றி வேதங்கள் மகாபாரத இதிகாசம் மற்றும் ஐரோப்பிய மரபுகள் போன்றவற்றை ஆய்ந்து கூறுகிறீர்கள்.

படித்த பின் என் கருத்து:

ஒரு பெண் வேத காலத்திலும் இதிகாச காலத்திலும் குழுமணம் இன்னும் ஒரு குழுவின் தன் சகோதரர், தகப்பன் பாட்டன் அல்லாது அனைத்து ஆண்களையும் மணம் செய்து கொள்வது அல்லது ஒரு குடும்பத்தில் அனைத்து சகோதரர்களுக்கும் மனைவியாவது என்னும் இணை மணம் புரிந்து கொண்ட காலமாக இருக்கலாம் எனவே அந்த வழியில் அனைவரும் தந்தை போன்றவர்கள் தனி ஒருவரை அடையாளம் காட்ட முடியாது என்று கூறினால் கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம்.

பெண்ணின் சுதந்திரமாக தடையற்ற பாலியல் உறவு கொள்வது அனுமதிக்கப்பட்ட காலமாக இருந்திருக்கலாம் என்றாலும் அந்தப் பெண்ணின், தாயின் சுதந்திரத்தை இன்றைய காலத்தில் கூட புரிந்து கொள்ளலாம் அங்கீகரிக்க கூட செய்யலாம்.

ஆனால் தாயின் உடல் பாலியல் வேட்கையை தணித்தவர்களை எல்லாம் தந்தையாக அந்தக் காலத்தில் கூட ஏற்றுக் கொள்வதற்கு நியாயம் கற்பிப்பது என் அளவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அன்புடன்,

துரைசாமி

*

அன்புள்ள துரைசாமி

நீங்கள் ஏற்றுக்கொள்ளாததும் ஏற்றுக்கொள்வதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம்

அந்த தனிப்பட்ட உளவியல் நிபந்தனைகளுக்கு அப்பால்தான் இயற்கையும் அறமும் உள்ளது

அதைக் கடக்காதவர்களுக்கு பக்திக்கு அப்பாலுள்ள ஆன்மிகம் இல்லை. வரலாற்றை முழுமையாக அறியும் வாய்ப்பும் இல்லை

ஜெ

*

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2022 11:31

மா.ந.ராமசாமி- கடிதங்கள்

ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு, வணக்கம், நலம்தானே?

ம.ந.ராமசாமி பற்றிய குறிப்பு படித்தேன். அவரை  நான் நன்கு அறிவேன். அவர் பெங்களூரில் இருந்தபோது பாவண்ணன் அறிமுகப்படுத்தினார். சங்கு இதழை அவருக்கு அனுப்பி வைத்தேன். சங்கு இதழில் இரண்டு மூன்று சிறுகதைகள் எழுதி உள்ளார். பின்னால் அவர் கோவை வந்து வசித்தபோது ஒரு முறை அவரைப் பார்க்க என் மகனுடன் காரில் சென்றிருந்தேன். ஏன் போனோம் என்றாகி விட்டது. அவர் இல்லமே ஒரு முதியோர் இல்லம் போலிருந்தது. அவருக்குக் காது சரியாகக் கேட்கவில்லை. அவர் மகள்தான் அருகிலிருந்தார். மகளின் மூலம்தான் பதில் பேசினார்.  அவரின் தம்பியோ அண்ணாவோ அவர்களும் மிகவும் மூத்த வயதில் இருந்தார்கள்.

அச்சூழலிலும்  அவர் இலக்கியம் பற்றி நன்கு  கலந்துரையாடினார். நல்ல நினைவாற்றல் இருந்தது. வேண்டாம் வேண்டாமெனத் தடுத்தும் எங்களுடன் காரில் ஏறி தமிழ்நாடு சிற்றிதழ் சங்கத்தலைவர் பூ,அ. இரவீந்திரனைச் சந்திக்க வந்தார். அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் பின் அவரை வீட்டிற்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தோம்.

அவர்  முற்போக்கு சிந்தனை உள்ளவர். அவரின் கதைக்கருக்கள் எல்லாமே  புதுத்தளங்களில்தான் இருக்கும். சைதன்யா சொன்னது போல ஆண்களின் கருத்தே தம் பெருமையைக்  காக்கவே பெண்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான். வள்ளுவர் கூறும் புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறு போல் பீடு நடை என்பதும் அதைத்தானே காட்டுகிறது, நன்றி

வளவ துரையன்

 

அன்புள்ள வளவதுரையன்

 

வள்ளுவரிலோ அல்லது பிற நீதிநூல்களிலோ உள்ள ‘வகுத்துரைக்கும்’ தன்மை இது சரி, இது அல்லது பிழை என்றே சொல்லும். அந்தக்காலத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இணையாகவே அதற்கு முந்தைய தொல்குடிக்காலம் அனைத்தையும் உள்ளடக்கும், ஒன்றைக்கூட வெளியேதள்ளாத inclusive தன்மை கொண்டிருக்கும். அதையும் புரிந்துகொள்ள முடியும்போதே வரலாற்றுச் சித்திரம் உருவாகிறது.

 

ஜெ

 

 

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வேத காலத்து மகாபாரத இதிகாச காலத்து (மகாபாரதக் கதை நிகழ்வு சிறிய அளவில் நடந்திருக்க வேண்டும் என்பது என் நிலை) பெண்கள் கற்பு நிலை பற்றி தங்களது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளீர்கள்.

 

ஒரு தாயின் இறப்பு குறித்து நீத்தார் சடங்கு செய்கையில் ‘எனது தாய் அறிந்தும் அறியாமலும் உடலுறவு கொண்ட. அனைத்து ஆண்களையும் எனது தந்தையாக கருதி அவர்களுக்கும் நான் அளிக்கும் பிண்டம் சென்று சேரட்டும்’ என ஒரு மகன் கூறும் மந்திரம் பற்றி வேதங்கள் மகாபாரத இதிகாசம் மற்றும் ஐரோப்பிய மரபுகள் போன்றவற்றை ஆய்ந்து கூறுகிறீர்கள்.

 

 

படித்த பின் என் கருத்து:

 

ஒரு பெண் வேத காலத்திலும் இதிகாச காலத்திலும் குழுமணம் இன்னும் ஒரு குழுவின் தன் சகோதரர், தகப்பன் பாட்டன் அல்லாது அனைத்து ஆண்களையும் மணம் செய்து கொள்வது அல்லது ஒரு குடும்பத்தில் அனைத்து சகோதரர்களுக்கும் மனைவியாவது என்னும் இணை மணம் புரிந்து கொண்ட காலமாக இருக்கலாம் எனவே அந்த வழியில் அனைவரும் தந்தை போன்றவர்கள் தனி ஒருவரை அடையாளம் காட்ட முடியாது என்று கூறினால் கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம்.

 

பெண்ணின் சுதந்திரமாக தடையற்ற பாலியல் உறவு கொள்வது அனுமதிக்கப்பட்ட காலமாக இருந்திருக்கலாம் என்றாலும் அந்தப் பெண்ணின்,. தாயின் சுதந்திரத்தை இன்றைய காலத்தில் கூட புரிந்து கொள்ளலாம் அங்கீகரிக்க கூட செய்யலாம்.

 

ஆனால் தாயின் உடல் பாலியல் வேட்கையை தனித்தவர்களை எல்லாம் தந்தையாக அந்தக் காலத்தில் கூட ஏற்றுக் கொள்வதற்கு நியாயம் கற்பிப்பது என் அளவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

அன்புடன்,

 

துரைசாமி

 

அன்புள்ள துரைசாமி

 

நீங்கள் ஏற்றுக்கொள்ளாததும் ஏற்றுக்கொள்வதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம்

 

அந்த தனிப்பட்ட உளவியல் நிபந்தனைகளுக்கு அப்பால்தான் இயற்கையும் அறமும் உள்ளது

 

அதைக் கடக்காதவர்களுக்கு பக்திக்கு அப்பாலுள்ள ஆன்மிகம் இல்லை. வரலாற்றை முழுமையாக அறியும் வாய்ப்பும் இல்லை

 

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2022 11:31

Stories of the True – கடிதம்

Stories of the True B. Jeyamohan

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு அன்பு வணக்கம்!

எனது பெயர் பிரதாப். தென்கொரியாவின் சியோல் நகரத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறேன்.

தங்களுடைய அறம் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான “Stories of the True” புத்தகத்தின் இரு பிரதிகளை நண்பர் சதீஷ் பாண்டியன் அவர்கள் எனக்குப் பரிசளித்தார். ஒன்றை இன்று எனது பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக அளித்தேன். மேலும் எனது பல்கலைக்கழகத்தில் ஒரு வசதி இருக்கிறது. ஆய்வு மாணவனாக எனக்கு ஒரு வருடத்திற்கு இந்திய ரூபாயில் ₹30,000 ரூபாய் மதிப்பிற்கு புதிய புத்தகங்கள் வாங்கக் கோரிக்கை விடுக்கலாம். அப்படி இதுவரை எழுத்தாளர் இமையம், அம்பை, பொருமாள் முருகன், ஜெயகாந்தன் ஆகியோரது புத்தகங்களை பல்கலைக்கழக நூலகத்தில் சேர்த்திருக்கிறேன். தமிழ் எழுத்துகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் ஒரு சிறு பங்களிப்பை செய்வதில் எனக்குப் பெருமகிழ்ச்சி.

நன்றி!

பிரதாப்

*

அன்புள்ள பிரதாப்

நன்றி.

நம் நண்பர்களில் இருவர் முன்னர் இதைச் செய்திருக்கிறார்கள். தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள நூலகங்களுக்கு இந்நூலை வாங்கி அளிப்பதென்பது நூலை மட்டுமல்ல தமிழையும் அறிமுகம் செய்வதாக அமையும். நண்பர்களுக்கு வாங்கி அளித்தவர்களும் சிலர் உண்டு. ஆனால் ஒப்புநோக்க மிகக்குறைவாகவே இது நிகழ்ந்துள்ளது. நம் நண்பர்கள் குறைவாகவே வாங்கியுள்ளனர். வட இந்தியர், குறிப்பாக பெங்களூர் கல்கத்தா வாசகர்களே மிகுதியும் வாங்குகின்றனர்

ஜெ

Stories of the True- B. Jeyamohan, Priyamvada Ramkumar – வாசிக்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.