Jeyamohan's Blog, page 681

November 14, 2022

நான்காம் தமிழ்ச்சங்கம்

மதுரை தமிழ்ச்சங்கம் ‘நான்காம் தமிழ்ச்சங்கம்’ என அழைக்கப்படுகிறது. இன்று வரலாற்றின் ஓரு நினைவாக அது எஞ்சியிருந்தாலும் சென்றகாலத் தமிழறிஞர்களுக்கான பதிவுகளைப் போடும்போது எத்தனைபேருடன் அது தொடர்பு கொண்டிருக்கிறது, எத்தனை பேருக்கு ஆதரவளித்திருக்கிறது என்று காண்கையில் பிரமிப்பு உருவாகிறது. இன்றைய தமிழ் மறுமலர்ச்சியில் முதன்மைப்பங்கு ஓர் அமைப்புக்கு உண்டு என்றால் அது பாண்டித்துரைத் தேவர் நிறுவிய நான்காம் தமிழ்ச்சங்கத்துக்குத்தான்

நான்காம் தமிழ்ச்சங்கம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2022 10:34

நீல பத்மநாபன், கடிதம்

நீல பத்மநாபன்

அன்பு ஜெ,

வணக்கம்.நலம் விழைகிறேன்.

அதிகாலையில் மழைபெய்கிறது. மூன்று மாதங்களாக இப்படிதான். பெரும்பாலும் காலையில் எழுந்ததும் மதியம் சாயுங்காலம் என்று மழை இயல்பாகிவிட்டது. மழையின் சலசலப்பிற்கு இடையே சேவல் ஒன்றின் கம்பீரமாக குரல். கிச்கிச்சென்று சிட்டு்குருவிகள். மிக சன்னமான நான் வாசிக்கும் அறையின் தலைக்கு மேல்  சன்னலில் அருகில் பால் கரக்கும் ஓசை தனித்து கேட்கிறது. [பசுவை வயலிற்கு ஓட்டிச்செல்லும் வழியில் அவசரத்திற்கு குழந்தைப்பால் கேட்டிருப்பார்கள்] பசுவின் பாலும் ஒரு வகையில் மழை தானே. உடன் எழுத்தாளர் நீல.பத்பநாபனின் விக்கிப்பக்கம்.

கல்லூரியின் இறுதிஆண்டு மற்றும் கல்லூரி முடித்த ஆண்டில் பள்ளிகொண்டபுரம்,தலைமுறைகள்,தேரோடும்வீதி மற்றும் இலையுதிர்காலம் நாவல்களை தொடர்ந்து வாசித்தேன். கல்லூரி நூலகத்தில் முதலிரண்டு நாவல்கள். ஊர்நூலகத்திலிருந்து எடுத்த அடுத்த இரண்டு நாவல்கள். தேரோடும் வீதி நாவலை மட்டும் மறுபடி மறுபடி என்ட்ரி போட்டு மிக மெதுவாக வாசித்தேன். அம்மாச்சி ஊரின் சிறு நூலகத்திலிருந்து எடுத்தேன். அம்மாச்சியுடன் இருமாதங்கள் தங்கயிருக்க வேண்டியிருந்தது. வயல்காட்டில் தனித்த வீடு. அந்த ஊருக்கு முதலாக நிற்கும் நூலகத்தில் இருபது ரூபாய் அளித்து நூலகஅட்டை வாங்கிக்கொண்டேன். தேரோடும் வீதி அதன் தன்மையால் நம்மையும் மிக மெல்ல வாசிக்க வைத்துவிடும். இது ஒரு மாயம் தான். ஆனால் எனக்கு அந்த காலகட்டத்தில் அந்த நிதானமான சலிப்பும் நீண்ட யாதார்த்தள வாசிப்பும் தேவையாக இருந்தது.

எனக்கு பள்ளிகொண்டபுரம் மிகவும் பிடித்தநாவல். அதன் மொழிநடை வசீகரிப்பது. திருவனந்தபுரம் ஒரு கனவு போல விரியும்.

இந்த நான்கு நாவல்களின் தொடர்ந்த வாசிப்பு அவற்றுடன் இருந்த ஒரு ஆண்டும் மிக நிதானமான ஆளாக மாறினேன். தலைமுறைகள் _இரணியல் ஆசிரிய இளைஞனின் வாழ்வு,பள்ளிகொண்டபுரம்_ நொய்மையான உடல் மனம் கொண்ட கணவனின் ,தந்தையின் வாழ்வு,தேரோடும் வீதி_ ஒரு எழுத்தாளன் பொறியாளனின் நீண்ட வாழ்வு,இலையுதிர் காலம்_ முதியவர்களின் வாழ்க்கை .அந்த வயதில் அதிர்ச்சி தந்த நாவல். சொல்லப்போனால் முதுமையை அந்தரங்கமாக உணர்ந்து புரிந்து கொண்டு அவர்களை அணுக ,நேசிக்க அவர்களும் குழந்தைகள் என அந்த வயதில் உணர உதவியது. நான் அம்மாச்சியுடன் நெருக்கமான நாட்கள் அவை. அடுத்த பத்து ஆண்டுகள் எங்களுக்குள் ஒருவித ‘ப்ரியநட்பு’ இருந்ததற்கு இந்த நாவல் ஏதோ ஒரு காரணம் என்று நினைக்கிறேன். மிகச் சிறிய நாவல். நம் மனதை எங்கேயோ சூட்சுமமாக மாற்றிப்போடும். எல்லாம் எதார்த்தம் என்று காட்டும். முதியவர்களின் சிக்கல்களை கண்டு முகம் சுழிக்க வைக்காது. அதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். பள்ளிகொண்டபுரமும் அப்படித்தான்.

ஒரு வகையில் மத்தியதர ஆண்களை புரிந்து கொள்ள உதவியது. நம் மனதில் கல்லூரி காலகட்டத்தில் உள்ள நாயக பிம்பத்திற்கு மாற்றான அசல் மனிதர்கள். இந்த அசல் மனிதர்களை நேசிக்க அவர்களின் இயலாமையை ரசிக்கவும் ,அப்படித்தான் என்று ஏற்றுக்கொள்ள முடியும்.

இதை எல்லாம் கடந்து யாதார்த்தவாத நாவல்கள் என்றாலும் அதன் ‘மலையாள டச்’ உடைய மொழி கவித்துவமானது. அந்த கவித்துவம் ஒரு வாசகியாக என்னை மலர வைத்துகொண்டே இருந்தது.

ஒரு எழுத்தாளரின் பல்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட நான்கு நாவல்களை தொடர்ந்து வாசிக்க கிடைத்ததும், அந்த வயதில் வாசித்ததும் எனக்கான ஆசி என்றே இப்போதும் தோன்றுகிறது. மழை இன்னும் நிற்கவில்லை. தொடர் மழைக்கான முதல் குடை அவரின் எழுத்துக்கள் என்று தோன்றுகிறது.

அன்புடன்,

கமலதேவி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2022 10:31

நீல பத்மநாபன், கடிதம்

நீல பத்மநாபன்

அன்பு ஜெ,

வணக்கம்.நலம் விழைகிறேன்.

அதிகாலையில் மழைபெய்கிறது. மூன்று மாதங்களாக இப்படிதான். பெரும்பாலும் காலையில் எழுந்ததும் மதியம் சாயுங்காலம் என்று மழை இயல்பாகிவிட்டது. மழையின் சலசலப்பிற்கு இடையே சேவல் ஒன்றின் கம்பீரமாக குரல். கிச்கிச்சென்று சிட்டு்குருவிகள். மிக சன்னமான நான் வாசிக்கும் அறையின் தலைக்கு மேல்  சன்னலில் அருகில் பால் கரக்கும் ஓசை தனித்து கேட்கிறது. [பசுவை வயலிற்கு ஓட்டிச்செல்லும் வழியில் அவசரத்திற்கு குழந்தைப்பால் கேட்டிருப்பார்கள்] பசுவின் பாலும் ஒரு வகையில் மழை தானே. உடன் எழுத்தாளர் நீல.பத்பநாபனின் விக்கிப்பக்கம்.

கல்லூரியின் இறுதிஆண்டு மற்றும் கல்லூரி முடித்த ஆண்டில் பள்ளிகொண்டபுரம்,தலைமுறைகள்,தேரோடும்வீதி மற்றும் இலையுதிர்காலம் நாவல்களை தொடர்ந்து வாசித்தேன். கல்லூரி நூலகத்தில் முதலிரண்டு நாவல்கள். ஊர்நூலகத்திலிருந்து எடுத்த அடுத்த இரண்டு நாவல்கள். தேரோடும் வீதி நாவலை மட்டும் மறுபடி மறுபடி என்ட்ரி போட்டு மிக மெதுவாக வாசித்தேன். அம்மாச்சி ஊரின் சிறு நூலகத்திலிருந்து எடுத்தேன். அம்மாச்சியுடன் இருமாதங்கள் தங்கயிருக்க வேண்டியிருந்தது. வயல்காட்டில் தனித்த வீடு. அந்த ஊருக்கு முதலாக நிற்கும் நூலகத்தில் இருபது ரூபாய் அளித்து நூலகஅட்டை வாங்கிக்கொண்டேன். தேரோடும் வீதி அதன் தன்மையால் நம்மையும் மிக மெல்ல வாசிக்க வைத்துவிடும். இது ஒரு மாயம் தான். ஆனால் எனக்கு அந்த காலகட்டத்தில் அந்த நிதானமான சலிப்பும் நீண்ட யாதார்த்தள வாசிப்பும் தேவையாக இருந்தது.

எனக்கு பள்ளிகொண்டபுரம் மிகவும் பிடித்தநாவல். அதன் மொழிநடை வசீகரிப்பது. திருவனந்தபுரம் ஒரு கனவு போல விரியும்.

இந்த நான்கு நாவல்களின் தொடர்ந்த வாசிப்பு அவற்றுடன் இருந்த ஒரு ஆண்டும் மிக நிதானமான ஆளாக மாறினேன். தலைமுறைகள் _இரணியல் ஆசிரிய இளைஞனின் வாழ்வு,பள்ளிகொண்டபுரம்_ நொய்மையான உடல் மனம் கொண்ட கணவனின் ,தந்தையின் வாழ்வு,தேரோடும் வீதி_ ஒரு எழுத்தாளன் பொறியாளனின் நீண்ட வாழ்வு,இலையுதிர் காலம்_ முதியவர்களின் வாழ்க்கை .அந்த வயதில் அதிர்ச்சி தந்த நாவல். சொல்லப்போனால் முதுமையை அந்தரங்கமாக உணர்ந்து புரிந்து கொண்டு அவர்களை அணுக ,நேசிக்க அவர்களும் குழந்தைகள் என அந்த வயதில் உணர உதவியது. நான் அம்மாச்சியுடன் நெருக்கமான நாட்கள் அவை. அடுத்த பத்து ஆண்டுகள் எங்களுக்குள் ஒருவித ‘ப்ரியநட்பு’ இருந்ததற்கு இந்த நாவல் ஏதோ ஒரு காரணம் என்று நினைக்கிறேன். மிகச் சிறிய நாவல். நம் மனதை எங்கேயோ சூட்சுமமாக மாற்றிப்போடும். எல்லாம் எதார்த்தம் என்று காட்டும். முதியவர்களின் சிக்கல்களை கண்டு முகம் சுழிக்க வைக்காது. அதை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். பள்ளிகொண்டபுரமும் அப்படித்தான்.

ஒரு வகையில் மத்தியதர ஆண்களை புரிந்து கொள்ள உதவியது. நம் மனதில் கல்லூரி காலகட்டத்தில் உள்ள நாயக பிம்பத்திற்கு மாற்றான அசல் மனிதர்கள். இந்த அசல் மனிதர்களை நேசிக்க அவர்களின் இயலாமையை ரசிக்கவும் ,அப்படித்தான் என்று ஏற்றுக்கொள்ள முடியும்.

இதை எல்லாம் கடந்து யாதார்த்தவாத நாவல்கள் என்றாலும் அதன் ‘மலையாள டச்’ உடைய மொழி கவித்துவமானது. அந்த கவித்துவம் ஒரு வாசகியாக என்னை மலர வைத்துகொண்டே இருந்தது.

ஒரு எழுத்தாளரின் பல்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட நான்கு நாவல்களை தொடர்ந்து வாசிக்க கிடைத்ததும், அந்த வயதில் வாசித்ததும் எனக்கான ஆசி என்றே இப்போதும் தோன்றுகிறது. மழை இன்னும் நிற்கவில்லை. தொடர் மழைக்கான முதல் குடை அவரின் எழுத்துக்கள் என்று தோன்றுகிறது.

அன்புடன்,

கமலதேவி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2022 10:31

நூறுநாற்காலிகள், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

இன்று எங்கள் அலுவலகத்தில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மூத்த ஐ. ஏ. எஸ் அதிகாரியான துறைத்தலைவர் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். சூழ்நிலை பொருந்திப்போக,  திடீரென ‘அறம்’ தொகுப்பிலிருந்து ‘நூறு நாற்காலிகளை’ முழுமையாக ஐந்து நிமிடங்கள் சொன்னார். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

தங்கள் வழிகாட்டுதல்படி யதியை பயின்று கொண்டிருக்கிறேன். ஒன்றிரண்டு முறை வியாசபிரசாத் சாமிக்கும், முனிநாராயண சாமிக்கும் கடிதங்கள் எழுதினேன். பதில்கள் வந்தன.  முனிநாராயண சாமியிடம் சில புத்தகங்கள் கேட்டிருந்தேன். அனுப்பியிருந்தார். ‘That alone the core of wisdom’ பயிற்றலில் இருக்கிறது. ஆத்ம உபதேச சதகத்தில் பராபரக்கண்ணியின் தாக்கத்தை காண முடிந்தது. யார் இயம்பினாலும் உண்மை ஒன்று தானே!

நன்றி

சுந்தர மகாலிங்கம்

*

அன்புள்ள சுந்தர மகாலிங்கம்

அறம் கதைகள் சென்று சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆத்மோபதேச சதகம் பராபரக்கண்ணி போன்றவை ஏறத்தாழ ஒரே அறிவுத்தளத்தைச் சேர்ந்தவை. நாராயணகுருவுக்கு தமிழ்ச் சித்தர் மரபுடன் அணுக்கமான உறவு உண்டு

ஜெ

அறம் கதைகள் வாங்க 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2022 10:30

நூறுநாற்காலிகள், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

இன்று எங்கள் அலுவலகத்தில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மூத்த ஐ. ஏ. எஸ் அதிகாரியான துறைத்தலைவர் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். சூழ்நிலை பொருந்திப்போக,  திடீரென ‘அறம்’ தொகுப்பிலிருந்து ‘நூறு நாற்காலிகளை’ முழுமையாக ஐந்து நிமிடங்கள் சொன்னார். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

தங்கள் வழிகாட்டுதல்படி யதியை பயின்று கொண்டிருக்கிறேன். ஒன்றிரண்டு முறை வியாசபிரசாத் சாமிக்கும், முனிநாராயண சாமிக்கும் கடிதங்கள் எழுதினேன். பதில்கள் வந்தன.  முனிநாராயண சாமியிடம் சில புத்தகங்கள் கேட்டிருந்தேன். அனுப்பியிருந்தார். ‘That alone the core of wisdom’ பயிற்றலில் இருக்கிறது. ஆத்ம உபதேச சதகத்தில் பராபரக்கண்ணியின் தாக்கத்தை காண முடிந்தது. யார் இயம்பினாலும் உண்மை ஒன்று தானே!

நன்றி

சுந்தர மகாலிங்கம்

*

அன்புள்ள சுந்தர மகாலிங்கம்

அறம் கதைகள் சென்று சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆத்மோபதேச சதகம் பராபரக்கண்ணி போன்றவை ஏறத்தாழ ஒரே அறிவுத்தளத்தைச் சேர்ந்தவை. நாராயணகுருவுக்கு தமிழ்ச் சித்தர் மரபுடன் அணுக்கமான உறவு உண்டு

ஜெ

அறம் கதைகள் வாங்க 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2022 10:30

பஷீரின் மதிலுகள்

.

வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி

அன்பின் ஜெ,

நலம்தானே?

மூன்று வாரங்கள் முன்பு பஷீரின் “மதில்கள்” வாசித்தேன். முடித்துவிட்டு பஷீரைப் பற்றி இணையப் பக்கங்களில் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்தேன்.

பஷீர் ஒரு நூற்றாண்டின் களஞ்சியம்தான். அனுபவங்களின், வரலாற்றின் விதைகள் செறிந்த ஈரநிலம். இந்திய நிலம் முழுவதும் மட்டுமல்லாது சில விதேசி பரப்புகளையும் உள்ளடக்கிய அவரின் பயணம்/கற்றலின் வெளி/பெருவாழ்வு வியப்பும், பிரமிப்பும் அளித்தது.

திருவிதாங்கூர்  சமஸ்தானத்தின்  கோட்டயம்  மாவட்டத்தில்  வைக்கம்  தாலுகா  தலையோலப்பரம்பில்  1908-ல்  பிறந்தவர்  அப்துல் ரஹ்மான் முகம்மது  பஷீர்.  வைக்கத்தில் இடைநிலை பள்ளிக் காலத்தில்  அங்கு  சத்தியாகிரகப்  போராட்டத்திற்காக  வந்த  காந்தியைச்  சந்தித்ததிலிருந்து அவரின் வாழ்வு மாறுதல் கொள்கிறது. சுதேசி இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில்  இணைந்து  சுதந்திரப்  போராட்டத்தில்  பங்கெடுக்கிறார். கொச்சியில் சுதந்திரப் போராட்டம் மித கதியில் இருக்க மலபார் மாவட்டத்தில் நடைபெறும் உப்பு சத்தியாகிரகத்திற்கு சென்று கலந்துகொள்கிறார். போலீஸிடம் அடிகள் வாங்கி பலமுறை கேரளாவின் பல மாவட்டச் சிறைகளில் சிறை வாசம் அனுபவிக்கிறார். போராட்டக் களத்தில் ராஜ்குரு, பகத்சிங், சுக்தேவ் ஆகியோரின் அணுகுமுறையில் அபிமானம் கொண்டவர். காலனிய அரசுக்கு எதிராக ஒரு இயக்கத்தை துவங்கி நடத்துகிறார். இயக்கத்தின் புரட்சி இதழாக “உஜ்ஜீவன”த்தை வெளியிடுகிறார். அரசு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க கேரளாவை விட்டு வெளியேறுகிறார்.

அதன்பின்னான ஏழு வருட நீண்ட நாடோடி வாழ்வில் பஷீர் செய்யாத வேலைகளில்லை. சேகரிக்காத அனுபவங்களில்லை. ஆடு மேய்ப்பது, சமையல் செய்வது, ஜோசியம் சொல்வது, தினசரி செய்திப் பத்திரிகைகள் விற்பது, கணக்காளர், விளையாட்டு சாமான்கள் விற்பது, உணவக மேலாளர், வாட்ச்மேன் என்று கிடைத்த வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார். கங்கைக் கரையிலும், ஹிமாலய மடங்களிலும் இந்து துறவியாகவும், சுஃபி சன்யாசியாகவும் தேடலில் ஐந்து வருடங்கள் அலைந்திருக்கிறார்.

முப்பதுகளின் மத்தியில் எர்ணாகுளம் திரும்பும் அவர் வேறு வேலை ஏதும் கிடைக்காத நிலையில் ஹோட்டலில் பாத்திரம் கழுவியிருக்கிறார். ஒருமுறை ஜெயகேசரி நாளிதழின் அலுவலகம் சென்று அதன் ஆசிரியரிடம் வேலை ஏதும் கிடைக்குமா என்று கேட்க, வேலை எதுவும் காலியில்லையென்றும், வேண்டுமானால் பத்திரிகைக்கு கதை எழுதித் தந்தால் சன்மானம் தருவதாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இப்படியாக பஷீரின் முதல் கதை “என்டே தங்கம்”  1937-ல் ஜெயகேசரியில் வெளியாகி மிகப் பிரபலமடைந்தது. 41 வரை நவஜீவன் வார இதழில் தொடர்ந்து கதைகள் எழுதுகிறார். 41/42-ல் மறுபடி கைது செய்யப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறார்.

அங்குதான் பஷீர் நாராயணி எனும் இருபத்தியிரண்டு வயது பூவின் சுகந்தத்தை செவிகளில் வாங்கி மணம் நுகர்ந்து மனதுள் ஸ்பரிசிக்கிறார்.

***

பஷீரின் குட்டிக் குட்டி அத்தியாயங்கள் ஆழ்ந்து செறிந்து சரசரவென்று உள் விரியும் காட்சிகள்/வாழ்வின் பிரதிகள் மனதுக்கு மிக நெருக்கமானதாயிருந்தன. எங்கோ ஆழத்தில் எதனுடனோ ஒன்றுபவை போலத் தோன்றின.

குறுநாவலின் பின்னிணைப்பாக இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. பஷீர் “மதிலுகள்” எழுதிய நாட்களில் அவருடன் தொடர்பிலிருந்த “கௌமுதி” வார இதழின் இணை ஆசிரியர் “பழவிள ரமேசன்” அவர்களின் கட்டுரை ஒன்று. மற்றொன்று மதிலுகளைப் படமாக்கிய அடூரின் கட்டுரை (“வாக்கும் நோக்கும்”).

ரமேசனின் “மதில்களின் பணிமனை” அருமையான கட்டுரை ஜெ. “மதில்கள்” உருவான சூழலும் குறிப்புகளும் கொண்டது.  சரளம்! சுவாரஸ்யம்!. மலையாள சஞ்சிகைகளின் அப்போதைய இயங்குதளம், இதழ்களின் ஆசிரியர்களுக்கும் அங்கு பணிபுரிவர்களுக்கும் இடையிலான அந்நியோன்யமும் அன்பும், எழுத்தாளர்களின்/எழுத்தின் மீதான அபரிமிதமான மதிப்பும், பிரமிப்பும், நன்றியும், பிரேமையும், சுல்தான் பஷீரின் ஆளுமையும், அவரின் எழுத்து/படைப்பு உருக்கொள்ளும் பாங்கும்… என்று எல்லாவற்றைப் பற்றியும் ஒரு கீற்றுச் சித்திரம் தரும் பிரமாதமான கட்டுரை. ரமேசன் எழுத்துக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா?

1964-ல் டி.கே. பரீக்குட்டியின் சந்திரதாரா தயாரிப்பு நிறுவனத்திற்காக, அதன் புதிய படமான  “பார்கவி நிலைய”த்திற்கு (இயக்கம் வின்சென்ட்) தன் “நீல வெளிச்சம்” சிறுகதையைத் தழுவி ஒரு திரைக்கதையை எழுதித் தருகிறார் பஷீர். அதை எப்படியோ கைப்பற்றும் “கௌமுதி” வார இதழின் ஆசிரியர் கே. பாலகிருஷ்ணன், அவ்வருட ஓணச் சிறப்பிதழில் அத்திரைக்கதை வெளியாகும் என விளம்பரப்படுத்தி விடுகிறார். திரைக்கதை படம் வெளியாகும் முன்பே பிரசுரிக்கப்பட்டால் அது படத்தைப் பாதிக்கும் என பரீக்குட்டியும் வின்சென்ட்டும் பதட்டமடைகிறார்கள். பஷீர் திருவனந்தபுரம் வந்து பாலனைச் சந்திக்கிறார். பார்கவி நிலையம் திரைக்கதைக்குப் பதிலாக, கௌமுதியின் ஓணச் சிறப்பிதழுக்கு பஷீர் நான்கே நாட்களில் எழுதித் தந்த குறுநாவல்தான் “மதிலுகள்” என்று ரமேசன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மதிலுகளுக்காக பாலன் பஷீருக்குத் தந்தது ஒரு தொகை குறிப்பிடாத காசோலையை. அக்காசோலை பஷீரின் ஒரு குறிப்புடன் பாலனுக்கே திரும்பி வருகிறது. “மதிலுகள்” வெளியான அவ்வருட கௌமுதியின் ஓணச் சிறப்பிதழ் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கிறது. வெகு சீக்கிரம் சிறப்பிதழுக்கு இரண்டாம் பதிப்பு போட வேண்டியிருந்ததென்றும், பத்திரிகைகளின் வரலாற்றில் அது ஒரு அபூர்வ நிகழ்வென்றும் ரமேசன் குறிப்பிடுகிறார்.

***

ஒரு காட்சி

அழகான ஓர் இரவு. ஒரு சின்ன கிராமம். அதற்கு அப்பால் ஆயிரமாயிரம் மைல்களுக்கு வெறும் பொடி மணல் மண்டிய பாலைவனம். தொடுவானம்…விரிந்த தொடுவானம். நான் அந்தப் பாலைவனத்துக்கு வந்தேன். கிட்டத்தட்ட ஒரு மைல் நடந்திருப்பேன். சுற்றிலும் வெண்பட்டை விரித்துப் போட்டது போல மணற்பரப்பு மட்டுமே. அந்த மகா பிரபஞ்சத்தின் நட்ட நடுவில் தனியாக நான்…தனியாக. தலைக்கு மேலே கைநீட்டி தொட்டுவிடும் உயரத்தில் தெளிந்த முழுநிலா. கழுவிச் சுத்தம் செய்த நீலவானம். முழுநிலாவும் நட்சத்திரங்களும். மிகுந்த பிரகாசத்துடன் மின்னும் நட்சத்திரங்கள் கோடி…அனந்தகோடி. அமைதிப் பிரபஞ்சம்…

…திவ்யமான நிசப்த சங்கீதம்போல…நாத பிரம்மத்தின் முடிவில்லாத சுழற்சி. எல்லாம் அதில் மூழ்கிப் போயிருந்தன. ஆனந்த அற்புதத்துடன் நான் நின்றேன். என்னுடைய ஆச்சரியமும் ஆனந்தமும் கண்ணீராக மாறின. நான் அழுதேன். தாங்கமுடியாமல் அழுதுகொண்டு நான் மனிதர்களுக்கிடையில் ஓடினேன்.

“உலகமான உலகங்களையெல்லாம் படைத்தவனே, என்னைக் காப்பாற்று. எனக்குள் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உன்னுடைய இந்தப் பெரும் கருணை…இந்த மகா அற்புதம்…நான் மிகச் சிறிய உயிரல்லவா? என்னால் முடியவில்லை…என்னைக் காப்பாற்று”

ஒவ்வொரு புலர் காலைக்கும் பஷீரைப் போல “சலாம் பிரபஞ்சமே!” என்று பணிவான நமஸ்காரத்தை சமர்ப்பிக்கத்தான் வேண்டும்.

வெங்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2022 10:30

பஷீரின் மதிலுகள்

.

வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி

அன்பின் ஜெ,

நலம்தானே?

மூன்று வாரங்கள் முன்பு பஷீரின் “மதில்கள்” வாசித்தேன். முடித்துவிட்டு பஷீரைப் பற்றி இணையப் பக்கங்களில் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்தேன்.

பஷீர் ஒரு நூற்றாண்டின் களஞ்சியம்தான். அனுபவங்களின், வரலாற்றின் விதைகள் செறிந்த ஈரநிலம். இந்திய நிலம் முழுவதும் மட்டுமல்லாது சில விதேசி பரப்புகளையும் உள்ளடக்கிய அவரின் பயணம்/கற்றலின் வெளி/பெருவாழ்வு வியப்பும், பிரமிப்பும் அளித்தது.

திருவிதாங்கூர்  சமஸ்தானத்தின்  கோட்டயம்  மாவட்டத்தில்  வைக்கம்  தாலுகா  தலையோலப்பரம்பில்  1908-ல்  பிறந்தவர்  அப்துல் ரஹ்மான் முகம்மது  பஷீர்.  வைக்கத்தில் இடைநிலை பள்ளிக் காலத்தில்  அங்கு  சத்தியாகிரகப்  போராட்டத்திற்காக  வந்த  காந்தியைச்  சந்தித்ததிலிருந்து அவரின் வாழ்வு மாறுதல் கொள்கிறது. சுதேசி இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில்  இணைந்து  சுதந்திரப்  போராட்டத்தில்  பங்கெடுக்கிறார். கொச்சியில் சுதந்திரப் போராட்டம் மித கதியில் இருக்க மலபார் மாவட்டத்தில் நடைபெறும் உப்பு சத்தியாகிரகத்திற்கு சென்று கலந்துகொள்கிறார். போலீஸிடம் அடிகள் வாங்கி பலமுறை கேரளாவின் பல மாவட்டச் சிறைகளில் சிறை வாசம் அனுபவிக்கிறார். போராட்டக் களத்தில் ராஜ்குரு, பகத்சிங், சுக்தேவ் ஆகியோரின் அணுகுமுறையில் அபிமானம் கொண்டவர். காலனிய அரசுக்கு எதிராக ஒரு இயக்கத்தை துவங்கி நடத்துகிறார். இயக்கத்தின் புரட்சி இதழாக “உஜ்ஜீவன”த்தை வெளியிடுகிறார். அரசு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க கேரளாவை விட்டு வெளியேறுகிறார்.

அதன்பின்னான ஏழு வருட நீண்ட நாடோடி வாழ்வில் பஷீர் செய்யாத வேலைகளில்லை. சேகரிக்காத அனுபவங்களில்லை. ஆடு மேய்ப்பது, சமையல் செய்வது, ஜோசியம் சொல்வது, தினசரி செய்திப் பத்திரிகைகள் விற்பது, கணக்காளர், விளையாட்டு சாமான்கள் விற்பது, உணவக மேலாளர், வாட்ச்மேன் என்று கிடைத்த வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார். கங்கைக் கரையிலும், ஹிமாலய மடங்களிலும் இந்து துறவியாகவும், சுஃபி சன்யாசியாகவும் தேடலில் ஐந்து வருடங்கள் அலைந்திருக்கிறார்.

முப்பதுகளின் மத்தியில் எர்ணாகுளம் திரும்பும் அவர் வேறு வேலை ஏதும் கிடைக்காத நிலையில் ஹோட்டலில் பாத்திரம் கழுவியிருக்கிறார். ஒருமுறை ஜெயகேசரி நாளிதழின் அலுவலகம் சென்று அதன் ஆசிரியரிடம் வேலை ஏதும் கிடைக்குமா என்று கேட்க, வேலை எதுவும் காலியில்லையென்றும், வேண்டுமானால் பத்திரிகைக்கு கதை எழுதித் தந்தால் சன்மானம் தருவதாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இப்படியாக பஷீரின் முதல் கதை “என்டே தங்கம்”  1937-ல் ஜெயகேசரியில் வெளியாகி மிகப் பிரபலமடைந்தது. 41 வரை நவஜீவன் வார இதழில் தொடர்ந்து கதைகள் எழுதுகிறார். 41/42-ல் மறுபடி கைது செய்யப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறார்.

அங்குதான் பஷீர் நாராயணி எனும் இருபத்தியிரண்டு வயது பூவின் சுகந்தத்தை செவிகளில் வாங்கி மணம் நுகர்ந்து மனதுள் ஸ்பரிசிக்கிறார்.

***

பஷீரின் குட்டிக் குட்டி அத்தியாயங்கள் ஆழ்ந்து செறிந்து சரசரவென்று உள் விரியும் காட்சிகள்/வாழ்வின் பிரதிகள் மனதுக்கு மிக நெருக்கமானதாயிருந்தன. எங்கோ ஆழத்தில் எதனுடனோ ஒன்றுபவை போலத் தோன்றின.

குறுநாவலின் பின்னிணைப்பாக இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. பஷீர் “மதிலுகள்” எழுதிய நாட்களில் அவருடன் தொடர்பிலிருந்த “கௌமுதி” வார இதழின் இணை ஆசிரியர் “பழவிள ரமேசன்” அவர்களின் கட்டுரை ஒன்று. மற்றொன்று மதிலுகளைப் படமாக்கிய அடூரின் கட்டுரை (“வாக்கும் நோக்கும்”).

ரமேசனின் “மதில்களின் பணிமனை” அருமையான கட்டுரை ஜெ. “மதில்கள்” உருவான சூழலும் குறிப்புகளும் கொண்டது.  சரளம்! சுவாரஸ்யம்!. மலையாள சஞ்சிகைகளின் அப்போதைய இயங்குதளம், இதழ்களின் ஆசிரியர்களுக்கும் அங்கு பணிபுரிவர்களுக்கும் இடையிலான அந்நியோன்யமும் அன்பும், எழுத்தாளர்களின்/எழுத்தின் மீதான அபரிமிதமான மதிப்பும், பிரமிப்பும், நன்றியும், பிரேமையும், சுல்தான் பஷீரின் ஆளுமையும், அவரின் எழுத்து/படைப்பு உருக்கொள்ளும் பாங்கும்… என்று எல்லாவற்றைப் பற்றியும் ஒரு கீற்றுச் சித்திரம் தரும் பிரமாதமான கட்டுரை. ரமேசன் எழுத்துக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா?

1964-ல் டி.கே. பரீக்குட்டியின் சந்திரதாரா தயாரிப்பு நிறுவனத்திற்காக, அதன் புதிய படமான  “பார்கவி நிலைய”த்திற்கு (இயக்கம் வின்சென்ட்) தன் “நீல வெளிச்சம்” சிறுகதையைத் தழுவி ஒரு திரைக்கதையை எழுதித் தருகிறார் பஷீர். அதை எப்படியோ கைப்பற்றும் “கௌமுதி” வார இதழின் ஆசிரியர் கே. பாலகிருஷ்ணன், அவ்வருட ஓணச் சிறப்பிதழில் அத்திரைக்கதை வெளியாகும் என விளம்பரப்படுத்தி விடுகிறார். திரைக்கதை படம் வெளியாகும் முன்பே பிரசுரிக்கப்பட்டால் அது படத்தைப் பாதிக்கும் என பரீக்குட்டியும் வின்சென்ட்டும் பதட்டமடைகிறார்கள். பஷீர் திருவனந்தபுரம் வந்து பாலனைச் சந்திக்கிறார். பார்கவி நிலையம் திரைக்கதைக்குப் பதிலாக, கௌமுதியின் ஓணச் சிறப்பிதழுக்கு பஷீர் நான்கே நாட்களில் எழுதித் தந்த குறுநாவல்தான் “மதிலுகள்” என்று ரமேசன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மதிலுகளுக்காக பாலன் பஷீருக்குத் தந்தது ஒரு தொகை குறிப்பிடாத காசோலையை. அக்காசோலை பஷீரின் ஒரு குறிப்புடன் பாலனுக்கே திரும்பி வருகிறது. “மதிலுகள்” வெளியான அவ்வருட கௌமுதியின் ஓணச் சிறப்பிதழ் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கிறது. வெகு சீக்கிரம் சிறப்பிதழுக்கு இரண்டாம் பதிப்பு போட வேண்டியிருந்ததென்றும், பத்திரிகைகளின் வரலாற்றில் அது ஒரு அபூர்வ நிகழ்வென்றும் ரமேசன் குறிப்பிடுகிறார்.

***

ஒரு காட்சி

அழகான ஓர் இரவு. ஒரு சின்ன கிராமம். அதற்கு அப்பால் ஆயிரமாயிரம் மைல்களுக்கு வெறும் பொடி மணல் மண்டிய பாலைவனம். தொடுவானம்…விரிந்த தொடுவானம். நான் அந்தப் பாலைவனத்துக்கு வந்தேன். கிட்டத்தட்ட ஒரு மைல் நடந்திருப்பேன். சுற்றிலும் வெண்பட்டை விரித்துப் போட்டது போல மணற்பரப்பு மட்டுமே. அந்த மகா பிரபஞ்சத்தின் நட்ட நடுவில் தனியாக நான்…தனியாக. தலைக்கு மேலே கைநீட்டி தொட்டுவிடும் உயரத்தில் தெளிந்த முழுநிலா. கழுவிச் சுத்தம் செய்த நீலவானம். முழுநிலாவும் நட்சத்திரங்களும். மிகுந்த பிரகாசத்துடன் மின்னும் நட்சத்திரங்கள் கோடி…அனந்தகோடி. அமைதிப் பிரபஞ்சம்…

…திவ்யமான நிசப்த சங்கீதம்போல…நாத பிரம்மத்தின் முடிவில்லாத சுழற்சி. எல்லாம் அதில் மூழ்கிப் போயிருந்தன. ஆனந்த அற்புதத்துடன் நான் நின்றேன். என்னுடைய ஆச்சரியமும் ஆனந்தமும் கண்ணீராக மாறின. நான் அழுதேன். தாங்கமுடியாமல் அழுதுகொண்டு நான் மனிதர்களுக்கிடையில் ஓடினேன்.

“உலகமான உலகங்களையெல்லாம் படைத்தவனே, என்னைக் காப்பாற்று. எனக்குள் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உன்னுடைய இந்தப் பெரும் கருணை…இந்த மகா அற்புதம்…நான் மிகச் சிறிய உயிரல்லவா? என்னால் முடியவில்லை…என்னைக் காப்பாற்று”

ஒவ்வொரு புலர் காலைக்கும் பஷீரைப் போல “சலாம் பிரபஞ்சமே!” என்று பணிவான நமஸ்காரத்தை சமர்ப்பிக்கத்தான் வேண்டும்.

வெங்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2022 10:30

November 13, 2022

அகிலனும் சுந்தர ராமசாமியும்

 

அகிலன் தமிழ் விக்கி சுந்தர ராமசாமி தமிழ் விக்கி 

 

அன்புள்ள ஜெ,

இது அகிலன் நூற்றாண்டு. அதையொட்டி ஒரு கருத்தரங்கும் நிகழ்கிறது. (சாகித்ய அக்காதமியும் லயோலா கல்லூரியும் இணைந்து) அகிலனை சுந்தர ராமசாமி ஞானபீடம் வாங்கியதன் பொருட்டு வசைபாடியதும் நினைவுக்கு வருகிறது. இன்று இருவரையுமே எவரும் படிப்பதில்லை என்று ஒருவர் சொன்னார். அகிலன் நினைவுப்பரிசு பெற்றது நீங்கள் எழுதிய நாவல். நூற்றாண்டுவிழாவை ஒட்டி உங்கள் மதிப்பீடு என்ன?

ஆனந்த்

அன்புள்ள ஆனந்த்,

முதல்விஷயம் சுந்தர ராமசாமி அகிலனை வசைபாடவில்லை. போலிமுகங்கள்- அகிலனுக்கு ஞானபீடம் என்னும் கட்டுரை ஒரு கடுமையான எதிர்வினை. அகிலன் ஞானபீடம் பெற்றது அவருக்கும் அந்த அமைப்புக்குமான ஒரு தனிப்பட்ட நடவடிக்கை அல்ல என்று சுந்தர ராமசாமி சொன்னார். அதன் வழியாக ஒரு தரவரிசை உருவாக்கப்படுகிறது, அதை ஏற்கமுடியாது என்றார். அது தமிழின் முதன்மையான படைப்பாளிகளுக்கும் மேலாக அகிலனை நிறுவுகிறது என்றும், அது அடுத்த தலைமுறைக்கு தவறான சுட்டிக்காட்டலாக ஆகிவிடும் என்றும் சொன்னார்.

நான் அதைப்பற்றி சுந்தர ராமசாமியிடம் பேசியிருக்கிறேன். அப்படி அடுத்த தலைமுறை ஒன்றும் ‘தவறாக’ வாசிக்கப் போவதில்லை என்றேன். அப்படி அடுத்த தலைமுறையும் அவர் எழுத்தை வாசித்தால் அது எவ்வகையிலோ பண்பாட்டுக்கு முக்கியமானது என்றேன். (கல்கியும் சாண்டில்யனும் அப்படி வாசிக்கப்படுவார்கள் என்று சொன்னேன்). எப்படியோ ஒரு படைப்பின் தரம்தான் பயன்பாடாக ஆகிறது.

ஆனால் விருது பெறுவதை கண்டிப்பது சரிதான் என்று சொன்னேன். ஏனென்றால் அது சமகாலத்தில் அகிலன் சார்பில் ஒரு இலக்கிய மதிப்பீடு முன்வைக்கப்படும்போது அதற்கு மாற்றாக இருக்கும் இன்னொரு இலக்கிய மதிப்பீட்டை முன்வைப்பதுதான்.அதுவே இலக்கியச் செயல்பாட்டின் வழிமுறை. அதைச் செய்தாகவேண்டும்.

நான் செய்வதும் அதையே. என் விமர்சனங்கள் இலக்கியத்தை முன்வைப்பவை மட்டுமே. இன்றைக்கு ஒரு மிக அபத்தமான மனநிலையை காணமுடிகிறது. ஓர் இலக்கிய விமர்சனம் முன்வைக்கப்பட்டால் அதை உடனே அவதூறு, வசைபாடல் என சொல்ல ஆரம்பித்துவிடுகின்றனர். அதை தனிப்பட்ட தாக்குதலாகச் சித்தரித்துக் கொண்டால் அதை எதிர்கொள்ளலாம் என நினைக்கின்றனர்.

நான் அண்மையில் ஆதவன் பற்றி ஒரு சில வரிகள் எழுதினேன். அவர் பொதுவாசிப்புக்கு அணுக்கமான எழுத்துக்களை எழுதியவர், தன் சமகாலத்து உளவியல் கொள்கைகளை அப்படியே கையாண்டவர் என்று சொல்லி என் மதிப்பீட்டை எழுதியிருந்தேன். உடனே ஓர் அசடு ‘ஆதவனை அவதூறு செய்கிறீர்கள்’ என எனக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதியது. இலக்கிய விமர்சனம் என ஒன்றிருப்பதே இவர்களுக்கு தெரியவில்லை. இந்த அசடுகள் பேச ஒரு களம் அமைந்துள்ளது சமூகவலைத்தளம் வழியாக. இதுதான் இன்றைய முதன்மைப் பிரச்சினை.

அகிலன் ஒரு குறிப்பிட்ட எழுத்துமுறையின் முகம். சுந்தர ராமசாமி இன்னொரு எழுத்துமுறையின் முகம். இரண்டாவதை இலக்கியம் என்றும் முதலாமதை பொதுவாசிப்பு என்றும் சொல்கிறோம். இலக்கியக் களத்தில் சுந்தர ராமசாமி இன்றும் வாசிக்கப்படுகிறார். அதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்று இலக்கிய வாசிப்புக்கு வரும் எந்த இளைஞரும் ஓராண்டுக்குள் அவரை வாசித்துவிடுவார்கள். ஆனால் இன்றும்கூட பொதுவாசிப்புக் கூட்டம் அவரை வாசிக்கமுடியாது.

மறுபக்கம், அகிலன் அன்று பொதுவாசிப்புக் கூட்டத்தால் விரும்பி வாசிக்கப்பட்டார். பொதுவாசிப்புக் கூட்டம் எப்போதுமே சமகால எழுத்தையே வாசிக்கும். ஏனென்றால் சமகால ருசி, சமகால பிரச்சினைகளே பொதுவாசிப்பின் அடிப்படை. ஆகவே சென்றகால எழுத்தை அவர்கள் வாசிக்க மாட்டார்கள். இதனால் நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்களை இன்று வாசிப்பவர்கள் குறைவு.

ஆனால் அவர்களுக்கு முற்றிலும் வாசிப்பவர்கள் இல்லாமலாக மாட்டார்கள். பொதுவாசிப்புக்கான எழுத்திலேயேகூட ஒரு சிறு பகுதி என்றுமுள்ல சில கேள்விகளை தொட்டிருக்கலாம். வரலாற்றையும் பண்பாட்டையும் சொல்லலாம். அவை தொடர்ந்தும் வாசிக்கப்படும். அவ்வாறு தொடர்ச்சியாக ஒன்றுக்கும் மேற்பட்ட தலைமுறையினரால் ஒரு பொதுவாசிப்பு நூல் வாசிக்கப்பட்டால் அதை அத்தளத்தில் ஒரு கிளாஸிக் என்று சொல்லலாம்.

சுந்தர ராமசாமியின் எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் கொண்டது. அது வாசகனுடன் தனிப்பட்ட முறையில் உரையாடுகிறது. அவனுடைய அகவினாக்களை எதிர்கொள்கிறது. அவன் அதை வாசிப்பதன் வழியாக தானும் வளர்கிறான். ஆகவே அவன் அதை தன் ஆளுமையின் பகுதியாகவே கொண்டிருக்கிறான். அவரை அவன் ஏற்கலாம், மறுக்கலாம், கடந்துசெல்லலாம், ஆனால் அவர் அவன் அறிவுச்செயல்பாட்டின் ஒரு காலகட்டம்.

அகிலனின் எழுத்து வாசகனின் சுவாரசியத்தை இலக்காக்கியது. அதை வாசிக்கையில் அவன் ஒரு புனைவுலகில் திளைத்து ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மீள்கிறான். அதிலுள்ள நெருக்கடிகளை தான் அடைகிறான். உவகைகளை பெற்றுக்கொள்கிறான். மீண்டதும் அது ஒரு வாழ்க்கையனுபவம்போல ஆகிவிடுகிறது. ஒரு வாழ்க்கை நிகழ்வை நினைவுகூர்வதுபோல அதை அவன் பொதுவாக நினைவுகூர்வான். அதில் அவன் அகம் ஈடுபடவில்லை. அவன் அதனூடாக வளரவில்லை.

அகிலன் எழுதிய பிரச்சினைகள் அவர் எழுதிய காலகட்டத்திற்கு உரியவை. அவைதான் பொதுவாசிப்பு எழுத்தில் செல்லுபடி ஆகும். இன்று சித்திரப்பாவையை வாசிப்பவன் அதிலுள்ள அந்த ஒழுக்கப்பிரச்சினை என்ன என்றே புரிந்துகொள்ள மாட்டான். ஒருவன் ஒருத்தியை வலுக்கட்டாயமாக முத்தமிட்டாலே அவனை அவள் ஏற்றுக்கொள்ளவேண்டுமா என்ன? ஆகவே அவனுக்கு அதில் ஈர்ப்பு உருவாவதில்லை.

ஆனால் அந்த புனைவுலகம் வாசகனுக்கு மேலதிகமாக அறிதல்களையும், கனவுகளையும் அளித்தது என்றால் அந்த ஈர்ப்பு குறையாது. அவன் அதில் இருந்து பெற்றவை என்றும் உடனிருக்கும். அவ்வாறு சில பொதுவாசிப்பு நூல்கள் காலத்தை கடக்கின்றன. அவை தங்களை அறியாமலேயே இலக்கியமாகியிருக்கின்றன என்றே பொருள்.

தமிழ்ச்சூழலில் நமது வரலாற்றுச் சித்திரம், பண்பாட்டுச் சித்திரம் விரிவாகப் பதிவானது பொதுவாசிப்புக்குரிய நூல்களிலேயே. வாசகன் அவற்றை வாசிக்கையில் வரலாற்றில் வாழும் கனவுநிகர் அனுபவத்தை அடைகிறான். அந்த அனுபவம் தமிழ்ப்பண்பாட்டை, மதத்தை, வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவுகிறது. ஆகவே அவனில் ஒரு பண்பாட்டு அனுபவமாக நீடிக்கிறது. சாண்டில்யனின் யவனராணி வாசித்த ஒருவர் மாயவரம் அருகே பூம்புகாரை உணரமுடியும். அது ஓர் ஆழ்ந்த பண்பாட்டு அனுபவமே.

இதை முப்பதாண்டுகளாக எழுதி வருகிறேன். கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் உலகிலுள்ள தமிழ்ப்பண்பாட்டுச் சித்திரம், வரலாற்றுச் சித்திரம் நவீன இலக்கிய ஆக்கங்களில் இல்லை. நவீன இலக்கியம் தமிழில் நவீனத்துவ இலக்கியமாகவே இருந்தது. ஆகவே தனிமனித ஆழங்களை மட்டுமே கவனித்தது. தனிப்பட்ட சித்திரங்களையே அளித்தது.

ஆகவே பொதுவாசிப்புத் தளத்து நூல்களில் சில தமிழுக்கு முக்கியமானவை. அவற்றை இலக்கியமாக வாசிக்கவேண்டியதில்லை, பொதுவாசிப்புத்தள நூலாகவே எண்ணி வாசிக்கலாம். அகிலனின் வெற்றித்திருநகர், நா.பார்த்தசாரதியின் மணிபல்லவம், கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் போன்றவை உதாரணமானவை. கல்கியின் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் அவற்றில் முதன்மையானவை.

ஆகவே அகிலன் பற்றி ஓர் ஆய்வுக்கவனமும் மறுவாசிப்பும் நிகழுமென்றால் அது நல்லதுதான். இன்னும் விரிவாகவே செய்யவேண்டியது அது. அவர் படைப்புகளில் நீடிப்பதென்ன என்று பார்க்கலாம். அவை அன்று என்னவகையான உணர்வுநிலைகளை உருவாக்கின என ஆராயலாம். அது நம் பண்பாட்டுச் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள உதவும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2022 10:35

சாமுவேல் கிரீன்

எம்.வேதசகாயகுமாரின் மாணவி ஒருவர் தமிழில் மருத்துவக் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வைச் செய்தார். தமிழில் ஆங்கில மருத்துவக் கலைச்சொற்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் உருவானவை என அந்த ஆய்வேட்டை படித்து அறிந்துகொண்டேன். அதற்குக் காரணம் தமிழ்ச்சூழலில் முதலில் ஆங்கில மருத்துவம் வேரூன்றியது அங்குதான் என்பதே. குறிப்பாக டாக்டர் சாமுவேல் கிரீன். அவர் அங்கேயே உள்ளூர் மக்களுக்கு ஆங்கில மருத்துவம் கற்பித்து ஓரு மருத்துவ அணியையே உருவாக்கியவர்

சாமுவேல் கிரீன் சாமுவேல் கிரீன் சாமுவேல் கிரீன் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2022 10:34

வள்ளலார், கடிதம்

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

வள்ளலார் பற்றிய தமிழ்விக்கி பதிவைக் கண்டேன். அருட்பாவுக்கு தனிப் பதிவும், அருட்பா மருட்பா விவாதத்திற்கு தனிப்பதிவும் உள்ளது. தொழுவூர் வேலாயுத முதலியார், தி.ம.பானுகவி போன்ற வள்ளலார் அன்பர்களுக்குத் தனிப்பதிவு உள்ளது. திரிகோணமலை நா.கதிரைவேற்பிள்ளை போன்ற வள்ளலார் எதிர்ப்பாளர்களுக்கும் தனித்தனி பதிவுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய நூலே தமிழ்விக்கி பதிவுகளில் உள்ளது.

தொழுவூர் வேலாயுத முதலியார் வள்ளலார் பற்றி அளித்திருக்கும் சித்திரம் சிறப்பானது. ஆனால் என் கேள்வி என்னவென்றால் வள்ளலாரின் அருள்மிகு தோற்றம் நிறைய படங்களாக உள்ளபோது நீங்கள் அளித்திருக்கும் முகப்புப்படம் ஒருநூலின் அட்டையில் உள்ளதாக உள்ளது. அது மோசமான அச்சில் கையால் வரையப்பட்டதாக உள்ளது. அதை நீக்கியிருக்கலாம்.

அருட்சோதி பரமானந்தம்

அன்புள்ள அருட்சோதி அவர்களுக்கு,

கலைக்களஞ்சியத்தின் நெறிகளில் ஒன்று எவ்வகையிலும் மாற்றம் செய்யப்படாத புகைப்படங்களையே அந்த ஆளுமையின் தோற்றத்தைக் காட்ட பயன்படுத்தவேண்டும் என்பது. வண்ணம் சேர்க்கப்பட்ட, திருத்தப்பட்ட புகைப்படங்கள் ஆவணங்கள் அல்ல.

புகைப்படங்கள் இல்லாதபோது சிலைகள், ஓவியங்களை அளிக்கலாம். அவற்றை வரைந்தவர் சுட்டப்படவேண்டும். ஓவியம் அந்த ஆளுமை உயிருடனிருந்தபோதே வெளிவந்தது என்றால் அது ஆவணமே.

வள்ளலார் பற்றி புகைப்படங்கள் ஏதுமில்லை. அவர் இருந்தகாலத்தில் வெளிவந்த ஒரு நூலின் அட்டையே அந்தப்பதிவுடன் அளிக்கப்பட்டுள்ளது. அதுவே கிடைப்பவற்றில் தொன்மையானது.

ஆனால் அந்தப்பதிவுடன் பிற்கால ஓவியங்கள் மற்றும் சிலைகளும் அளிக்கப்பட்டுள்ளன

ஜெ

வள்ளலார் திருவருட்பா  தொழுவூர் வேலாயுத முதலியார் பேருபதேசம் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர்  அருட்பா மருட்பா விவாதம் ப. சரவணன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2022 10:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.