Jeyamohan's Blog, page 670

December 2, 2022

கார்த்திக் புகழேந்தியின் ‘கல்மனம்’

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்.

தங்கள் தளத்தில் விஷ்ணுபுரம் விருந்தினர் பட்டியல் வெளிவர ஆரம்பித்ததுமே, புதுவையில் எங்கள் சிறுகதைக் கூடலின் நண்பர்கள் சிலர் இனிவரும் வாரங்களில் நாம் விருந்தினர் பட்டியலில் உள்ள எழுத்தாளர்களின் கதைகளையே தெரிந்தெடுத்து விவாதிக்கலாம் என்ற போது அதனை அனைவரும் வரவேற்றனர்.

அதன்படி முதலாவது கதையைத் தேர்ந்தெடுக்கும் பணி என் பங்கிற்கு விடப்பட்டது.பொதுவாக எங்கள் குழுமத்திற்கு ஒரு கதையைப் பரிந்துரைப்பது என்றாலே பதட்டம் நிறைந்ததுதான்.விவாதத்தின்போது கதையின் குறை நிறைகள் பற்றிக் காரசாரமான விவாதம் ஓடிக்கொண்டிருக்கும்போது, கதையை அக்கு வேறு ஆணி வேறு என்று பிரித்து மேயும்போது எழுதியவர் எங்கோ ஒரு மூலையில் நிம்மதியாகத் தன் அடுத்த கதைக்கான கருவை சமைத்துக் கொண்டிருப்பார்.ஆனால் இங்கு கதையைப் பரிந்துரை செய்தவர்தான் பிரசவ அறையின் முன் குறுக்கும் நெடுக்குமாக கையைப் பிசைந்துகொண்டு நடக்கும் புதுத் தகப்பன் ரேஞ்சுக்கு முகத்தை வைத்துக் கொண்டிருக்கவேண்டும். என்னாகுமோ? ஏதாகுமோ? என்று.

ஆனால் இந்தமுறை எனக்கு அந்தத் தவிப்பு நேரவில்லை.காரணம் நான் தேர்ந்தெடுத்தது கார்த்திக் புகழேந்தியின் ‘கல் மனம்’ என்ற சிறுகதையை. அது நிச்சயம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கும் என்று தெரிந்துவிட்டது.

தமிழ் விக்கியில் அவரைப் பற்றிய விவரக் குறிப்புகளை வாசித்து முடித்ததும் உசாத்துணையில் கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளில் எல்லாம் சென்று கிடைத்த சிறுகதைகளையெல்லாம் வாசித்தேன்.வாசிக்க வாசிக்க பிரமிப்பு கூடிக்கொண்டே போனது.’தல புராணம்’ என்ற கதையை வாசித்து மிரண்டு விட்டேன்.(என்ன இதுகள் இப்போல்லாம் நூற்றுக் கிழமாட்டம் எழுத ஆரம்பித்து விட்டதுகள் – மைண்ட் வாய்ஸ்).அவரது ’ஆரஞ்சு மிட்டாய் கதைகள்’ எல்லாமே மனோபாரதி விக்னேஸ்வரின் குரலில் கேட்கக் கிடைக்கிறது. அனைத்தையும் கேட்டேன்.அவரது தொகுப்புகளை வாங்கி வாசிக்க இன்னும் நேரம் கூடிவரவில்லையாயினும் இணையத்தில் படித்தது கேட்டது வரை அவரைப் பற்றிய ஒரு சித்திரத்தை வரைந்து கொள்ளமுடிந்தது.’அபாரம்’. ஆம் இந்த ஒற்றை வார்த்தையைத் தவிரவும் மேற்கொண்டு எழுத நான் வார்த்தைகளைத் துழாவத் தேவையில்லை.

நான் படித்து சிலாகித்த கார்த்திக் புகழேந்தியின் ’கல்மனம்’ என்ற சிறுகதையை ஒரு சோற்றுப் பதமாக  இங்கு முன் வைக்க விரும்புகிறேன்.

இக்கதையில் அவர் ஒரு சிறு புள்ளியை மையமாக வைத்து சம்பவங்களையும் பாத்திரங்களையும் கோர்த்துக் கோர்த்து, முக்கிய கதாபாத்திரமான சந்திராவின் எண்ண ஓட்டங்களாக சம்பவங்களை முன்னும் பின்னுமாக வைத்து  ஒரு நான்லீனியர் வடிவத்தில் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார். .சந்திராவின் அக்காவான மாரீஸ்வரியும் கணவனான சுப்ரமணியும் கதை நகர்த்தலுக்கு துணை செய்கிறார்கள்.மற்றபடி சந்திராவின் பாட்டியான கோமு ஆச்சியும், அவளது இரு பெண் பிள்ளைகளும் கதை ஓட்டத்திற்கு வலு சேர்க்கிறார்கள்.சந்திராவும் மாரீஸ்வரியும் அப்படியொரு அன்னியோன்யமாக, நகமும் சதையுமாகப் பழகுகிறார்கள்.என்ன நிறத்தை வைத்து இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும்.அது கோழிக்குஞ்சு சண்டைதான்.அடுத்த நிமிஷமே சகஜமாகிவிடும்.

அக்கா இருக்க தங்கை திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் குடும்பம் நடத்துகிறாள்.வயசுக்கு வரும் பக்குவத்தில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.அக்கா மாரீஸ்வரி நல்ல நிறமும் அதற்கேற்ற அழகும் கொண்டிருந்தாலும் தன் போலியோ பாதித்த கால்களைக் காரணம் காட்டி திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாக ஒற்றைக் காலில் நின்று( நின்று அல்ல உட்கார்ந்து – இதுவும் எழுத்தாளரின் அடிக்குறிப்பாக வருவதுதான்) தன் தையல் மெஷினின் உதவியால் தங்கையின் திருமணத்தை நடத்தி வாழ்க்கையை அர்த்தப் படுத்திக் கொள்கிறாள் .தங்கை சந்திரா இடையில் தலைப் பிரவசத்துக்கு வீட்டுக்கு வந்தவள்தான்அதன் பிறகு இடைப்பட்ட பதினான்கு வருடங்களில் அவளால் பிறந்த வீட்டிற்கு வர சந்தர்ப்பம் நேரவில்லை.(ஏன் நேரவில்லை என்பதுதான் கதையின் மையக் கரு).சந்திராவின் பிரவசத்தின் போது அவள் புருஷன் சுப்ரமணியமும் வந்திருந்தான்.இரண்டாவது பிரசவம் கூட திருப்பூரிலேயே நடந்தது.

அதன் பிறகு என்றோ ஒரு நாள் கலவி முடித்து வசமாக அவள் மேல் காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு “ஆனாலும் உங்கக்கா நல்ல கலர்ல..தப்பா எடுத்துக்க மாட்டேன்னா ஒண்னு சொல்றேன்.கால் மட்டும் நல்லா இருந்திருந்தா அவங்களையே கட்டியிருப்பேன் தெரியுமா’ என்று அவன் கூறிய வார்த்தைகள் அவளது நெஞ்சை ராவிக் கொண்டே இருக்கிறது.அந்தச் சொல் அவள் மனதில் நட்டு வைத்த கல்லாக நின்று கனத்துக் கொண்டே இருக்கிறது.ஆம் அதுதான் ’கல்மனம்’.

இதை ஒரு வாசகனாக அசை போட்டுப் பார்க்கையில் ஆமாம் அவளை அச்சொல் எந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.அதுவும் அந்த வார்த்தையை அவன் ஒரு சந்தோஷமான சந்தர்ப்பத்தில் வேடிக்கையாக கூறியிருப்பானாக இருந்திருந்தால் இந்த அளவிற்கு ஆழம் கொண்டிருக்க முடியாது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கலவியை முடித்த தருணத்தில் உச்ச கட்ட இன்பத்தை அனுபவித்த திருப்தியில் கண்கள் லயித்திருக்கும் போது இப்படியொரு வார்த்தையை காதருகே கேட்க நேர்ந்த எந்தப் பெண்ணால்தான் சீரணித்துக்கொள்ள முடியும்? அப்போ.. இவன் இத்தனை நேரமும் முயங்கிக் கொண்டிருந்தது அக்கா மாரீஸ்வரியோடுதானா? என்கிற நினைப்பு அவளைப் படுபாதாளத்தில் தள்ளி விட்டதுபோல் இருந்தது. அவனை  மட்டுமல்ல அக்கா மாரீஸ்வரியையும் சேர்த்தே அவள் மனதிலிருந்து விலக்கி வைக்கிறாள்.இது காரணம் கொண்டே அவள் தலைப் பிரசவத்திற்குப் பிறகு கடந்த பதினான்கு  வருடங்களில் ஒரு முறை கூட பிறந்த மண்ணை மிதிக்கவோ அக்காவைப் பார்க்கவோ எண்ணம் கொண்டாளில்லை. மனதைக் கல்லாக்கிக் கொள்கிறாள்.அதுதான் ‘கல்மனம்’.

இதில் வாசகன் தானே இட்டு நிரப்பிக் கொள்ளும் இடம் வேறொன்றும் இருக்கிறது.மணமான புதிதில் சந்திராவின் கணவனை குடிப்பழக்கம் உள்ளவனாகக் காட்டாத எழுத்தாளர் பின்னர் அவன் எந்நேரமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருபவனாகவும் குடிமயக்கத்திலேயே கலவியில் ஈடுபடுபவனாகவும் காட்டுகிறார்.அவளும் இயந்திரத்தனத்துடன் கடமையே என்று படுத்துக் கிடக்கிறாள். இது அவன் அச்சொல்லை உதிர்த்த நாளிலிருந்து தொடர்வதாகவும் அவன் குடிப்பழக்கமும் அதன் பிறகுதான் தொடங்கியதாகவும் பொருள் கொள்ள முடிகிறது.

கார்த்திக் புகழேந்தியின் இக்கதையில் வரும் சில அழகியல் தருணங்களையும்,உவமைகளையும்,  நுண்சித்தரிப்புகளையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சந்திரா தன் மகள்களின் வளர்ச்சியைக் கண்டு கவலை கொள்ளும் இடத்தில் ‘பனங்கிழங்கு தரைக்கடியில் பருவங்கண்டது மாதிரி எப்போ விடைத்தது என்றே தெரியாமல் திம்மென்று வளர்ந்து நிற்கிறாள் பெரியவள்’ என்ற உவமை நயமாக இருக்கிறது. தன் அக்காவின் நிறத்தைப் பற்றிக் கூறும்போது ‘சிவப்பு முள்ளங்கிக்குப் பக்கத்தில் வைத்து ஒத்திக் கொள்ளும் நிறம்’ என்று வியப்பதும் நல்ல ஒப்புமை.

’அக்கா இருக்குமுன்ன தங்கச்சிக்குக் கல்யாணமா’ என்று கேட்காதவர்கள் யார்தான் ஏழுவீட்டுக் காம்பவுண்டைக் கடந்து போனார்கள்.மாரீஸ்வரி எல்லாரின் வாய் ஒழுக்கையும் தையல் மெஷின் சத்தத்தில் மடித்துத் தைத்துவிட்டாள் – என்ற வரிகளைப் படித்ததும் அடடா! என்று சொல்லாமல் கடந்து செல்ல முடியாது.

“ஏ ரேணு,உமா..டீவி பார்த்தது போதும்,ரெண்டுபேரும் வாங்கடீ.”

“ஏ அம்மா கூப்புடறாங்க வா..” தோள்பட்டை வரைக்கும் இறங்கிக் கிடந்த பனியனைக் கழுத்தை ஒட்டித் தள்ளிக் கொண்டு சின்னக் குட்டி ரேணுகா முதல் ஆளாக ஓடி வந்து சந்திராவின் காலைக் கட்டிக் கொண்டாள் – என்ற இடத்தில் வரும் அந்தச் சித்தரிப்பை ஒரு புன்னகையுடனே வாசிக்கமுடியும்.

சிறுகதையின் ஆரம்பத்தில் சந்திராவின் இடுப்பொடிக்கும் வீட்டுக்காரியங்களை வரிசையாகக் கூறிவரும் எழுத்தாளர் ‘வாசலில் ஊடுபுள்ளியில் தரதரவென நாலு கம்பிகளை இழுத்து முடித்து நிமிர்ந்தபோது’ – என்ற வரிகளைப் படித்ததும் எழுத்தாளரும் அப்போதே நம் மனதில் நிமிர்ந்து நின்றுவிடுகிறார்.

வாழ்க்கையைப் படம் பிடித்தது போல் அமைந்த கதைகளும் சரி, நாட்டரியல் கதைக் களன்களானாலும் சரி, அபுனைவான கட்டுரை வடிவிலான ஆக்கங்களானாலும் சரி இவரது கூறு முறைகளும் இவரது வார்த்தைக் கிடங்கின் விஸ்தீரணமும் வியக்குபடி இருக்கிறது என்பதை உரக்கச் சொல்லியே ஆகவேண்டும்.

இத்தளத்தில் இவரைப் பற்றி வரும் வரை தேடியறியாமல் இருந்துவிட்டோமே என்ற ஆதங்கம் மனதை உறுத்துகிறது.பரவாயில்லை இப்பொழுதுதான் அவர் குன்றிலிட்ட விளக்காகிப் போனாரே.இனி அவரது வாசகர் வட்டம் பெருகும் என்பதில் சந்தேகமில்லை.

’வாழ்த்துக்கள் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி’

விஜயன் வேலுச்சாமி

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2022 10:31

December 1, 2022

பனிநிலங்களில்- 2

பனிநிலங்களில்- 1

ஐரோப்பிய நகர்களில் பார்ப்பதற்குரியவை என நான்கு உண்டு. ஒன்று, அங்குள்ள தேவாலயங்கள். இரண்டு, அருங்காட்சியகங்கள். மூன்று ஆற்றங்கரை. நான்கு, நகர்ச்சதுக்கம். ஐரோப்பா முழுக்க அவை மிகமிகச் சிறப்பாகப் பேணப்படுகின்றன. பல நகர்களில் அவை மேலோட்டமான பார்வைக்கு ஒன்றுபோலிருக்கும். ஆற்றங்கரைகள் கூட விளிம்பு கட்டப்பட்டு, நன்கு பேணப்பட்ட மரங்களுடன் முன்பு பார்த்தவை போலிருக்கும்.

ஆனால் கொஞ்சம் ஆர்வமும், பண்பாடுசார்ந்த வாசிப்பும் இருந்தால் அவை அந்நகர் பற்றிய ஒரு சித்திரத்தை அளித்துவிடும். எந்த ஊரையும் கொஞ்சம் தெரிந்துகொண்டு பார்க்கவேண்டும். ஆனால் முற்றிலும் தகவல்களால் நம் மண்டையை நிறைத்துக்கொள்ளாமல் புதிய அவதானிப்புகளுக்கு இடமும் விடவேண்டும்.

ஸ்டாக்ஹோமில் நாங்கள் இரண்டு அருங்காட்சியகங்களைக் கண்டோம். நகரில் ஐம்பதுக்கும் மேல் அருங்காட்சியகங்கள் உள்ளன, எங்களுக்கு இருந்தது இரண்டே நாட்கள்தான். அத்துடன் ஸ்டாக்ஹோமின் குளிர்காலத்தில் ஒரே நாளில் பல இடங்களைச் சுற்றிப்பார்க்கவும் முடியாது. குளிர் மிக எளிதாக களைப்படையச் செய்துவிடும்.

அருங்காட்சியகங்களை நுணுக்கமாகப் பார்க்கவேண்டும் என்றால் ஒருநாளில் இரண்டு அருங்காட்சியகங்களுக்குமேல் பார்ப்பதும் உகந்தது அல்ல. அருங்காட்சியகங்களின் ஒவ்வொரு பொருளுக்கும் நீண்ட வரலாறுண்டு. அவற்றை முழுமையாகத் தெரிந்துகொள்வதென்பது ஒரு நூலை படிப்பதுபோல. நாம் தமிழக அருங்காட்சியகங்களையே பெரும்பாலும் பார்த்திருப்பதில்லை.

மாமன்னர் குஸ்தாவ் வாசா சிலை

நார்டிக் அருங்காட்சியகம் Nordic Museum ஸ்டாக்ஹோம் நகரின் மையத்திலேயே உள்ளது. 1873ல் ஸ்வீடிஷ் மானுடவியல் ஆய்வாளர் ஆர்தர் ஹேஸிலியஸ் (Artur Hazelius) இதை அமைத்தார். இப்போதுள்ள கட்டிடம் ஐசக் குஸ்தாவ் க்ளாஸன் (Isak Gustaf Clason) என்ற பொறியாளரால்  1926ல் கட்டப்பட்டது.

இந்த அருங்காட்சியகம் ஐரோப்பியச் சிற்பக்கலையின் சிறந்த மாதிரிகளில் ஒன்று. முகப்பு எடுப்பு சிவப்பான மணற்கற்களைச் செதுக்கி அடுக்கி எழுப்பப்பட்டது. ஐரோப்பாவின் நுண்ணுணர்வுகளில் முக்கியமானது மாபெரும் கட்டிடங்களை மிகச்சிறப்பாக பார்வையிடுவதற்குரிய வகையில் முகப்பில் இருக்கும் திறந்தவெளி. இந்தியாவில் பெரும்பாலான கோபுரங்களை எங்கு நின்றாலும் சரியாகப்பார்க்க முடியாது

ஓங்கிய நுழைவாயிலும், உச்சியில் கும்மட்டமும் கொண்ட கட்டிடம். சுவர்களில் புடைத்தெழுந்த தேவதை முகங்கள். பிடரிமயிர் பட்டைகள் கொண்ட சிம்மங்கள். உயரந்து எழுந்து செல்லும் படிகள். சிவப்புக்கல்லால் ஆன கட்டிடங்களுடன் வெண்கல கைப்பிடிகளும் குமிழ்களும் சட்டங்களும் அற்புதமாக இணைந்துகொள்கின்றன.

உள்ளே பருமனான தூண்களின்மேல் எழுந்த வளைவான விதானங்கள் இணைந்து கூரையாகின. கல்வளைவே வலுவான கூரையாக ஆகிறது. டச்சு செல்வாக்கு கொண்ட டேனிஷ் கட்டிடமுறை எனப்படுகிறது.தமிழகத்திலும் வடக்கன்குளம் போன்ற பழைமையான தேவாலயங்களில் இக்கட்டுமானம் உண்டு.

இத்தகைய கட்டிடங்களைப் பார்க்கையில் எல்லாம் தோன்றும் ஓர் எண்ணம் உண்டு. கல்லும் சுதையும் செங்கல்லும் மரமும்கூட நீடிக்கும் கட்டுமானப்பொருட்கள். சிமிண்ட் அரைநூற்றாண்டை கடப்பதில்லை. நம்முடைய பெரிய நினைவுக்கட்டிடங்களை சிமிண்டில் கட்டுவது வீண். சிமிண்ட் ஒரு தலைமுறைக்காலம் வாழ்வதற்குரிய வீடுகளைக் கட்டுவதற்கே உரியது.

முகப்புக் கூடத்தில் ஸ்வீடனின் மாமன்னர் குஸ்தாவ் வாசாவின் மாபெரும் சிலை. அருகே பனிக்கட்டிகளாலான உலகை கண்ணாடியாலும் வெவ்வேறுவகை ஒளிச்சிதறல்களாலும் உருவாக்கியிருக்கின்றனர். பனிப்பரப்புகளில் விளையாடுபவர்கள் கறுப்புக் கண்ணாடிகளில்லாமல் செல்வதில்லை. அங்கேயே வாழும் மக்களின் கண்களே இடுங்கலானவை, குறைவான ஒளியை உள்ளே விடுபவை.

ஸ்வீடன் நிலத்தில் சென்ற ஆயிரம் ஆண்டுகளாக திகழ்ந்த வாழ்க்கையின் சித்திரத்தை உருவாக்கும் வீட்டு உபயோகப்பொருட்கள், கருவிகள், போர்க்கலங்கள், வீட்டு மாதிரிகள் என பார்த்துக்கொண்டே சென்றோம். இவற்றை மிகக்கூர்ந்து பார்க்கமுடியாது, அருங்காட்சியகத்தில் அதற்கு பொழுதில்லை. ஆனால் பார்த்துச்செல்லும்போதே ஒரு கனவு போல ஒரு வாழ்க்கைச்சித்திரம் நம்முள் உருவாகிறது.

பொருட்களுக்கு சட்டென்று குறியீடாக, படிமமாக மாறும் இயல்பு உண்டு. ஒவ்வொரு பொருளையும் நம் அகம் அடையாளமாக அர்த்தப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. ஆகவே அருங்காட்சியகங்கள் எந்த எழுத்தாளனுக்கும் மிக முக்கியமானவை. அவை ஒரு சமூகத்தின் ஆழுள்ளத்தின் காட்சிவடிவம் போன்றவை. படிமக்களஞ்சியங்கள்.நான் சென்ற நாற்பதாண்டுகளாக அருங்காட்சியகங்களை இந்தியாவிலும் வெளியிலும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவை என் கனவுக்கும் புனைவுக்கும் அளித்த கொடை என்ன என்பதை மதிப்பிடவே முடியாது.

அங்கிருந்த ஒவ்வொரு பொருளிலும் குறிப்புணர்த்தப்பட்டது குளிர்தான்.ஸ்வீடனின் பண்பாட்டை உருவாக்கியதே பனிதான் என்று பட்டது. பனிச்சறுக்கு வண்டிகள், பனியிலும் செல்லும் மென்மரக் குடைவுப் படகுகள். இல்லப்பொருட்கள் பெரும்பாலானவை மென்மரத்தாலானவை. உலோகங்கள் குளிர்ந்து பனிபோல ஆகிவிடுவதனால் மரக்கரண்டிகள், மரத்தாலான தட்டுகள் பிரியத்துக்குரியவையாக இருந்துள்ளன. சிப்பிகளை பொருத்தி உருவாக்கப்பட்ட அழகிய சூப் கரண்டிகளைக் கண்டேன்.

ரெயிண்டீர், மான்கள், எல்க்குகள் போன்றவை அன்றைய வாழ்க்கையின் அடித்தளங்கள். மிக வளர்ந்து வலுவான பேரரசாக ஆனபின்னரும்கூட ஸ்வீடனின் வாழ்க்கையில் வேட்டைச்சமூகத்தின் இயல்புகள் ஓங்கியிருந்தன.  உணவு என்பது பெரும்பாலும் இறைச்சியே. ஆடை என்பது தோல் மற்றும் மென்மயிர். கருவிகள் பெரும்பகுதியும்  கொம்புகளும் எலும்புகளும்  கொண்டு செய்யப்பட்டவை. இங்கே நிலம் வேளாண்மைக்குரியதாக இருக்கும் காலம் ஆறுமாதம்தான். ஆனால் குளிர்நிறைந்த பெருங்காடுகள் செறிந்த நிலம் இது. முடிவில்லாமல் விலங்குகள் கிடைக்கின்றன. அறுவடை என்பதே வேட்டைதான். இன்றும் வேட்டைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி உள்ளது.

ஸ்வீடனின் தொல்குடிகள் ஸாமி பழங்குடியினர். ஃபின்லாந்திலும் ரஷ்யாவின் சில பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்கள் உண்மையில் ஆர்ட்டிக் பகுதியின்ல் உருவானவர்கள் அல்ல. தெற்கிலிருந்து வெவ்வேறு படையெடுப்புகளால் வடக்கே துரத்தப்பட்டு ஆர்ட்டிக் வெளியில் வாழ்வதற்கு தங்களை தகவமைவு செய்துகொண்டவர்கள். அவர்களின் இல்லங்கள், கணப்புகள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் அருங்காட்சியகத்தில் உள்ளன. டென்மார்க்கின் வடக்கே இன்றும் ஏறத்தாழ அதே வாழ்க்கையில் அவர்கள் இருக்கிறார்கள்.

அருங்காட்சியகப் பொருட்கள் வழியாகவே இன்றைய ஸ்வீடன் வரை ஒரு கலாச்சாரப் பயணத்தை மானசீகமாக நடத்த முடியும். பதினைந்தாம்  நூற்றாண்டின் ஒரு பிரபுவின் விருந்து அறை வெள்ளியாலான தட்டுகள், கரண்டிகள், உணவுப்பொருட்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதன் அருகிலேயே பதினெட்டாம் நூற்றாண்டின் அரசவிருந்தின் மேஜை.

சட்டென்று ஸ்வீடன் மிகச்செல்வ வளம் மிக்க நாடாக ஆகிவிட்டிருப்பதை ஒவ்வொரு பொருளிலும் வந்த மாற்றம் வழியாகக் காணலாம். வெள்ளி, தங்கம், அருங்கற்கள், சீனப் பீங்கான்கள். அப்படியே பத்தொன்பதாம் நூற்றாண்டு இல்லம். அருகிலேயே 1960 களின் ஓர் இல்லம். வரலாறு பொருட்களின் வழியாக காலம் பெருகி ஓடுகிறது.

ஸ்வீடனின் வரலாற்றில் முக்கியமான ஓர் அருங்காட்சியகமாக கருதப்படுவது வாசா அருங்காட்சியகம் (Vasa Museum)  1626-1628  ல் ஸ்வீடனின் மாமன்னர் குஸ்தாவ் அடால்ஃபஸ் ( Gustavus Adolphus ) ஸ்வீடனின் கடல்வல்லமையின் வெளிப்பாடாக ஒரு பெரும் போர்க்கப்பலை உருவாக்கினார். டென்மார்க்கின் தச்சர்கள் வரவழைக்கப்பட்டு அது அமைக்கப்பட்டது. அந்தக்கப்பல் கட்டப்படும்போதே அதன் பொறியியல் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அது வழக்கத்திற்கு மாறாக இரண்டு அடுக்கு பீரங்கி வாய்கள் கொண்டது. அதன் உயரத்திற்கு தேவையான அளவுக்கு அகலம் கொண்டிருக்கவில்லை. (பார்க்க வாசா வரலாறு)

அந்தக் கப்பல் ஆகஸ்ட்10, 1628ல் இல்  கடலில்   இறக்க நாள் குறிக்கப்ப்பட்டது. அரசர் கடற்கரைக்கு வந்தார்.ஞாயிற்றுக்கிழமை மாதாகோயிலுக்குச் சென்றபின் ஏறத்தாழ பத்தாயிரம் பேர்  கடற்கரையில் கூடினர். கப்பல் பிரார்த்தனைக்கு பின் கடலில்  செலுத்தப்பட்டது.

ஆனால் அஎளிய அலையிலேயே கப்பல் ஊசலாட தொடங்கியது .பாய்கள் விரிக்கப்பட்டதும் கப்பல் ஒருபக்கமாகச் சாய்ந்தது. பீரங்கித்துளைகளின் கீழ் அடுக்குகள் வழியாக நீர் உள்ளே பெருகி வந்தது. கப்பல் அத்தனைபேர் கண்ணெதிரே மூழ்கியது. கப்பலில் இருந்த பெரும்பாலானவர்களை கரையில் இருந்து சென்ற மீனவர்கள் காப்பாற்றினர். ஆனாலும் கிட்டத்தட்ட இருபதுபேர் அதனுடன் சேர்ந்து மூழ்கினர்.

அக்கப்பலில் இருந்த ஐம்பது வெண்கலப் பீரங்கிகள் 1700 களிலேயே எடுக்கப்பட்டுவிட்டன. 105 அடி ஆழத்தில் கரையோரமாக கடலுக்குள் அப்படியே   சேதமடையாமல் இருந்தது. 1961ல் அதை மீட்டெடுக்கும் முயற்சி தொடங்கப்பட்டு  படிப்படியாக  வெளியே கொண்டு வந்தார்கள்.

அதை வெளியே கொண்டுவந்த விதம் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. கப்பலின் அடியில் அடிநிலச் சேற்றில் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு அதன்வழியாக ஆழ்நீச்சலாளர்கள் சென்று இரும்பு வடங்களை செலுத்தினர். பின்னர் மின்தூக்கிகளால் கப்பல் படிப்படியாக மேலே கொண்டுவரப்பட்டது. மிக அபாயகரமான இந்தப் பணியில் எந்த விபத்தும் நிகழவில்லை. நீரின் எடையால் கப்பல் உடையவுமில்லை.

வாசா கப்பல்தளம் (Wasavarvet) அழைக்கப்பட்ட இடத்தில்  ஒரு காட்சிப்பொருளாக அக்கப்பல் நின்றிருந்தது. 1988ல் ல் அது தாமிரத்தகடுகளால் மேற்கூரையிடப்பட்ட மாபெரும் கட்டிடம் ஒன்றுக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்று அது ஓர் அருங்காட்சியகம். நடுக்காலகட்டக் கப்பல் ஒன்றை எந்த சேதமும் இல்லாமல் முழுமையாகவே பார்ப்பதற்கான வாய்ப்பு அதுதான்.

வாசா போர்க்கலம் 226 அடி நீளமும் 172 அடி உயரமும் ஏழு அடுக்குகளும் கொண்டது.  பொன்னியின் செல்வனில் காட்டப்படும் சோழர்களின் கப்பலின் அதே வடிவம். முந்நூறு போர்வீரர்கள் அதில் பயணம் செய்ய முடியும். அந்தக் காலத்துக் கப்பல்களில் மிக அதிகமான பீரங்கிகளை ஏற்றும் அமைப்பு கொண்டது அது. நீள்வட்ட வடிவம். கிண்ணம் போன்ற கலக்குவை. மேலே இரண்டு பாய்மரங்களில் நான்கு அடுக்குகளாகப் பாய்கள்.

குஸ்தாவ் அடால்ஃபஸ் தன்னை ரோமாபுரி அரசர்களின் வழித்தோன்றலாக எண்ணிக்கொண்டவர்.  ஆகவே கப்பலில் ரோமாபுரி மன்னர்க்ள் நீரோ, கலிகுலா போன்றவர்களின் சிற்பங்கள் உள்ளன. பழைய வைக்கிங் தொன்மங்கள் சார்ந்த சிற்பங்கள். ஏராளமான சிங்க முகங்கள். இச்சிற்பங்கள் பண்டைய பரோக் பாணியில் செந்நிறமும் பொன்னிறமுமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தன

அன்று ஸ்வீடனின் முதன்மை எதிரி போலந்துதான். போலந்தில் ஓர் அரசக்குடிமகனை இழிவுசெய்யவேண்டுமென்றால் இருக்கைக்கு அடியில் செல்லவைத்து நாய்போல குரைக்கச் செய்வார்கள். அதன்பின்னரே அவனுக்கு மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்கப்படும். மாலுமிகள் மலம்கழிக்கும் இடத்தில் அவ்வாறு ஒரு போலந்து அரசகுடியினர் பெஞ்சுக்கடியில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் சிற்பம் உள்ளது.

நான்கு அடுக்குகளாக அமைந்துள்ள பால்கனிகளில் இருந்து அந்தக் கப்பலை பார்க்க முடியும். முதல் பார்வைக்கு சிறிது என தோன்றும். கீழிறங்கிச் சென்று பார்த்தால் அதன் பேருருவம் மூச்சடைக்கச் செய்யும். மேலிருந்து மீண்டும் பார்த்தால் ஒரே பார்வையில் அது கண்ணுக்குத் தெரிந்து சிறிது என தோன்றும்.

கீழே அக்கப்பலில் மூழ்கியவர்களின் எலும்புகள் மீட்கப்பட்டு, மண்டையோடுகளைக் கொண்டு அவர்களின் முகங்கள் வடிவமைக்கப்பட்டு சிலைகளாக நிறுவட்டப்பட்டுள்ளன. ஒரு பெண் உட்பட 15 பேர்.செத்தவர்கள் சங்கடமான முகபாவனைகளுடன் அறியாத நமது காலத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.

பலவகையிலும் டைட்டானிக்கை நினைவூட்டியது அக்கப்பல். அதுவும் ஓர் ஆணவவெளிப்பாடு. முதல் மிதத்தலிலேயே மூழ்கியது. பின்னர் கண்டடையப்பட்டது. சென்ற நூற்றாண்டுகளில் இதைப்போன்ற மரக்கலங்கள் உலகம் முழுக்க கடலில் அலைந்தன. பெரும்பாலானவை போர்களில் எரிந்து மூழ்கின. எஞ்சியவை பழுதடைந்து உடைக்கப்பட்டன. அந்த மரக்கலத்தின் நிமிர்வைப் பார்க்கையில் அதிலுள்ள கனவும் ஆணவமும் வியப்பூட்டின. மறுகணமே கடலை எண்ணும்போது அந்த மரக்கலம் ஒரு சிறு சருகுக்கு நிகரானது என்ற எண்ணமும் வந்தது.

குஸ்தாவ் அடால்ஃபஸின்  பெருமிதம் அக்கப்பல். அது மூழ்கியது அவருக்கு பெரிய அடியாக இருந்திருக்கும். அத்துடன் அவர் அழிந்திருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. ஸ்வீடனின் கடற்படையை பெருக்கி, ஒருங்கிணைந்த ஸ்வீடனை உருவாக்கியவராகவே அவர் வரலாற்றில் இடம்பெறுகிறார். நீண்டகாலம் (1594–1632) ஆட்சிசெய்த ஸ்வீடிஷ் மன்னர்களில் ஒருவர். வாசா கப்பல் என்பது ஒருங்கிணைவின்மையின் குறியீடாக இன்று இலக்கியச் சொல்லாடலில் இடம்பெற்றுவிட்டது.

உண்மையில் இப்படி ஒரு மூழ்கிய கப்பலை காட்சிப்பொருளாக்கி, கிட்டத்தட்ட கேலிப்பொருளாக்கி, ஸ்வீடன் அடைவது என்ன? முன்னோரின் பெருமையை செயற்கையாக உருவாக்கிக் கொள்வதன் இழிவில் இருந்து அது இதனூடாக தப்பிக்கிறது. உண்மையை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிவை அடைகிறது. தொழில்நுட்பம் என்பது தொடர்ச்சியான பிழைகளைதலே என தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறது.

தாழ்வுணர்ச்சி அற்ற, தன்னம்பிக்கையால் உருவான ஒரு சமூகத்தாலேயே கடந்தகாலச் சரிவுகளையும் இழிவுகளையும் நிமிர்வுடன் எதிர்கொள்ள முடியும். அப்போதுதான் அது நிகழ்காலத்தை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.  இந்தியாவில் நாம் இரு அதீதநிலைகளில் உலவும் மக்கள். முன்னோர் மீதான அதீத போற்றுதல், அதீத தூற்றுதல். நம் பார்வை யதார்த்தத்தைச் சந்திப்பதே இல்லை.

(மேலும்)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2022 10:35

பனிநிலங்களில்- 2

பனிநிலங்களில்- 1

ஐரோப்பிய நகர்களில் பார்ப்பதற்குரியவை என நான்கு உண்டு. ஒன்று, அங்குள்ள தேவாலயங்கள். இரண்டு, அருங்காட்சியகங்கள். மூன்று ஆற்றங்கரை. நான்கு, நகர்ச்சதுக்கம். ஐரோப்பா முழுக்க அவை மிகமிகச் சிறப்பாகப் பேணப்படுகின்றன. பல நகர்களில் அவை மேலோட்டமான பார்வைக்கு ஒன்றுபோலிருக்கும். ஆற்றங்கரைகள் கூட விளிம்பு கட்டப்பட்டு, நன்கு பேணப்பட்ட மரங்களுடன் முன்பு பார்த்தவை போலிருக்கும்.

ஆனால் கொஞ்சம் ஆர்வமும், பண்பாடுசார்ந்த வாசிப்பும் இருந்தால் அவை அந்நகர் பற்றிய ஒரு சித்திரத்தை அளித்துவிடும். எந்த ஊரையும் கொஞ்சம் தெரிந்துகொண்டு பார்க்கவேண்டும். ஆனால் முற்றிலும் தகவல்களால் நம் மண்டையை நிறைத்துக்கொள்ளாமல் புதிய அவதானிப்புகளுக்கு இடமும் விடவேண்டும்.

ஸ்டாக்ஹோமில் நாங்கள் இரண்டு அருங்காட்சியகங்களைக் கண்டோம். நகரில் ஐம்பதுக்கும் மேல் அருங்காட்சியகங்கள் உள்ளன, எங்களுக்கு இருந்தது இரண்டே நாட்கள்தான். அத்துடன் ஸ்டாக்ஹோமின் குளிர்காலத்தில் ஒரே நாளில் பல இடங்களைச் சுற்றிப்பார்க்கவும் முடியாது. குளிர் மிக எளிதாக களைப்படையச் செய்துவிடும்.

அருங்காட்சியகங்களை நுணுக்கமாகப் பார்க்கவேண்டும் என்றால் ஒருநாளில் இரண்டு அருங்காட்சியகங்களுக்குமேல் பார்ப்பதும் உகந்தது அல்ல. அருங்காட்சியகங்களின் ஒவ்வொரு பொருளுக்கும் நீண்ட வரலாறுண்டு. அவற்றை முழுமையாகத் தெரிந்துகொள்வதென்பது ஒரு நூலை படிப்பதுபோல. நாம் தமிழக அருங்காட்சியகங்களையே பெரும்பாலும் பார்த்திருப்பதில்லை.

மாமன்னர் குஸ்தாவ் வாசா சிலை

நார்டிக் அருங்காட்சியகம் Nordic Museum ஸ்டாக்ஹோம் நகரின் மையத்திலேயே உள்ளது. 1873ல் ஸ்வீடிஷ் மானுடவியல் ஆய்வாளர் ஆர்தர் ஹேஸிலியஸ் (Artur Hazelius) இதை அமைத்தார். இப்போதுள்ள கட்டிடம் ஐசக் குஸ்தாவ் க்ளாஸன் (Isak Gustaf Clason) என்ற பொறியாளரால்  1926ல் கட்டப்பட்டது.

இந்த அருங்காட்சியகம் ஐரோப்பியச் சிற்பக்கலையின் சிறந்த மாதிரிகளில் ஒன்று. முகப்பு எடுப்பு சிவப்பான மணற்கற்களைச் செதுக்கி அடுக்கி எழுப்பப்பட்டது. ஐரோப்பாவின் நுண்ணுணர்வுகளில் முக்கியமானது மாபெரும் கட்டிடங்களை மிகச்சிறப்பாக பார்வையிடுவதற்குரிய வகையில் முகப்பில் இருக்கும் திறந்தவெளி. இந்தியாவில் பெரும்பாலான கோபுரங்களை எங்கு நின்றாலும் சரியாகப்பார்க்க முடியாது

ஓங்கிய நுழைவாயிலும், உச்சியில் கும்மட்டமும் கொண்ட கட்டிடம். சுவர்களில் புடைத்தெழுந்த தேவதை முகங்கள். பிடரிமயிர் பட்டைகள் கொண்ட சிம்மங்கள். உயரந்து எழுந்து செல்லும் படிகள். சிவப்புக்கல்லால் ஆன கட்டிடங்களுடன் வெண்கல கைப்பிடிகளும் குமிழ்களும் சட்டங்களும் அற்புதமாக இணைந்துகொள்கின்றன.

உள்ளே பருமனான தூண்களின்மேல் எழுந்த வளைவான விதானங்கள் இணைந்து கூரையாகின. கல்வளைவே வலுவான கூரையாக ஆகிறது. டச்சு செல்வாக்கு கொண்ட டேனிஷ் கட்டிடமுறை எனப்படுகிறது.தமிழகத்திலும் வடக்கன்குளம் போன்ற பழைமையான தேவாலயங்களில் இக்கட்டுமானம் உண்டு.

இத்தகைய கட்டிடங்களைப் பார்க்கையில் எல்லாம் தோன்றும் ஓர் எண்ணம் உண்டு. கல்லும் சுதையும் செங்கல்லும் மரமும்கூட நீடிக்கும் கட்டுமானப்பொருட்கள். சிமிண்ட் அரைநூற்றாண்டை கடப்பதில்லை. நம்முடைய பெரிய நினைவுக்கட்டிடங்களை சிமிண்டில் கட்டுவது வீண். சிமிண்ட் ஒரு தலைமுறைக்காலம் வாழ்வதற்குரிய வீடுகளைக் கட்டுவதற்கே உரியது.

முகப்புக் கூடத்தில் ஸ்வீடனின் மாமன்னர் குஸ்தாவ் வாசாவின் மாபெரும் சிலை. அருகே பனிக்கட்டிகளாலான உலகை கண்ணாடியாலும் வெவ்வேறுவகை ஒளிச்சிதறல்களாலும் உருவாக்கியிருக்கின்றனர். பனிப்பரப்புகளில் விளையாடுபவர்கள் கறுப்புக் கண்ணாடிகளில்லாமல் செல்வதில்லை. அங்கேயே வாழும் மக்களின் கண்களே இடுங்கலானவை, குறைவான ஒளியை உள்ளே விடுபவை.

ஸ்வீடன் நிலத்தில் சென்ற ஆயிரம் ஆண்டுகளாக திகழ்ந்த வாழ்க்கையின் சித்திரத்தை உருவாக்கும் வீட்டு உபயோகப்பொருட்கள், கருவிகள், போர்க்கலங்கள், வீட்டு மாதிரிகள் என பார்த்துக்கொண்டே சென்றோம். இவற்றை மிகக்கூர்ந்து பார்க்கமுடியாது, அருங்காட்சியகத்தில் அதற்கு பொழுதில்லை. ஆனால் பார்த்துச்செல்லும்போதே ஒரு கனவு போல ஒரு வாழ்க்கைச்சித்திரம் நம்முள் உருவாகிறது.

பொருட்களுக்கு சட்டென்று குறியீடாக, படிமமாக மாறும் இயல்பு உண்டு. ஒவ்வொரு பொருளையும் நம் அகம் அடையாளமாக அர்த்தப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. ஆகவே அருங்காட்சியகங்கள் எந்த எழுத்தாளனுக்கும் மிக முக்கியமானவை. அவை ஒரு சமூகத்தின் ஆழுள்ளத்தின் காட்சிவடிவம் போன்றவை. படிமக்களஞ்சியங்கள்.நான் சென்ற நாற்பதாண்டுகளாக அருங்காட்சியகங்களை இந்தியாவிலும் வெளியிலும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவை என் கனவுக்கும் புனைவுக்கும் அளித்த கொடை என்ன என்பதை மதிப்பிடவே முடியாது.

அங்கிருந்த ஒவ்வொரு பொருளிலும் குறிப்புணர்த்தப்பட்டது குளிர்தான்.ஸ்வீடனின் பண்பாட்டை உருவாக்கியதே பனிதான் என்று பட்டது. பனிச்சறுக்கு வண்டிகள், பனியிலும் செல்லும் மென்மரக் குடைவுப் படகுகள். இல்லப்பொருட்கள் பெரும்பாலானவை மென்மரத்தாலானவை. உலோகங்கள் குளிர்ந்து பனிபோல ஆகிவிடுவதனால் மரக்கரண்டிகள், மரத்தாலான தட்டுகள் பிரியத்துக்குரியவையாக இருந்துள்ளன. சிப்பிகளை பொருத்தி உருவாக்கப்பட்ட அழகிய சூப் கரண்டிகளைக் கண்டேன்.

ரெயிண்டீர், மான்கள், எல்க்குகள் போன்றவை அன்றைய வாழ்க்கையின் அடித்தளங்கள். மிக வளர்ந்து வலுவான பேரரசாக ஆனபின்னரும்கூட ஸ்வீடனின் வாழ்க்கையில் வேட்டைச்சமூகத்தின் இயல்புகள் ஓங்கியிருந்தன.  உணவு என்பது பெரும்பாலும் இறைச்சியே. ஆடை என்பது தோல் மற்றும் மென்மயிர். கருவிகள் பெரும்பகுதியும்  கொம்புகளும் எலும்புகளும்  கொண்டு செய்யப்பட்டவை. இங்கே நிலம் வேளாண்மைக்குரியதாக இருக்கும் காலம் ஆறுமாதம்தான். ஆனால் குளிர்நிறைந்த பெருங்காடுகள் செறிந்த நிலம் இது. முடிவில்லாமல் விலங்குகள் கிடைக்கின்றன. அறுவடை என்பதே வேட்டைதான். இன்றும் வேட்டைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி உள்ளது.

ஸ்வீடனின் தொல்குடிகள் ஸாமி பழங்குடியினர். ஃபின்லாந்திலும் ரஷ்யாவின் சில பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்கள் உண்மையில் ஆர்ட்டிக் பகுதியின்ல் உருவானவர்கள் அல்ல. தெற்கிலிருந்து வெவ்வேறு படையெடுப்புகளால் வடக்கே துரத்தப்பட்டு ஆர்ட்டிக் வெளியில் வாழ்வதற்கு தங்களை தகவமைவு செய்துகொண்டவர்கள். அவர்களின் இல்லங்கள், கணப்புகள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் அருங்காட்சியகத்தில் உள்ளன. டென்மார்க்கின் வடக்கே இன்றும் ஏறத்தாழ அதே வாழ்க்கையில் அவர்கள் இருக்கிறார்கள்.

அருங்காட்சியகப் பொருட்கள் வழியாகவே இன்றைய ஸ்வீடன் வரை ஒரு கலாச்சாரப் பயணத்தை மானசீகமாக நடத்த முடியும். பதினைந்தாம்  நூற்றாண்டின் ஒரு பிரபுவின் விருந்து அறை வெள்ளியாலான தட்டுகள், கரண்டிகள், உணவுப்பொருட்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதன் அருகிலேயே பதினெட்டாம் நூற்றாண்டின் அரசவிருந்தின் மேஜை.

சட்டென்று ஸ்வீடன் மிகச்செல்வ வளம் மிக்க நாடாக ஆகிவிட்டிருப்பதை ஒவ்வொரு பொருளிலும் வந்த மாற்றம் வழியாகக் காணலாம். வெள்ளி, தங்கம், அருங்கற்கள், சீனப் பீங்கான்கள். அப்படியே பத்தொன்பதாம் நூற்றாண்டு இல்லம். அருகிலேயே 1960 களின் ஓர் இல்லம். வரலாறு பொருட்களின் வழியாக காலம் பெருகி ஓடுகிறது.

ஸ்வீடனின் வரலாற்றில் முக்கியமான ஓர் அருங்காட்சியகமாக கருதப்படுவது வாசா அருங்காட்சியகம் (Vasa Museum)  1626-1628  ல் ஸ்வீடனின் மாமன்னர் குஸ்தாவ் அடால்ஃபஸ் ( Gustavus Adolphus ) ஸ்வீடனின் கடல்வல்லமையின் வெளிப்பாடாக ஒரு பெரும் போர்க்கப்பலை உருவாக்கினார். டென்மார்க்கின் தச்சர்கள் வரவழைக்கப்பட்டு அது அமைக்கப்பட்டது. அந்தக்கப்பல் கட்டப்படும்போதே அதன் பொறியியல் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அது வழக்கத்திற்கு மாறாக இரண்டு அடுக்கு பீரங்கி வாய்கள் கொண்டது. அதன் உயரத்திற்கு தேவையான அளவுக்கு அகலம் கொண்டிருக்கவில்லை. (பார்க்க வாசா வரலாறு)

அந்தக் கப்பல் ஆகஸ்ட்10, 1628ல் இல்  கடலில்   இறக்க நாள் குறிக்கப்ப்பட்டது. அரசர் கடற்கரைக்கு வந்தார்.ஞாயிற்றுக்கிழமை மாதாகோயிலுக்குச் சென்றபின் ஏறத்தாழ பத்தாயிரம் பேர்  கடற்கரையில் கூடினர். கப்பல் பிரார்த்தனைக்கு பின் கடலில்  செலுத்தப்பட்டது.

ஆனால் அஎளிய அலையிலேயே கப்பல் ஊசலாட தொடங்கியது .பாய்கள் விரிக்கப்பட்டதும் கப்பல் ஒருபக்கமாகச் சாய்ந்தது. பீரங்கித்துளைகளின் கீழ் அடுக்குகள் வழியாக நீர் உள்ளே பெருகி வந்தது. கப்பல் அத்தனைபேர் கண்ணெதிரே மூழ்கியது. கப்பலில் இருந்த பெரும்பாலானவர்களை கரையில் இருந்து சென்ற மீனவர்கள் காப்பாற்றினர். ஆனாலும் கிட்டத்தட்ட இருபதுபேர் அதனுடன் சேர்ந்து மூழ்கினர்.

அக்கப்பலில் இருந்த ஐம்பது வெண்கலப் பீரங்கிகள் 1700 களிலேயே எடுக்கப்பட்டுவிட்டன. 105 அடி ஆழத்தில் கரையோரமாக கடலுக்குள் அப்படியே   சேதமடையாமல் இருந்தது. 1961ல் அதை மீட்டெடுக்கும் முயற்சி தொடங்கப்பட்டு  படிப்படியாக  வெளியே கொண்டு வந்தார்கள்.

அதை வெளியே கொண்டுவந்த விதம் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. கப்பலின் அடியில் அடிநிலச் சேற்றில் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு அதன்வழியாக ஆழ்நீச்சலாளர்கள் சென்று இரும்பு வடங்களை செலுத்தினர். பின்னர் மின்தூக்கிகளால் கப்பல் படிப்படியாக மேலே கொண்டுவரப்பட்டது. மிக அபாயகரமான இந்தப் பணியில் எந்த விபத்தும் நிகழவில்லை. நீரின் எடையால் கப்பல் உடையவுமில்லை.

வாசா கப்பல்தளம் (Wasavarvet) அழைக்கப்பட்ட இடத்தில்  ஒரு காட்சிப்பொருளாக அக்கப்பல் நின்றிருந்தது. 1988ல் ல் அது தாமிரத்தகடுகளால் மேற்கூரையிடப்பட்ட மாபெரும் கட்டிடம் ஒன்றுக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்று அது ஓர் அருங்காட்சியகம். நடுக்காலகட்டக் கப்பல் ஒன்றை எந்த சேதமும் இல்லாமல் முழுமையாகவே பார்ப்பதற்கான வாய்ப்பு அதுதான்.

வாசா போர்க்கலம் 226 அடி நீளமும் 172 அடி உயரமும் ஏழு அடுக்குகளும் கொண்டது.  பொன்னியின் செல்வனில் காட்டப்படும் சோழர்களின் கப்பலின் அதே வடிவம். முந்நூறு போர்வீரர்கள் அதில் பயணம் செய்ய முடியும். அந்தக் காலத்துக் கப்பல்களில் மிக அதிகமான பீரங்கிகளை ஏற்றும் அமைப்பு கொண்டது அது. நீள்வட்ட வடிவம். கிண்ணம் போன்ற கலக்குவை. மேலே இரண்டு பாய்மரங்களில் நான்கு அடுக்குகளாகப் பாய்கள்.

குஸ்தாவ் அடால்ஃபஸ் தன்னை ரோமாபுரி அரசர்களின் வழித்தோன்றலாக எண்ணிக்கொண்டவர்.  ஆகவே கப்பலில் ரோமாபுரி மன்னர்க்ள் நீரோ, கலிகுலா போன்றவர்களின் சிற்பங்கள் உள்ளன. பழைய வைக்கிங் தொன்மங்கள் சார்ந்த சிற்பங்கள். ஏராளமான சிங்க முகங்கள். இச்சிற்பங்கள் பண்டைய பரோக் பாணியில் செந்நிறமும் பொன்னிறமுமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தன

அன்று ஸ்வீடனின் முதன்மை எதிரி போலந்துதான். போலந்தில் ஓர் அரசக்குடிமகனை இழிவுசெய்யவேண்டுமென்றால் இருக்கைக்கு அடியில் செல்லவைத்து நாய்போல குரைக்கச் செய்வார்கள். அதன்பின்னரே அவனுக்கு மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்கப்படும். மாலுமிகள் மலம்கழிக்கும் இடத்தில் அவ்வாறு ஒரு போலந்து அரசகுடியினர் பெஞ்சுக்கடியில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் சிற்பம் உள்ளது.

நான்கு அடுக்குகளாக அமைந்துள்ள பால்கனிகளில் இருந்து அந்தக் கப்பலை பார்க்க முடியும். முதல் பார்வைக்கு சிறிது என தோன்றும். கீழிறங்கிச் சென்று பார்த்தால் அதன் பேருருவம் மூச்சடைக்கச் செய்யும். மேலிருந்து மீண்டும் பார்த்தால் ஒரே பார்வையில் அது கண்ணுக்குத் தெரிந்து சிறிது என தோன்றும்.

கீழே அக்கப்பலில் மூழ்கியவர்களின் எலும்புகள் மீட்கப்பட்டு, மண்டையோடுகளைக் கொண்டு அவர்களின் முகங்கள் வடிவமைக்கப்பட்டு சிலைகளாக நிறுவட்டப்பட்டுள்ளன. ஒரு பெண் உட்பட 15 பேர்.செத்தவர்கள் சங்கடமான முகபாவனைகளுடன் அறியாத நமது காலத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.

பலவகையிலும் டைட்டானிக்கை நினைவூட்டியது அக்கப்பல். அதுவும் ஓர் ஆணவவெளிப்பாடு. முதல் மிதத்தலிலேயே மூழ்கியது. பின்னர் கண்டடையப்பட்டது. சென்ற நூற்றாண்டுகளில் இதைப்போன்ற மரக்கலங்கள் உலகம் முழுக்க கடலில் அலைந்தன. பெரும்பாலானவை போர்களில் எரிந்து மூழ்கின. எஞ்சியவை பழுதடைந்து உடைக்கப்பட்டன. அந்த மரக்கலத்தின் நிமிர்வைப் பார்க்கையில் அதிலுள்ள கனவும் ஆணவமும் வியப்பூட்டின. மறுகணமே கடலை எண்ணும்போது அந்த மரக்கலம் ஒரு சிறு சருகுக்கு நிகரானது என்ற எண்ணமும் வந்தது.

குஸ்தாவ் அடால்ஃபஸின்  பெருமிதம் அக்கப்பல். அது மூழ்கியது அவருக்கு பெரிய அடியாக இருந்திருக்கும். அத்துடன் அவர் அழிந்திருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. ஸ்வீடனின் கடற்படையை பெருக்கி, ஒருங்கிணைந்த ஸ்வீடனை உருவாக்கியவராகவே அவர் வரலாற்றில் இடம்பெறுகிறார். நீண்டகாலம் (1594–1632) ஆட்சிசெய்த ஸ்வீடிஷ் மன்னர்களில் ஒருவர். வாசா கப்பல் என்பது ஒருங்கிணைவின்மையின் குறியீடாக இன்று இலக்கியச் சொல்லாடலில் இடம்பெற்றுவிட்டது.

உண்மையில் இப்படி ஒரு மூழ்கிய கப்பலை காட்சிப்பொருளாக்கி, கிட்டத்தட்ட கேலிப்பொருளாக்கி, ஸ்வீடன் அடைவது என்ன? முன்னோரின் பெருமையை செயற்கையாக உருவாக்கிக் கொள்வதன் இழிவில் இருந்து அது இதனூடாக தப்பிக்கிறது. உண்மையை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிவை அடைகிறது. தொழில்நுட்பம் என்பது தொடர்ச்சியான பிழைகளைதலே என தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறது.

தாழ்வுணர்ச்சி அற்ற, தன்னம்பிக்கையால் உருவான ஒரு சமூகத்தாலேயே கடந்தகாலச் சரிவுகளையும் இழிவுகளையும் நிமிர்வுடன் எதிர்கொள்ள முடியும். அப்போதுதான் அது நிகழ்காலத்தை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.  இந்தியாவில் நாம் இரு அதீதநிலைகளில் உலவும் மக்கள். முன்னோர் மீதான அதீத போற்றுதல், அதீத தூற்றுதல். நம் பார்வை யதார்த்தத்தைச் சந்திப்பதே இல்லை.

(மேலும்)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2022 10:35

சாரு நிவேதிதா – வாழ்வும் கலையும். அய்யனார் விஸ்வநாத்

ரண்டு வாரங்களுக்கு முன்பு நான் வாழும் சூழலைப் பற்றியும், எழுத்துச் செயல்பாட்டுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத என் தினசரிகளைக் குறித்தும், சமூக வலைத்தளத்தில் ஒரு பிலாக்கணம் வைத்திருந்தேன். பெரிதாக ஒன்றுமில்லை, தமிழில் எழுதுவோர் அனைவருக்கும் ஏற்படும் நள்ளிரவு உளச் சோர்வுகள்தாம். அதையும் எழுதித்தான் தீர்க்க வேண்டும் என்பதால் எழுதி வைத்துவிட்டு உறங்கப்போனேன். அடுத்த நாள் காலை அலைபேசியை உயிர்ப்பித்ததும், சாருவிடமிருந்து வந்திருந்த குரல்வழிச் செய்தி ஒன்று  திரையில் மினுங்கிக் கொண்டிருந்தது. உறங்கி எழுந்த அதிகாலையில் அவரது வசீகரமான குரலில் எழுத்தின் வழியான விடுதலை என்கிற பார்வையைக் கேட்டபோது என் சகல சோர்வுகளும் காணாமல் போயின. ஒரு துறையின் முன்னோடி அல்லது வழிகாட்டி எனும் சொல்லாகத் திகழ்பவர்களின் இயல்பு இதுதானென்று நினைக்கிறேன். தமிழ்ச்சூழலைப் பொறுத்தமட்டில் எழுத்திற்காக முழுமையாகத் தம்மையும் தம் வாழ்வையும் ஒப்புக் கொடுப்பது என்பது கிட்டத்தட்டத் தற்கொலைக்குச் சமம்.  சாரு அதைத் துணிவாக ஏற்றுக் கொண்டவர். எழுத்து வழியாக மட்டுமே சகலத்தையும் உருவாக்கிக் கொள்வதும், எழுதுவதன் மூலமாக மட்டுமே விடுதலையையும் களிப்பையும் அடையும் வெகு சில எழுத்தாளர்களில் சாரு முதன்மையானவர்.  சாருவின் எழுத்து மட்டுமல்ல அவரது வாழ்வும், இயல்பும், இருப்பும், கொண்டாடப்பட வேண்டியது.

”நான் நரகத்திலிருந்துதான் எழுதுகிறேன். அங்கிருந்து தப்பிக்க எனக்கு எழுத்தை விட்டால் வேறொரு வழியும் கிடையாது. ஒருவேளை வாழ்வு சொர்க்கமாக இருந்திருந்தால் அதை நான் கொண்டாடிக் கொண்டிருந்திருப்பேன் எழுதி இருக்க மாட்டேன்” எனச் சொல்லும் சாரு என்னளவில் ஒரு முழுமையான ’ஹெடோனிஸ்ட்’  இதை அவருடைய முதல் சந்திப்பிலேயே அறிந்து கொண்டேன். வருடம் சரியாக நினைவில் இல்லை. 2008 அல்லது 2009 ஆக இருக்கலாம். விடுமுறையில் என் சொந்த ஊரான திருவண்ணாமலையில் இருந்தேன். அப்போதெல்லாம் பெரும்பாலும் பவா வின் வீடுதான் புகலிடம். நாள் முழுக்க ஆட்கள் வருவதும் போவதுமாக எப்போதும் அந்த வீடு மனிதர்களால் நிறைந்திருக்கும். இலக்கியமும், சினிமாவும், பேச்சும், மறுபேச்சும், நிரம்பிக் கிடந்த நாட்கள் அவை.

ஒரு நாள் பவா, சாரு திருவண்ணாமலைக்கு எஸ்.கே.பி கருணாவின் அழைப்பின் பேரில் வருவதாகவும் அவரை இன்றிரவு சந்திக்கலாமென்றும் சொன்னார். எனக்கொரு சிறிய பதற்றம் தொற்றிக் கொண்டது. அப்போதெல்லாம் என்னுடைய வலைத்தளத்தில் மிகுந்த ஆக்ரோஷமாக எழுதிக் கொண்டிருந்தேன். இணைய வெளி தரும் அசட்டுத் துணிச்சலால், கலக பிம்பம், மீறல், மிகையதார்த்தம், கறார் விமர்சனம் என்றெல்லாம் சலம்பிக் கொண்டு திரிந்ந்தேன். உலகத்தின் சகல பிரச்சினைகளுக்கும் காரணம் தமிழ் எழுத்தாளர்கள்தாம் என்றொரு அசைக்கமுடியாத நம்பிக்கையும் இருந்ததால் தினசரி காலை எழுந்தவுடன் சாரு மற்றும் ஜெ வின் வலைத்தளத்தை சிரத்தையாகத் திறந்து, அன்று அவர்கள் எழுதியிருப்பதை வாசித்துவிட்டு இருவரையும் விமர்சிப்பதை வாடிக்கையாகவும் வைத்திருந்தேன். என்னைச் சந்திப்பதை சாரு விரும்புவாரா என்கிற சந்தேகமும் இருந்தது. பவா அந்த எண்ணத்தை மாற்றினார். தமிழ் இலக்கியச் சூழலில் நடந்த இலக்கிய விமர்சனங்கள், சண்டைகள், இதுவரை நிகழ்ந்த அடிதடிகள் குறித்தெல்லாம் விலாவரியாகப் பேசி இதுவே ஆரோக்கியமான சூழல் என்கிற பார்வையையும் தந்தார்.

சாருவின் ’ஜீரோ டிகிரி’யை பத்தொன்பது வயதில் வாசித்தேன். பட்டயப் படிப்பிற்கு பிறகு ஓசூரில் அண்ணனுடன் வசித்திருந்தேன். புத்தகம் வாசிப்பதை முழுநேர வேலையாக வைத்திருந்த காலகட்டம் அது. தேடித்தேடி வாசிக்கும் நண்பர்களும் உடனிருந்தனர். அந்நாட்களில் தீவிரமாக நவீன இலக்கியத்தை வாசித்தும் விவாதித்தும் கொண்டிருந்தோம். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயமோகன், வங்க மொழிபெயர்ப்பு நாவல்கள் எனப் பேச்சுப் போய்க்கொண்டிருக்கும். வஸந்த விஹார் காஃபி, பைக் பயணங்கள், மெல்லிய நடுங்கும் குளிரில் ஓசூரின் மலைக்கோயில் உச்சியிலோ அல்லது படிக்கட்டுகளிலோ அமர்ந்தபடி விவாதிப்போம். பெரும்பாலும் எல்லா மாலைகளிலும் சந்தித்துக் கொள்வோம். இலக்கியம் முன்னிரவுகளாக இருந்த நாட்கள் அவை. அப்படி ஒரு நாளில்தான் நண்பரொருவர் ஜீரோ டிகிரியைத் தந்தார். ஒரே இரவில் வாசித்து முடித்துவிட்டேன். இப்படி ஒரு நாவலை, மையமே இல்லாத படைப்பை அதற்கு முன்பு வாசித்ததில்லை. நாவல் எனக்குப் பிடித்திருந்ததா இல்லையா எனக் குழப்பமாக இருந்தது. அதை விட இப்படியெல்லாம் எழுத முடியுமா என்கிற ஆச்சரியமும் எரிச்சலும் கலந்த உணர்வும் ஒட்டிக் கொண்டுவிட, நூலைக் கொடுத்த நண்பரைத் தேடி ஓடினேன். அவரும் கிட்டத்தட்ட என் மனநிலையில் தான் இருந்தார். இருவரும் பேசிப் பேசி ஓய்ந்தோம்.

அதற்குப் பிறகு சாருவை நான் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு துபாய் வந்துசேர்ந்த பிறகு இணையதளத்தின் வழியாகத்தான் வாசித்தேன். இல்லை அவரது வலைத்தளத்திலே பழியாகக் கிடந்தேன் என்பதுதான் சரியாக இருக்கும். சாரு பரிந்துரைக்கும் சினிமாப் படங்கள், இசைத் தொகுப்புகள், நூல்கள் என ஒன்றையும் விடமாட்டேன். அந்நிய வாழ்வில் நேரமிகுதியும், இணையத் தொடர்புகளும் இருந்ததால் எல்லாவற்றையும் சுலபமாகத் தேடிப் பிடிக்க முடிந்தது. அவருடைய ரசனையும், தேர்வுகளும், விருப்பங்களும் என்னுடைய இயல்புக்கு சரியாகப் பொருந்தின. அதுவரை என்னிடம் குறைவாக இருந்த நுண்ணுணர்வும், தன் சார்ந்த அக்கறையையும் சாருவின் எழுத்து எனக்கு மீட்டுத் தந்தது. மூன்று மாதத்தில் அவர் வலைத்தளத்தில் எழுதியிருந்த அத்தனைக் கட்டுரைகளையும், கடிதங்களையும், குறிப்புகளையும் வாசித்து விட்டிருந்தேன். அவருடைய புதுப் பதிவுக்காக ஒவ்வொரு நாளும் கைநடுங்கக் காத்திருந்தேன். அச்சிலும் ராஸலீலா முதல் வரம்பு மீறிய பிரதிகள் வரை எல்லாவற்றையும் தருவித்து வாசித்துக் கொண்டிருந்தேன்.

இந்தத் தொடர் வாசிப்பு தந்த துணிச்சலும் விமர்சனங்களுக்கான பின்னணியாக இருந்தது. அவரை முழுமையாக வாசித்து அறிந்திருந்ததால் கருத்துத் தளத்தில் சாருவுடன் முரண்படும் புள்ளிகளும் உருவாகின. பிறகு ஓரிரு மாதங்களில் அவரே அந்தப் புள்ளிகளையும் அதன் வழி உருவான கோலங்களையும் அழிப்பார். மனதளவில் அவருடன் காதல்-மோதல் உறவுதான் இருந்தது. ஆனால் ஒரு முறை கூடப் பேச முயலவில்லை. என் கூச்ச சுபாவத்தால் மின்னஞ்சல் கூட அனுப்பத் தயங்கினேன்.

இந்தப் பின்புலத்தோடு சாருவை சந்தித்தேன். அவரிடம் எந்தத் தயக்கமும் இல்லை. வெகு இயல்பாகப் பழகினார். ஒருவரை முதன்முறையாகச் சந்திக்கும்போது எழும் தயக்கங்கள் எனக்கு ஏராளம் உண்டு. அதிலேயும் தமிழின் முக்கியமான எழுத்தாளரைச் சந்திக்கையில் அவரை எப்படி அழைப்பதென்றொரு தயக்கம் நம் அனைவருக்கும் இருக்கும். சாரு அதற்கு இடங்கொடுக்கவே இல்லை. பார்த்த உடனேயே ’சாரு’ என்றொரு அழைப்பு தாமாகவே நாவில் வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது. பிறருக்கும் அப்படித்தான் இருக்க முடியும். அவரது வசீகரமான உடல்மொழியும், இணக்கமும், இதற்கான பாதையை அமைத்துத் தரும்.

ஒரு நல்ல தங்கும் விடுதியில் சாரு, கருணா, மற்றும் பவாவோடு எங்களின் உரையாடல் துவங்கிற்று. நானும் சாருவும் மட்டும் விடியும் வரை பேசிக் கொண்டிருந்தோம். தமிழ் சிற்றிலக்கியச் சூழல், உலக இலக்கியம், சினிமா, அரபு மற்றும் இலத்தீன் அமரிக்க இசை என மிக விரிவாகவும் ஆழமாகவும் சாரு பேசப் பேச அதில் நான் முழுவதுமாகத் தொலைந்திருந்தேன். எழுத்தையும், வாசிப்பையும், சினிமாவையும் நேசிக்கும் ஒருவனுக்கு சகலத்திலும் தேர்ந்த ஒரு முன்னோடியின் பேச்சைக் கேட்பதில் இருக்கும் களிப்பு அலாதியானது. அதிலேயும் தமிழ் எழுத்துச் சூழலுக்கு வெளியே வசிக்கும் எனக்கு மிகப்பெரும் கொண்டாட்டமாக அந்த இரவு இருந்ததில் வியப்பில்லை. அதற்குப் பிறகு சாருவின் இயல்பு பற்றியதான என் முன்முடிவுகளில் பெரிய மாற்றம் வந்தது. அவரின் எழுத்தைப் போலவே அவரும் மனதிற்கு நெருக்கமானார். அந்த வருடம் இந்த நாட்டிற்குத் திரும்பும்போது அச்சிலிருந்த அல்லது கைக்குக் கிடைத்த சாருவின் அனைத்து புத்தகங்களையும் வாங்கி வந்திருந்தேன்.

அதற்கடுத்த சந்திப்பும் களிப்பானது. இன்னொரு வருடத்தின் விடுமுறைச் சமயத்தில் நானும் பவாவும், மிஷ்கினின் நந்தலாலா படத்தின் முன்னோட்டக் காட்சியைக் காண ஒரு நாள் முன்னதாகவே அவரது அலுவலகம் சென்றிருந்தோம். அன்றைய இரவுக் கொண்டாட்டத்தின் இலக்கிய சபை மிகவும் பெரியதாக இருந்தது. பிரபஞ்சனிலிருந்து ஷாஜி வரை எழுத்தாளர்கள் நிறைந்த சபை. பேச்சும், பாட்டும் உற்சாகமும் ஓரிரு மணி நேரங்களில் வடிந்துவிட நானும் சாருவும் மிஷ்கினும் மட்டும் விடியும் வரை பேசிக்கொண்டிருந்தோம். அந்தச் சந்திப்பில் சாருவை இன்னும் பிடித்துப் போனது. சாருவின் பேச்சு, கண்ணாடி முன் நின்று கொண்டிருப்பதைப் போன்ற தோற்ற மயக்கத்தை எனக்குத் தந்தது. அப்படி இருந்தும் ஏனோ சாருவுக்கும் எனக்குமான நட்பு தொடரவில்லை. அதற்கு முழுமுதற் காரணமும் நான்தான். இந்த நாட்டிற்கு வந்ததும் நான் வேறொரு மனிதனாகி விடுகிறேன். வேலை, குடும்பம் மற்றும் எழுத்து என நாட்கள் பரபரப்பாகி விடுவதால் தொலைவில் இருக்கும் பிடித்தமானவர்களுடனான தொடர்பும் பேச்சும் அப்படியே நின்றுவிடுகிறது. எனக்கே எனக்கான உலகில் மூழ்கிப் போய்விடுகிறேன்.  தவிர அடிப்படையில் நான் முழுச் சோம்பேறி என்பதால் மனிதர்களுடனான நட்பையும், உறவையும் பேணும் திறமைகள் எனக்கு ஆரம்பத்திலிருந்தே இல்லை.

சாருவை அதற்குப் பிறகு இந்தியாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அல்லது நான் உருவாக்கவில்லை. கடிதம் மற்றும் அலைபேசித் தொடர்பும் இல்லை. ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு சாருவை ஷார்ஜாவில் வைத்து மூன்றாம் முறையாக சந்தித்தேன். அவருக்கு என்னுடனான இரண்டு சந்திப்புகளும் நினைவில் இல்லை. ஆனால் இந்த நாட்டிற்கு வரும்போது என்னுடைய ’ஓரிதழ்ப்பூ’ நாவலை வாசித்துவிட்டிருந்தார். ஓர் எழுத்தாளனை வாசிக்காமல் சந்திப்பது நியாயமாக இருக்காது என நினைத்தேன் என அன்று அவர் சொன்னதை எனக்கானதாக எடுத்துக் கொண்டேன். அதைக் காப்பாற்றியும் வருகிறேன். சமீபமாக ஒரே ஒரு கதை எழுதி இருக்கும் ஓர் எழுத்தாளர் சந்திக்க அழைத்தபோது அவரின் கதையைத் தேடிப் படித்துவிட்டு பிறகுதான் சந்தித்தேன். இந்த ஒழுங்கை சாருவிடமிருந்துதான் பெற்றேன்.

இங்கிருக்கும் நண்பர்கள் சகிதம் சாருவுடனான மூன்றாம் சந்திப்பு, வாழ்வில் என்றும் நினைவிலிருக்கும் சந்திப்பாக அமைந்தது. ஓர் இரவு முழுக்க சாரு ஓரிதழ்ப்பூ நாவலைப் பற்றிப் பேசினார். மிகவும் தனிமையான, தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாத, மிகுந்த கூச்சமும் உள்ளடங்கியும் போகக் கூடிய என் இயல்புக்கு சாருவின் பேச்சை ஏற்றுக் கொள்ளத் தெரியவில்லை. அது முழுவதுமாக தன்னைக் கரைந்தும் நெகிழ்த்தியும் கொண்டது. அவ்வளவுதான், அதற்குப் பிறகு நாங்கள் நெருக்கமாகிவிட்டோம். அடிக்கடி பேசிக் கொண்டோம். நானும் கொஞ்சம் சுறுசுறுப்பானேன். முடங்கிக் கிடந்த என் சோம்பேறித்தனத்தை சாரு பேசிப்பேசி துரத்தியடித்தார். அங்கும் இங்குமாய் கிடந்த என் எழுத்துச் சிதறல்களை கோர்த்து, அடுக்கி, சீர் செய்து தொடர்ந்து ஆறு நூல்களை அடுத்தடுத்து வெளியிட்டேன். புது வாசகப்பரப்பிற்கும் என் எழுத்து சென்றடைந்தது.

அதற்கடுத்த வருடத்தின் இறுதி 2018 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பாக அமைந்தது. லெபனான் பயணம் சென்றிருந்த சாரு அதைப் பாதியில் முடித்துக் கொண்டு துபாய் திரும்பினார். எங்களுடன் பத்து நாட்கள் வரை இங்கு தங்கினார். எப்போதும் நினைவில் தங்கும் நாட்களாக அவை அமைந்தன. கிஸைஸ் டமாஸ்கஸ் வீதியிலிருக்கும் ஹில்டன் நட்சத்திர விடுதியைப் பார்க்கும்போதெல்லாம் சாருவின் நினைவும் உடன் எழும். வாழ்வின் மிகக் கொண்டாட்டமான நாட்களாக அவை இருந்தன. சாருவின் பேச்சு, செயல், இயல்பு எல்லாவற்றிலும் நளினமும், சமகாலமும் இணைந்திருக்கும். அவர் அருகில் இருக்கும்போது நான் என்னை மிகவும் பழைய நபராக உணர்வேன். அந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல என்பது என்னைவிடவும்  வயது குறைந்த நண்பர்களோடு பேசும்போது தெரிய வந்தது. சாருவிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகள் ஏராளம். என்னுடைய இயல்பு வாழ்வில் பல மாற்றங்கள் வந்து சேர்ந்தன. அவை என் வாழ்வை இன்னும் சுதந்திரமாக வாழ உதவியாகவும் இருக்கின்றன.

சாருவின் புனைவுகளில் இருக்கும் மிக அடிப்படையான விஷயம் அதன் சுவாரசியம். சாருவின் புனைவுலகை மறுப்பவர்களும் கூட அவர் கதைகளை வாசிப்பதை நிறுத்துவதில்லை. காரணம் அவரின் மொழி மிகச் சரளமானதும் நேர்த்தியானதுமாகும். சுவாரசியமாக இருந்தால் அது இலக்கியம் இல்லை என்ற கருத்தை தீவிர நவீனத்துவ வாசகர்கள் நம்புகின்றனர். எதையும் நேரடியாக எழுதக்கூடாது என்கிற சாய்வுகளும் சில எழுத்தாளர்களுக்கும் உண்டு. எனவே அவர்கள் தங்களின் புனைவுகளை பூடகமாகவும், சிக்கலான மொழிக் கட்டுப்பாடோடும் எழுதினர். சாரு இந்த கட்டுப்பாட்டை மீறினார் மற்றும் வேண்டுமென்றே உடைத்தார்.  தமிழில் எழுதும் பலருக்கும் நல்ல உரைநடை இன்னும் கைவராததே  இடியாப்பச் சிக்கலாக மொழி இருப்பதற்கு காரணம் என்கிற அவரின் பார்வையும் முக்கியமானது.

தத்துவார்த்தப் பார்வைகள், அகச் சிக்கல், உள்ளொளி, தரிசனம் போன்ற சொற்களுக்குள் உழன்ற தீவிர இலக்கியத்தை தன்னுடைய முதலும் முடிவுமில்லா தன்னிச்சைப் புனைவுகளின் வழியாக உடைத்தார். கதைகளாக்கப்படாத இன்னொரு உலகத்தையும், எவரும் எழுதத் தயங்கும் வாழ்வையும் அதற்கே உரிய தனித்துவ வெளிப்பாட்டு மொழியோடு சாரு காட்சிப்படுத்தினார். விளிம்பு நிலை வாழ்வும், கைவிடப்பட்டோரின் உலகமும் அவரது புனைவுலகின் பேசுபொருளாகின. இக்கதைகளின் வழியாக பொது அறம் அல்லது பெரும்பான்மை அறம் என்பதின் மீது கேள்விகளை எழுப்பினார். சமூகத்தின் பொது ஒழுக்கம், அதன் அளவுகோல்கள் மீதான மறுவிசாரணையாகவும் அவரது புனைவுகள் அமைந்தன. சாருவின் கதையுலகம் சாமானியர்களை தேவையற்ற குற்றவுணர்விலிருந்து மீட்கவும் தவறவில்லை.

ஒரு நேரடி உதாரணத்தை சொல்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு இருபதுகளின் மத்தியிலிருக்கும் ஓர் இளைஞர் குழாமை சந்தித்தேன். அவர்களுடனான உரையாடலில் அவர்களின் பயங்களையும், குற்ற உணர்வுகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அனைவரிடமும் சாருவின் நூல்களைக் கொடுத்து வாசிக்கும்படி சொன்னேன். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அவர்களை வேறொரு பரிமாணத்தில் பார்க்க முடிந்தது.  பொது ஒழுக்கத்தின் பெயரால், கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் மனித மனம் தேவையற்ற பயங்களில் சிக்குண்டு கிடக்கிறது. இந்த பயம் பல்வேறு அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் மூலதனமாக இருக்கிறது. ஓர் எழுத்தாளனால் மட்டும்தான் இவற்றை சரிசெய்ய முடியும். சமூகத்தை பீடித்திருக்கும் இறுகிய கட்டுமாணங்களை உடைக்கவும் மனிதனை அவன் சொந்தச் சிறையிலிருந்து விடுவிக்கவும் இலக்கியம் மகத்தான கருவியாக இருக்கிறது. சாரு அதில் ஓர் அலகாக இருக்கிறார்,சாருவுக்கு இளம் வாசகப் பரப்பு அதிகமாக இருப்பதற்கு இந்தத் தன்மையே காரணம். புத்தகக் கண்காட்சிகளில் சாருவை சுற்றி எப்போதும் இளைஞர் பட்டாளம் இருப்பதையும் காணமுடியும்.

சாருவின் கட்டுரைகளை, அ-புனைவுகளை ரசிக்காதோர் கிட்டத்தட்ட தமிழ் வாசகப்பரப்பில் ஒருவருமில்லை. கூர்மையும், பகடியும், நுண்ணுணர்வும் அவர் எழுதும் எல்லாக் கட்டுரைகளிலும் அடிநாதமாக இழைந்தோடும். இசை, திரைப்படங்கள், இலக்கியம், வாழ்வியல், பயணங்கள், மனித இருப்பு என அவர் எதைத் தொட்டு எழுதினாலும் உடன் வரும் கட்டுக்கோப்பான மொழியும், சுவாரசியமும் இன்று எழுதுவோர் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டியது. தன்னுடைய கட்டுரைகளின் வழியாக ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளின் கலை, இலக்கியம், திரைப்படம், அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளம் போன்றவை குறித்தான அறிதல் தமிழ் வாசகர்களுக்கு சாருவின் வழியாகத்தான் சாத்தியமானது. இந்த தேசங்களின் நிலக்காட்சிகள், வரலாறு, தொன்மம் ஆகியவற்றிலிருந்து மொழி உச்சரிப்பு வரை சகலத்தையும் கூர்மையாக கவனித்து அதை மிகச் சரியாக நமக்குக் கடத்தியவர் சாரு. மேலும் அந்தந்த பிரதேசங்களில் கோலோச்சிய மற்றும் வாழ்ந்து வரும் ஆளுமைகளின் படைப்புகள், அவற்றின் உயரங்கள் குறித்தான விரிவான பார்வையையும் இன்று வரை தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு அறியத் தருவதில் சாருவே முன்னோடி.

சாருவின் ’நிலவு தேயாத தேசம்’ இதுவரை வெளிவந்த பயண நூல்களில் முதன்மையானது என்பேன். காரணம், இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர்களோடு இஸ்தாம்புல் நகரத்திற்குப் பயணமாகச் சென்று வந்தேன். அப்போது நிலவு தேயாத தேசத்தை வாசித்திருக்கவில்லை. நூல் கையிலேயே இருந்தும் இந்தப் புராதண நகரத்தை நம்முடைய சொந்தக் கண்களால் பார்ப்போம் என நினைத்துக் கொண்டு சுற்றி வந்தோம். முடிந்தவரை பார்த்துவிட்டோம் என்கிற களிப்புடன் ஊர் வந்த பிறகு, நிலவு தேயாத தேசத்தை வாசித்தேன். வியப்போடு சோர்வும் எஞ்சியது. இஸ்தாம்புல்லை சரியாகப் பார்க்கவேயில்லை என்கிற உண்மையை சாருவின் பார்வைகள் முன் வைத்தன. இனி இன்னொரு முறை போனால்தான் பயணம் முழுமையடையும். எழுத்தாளனின் தனித்துவம் என்பது இதுதான். சாரு ஒரு நகரத்தைப் பார்ப்பதைப்போல பிறரால் பார்க்க முடியாது. அவரின் பார்வையோடு சேர்த்துப் பார்க்கும்போது சகலமும் துலக்கமாகும்.

எழுத்தின் எல்லா சாத்தியங்களையும் நிகழ்த்திப் பார்த்தவர் சாரு. மொழிபெயர்ப்பும் விதிவிலக்கில்லை. அதிலேயும் தன் தனித்துவமான இடத்தை எடுத்துக் கொண்டார். சாருவின் மொழிபெயர்ப்பில் வெளியான ’ஊரின் மிக அழகான பெண்’ எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு. இதில் இடம்பெற்ற கதைகள் அனைத்துமே அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக அவ்குஸ்தோ ரோவா பாஸ்தாஸ் எழுதிய ’கைதி’ கதையும் ஆஸ்கார் லூயிஸின் ’வாழ்க்கை’ என்ற நாவலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட’ என் அம்மா ஒரு விபச்சாரி’ எனத் தலைப்பிடப்பட்ட அத்தியாயமும் எப்போதும் மறக்கமுடியாதவை. தமிழில் மொழிபெயர்ப்பு குறித்து யார் பேசினாலும் சாருவின் ஊரின் அழகான பெண் நூலைத்தான் அளவுகோலாக வைக்க வேண்டும் என்று சொல்வேன். ஒரு மொழிபெயர்ப்பில் கதைகளின் ஆன்மாவையும் மொழிச் சரளத்தையும் கொண்டு வர வேண்டுமெனில் அந்தந்த தேசங்களின் மீதான காதலும், கலை மீதான வேட்கையும் இருந்தால் ஒழிய சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. அதற்கு சாருவும் இந்த நூலுமே சான்று.

தமிழ் இலக்கியச் சூழலுக்கு சாருவின் பங்களிப்பு மகத்தானது. அவர் திரளான வாசகப் பரப்பை பெற்றிருந்தாலும், இந்தியாவுக்கு வெளியிலேயும் கவனம் பெற்றிருந்தாலும் தமிழில் அவரது படைப்பை ஒட்டிய விமர்சன கவனமும், அவர் பங்களிப்பின் முக்கியத்துவமும் இன்னும் அதிகமாகப் பேசப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன் மற்றும் விரும்புகிறேன். இதை நிவர்த்தி செய்யும் விதமாக விஷ்ணுபுரம் விழாக் குழுவினர் சாருவுக்கு இந்த வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதை அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. விருதோடு மட்டும் இல்லாமல் விஷ்ணுபுரம் குழுவினரின் கட்டுக்கோப்பான அர்ப்பணிப்பின் பலனாக சாருவின் படைப்புகள் இன்னொரு வாசகத் தளத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் நம்புகிறேன்.

விஷ்ணுபுரம் விழாக் குழுவினருக்கு என் வாழ்த்துகளும் அன்பும்.

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2022 10:34

சாரு நிவேதிதா – வாழ்வும் கலையும். அய்யனார் விஸ்வநாத்

இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் வாழும் சூழலைப் பற்றியும், எழுத்துச் செயல்பாட்டுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத என் தினசரிகளைக் குறித்தும், சமூக வலைத்தளத்தில் ஒரு பிலாக்கணம் வைத்திருந்தேன். பெரிதாக ஒன்றுமில்லை, தமிழில் எழுதுவோர் அனைவருக்கும் ஏற்படும் நள்ளிரவு உளச் சோர்வுகள்தாம். அதையும் எழுதித்தான் தீர்க்க வேண்டும் என்பதால் எழுதி வைத்துவிட்டு உறங்கப்போனேன். அடுத்த நாள் காலை அலைபேசியை உயிர்ப்பித்ததும், சாருவிடமிருந்து வந்திருந்த குரல்வழிச் செய்தி ஒன்று  திரையில் மினுங்கிக் கொண்டிருந்தது. உறங்கி எழுந்த அதிகாலையில் அவரது வசீகரமான குரலில் எழுத்தின் வழியான விடுதலை என்கிற பார்வையைக் கேட்டபோது என் சகல சோர்வுகளும் காணாமல் போயின. ஒரு துறையின் முன்னோடி அல்லது வழிகாட்டி எனும் சொல்லாகத் திகழ்பவர்களின் இயல்பு இதுதானென்று நினைக்கிறேன். தமிழ்ச்சூழலைப் பொறுத்தமட்டில் எழுத்திற்காக முழுமையாகத் தம்மையும் தம் வாழ்வையும் ஒப்புக் கொடுப்பது என்பது கிட்டத்தட்டத் தற்கொலைக்குச் சமம்.  சாரு அதைத் துணிவாக ஏற்றுக் கொண்டவர். எழுத்து வழியாக மட்டுமே சகலத்தையும் உருவாக்கிக் கொள்வதும், எழுதுவதன் மூலமாக மட்டுமே விடுதலையையும் களிப்பையும் அடையும் வெகு சில எழுத்தாளர்களில் சாரு முதன்மையானவர்.  சாருவின் எழுத்து மட்டுமல்ல அவரது வாழ்வும், இயல்பும், இருப்பும், கொண்டாடப்பட வேண்டியது.

”நான் நரகத்திலிருந்துதான் எழுதுகிறேன். அங்கிருந்து தப்பிக்க எனக்கு எழுத்தை விட்டால் வேறொரு வழியும் கிடையாது. ஒருவேளை வாழ்வு சொர்க்கமாக இருந்திருந்தால் அதை நான் கொண்டாடிக் கொண்டிருந்திருப்பேன் எழுதி இருக்க மாட்டேன்” எனச் சொல்லும் சாரு என்னளவில் ஒரு முழுமையான ’ஹெடோனிஸ்ட்’  இதை அவருடைய முதல் சந்திப்பிலேயே அறிந்து கொண்டேன். வருடம் சரியாக நினைவில் இல்லை. 2008 அல்லது 2009 ஆக இருக்கலாம். விடுமுறையில் என் சொந்த ஊரான திருவண்ணாமலையில் இருந்தேன். அப்போதெல்லாம் பெரும்பாலும் பவா வின் வீடுதான் புகலிடம். நாள் முழுக்க ஆட்கள் வருவதும் போவதுமாக எப்போதும் அந்த வீடு மனிதர்களால் நிறைந்திருக்கும். இலக்கியமும், சினிமாவும், பேச்சும், மறுபேச்சும், நிரம்பிக் கிடந்த நாட்கள் அவை.

ஒரு நாள் பவா, சாரு திருவண்ணாமலைக்கு எஸ்.கே.பி கருணாவின் அழைப்பின் பேரில் வருவதாகவும் அவரை இன்றிரவு சந்திக்கலாமென்றும் சொன்னார். எனக்கொரு சிறிய பதற்றம் தொற்றிக் கொண்டது. அப்போதெல்லாம் என்னுடைய வலைத்தளத்தில் மிகுந்த ஆக்ரோஷமாக எழுதிக் கொண்டிருந்தேன். இணைய வெளி தரும் அசட்டுத் துணிச்சலால், கலக பிம்பம், மீறல், மிகையதார்த்தம், கறார் விமர்சனம் என்றெல்லாம் சலம்பிக் கொண்டு திரிந்ந்தேன். உலகத்தின் சகல பிரச்சினைகளுக்கும் காரணம் தமிழ் எழுத்தாளர்கள்தாம் என்றொரு அசைக்கமுடியாத நம்பிக்கையும் இருந்ததால் தினசரி காலை எழுந்தவுடன் சாரு மற்றும் ஜெ வின் வலைத்தளத்தை சிரத்தையாகத் திறந்து, அன்று அவர்கள் எழுதியிருப்பதை வாசித்துவிட்டு இருவரையும் விமர்சிப்பதை வாடிக்கையாகவும் வைத்திருந்தேன். என்னைச் சந்திப்பதை சாரு விரும்புவாரா என்கிற சந்தேகமும் இருந்தது. பவா அந்த எண்ணத்தை மாற்றினார். தமிழ் இலக்கியச் சூழலில் நடந்த இலக்கிய விமர்சனங்கள், சண்டைகள், இதுவரை நிகழ்ந்த அடிதடிகள் குறித்தெல்லாம் விலாவரியாகப் பேசி இதுவே ஆரோக்கியமான சூழல் என்கிற பார்வையையும் தந்தார்.

சாருவின் ’ஜீரோ டிகிரி’யை பத்தொன்பது வயதில் வாசித்தேன். பட்டயப் படிப்பிற்கு பிறகு ஓசூரில் அண்ணனுடன் வசித்திருந்தேன். புத்தகம் வாசிப்பதை முழுநேர வேலையாக வைத்திருந்த காலகட்டம் அது. தேடித்தேடி வாசிக்கும் நண்பர்களும் உடனிருந்தனர். அந்நாட்களில் தீவிரமாக நவீன இலக்கியத்தை வாசித்தும் விவாதித்தும் கொண்டிருந்தோம். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயமோகன், வங்க மொழிபெயர்ப்பு நாவல்கள் எனப் பேச்சுப் போய்க்கொண்டிருக்கும். வஸந்த விஹார் காஃபி, பைக் பயணங்கள், மெல்லிய நடுங்கும் குளிரில் ஓசூரின் மலைக்கோயில் உச்சியிலோ அல்லது படிக்கட்டுகளிலோ அமர்ந்தபடி விவாதிப்போம். பெரும்பாலும் எல்லா மாலைகளிலும் சந்தித்துக் கொள்வோம். இலக்கியம் முன்னிரவுகளாக இருந்த நாட்கள் அவை. அப்படி ஒரு நாளில்தான் நண்பரொருவர் ஜீரோ டிகிரியைத் தந்தார். ஒரே இரவில் வாசித்து முடித்துவிட்டேன். இப்படி ஒரு நாவலை, மையமே இல்லாத படைப்பை அதற்கு முன்பு வாசித்ததில்லை. நாவல் எனக்குப் பிடித்திருந்ததா இல்லையா எனக் குழப்பமாக இருந்தது. அதை விட இப்படியெல்லாம் எழுத முடியுமா என்கிற ஆச்சரியமும் எரிச்சலும் கலந்த உணர்வும் ஒட்டிக் கொண்டுவிட, நூலைக் கொடுத்த நண்பரைத் தேடி ஓடினேன். அவரும் கிட்டத்தட்ட என் மனநிலையில் தான் இருந்தார். இருவரும் பேசிப் பேசி ஓய்ந்தோம்.

அதற்குப் பிறகு சாருவை நான் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு துபாய் வந்துசேர்ந்த பிறகு இணையதளத்தின் வழியாகத்தான் வாசித்தேன். இல்லை அவரது வலைத்தளத்திலே பழியாகக் கிடந்தேன் என்பதுதான் சரியாக இருக்கும். சாரு பரிந்துரைக்கும் சினிமாப் படங்கள், இசைத் தொகுப்புகள், நூல்கள் என ஒன்றையும் விடமாட்டேன். அந்நிய வாழ்வில் நேரமிகுதியும், இணையத் தொடர்புகளும் இருந்ததால் எல்லாவற்றையும் சுலபமாகத் தேடிப் பிடிக்க முடிந்தது. அவருடைய ரசனையும், தேர்வுகளும், விருப்பங்களும் என்னுடைய இயல்புக்கு சரியாகப் பொருந்தின. அதுவரை என்னிடம் குறைவாக இருந்த நுண்ணுணர்வும், தன் சார்ந்த அக்கறையையும் சாருவின் எழுத்து எனக்கு மீட்டுத் தந்தது. மூன்று மாதத்தில் அவர் வலைத்தளத்தில் எழுதியிருந்த அத்தனைக் கட்டுரைகளையும், கடிதங்களையும், குறிப்புகளையும் வாசித்து விட்டிருந்தேன். அவருடைய புதுப் பதிவுக்காக ஒவ்வொரு நாளும் கைநடுங்கக் காத்திருந்தேன். அச்சிலும் ராஸலீலா முதல் வரம்பு மீறிய பிரதிகள் வரை எல்லாவற்றையும் தருவித்து வாசித்துக் கொண்டிருந்தேன்.

இந்தத் தொடர் வாசிப்பு தந்த துணிச்சலும் விமர்சனங்களுக்கான பின்னணியாக இருந்தது. அவரை முழுமையாக வாசித்து அறிந்திருந்ததால் கருத்துத் தளத்தில் சாருவுடன் முரண்படும் புள்ளிகளும் உருவாகின. பிறகு ஓரிரு மாதங்களில் அவரே அந்தப் புள்ளிகளையும் அதன் வழி உருவான கோலங்களையும் அழிப்பார். மனதளவில் அவருடன் காதல்-மோதல் உறவுதான் இருந்தது. ஆனால் ஒரு முறை கூடப் பேச முயலவில்லை. என் கூச்ச சுபாவத்தால் மின்னஞ்சல் கூட அனுப்பத் தயங்கினேன்.

இந்தப் பின்புலத்தோடு சாருவை சந்தித்தேன். அவரிடம் எந்தத் தயக்கமும் இல்லை. வெகு இயல்பாகப் பழகினார். ஒருவரை முதன்முறையாகச் சந்திக்கும்போது எழும் தயக்கங்கள் எனக்கு ஏராளம் உண்டு. அதிலேயும் தமிழின் முக்கியமான எழுத்தாளரைச் சந்திக்கையில் அவரை எப்படி அழைப்பதென்றொரு தயக்கம் நம் அனைவருக்கும் இருக்கும். சாரு அதற்கு இடங்கொடுக்கவே இல்லை. பார்த்த உடனேயே ’சாரு’ என்றொரு அழைப்பு தாமாகவே நாவில் வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது. பிறருக்கும் அப்படித்தான் இருக்க முடியும். அவரது வசீகரமான உடல்மொழியும், இணக்கமும், இதற்கான பாதையை அமைத்துத் தரும்.

ஒரு நல்ல தங்கும் விடுதியில் சாரு, கருணா, மற்றும் பவாவோடு எங்களின் உரையாடல் துவங்கிற்று. நானும் சாருவும் மட்டும் விடியும் வரை பேசிக் கொண்டிருந்தோம். தமிழ் சிற்றிலக்கியச் சூழல், உலக இலக்கியம், சினிமா, அரபு மற்றும் இலத்தீன் அமரிக்க இசை என மிக விரிவாகவும் ஆழமாகவும் சாரு பேசப் பேச அதில் நான் முழுவதுமாகத் தொலைந்திருந்தேன். எழுத்தையும், வாசிப்பையும், சினிமாவையும் நேசிக்கும் ஒருவனுக்கு சகலத்திலும் தேர்ந்த ஒரு முன்னோடியின் பேச்சைக் கேட்பதில் இருக்கும் களிப்பு அலாதியானது. அதிலேயும் தமிழ் எழுத்துச் சூழலுக்கு வெளியே வசிக்கும் எனக்கு மிகப்பெரும் கொண்டாட்டமாக அந்த இரவு இருந்ததில் வியப்பில்லை. அதற்குப் பிறகு சாருவின் இயல்பு பற்றியதான என் முன்முடிவுகளில் பெரிய மாற்றம் வந்தது. அவரின் எழுத்தைப் போலவே அவரும் மனதிற்கு நெருக்கமானார். அந்த வருடம் இந்த நாட்டிற்குத் திரும்பும்போது அச்சிலிருந்த அல்லது கைக்குக் கிடைத்த சாருவின் அனைத்து புத்தகங்களையும் வாங்கி வந்திருந்தேன்.

அதற்கடுத்த சந்திப்பும் களிப்பானது. இன்னொரு வருடத்தின் விடுமுறைச் சமயத்தில் நானும் பவாவும், மிஷ்கினின் நந்தலாலா படத்தின் முன்னோட்டக் காட்சியைக் காண ஒரு நாள் முன்னதாகவே அவரது அலுவலகம் சென்றிருந்தோம். அன்றைய இரவுக் கொண்டாட்டத்தின் இலக்கிய சபை மிகவும் பெரியதாக இருந்தது. பிரபஞ்சனிலிருந்து ஷாஜி வரை எழுத்தாளர்கள் நிறைந்த சபை. பேச்சும், பாட்டும் உற்சாகமும் ஓரிரு மணி நேரங்களில் வடிந்துவிட நானும் சாருவும் மிஷ்கினும் மட்டும் விடியும் வரை பேசிக்கொண்டிருந்தோம். அந்தச் சந்திப்பில் சாருவை இன்னும் பிடித்துப் போனது. சாருவின் பேச்சு, கண்ணாடி முன் நின்று கொண்டிருப்பதைப் போன்ற தோற்ற மயக்கத்தை எனக்குத் தந்தது. அப்படி இருந்தும் ஏனோ சாருவுக்கும் எனக்குமான நட்பு தொடரவில்லை. அதற்கு முழுமுதற் காரணமும் நான்தான். இந்த நாட்டிற்கு வந்ததும் நான் வேறொரு மனிதனாகி விடுகிறேன். வேலை, குடும்பம் மற்றும் எழுத்து என நாட்கள் பரபரப்பாகி விடுவதால் தொலைவில் இருக்கும் பிடித்தமானவர்களுடனான தொடர்பும் பேச்சும் அப்படியே நின்றுவிடுகிறது. எனக்கே எனக்கான உலகில் மூழ்கிப் போய்விடுகிறேன்.  தவிர அடிப்படையில் நான் முழுச் சோம்பேறி என்பதால் மனிதர்களுடனான நட்பையும், உறவையும் பேணும் திறமைகள் எனக்கு ஆரம்பத்திலிருந்தே இல்லை.

சாருவை அதற்குப் பிறகு இந்தியாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அல்லது நான் உருவாக்கவில்லை. கடிதம் மற்றும் அலைபேசித் தொடர்பும் இல்லை. ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு சாருவை ஷார்ஜாவில் வைத்து மூன்றாம் முறையாக சந்தித்தேன். அவருக்கு என்னுடனான இரண்டு சந்திப்புகளும் நினைவில் இல்லை. ஆனால் இந்த நாட்டிற்கு வரும்போது என்னுடைய ’ஓரிதழ்ப்பூ’ நாவலை வாசித்துவிட்டிருந்தார். ஓர் எழுத்தாளனை வாசிக்காமல் சந்திப்பது நியாயமாக இருக்காது என நினைத்தேன் என அன்று அவர் சொன்னதை எனக்கானதாக எடுத்துக் கொண்டேன். அதைக் காப்பாற்றியும் வருகிறேன். சமீபமாக ஒரே ஒரு கதை எழுதி இருக்கும் ஓர் எழுத்தாளர் சந்திக்க அழைத்தபோது அவரின் கதையைத் தேடிப் படித்துவிட்டு பிறகுதான் சந்தித்தேன். இந்த ஒழுங்கை சாருவிடமிருந்துதான் பெற்றேன்.

இங்கிருக்கும் நண்பர்கள் சகிதம் சாருவுடனான மூன்றாம் சந்திப்பு, வாழ்வில் என்றும் நினைவிலிருக்கும் சந்திப்பாக அமைந்தது. ஓர் இரவு முழுக்க சாரு ஓரிதழ்ப்பூ நாவலைப் பற்றிப் பேசினார். மிகவும் தனிமையான, தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாத, மிகுந்த கூச்சமும் உள்ளடங்கியும் போகக் கூடிய என் இயல்புக்கு சாருவின் பேச்சை ஏற்றுக் கொள்ளத் தெரியவில்லை. அது முழுவதுமாக தன்னைக் கரைந்தும் நெகிழ்த்தியும் கொண்டது. அவ்வளவுதான், அதற்குப் பிறகு நாங்கள் நெருக்கமாகிவிட்டோம். அடிக்கடி பேசிக் கொண்டோம். நானும் கொஞ்சம் சுறுசுறுப்பானேன். முடங்கிக் கிடந்த என் சோம்பேறித்தனத்தை சாரு பேசிப்பேசி துரத்தியடித்தார். அங்கும் இங்குமாய் கிடந்த என் எழுத்துச் சிதறல்களை கோர்த்து, அடுக்கி, சீர் செய்து தொடர்ந்து ஆறு நூல்களை அடுத்தடுத்து வெளியிட்டேன். புது வாசகப்பரப்பிற்கும் என் எழுத்து சென்றடைந்தது.

அதற்கடுத்த வருடத்தின் இறுதி 2018 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பாக அமைந்தது. லெபனான் பயணம் சென்றிருந்த சாரு அதைப் பாதியில் முடித்துக் கொண்டு துபாய் திரும்பினார். எங்களுடன் பத்து நாட்கள் வரை இங்கு தங்கினார். எப்போதும் நினைவில் தங்கும் நாட்களாக அவை அமைந்தன. கிஸைஸ் டமாஸ்கஸ் வீதியிலிருக்கும் ஹில்டன் நட்சத்திர விடுதியைப் பார்க்கும்போதெல்லாம் சாருவின் நினைவும் உடன் எழும். வாழ்வின் மிகக் கொண்டாட்டமான நாட்களாக அவை இருந்தன. சாருவின் பேச்சு, செயல், இயல்பு எல்லாவற்றிலும் நளினமும், சமகாலமும் இணைந்திருக்கும். அவர் அருகில் இருக்கும்போது நான் என்னை மிகவும் பழைய நபராக உணர்வேன். அந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல என்பது என்னைவிடவும்  வயது குறைந்த நண்பர்களோடு பேசும்போது தெரிய வந்தது. சாருவிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகள் ஏராளம். என்னுடைய இயல்பு வாழ்வில் பல மாற்றங்கள் வந்து சேர்ந்தன. அவை என் வாழ்வை இன்னும் சுதந்திரமாக வாழ உதவியாகவும் இருக்கின்றன.

சாருவின் புனைவுகளில் இருக்கும் மிக அடிப்படையான விஷயம் அதன் சுவாரசியம். சாருவின் புனைவுலகை மறுப்பவர்களும் கூட அவர் கதைகளை வாசிப்பதை நிறுத்துவதில்லை. காரணம் அவரின் மொழி மிகச் சரளமானதும் நேர்த்தியானதுமாகும். சுவாரசியமாக இருந்தால் அது இலக்கியம் இல்லை என்ற கருத்தை தீவிர நவீனத்துவ வாசகர்கள் நம்புகின்றனர். எதையும் நேரடியாக எழுதக்கூடாது என்கிற சாய்வுகளும் சில எழுத்தாளர்களுக்கும் உண்டு. எனவே அவர்கள் தங்களின் புனைவுகளை பூடகமாகவும், சிக்கலான மொழிக் கட்டுப்பாடோடும் எழுதினர். சாரு இந்த கட்டுப்பாட்டை மீறினார் மற்றும் வேண்டுமென்றே உடைத்தார்.  தமிழில் எழுதும் பலருக்கும் நல்ல உரைநடை இன்னும் கைவராததே  இடியாப்பச் சிக்கலாக மொழி இருப்பதற்கு காரணம் என்கிற அவரின் பார்வையும் முக்கியமானது.

தத்துவார்த்தப் பார்வைகள், அகச் சிக்கல், உள்ளொளி, தரிசனம் போன்ற சொற்களுக்குள் உழன்ற தீவிர இலக்கியத்தை தன்னுடைய முதலும் முடிவுமில்லா தன்னிச்சைப் புனைவுகளின் வழியாக உடைத்தார். கதைகளாக்கப்படாத இன்னொரு உலகத்தையும், எவரும் எழுதத் தயங்கும் வாழ்வையும் அதற்கே உரிய தனித்துவ வெளிப்பாட்டு மொழியோடு சாரு காட்சிப்படுத்தினார். விளிம்பு நிலை வாழ்வும், கைவிடப்பட்டோரின் உலகமும் அவரது புனைவுலகின் பேசுபொருளாகின. இக்கதைகளின் வழியாக பொது அறம் அல்லது பெரும்பான்மை அறம் என்பதின் மீது கேள்விகளை எழுப்பினார். சமூகத்தின் பொது ஒழுக்கம், அதன் அளவுகோல்கள் மீதான மறுவிசாரணையாகவும் அவரது புனைவுகள் அமைந்தன. சாருவின் கதையுலகம் சாமானியர்களை தேவையற்ற குற்றவுணர்விலிருந்து மீட்கவும் தவறவில்லை.

ஒரு நேரடி உதாரணத்தை சொல்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு இருபதுகளின் மத்தியிலிருக்கும் ஓர் இளைஞர் குழாமை சந்தித்தேன். அவர்களுடனான உரையாடலில் அவர்களின் பயங்களையும், குற்ற உணர்வுகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அனைவரிடமும் சாருவின் நூல்களைக் கொடுத்து வாசிக்கும்படி சொன்னேன். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அவர்களை வேறொரு பரிமாணத்தில் பார்க்க முடிந்தது.  பொது ஒழுக்கத்தின் பெயரால், கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் மனித மனம் தேவையற்ற பயங்களில் சிக்குண்டு கிடக்கிறது. இந்த பயம் பல்வேறு அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் மூலதனமாக இருக்கிறது. ஓர் எழுத்தாளனால் மட்டும்தான் இவற்றை சரிசெய்ய முடியும். சமூகத்தை பீடித்திருக்கும் இறுகிய கட்டுமாணங்களை உடைக்கவும் மனிதனை அவன் சொந்தச் சிறையிலிருந்து விடுவிக்கவும் இலக்கியம் மகத்தான கருவியாக இருக்கிறது. சாரு அதில் ஓர் அலகாக இருக்கிறார்,சாருவுக்கு இளம் வாசகப் பரப்பு அதிகமாக இருப்பதற்கு இந்தத் தன்மையே காரணம். புத்தகக் கண்காட்சிகளில் சாருவை சுற்றி எப்போதும் இளைஞர் பட்ட

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2022 10:34

கமலதேவியின் இரண்டு சிறுகதைகள்

[image error]

கமலதேவி – தமிழ் விக்கி

நவீன இலக்கியச் சிறுகதை உலகில் முக்கியமான இடத்தை வகித்துக் கொண்டிருப்பவர் கமலதேவி. இதுவரை ”சக்யை, குருதியுறவு, கடுவழித்துணை, கடல்” என நான்கு சிறுகதைத் தொகுப்புகளை அவர் வெளியிட்டிருக்கிறார். சிறிது காலம் அவர் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் பணியாற்றி உள்ளார். அக்குழந்தைகளுக்குக் கற்பிக்க நிறையப் பொறுமை வேண்டும். அத்துடன் அவர்களிடம் அன்பு காட்டி, அன்பைத் திரும்பப் பெற வேண்டும். அதனால்தானோ என்னவோ கமலதேவியின் சிறுகதைகளில் பெரும்பாலும் அன்பே மையப் பொருளாகி இருக்கிறது.

“அன்பிற்கான ஏக்கமும், அன்பின் ஆதிக்கம் மீதான அவநம்பிக்கையும் அவரை அலைக்கழிக்கும் கேள்வி. இக்கேள்வியை வெவ்வேறு உறவு நிலைகளின் வெளிச்சத்தில் பரிசீலனை செய்து பார்க்கிறார்” என்று எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் கோடிட்டுக் காட்டுவது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.

அப்படிப் பரிசீலனை செய்து பார்க்கும் இரண்டு சிறுகதைகளாக ”கண்ணாடிப் பரப்பு” மற்றும் ”சிலுவைப் பாதை” என்னும் ஆகியவர்றைக் காணலாம்.

அண்மையில் [28-8-22] சொல்வனம் இணைய இதழில் கமலதேவி எழுதி உள்ள சிறுகதை ”கண்ணாடிப் பரப்பு” ஒரு சிறுகதைக்கான வடிவமைப்புக்குக் கச்சிதமாகப் பொருந்தும் கதை இது. அத்துடன் எழுத்தாளரின் எழுத்து வல்லமையைக் காட்டும் கதை இது. கதைசொல்லிக்குப் பெயர் இல்லை. அவருடைய எண்ணம் வழியாகத்தான் கதை முழுதும் சொல்லப்பட்டுள்ளது.

கதைசொல்லி ஒரு பெண். கதையில் அவளும் ஒரு மீனும்தான் பாத்திரங்கள். வேறு யாரும் இல்லை. அவளின் மாடிவீட்டில் இருப்பவர்கள் மீன் வளர்க்கிறார்கள். அவர்கள் ஒருமாதம் வெளியூர் செல்வதால் அவளிடம் மீனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு செல்கிறார்கள்.  தொடக்கத்திலேயே அவளுக்கு மீன்தொட்டி பிடிக்கவில்லை என்று கதாசிரியர் மறைமுகமாகக் காட்டுகிறார்.

“இதையெல்லாமா திருமணப் பரிசாகக் கொடுப்பார்கள்” என்று அவள் நினைக்கிறாள். மேலும் “எங்கள் ஊரில் மீனைத் தின்பதோடு சரி” என்ற அவளின் நினைப்பு அவளுக்கு இந்த வளர்ப்பு பிடிக்கவில்லை என்பதை உணர்த்துகிறது. ”நாயை வளர்க்கலாம். அதுவும் வீட்டுத் திண்ணையோடு சரி என்பது அவளின் எண்ணம். ”இந்த மீன்தொட்டி; அதையும் வைப்பதற்கு வாஸ்து பார்க்கவேண்டுமாம்” என்றெல்லாம் அவள் நினைப்பதைக் கதாசிரியர் காட்டுவதிலிருந்து அவளின் விருப்பமின்மையை உணர்த்துகிறார்.

அந்த மீனுக்கு எப்பொழுது உணவு போட வேண்டும் எப்பொழுது தண்ணீர் மாற்ற வேண்டும் என்று அதன் உரிமையாளரை நான்கு முறைகள் கைப்பேசியில் நச்சரிக்க அவர்கள் ”உன்னால் முடிந்தபோது போய்ப்பார்” என்று சொல்லிவிடுகிறார்கள். அவள் தான் உணவு உண்ணும்போது நினைவுக்கு வந்து அம்மீனுக்கும் உணவு போடுகிறாள். தண்ணீர் மாற்ற மட்டும் அவளுக்கு அச்சம்.

மாடிவீட்டு மாப்பிள்ளை தண்ணீர் மாற்றும்போதுதான் ஜோடியாக இருந்த ஆரஞ்சு வண்ண மீன்களில் ஒன்று இறந்துவிட்டது. மீதமுள்ள மீன்தான் இப்பொழுது அவளிடம் தரப்பட்டது. தன் துணை மீன் இறந்தது இருக்கும் மீனுக்குத் தெரியுமா என்றும், தொட்டியில் இருக்கும் வெள்ளை மீன்கள் அதைச்சேர்த்துக் கொள்ளுமா என்றெல்லாம் எண்ணுவதிலிருந்து அவள் மனத்தின் ஆழத்தில் இருக்கும் உணர்வு காட்டப்படுகிறது

சிறிது சிறிதாக அவள் மீனுடன் ஐக்கியமாகிவிடுவதை மெல்ல மெல்ல நமக்கு உணர்த்துகிறார் கமலதேவி. சிறிய அளவு தண்ணீர் வைத்து அத்துடன் மீனை எடுத்து வேறு தண்ணீர் மாற்றக் கற்றுக் கொள்கிறாள், மீனின் உருவத்தையும் அதன் கண்களைச் சுற்றி இருக்கும் பசும் வண்ணத்தையும் ரசிக்கிறாள். அதன் உருவத்தைக் குறிப்பிடும்போது அவள் வழியாகக் கமலதேவி, “ஆள்காட்டி விரலின் நுனியிலிருந்து முதல்ரேகை வரையிலான அளவுள்ளது” என்று எழுதுவது அவள் எந்த அளவுக்கு அம்மீனுடன் ஒன்றிவிட்டாள் என்பதைக் காட்டுகிறது.

ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வோர் இயல்பு இயற்கையாக அமைந்துள்ளது. மீன்தொட்டிக்குள் மீன் ஒரே இடத்தில் நிலைத்து நிற்காமல் அலைந்து கொண்டே இருக்கும். இதுதான் மீனின்தன்மை என்று கதாசிரியர் எழுதுகிறார். மீனை மீனாக்குவது அந்த நிலைகொள்ளாத தன்மை என்று எழுதியிருப்பது மிகவும் பொருத்தம்.

மீன்தொட்டிக்குப் பக்கத்திலேயே அவள் உறங்கும் அளவுக்கு அத்துடன் தன்னை மீறி அன்பு காட்டி ஒன்றிப்போய் விடுகிறாள். இறுதியில் மீனின் உரிமையாளர்களான வீட்டுக்காரர்கள் வந்து விடுகிறார்கள். வந்து கதவைத் தட்டுகிறார்கள். அவள் இப்பொழுது மீன்தொட்டி அருகில் செல்கிறாள். அந்த மீன் கண்ணாடிப் பரப்பிற்கு வரும்போது அவள் அப்பரப்பின் மீது முத்தமிடுகிறாள்.

அவள் கதவைத் திறக்கப் போகிறாள். ”நான் பார்வையை விலக்கி வெளியே வரும்போது முத்தமிட்ட பரப்பைக் குட்டி மீன் முட்டி மோதிக்கொண்டிருந்தது” என்று கதை முடிகிறது. அவள் காட்டிய அன்பிற்குப் பதிலாக அதுவும் அன்பு காட்டுகிறது என்று நாம் எண்ண முடிகிறது “நாய்க்குட்டியைத் தொட்டு விடை பெறலாம்; கூண்டுப் பறவைகளிடம் உதட்டைக் குவித்து ஒலி எழுப்பி ஏதாவது சேட்டை செய்து விடை பெறாலாம். மீன்களிடன் என்ன செய்வது” என்று முதலில் எண்ணிக் கொண்டிருந்த அவள் அந்த மீனுடன் தான் ஒன்றியவுடன் முத்தமிடும் அளவிற்கு மாறிவிடுகிறாள்.

இதில் காட்டப்படும் கண்ணாடிப் பரப்பு என்பது நம் மனம். ஏற்கனவே எடுத்த முடிவின் கீழ் நம் மனம் செயல்படுகிறது. ஒரு கண்ணாடிப்பரப்பாக அது இருக்கிறது. அது தன் பார்வையை இப்பொழுது மாற்றிக்கொள்கிறது. அதற்குக் கண்ணாடிப்பரப்பு உதவுகிறது.

“நிலவொளி தெளிவாக சரிந்து ஒளி உருண்டைகளாகத் தரையில் விழுந்தது” என்பது கதையில் இருக்கும் கவித்துவமான வரியாகும்

”அன்பு என்பது இருவழிப்பாதையாகும். நாம் ஒருவர் மீது செலுத்தும் அன்பு நமக்கு அவரிடமிருந்து திரும்பி வந்தால் நம் மனம் நிறைவு பெறுகிறது. வராவிடினும் கவலைப் படாதே. அதற்காக நீ அன்பு காட்டுவதை விட்டுவிடாதே” என்று கூறுகிறது கமலதேவி எழுதி உள்ள “சிலுவைப்பாதை” சிறுகதை. இதுவும் 8-5-22 சொல்வனம் இணைய இதழில் வெளிவந்ததாகும்

முசிறி நகரில் உள்ள ஓர் உண்டு உறைவிடப்பள்ளியில் சிறுகதை நடக்கிறது. இடையில் ஒரு சர்ச்சும் காட்டப்படுகிறது. விடுதியில் உணவுண்ணல், குளித்தல், உறங்கல் எல்லாமே மிகவும் கலைநயத்தோடு சித்தரிக்கப்பட்டுள்ளன. ப்ரியா—சாந்தி என்னும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளைச் சுற்றிக் கதை பின்னப் பட்டுள்ளது. இடையில் அவர்களின் ஆசிரியை மற்றும் சர்ச்சில் பியானோ வாசிக்கும் ஒரு மாணவன் டென்னிஸ் ஆகியோர் வந்து போகிறார்கள்.

சாந்திக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அவளின் பெற்றோர் எங்கோ போய்விடுகிறார்கள். அவள் திருச்சியில் கிறித்துவ மடத்தில் சேர்க்கப்படுகிறாள். அந்த இடமே அவளுக்குப் பிடிக்கவில்லை.

சாந்தி ப்ரியாவிடம், “அங்க ரொம்ப அமைதியா இருக்கும் பயமா இருக்கும். எல்லாரும் வயசானவங்க; யாருக்காவது ஒடம்பு சரியிருக்காது; யாராவது செத்துப் போவாங்க” என்று திருச்சி விடுதியைப் பற்றிக் கூறுவதிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் அத்துடன், “ரொம்பக் கஸ்டமா இருக்கும்; பாவமா இருக்கும்; அழுகையா வரும்” எனச் சொல்வதிலிருந்து சாந்தியின் உள்ளார்ந்த மனத்திலிருப்பதைக் கமலதேவி தெரிய வைக்கிறார்.

இறைவன் இசையில், நல்லவர் உள்ளத்தில், இனிமையான பேச்சில் எங்கும் குடிகொண்டுள்ளான் என்பது கதையில் உணர்த்தப்படுகிறது. ஜூலி சிஸ்டர், பியானோ வாசிக்கும் டென்னிசிடம், “நீ கை வைச்சா பியானோவில கர்த்தர் இருக்காரு” என்று சொல்கிறார். அவரே, ப்ரியாவிடம், “ஒன்னோடப் பேச்சிலக் கர்த்தர் இருக்காரு” என்ரு சொல்ல. பதிலுக்குப் ப்ரியாவோ, “சிஸ்டர், உங்களோட  சிரிப்பில் இருக்காரு” என்று கூறுகிறாள்.

விடுதியில் இருக்கும் ஓர் ஆசிரியை மாணவிகளிடம் எப்படி அன்பைக் காட்டவேண்டும் என்றும் கதை காட்டுகிறது. குளித்துவிட்டு வரும் ப்ரியாவிடம், “துண்டால முடியை நல்லாத் துவட்டணும்” என்று சொல்லி ஜூலி டீச்சர் அவளின் தலையைத் துடைத்துவிடுவதும் “ட்ரஸ் பண்றதுக்கு முன்னால பெட்டிக்கோட் ஹூக் எல்லாம் சரியா இருக்கான்னு பாக்கணும் என்று கூறுவதும் ஓர் அன்னையின் அன்பைக் காட்டி நம் மனத்தை நெகிழச் செய்கிறது.

தோழிகளின் உரையாடல்கள் மூலமே கமலதேவி கதையை லாவகமாக நகர்த்துகிறார். ப்ரியாவும் மேனகாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அதாவது ”பெஸ்ட் ப்ரண்ட்ஸ்”. ஆனால் ராஜி என்பவள் வந்தவுடன் மேனகா ப்ரியாவைத் தவிர்த்து விடுகிறாள். அதைப் ப்ரியாவால் தாங்க முடியவில்லை.

இருந்தாலும் மேனகாவிடம் அவள் கொண்ட அன்பு மாறவே இல்லை. மேனகாவிற்கு வயிற்று வலி வந்தவுடன் மேனகாவின் ஜட்டியைக் க்ளின் செய்வதிலிருந்து ப்ரியாதான் எல்லாம் செய்கிறாள். ஆனால் நான்கு நாள்கள் முன்னர் வந்த மேனகாவின் பிறந்த நாளுக்கு அவள் ப்ரியாவுக்குச் சாக்லெட் தரவில்லை. அது பற்றிச் சொல்லும்போது கூட அவள் கண்களில் கண்ணீர் வருகிறது.

அப்போது சாந்தி, “சிஸ்டர் இயேசுவோட பேரால எல்லார் மேலேயும் அன்பா இருங்கன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு அவளக் கண்டாலே கோவம் கோவமா வருதுன்னு சொல்கிறாள். உடனே பதில் சொல்லும் ப்ரியாவின் உள்ளம் நமக்குப் புரிகிறது. ’தூற்றாதே தூரவிடல்’ என்று நாலடியார் கூறியிருப்பதும் நினைவுக்கு வருகிறது. “அவளும் நல்லப் பொண்ணுதான், பஸ்சுல ஒரு தடவைக் கூட்டமா இருந்தப்ப எனக்கு அவ்தான் டிக்கெட் எடுத்தா. கம்பியை நல்லாப் புடிச்சுக்கோன்னு ரெண்டு தடவ சொன்னா” என்று ப்ரியா கூறுகிறாள்.

சிலுவைப் பாதை என்பது அன்பினைக் காட்டுவது. அது திரும்பி வந்தாலும் வராவிட்டாலும் நீ அதன் வழி போ எனச்  சொல்வது. கதையில் வரும் ப்ரியாவின் அப்பாவும் அதையே வலியுறுத்துகிறார். அவர், “ஒனக்கு மேனகாவை ரொம்பப் பிடிக்குமா? அப்படின்னா அவளைத் தொந்தரவு பண்ணாத” என்கிறார்.

இப்படிக் கதை முழுவதும் அன்பே பெரியது என்று காட்டப்படுகிறது அம்மா அப்பா இல்லாமல் அன்பிற்கு ஏங்கும் சாந்தி, ப்ரியாவிற்கு அன்பின் வலிமையைக் காட்டுவதாகக் கதை முடிகிறது. சாந்தி, ப்ர்யாவிடம் “நான் ஒனக்கு ஆட்டோகிராப் எழுதித்தரேன். நீ அதைப் பள்ளியை விட்டுப் போனபின்தான் படிக்கணும் என்று கூறிவிட்டு எழுதிக்கொண்டிருப்பதுடன் கதையை கமலதேவி நிறுத்துகிறார். சாந்தி என்ன எழுதி இருப்பாள் என்பதை நாம் மிக எளிதாக ஊகிக்க வைக்கிறார்.

உலகம் அன்பினை மறந்துவிட்டுப் பொருள்வயமாக மாறிவரும் சூழலில் அன்பினைப் பிரச்சாரமாக இல்லாமல் கலைநயத்துடன் வலியுறுத்தும் கமலதேவியின் சிறுகதைகள் நவீன இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன எனத் துணிந்து கூறலாம்.

வளவ துரையன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2022 10:33

கமலதேவியின் இரண்டு சிறுகதைகள்

[image error]

கமலதேவி – தமிழ் விக்கி

நவீன இலக்கியச் சிறுகதை உலகில் முக்கியமான இடத்தை வகித்துக் கொண்டிருப்பவர் கமலதேவி. இதுவரை ”சக்யை, குருதியுறவு, கடுவழித்துணை, கடல்” என நான்கு சிறுகதைத் தொகுப்புகளை அவர் வெளியிட்டிருக்கிறார். சிறிது காலம் அவர் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் பணியாற்றி உள்ளார். அக்குழந்தைகளுக்குக் கற்பிக்க நிறையப் பொறுமை வேண்டும். அத்துடன் அவர்களிடம் அன்பு காட்டி, அன்பைத் திரும்பப் பெற வேண்டும். அதனால்தானோ என்னவோ கமலதேவியின் சிறுகதைகளில் பெரும்பாலும் அன்பே மையப் பொருளாகி இருக்கிறது.

“அன்பிற்கான ஏக்கமும், அன்பின் ஆதிக்கம் மீதான அவநம்பிக்கையும் அவரை அலைக்கழிக்கும் கேள்வி. இக்கேள்வியை வெவ்வேறு உறவு நிலைகளின் வெளிச்சத்தில் பரிசீலனை செய்து பார்க்கிறார்” என்று எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் கோடிட்டுக் காட்டுவது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.

அப்படிப் பரிசீலனை செய்து பார்க்கும் இரண்டு சிறுகதைகளாக ”கண்ணாடிப் பரப்பு” மற்றும் ”சிலுவைப் பாதை” என்னும் ஆகியவர்றைக் காணலாம்.

அண்மையில் [28-8-22] சொல்வனம் இணைய இதழில் கமலதேவி எழுதி உள்ள சிறுகதை ”கண்ணாடிப் பரப்பு” ஒரு சிறுகதைக்கான வடிவமைப்புக்குக் கச்சிதமாகப் பொருந்தும் கதை இது. அத்துடன் எழுத்தாளரின் எழுத்து வல்லமையைக் காட்டும் கதை இது. கதைசொல்லிக்குப் பெயர் இல்லை. அவருடைய எண்ணம் வழியாகத்தான் கதை முழுதும் சொல்லப்பட்டுள்ளது.

கதைசொல்லி ஒரு பெண். கதையில் அவளும் ஒரு மீனும்தான் பாத்திரங்கள். வேறு யாரும் இல்லை. அவளின் மாடிவீட்டில் இருப்பவர்கள் மீன் வளர்க்கிறார்கள். அவர்கள் ஒருமாதம் வெளியூர் செல்வதால் அவளிடம் மீனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு செல்கிறார்கள்.  தொடக்கத்திலேயே அவளுக்கு மீன்தொட்டி பிடிக்கவில்லை என்று கதாசிரியர் மறைமுகமாகக் காட்டுகிறார்.

“இதையெல்லாமா திருமணப் பரிசாகக் கொடுப்பார்கள்” என்று அவள் நினைக்கிறாள். மேலும் “எங்கள் ஊரில் மீனைத் தின்பதோடு சரி” என்ற அவளின் நினைப்பு அவளுக்கு இந்த வளர்ப்பு பிடிக்கவில்லை என்பதை உணர்த்துகிறது. ”நாயை வளர்க்கலாம். அதுவும் வீட்டுத் திண்ணையோடு சரி என்பது அவளின் எண்ணம். ”இந்த மீன்தொட்டி; அதையும் வைப்பதற்கு வாஸ்து பார்க்கவேண்டுமாம்” என்றெல்லாம் அவள் நினைப்பதைக் கதாசிரியர் காட்டுவதிலிருந்து அவளின் விருப்பமின்மையை உணர்த்துகிறார்.

அந்த மீனுக்கு எப்பொழுது உணவு போட வேண்டும் எப்பொழுது தண்ணீர் மாற்ற வேண்டும் என்று அதன் உரிமையாளரை நான்கு முறைகள் கைப்பேசியில் நச்சரிக்க அவர்கள் ”உன்னால் முடிந்தபோது போய்ப்பார்” என்று சொல்லிவிடுகிறார்கள். அவள் தான் உணவு உண்ணும்போது நினைவுக்கு வந்து அம்மீனுக்கும் உணவு போடுகிறாள். தண்ணீர் மாற்ற மட்டும் அவளுக்கு அச்சம்.

மாடிவீட்டு மாப்பிள்ளை தண்ணீர் மாற்றும்போதுதான் ஜோடியாக இருந்த ஆரஞ்சு வண்ண மீன்களில் ஒன்று இறந்துவிட்டது. மீதமுள்ள மீன்தான் இப்பொழுது அவளிடம் தரப்பட்டது. தன் துணை மீன் இறந்தது இருக்கும் மீனுக்குத் தெரியுமா என்றும், தொட்டியில் இருக்கும் வெள்ளை மீன்கள் அதைச்சேர்த்துக் கொள்ளுமா என்றெல்லாம் எண்ணுவதிலிருந்து அவள் மனத்தின் ஆழத்தில் இருக்கும் உணர்வு காட்டப்படுகிறது

சிறிது சிறிதாக அவள் மீனுடன் ஐக்கியமாகிவிடுவதை மெல்ல மெல்ல நமக்கு உணர்த்துகிறார் கமலதேவி. சிறிய அளவு தண்ணீர் வைத்து அத்துடன் மீனை எடுத்து வேறு தண்ணீர் மாற்றக் கற்றுக் கொள்கிறாள், மீனின் உருவத்தையும் அதன் கண்களைச் சுற்றி இருக்கும் பசும் வண்ணத்தையும் ரசிக்கிறாள். அதன் உருவத்தைக் குறிப்பிடும்போது அவள் வழியாகக் கமலதேவி, “ஆள்காட்டி விரலின் நுனியிலிருந்து முதல்ரேகை வரையிலான அளவுள்ளது” என்று எழுதுவது அவள் எந்த அளவுக்கு அம்மீனுடன் ஒன்றிவிட்டாள் என்பதைக் காட்டுகிறது.

ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வோர் இயல்பு இயற்கையாக அமைந்துள்ளது. மீன்தொட்டிக்குள் மீன் ஒரே இடத்தில் நிலைத்து நிற்காமல் அலைந்து கொண்டே இருக்கும். இதுதான் மீனின்தன்மை என்று கதாசிரியர் எழுதுகிறார். மீனை மீனாக்குவது அந்த நிலைகொள்ளாத தன்மை என்று எழுதியிருப்பது மிகவும் பொருத்தம்.

மீன்தொட்டிக்குப் பக்கத்திலேயே அவள் உறங்கும் அளவுக்கு அத்துடன் தன்னை மீறி அன்பு காட்டி ஒன்றிப்போய் விடுகிறாள். இறுதியில் மீனின் உரிமையாளர்களான வீட்டுக்காரர்கள் வந்து விடுகிறார்கள். வந்து கதவைத் தட்டுகிறார்கள். அவள் இப்பொழுது மீன்தொட்டி அருகில் செல்கிறாள். அந்த மீன் கண்ணாடிப் பரப்பிற்கு வரும்போது அவள் அப்பரப்பின் மீது முத்தமிடுகிறாள்.

அவள் கதவைத் திறக்கப் போகிறாள். ”நான் பார்வையை விலக்கி வெளியே வரும்போது முத்தமிட்ட பரப்பைக் குட்டி மீன் முட்டி மோதிக்கொண்டிருந்தது” என்று கதை முடிகிறது. அவள் காட்டிய அன்பிற்குப் பதிலாக அதுவும் அன்பு காட்டுகிறது என்று நாம் எண்ண முடிகிறது “நாய்க்குட்டியைத் தொட்டு விடை பெறலாம்; கூண்டுப் பறவைகளிடம் உதட்டைக் குவித்து ஒலி எழுப்பி ஏதாவது சேட்டை செய்து விடை பெறாலாம். மீன்களிடன் என்ன செய்வது” என்று முதலில் எண்ணிக் கொண்டிருந்த அவள் அந்த மீனுடன் தான் ஒன்றியவுடன் முத்தமிடும் அளவிற்கு மாறிவிடுகிறாள்.

இதில் காட்டப்படும் கண்ணாடிப் பரப்பு என்பது நம் மனம். ஏற்கனவே எடுத்த முடிவின் கீழ் நம் மனம் செயல்படுகிறது. ஒரு கண்ணாடிப்பரப்பாக அது இருக்கிறது. அது தன் பார்வையை இப்பொழுது மாற்றிக்கொள்கிறது. அதற்குக் கண்ணாடிப்பரப்பு உதவுகிறது.

“நிலவொளி தெளிவாக சரிந்து ஒளி உருண்டைகளாகத் தரையில் விழுந்தது” என்பது கதையில் இருக்கும் கவித்துவமான வரியாகும்

”அன்பு என்பது இருவழிப்பாதையாகும். நாம் ஒருவர் மீது செலுத்தும் அன்பு நமக்கு அவரிடமிருந்து திரும்பி வந்தால் நம் மனம் நிறைவு பெறுகிறது. வராவிடினும் கவலைப் படாதே. அதற்காக நீ அன்பு காட்டுவதை விட்டுவிடாதே” என்று கூறுகிறது கமலதேவி எழுதி உள்ள “சிலுவைப்பாதை” சிறுகதை. இதுவும் 8-5-22 சொல்வனம் இணைய இதழில் வெளிவந்ததாகும்

முசிறி நகரில் உள்ள ஓர் உண்டு உறைவிடப்பள்ளியில் சிறுகதை நடக்கிறது. இடையில் ஒரு சர்ச்சும் காட்டப்படுகிறது. விடுதியில் உணவுண்ணல், குளித்தல், உறங்கல் எல்லாமே மிகவும் கலைநயத்தோடு சித்தரிக்கப்பட்டுள்ளன. ப்ரியா—சாந்தி என்னும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளைச் சுற்றிக் கதை பின்னப் பட்டுள்ளது. இடையில் அவர்களின் ஆசிரியை மற்றும் சர்ச்சில் பியானோ வாசிக்கும் ஒரு மாணவன் டென்னிஸ் ஆகியோர் வந்து போகிறார்கள்.

சாந்திக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அவளின் பெற்றோர் எங்கோ போய்விடுகிறார்கள். அவள் திருச்சியில் கிறித்துவ மடத்தில் சேர்க்கப்படுகிறாள். அந்த இடமே அவளுக்குப் பிடிக்கவில்லை.

சாந்தி ப்ரியாவிடம், “அங்க ரொம்ப அமைதியா இருக்கும் பயமா இருக்கும். எல்லாரும் வயசானவங்க; யாருக்காவது ஒடம்பு சரியிருக்காது; யாராவது செத்துப் போவாங்க” என்று திருச்சி விடுதியைப் பற்றிக் கூறுவதிலிருந்து தெரிய வருகிறது. ஆனால் அத்துடன், “ரொம்பக் கஸ்டமா இருக்கும்; பாவமா இருக்கும்; அழுகையா வரும்” எனச் சொல்வதிலிருந்து சாந்தியின் உள்ளார்ந்த மனத்திலிருப்பதைக் கமலதேவி தெரிய வைக்கிறார்.

இறைவன் இசையில், நல்லவர் உள்ளத்தில், இனிமையான பேச்சில் எங்கும் குடிகொண்டுள்ளான் என்பது கதையில் உணர்த்தப்படுகிறது. ஜூலி சிஸ்டர், பியானோ வாசிக்கும் டென்னிசிடம், “நீ கை வைச்சா பியானோவில கர்த்தர் இருக்காரு” என்று சொல்கிறார். அவரே, ப்ரியாவிடம், “ஒன்னோடப் பேச்சிலக் கர்த்தர் இருக்காரு” என்ரு சொல்ல. பதிலுக்குப் ப்ரியாவோ, “சிஸ்டர், உங்களோட  சிரிப்பில் இருக்காரு” என்று கூறுகிறாள்.

விடுதியில் இருக்கும் ஓர் ஆசிரியை மாணவிகளிடம் எப்படி அன்பைக் காட்டவேண்டும் என்றும் கதை காட்டுகிறது. குளித்துவிட்டு வரும் ப்ரியாவிடம், “துண்டால முடியை நல்லாத் துவட்டணும்” என்று சொல்லி ஜூலி டீச்சர் அவளின் தலையைத் துடைத்துவிடுவதும் “ட்ரஸ் பண்றதுக்கு முன்னால பெட்டிக்கோட் ஹூக் எல்லாம் சரியா இருக்கான்னு பாக்கணும் என்று கூறுவதும் ஓர் அன்னையின் அன்பைக் காட்டி நம் மனத்தை நெகிழச் செய்கிறது.

தோழிகளின் உரையாடல்கள் மூலமே கமலதேவி கதையை லாவகமாக நகர்த்துகிறார். ப்ரியாவும் மேனகாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அதாவது ”பெஸ்ட் ப்ரண்ட்ஸ்”. ஆனால் ராஜி என்பவள் வந்தவுடன் மேனகா ப்ரியாவைத் தவிர்த்து விடுகிறாள். அதைப் ப்ரியாவால் தாங்க முடியவில்லை.

இருந்தாலும் மேனகாவிடம் அவள் கொண்ட அன்பு மாறவே இல்லை. மேனகாவிற்கு வயிற்று வலி வந்தவுடன் மேனகாவின் ஜட்டியைக் க்ளின் செய்வதிலிருந்து ப்ரியாதான் எல்லாம் செய்கிறாள். ஆனால் நான்கு நாள்கள் முன்னர் வந்த மேனகாவின் பிறந்த நாளுக்கு அவள் ப்ரியாவுக்குச் சாக்லெட் தரவில்லை. அது பற்றிச் சொல்லும்போது கூட அவள் கண்களில் கண்ணீர் வருகிறது.

அப்போது சாந்தி, “சிஸ்டர் இயேசுவோட பேரால எல்லார் மேலேயும் அன்பா இருங்கன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு அவளக் கண்டாலே கோவம் கோவமா வருதுன்னு சொல்கிறாள். உடனே பதில் சொல்லும் ப்ரியாவின் உள்ளம் நமக்குப் புரிகிறது. ’தூற்றாதே தூரவிடல்’ என்று நாலடியார் கூறியிருப்பதும் நினைவுக்கு வருகிறது. “அவளும் நல்லப் பொண்ணுதான், பஸ்சுல ஒரு தடவைக் கூட்டமா இருந்தப்ப எனக்கு அவ்தான் டிக்கெட் எடுத்தா. கம்பியை நல்லாப் புடிச்சுக்கோன்னு ரெண்டு தடவ சொன்னா” என்று ப்ரியா கூறுகிறாள்.

சிலுவைப் பாதை என்பது அன்பினைக் காட்டுவது. அது திரும்பி வந்தாலும் வராவிட்டாலும் நீ அதன் வழி போ எனச்  சொல்வது. கதையில் வரும் ப்ரியாவின் அப்பாவும் அதையே வலியுறுத்துகிறார். அவர், “ஒனக்கு மேனகாவை ரொம்பப் பிடிக்குமா? அப்படின்னா அவளைத் தொந்தரவு பண்ணாத” என்கிறார்.

இப்படிக் கதை முழுவதும் அன்பே பெரியது என்று காட்டப்படுகிறது அம்மா அப்பா இல்லாமல் அன்பிற்கு ஏங்கும் சாந்தி, ப்ரியாவிற்கு அன்பின் வலிமையைக் காட்டுவதாகக் கதை முடிகிறது. சாந்தி, ப்ர்யாவிடம் “நான் ஒனக்கு ஆட்டோகிராப் எழுதித்தரேன். நீ அதைப் பள்ளியை விட்டுப் போனபின்தான் படிக்கணும் என்று கூறிவிட்டு எழுதிக்கொண்டிருப்பதுடன் கதையை கமலதேவி நிறுத்துகிறார். சாந்தி என்ன எழுதி இருப்பாள் என்பதை நாம் மிக எளிதாக ஊகிக்க வைக்கிறார்.

உலகம் அன்பினை மறந்துவிட்டுப் பொருள்வயமாக மாறிவரும் சூழலில் அன்பினைப் பிரச்சாரமாக இல்லாமல் கலைநயத்துடன் வலியுறுத்தும் கமலதேவியின் சிறுகதைகள் நவீன இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன எனத் துணிந்து கூறலாம்.

வளவ துரையன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2022 10:33

கனவு இல்லம் – கடிதம்

கனவு இல்லம், கடிதம்

அன்புள்ள ஜெ

குளச்சல் மு யூசுப் அவர்கள் கனவு இல்லம் பற்றி எழுதியிருந்த கடிதம் வாசித்தேன். இந்த கனவு இல்லம் என்னும் சொல் புதிதே ஒழிய இந்த செயல் முன்பும் நடந்து வருவதுதான். பத்திரிகையாளர்கள், தமிழறிஞர்கள் ஆகியோருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பலகோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாக்களில் வாழ்பவர்களுக்கு அடுக்குமாடியில் குடியிருப்பு அளித்தால் அவர்களின் வேலைக்காரர்களுக்கே அதெல்லாம் சென்றுசேரும். அல்லது வாடகைக்கு கொடுக்கப்படும். யூசுப் போன்றவர்கள் மிக வறிய சூழலில் வாழ்பவர்கள். அவர்களுக்கு நாகர்கோயிலில் வீட்டுவசதி வாரியத்தில் ஓர் இல்லம் அளிப்பதொன்றும் சிரமமான விஷயம் அல்ல. ஒரு கலெக்டரேகூட முடிவெடுக்கலாம். அவ்வாறு எல்லாருக்கும் அளிக்கமுடியாதுதான். ஆனால் யூசுப் போன்ற சாகித்ய அக்காதமி விருது போன்றவை வாங்கியவர்களுக்காவது அளிக்கலாம்.

ஜி. அருணாச்சலம்

அன்புள்ள ஜெ

கனவு இல்லம் பற்றிய கட்டுரை வாசித்தேன். அந்த பரிசு தகுதியற்றவர்கள் போட்டிபோட்டு பிடுங்கிக்கொள்ள வழிவகுக்கும் என்பது உண்மை. தமிழக அரசு விழிப்பாக இருக்கவேண்டும். யூசுப் போன்ற கஷ்டப்படும் எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

ராம்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2022 10:31

கனவு இல்லம் – கடிதம்

கனவு இல்லம், கடிதம்

அன்புள்ள ஜெ

குளச்சல் மு யூசுப் அவர்கள் கனவு இல்லம் பற்றி எழுதியிருந்த கடிதம் வாசித்தேன். இந்த கனவு இல்லம் என்னும் சொல் புதிதே ஒழிய இந்த செயல் முன்பும் நடந்து வருவதுதான். பத்திரிகையாளர்கள், தமிழறிஞர்கள் ஆகியோருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பலகோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாக்களில் வாழ்பவர்களுக்கு அடுக்குமாடியில் குடியிருப்பு அளித்தால் அவர்களின் வேலைக்காரர்களுக்கே அதெல்லாம் சென்றுசேரும். அல்லது வாடகைக்கு கொடுக்கப்படும். யூசுப் போன்றவர்கள் மிக வறிய சூழலில் வாழ்பவர்கள். அவர்களுக்கு நாகர்கோயிலில் வீட்டுவசதி வாரியத்தில் ஓர் இல்லம் அளிப்பதொன்றும் சிரமமான விஷயம் அல்ல. ஒரு கலெக்டரேகூட முடிவெடுக்கலாம். அவ்வாறு எல்லாருக்கும் அளிக்கமுடியாதுதான். ஆனால் யூசுப் போன்ற சாகித்ய அக்காதமி விருது போன்றவை வாங்கியவர்களுக்காவது அளிக்கலாம்.

ஜி. அருணாச்சலம்

அன்புள்ள ஜெ

கனவு இல்லம் பற்றிய கட்டுரை வாசித்தேன். அந்த பரிசு தகுதியற்றவர்கள் போட்டிபோட்டு பிடுங்கிக்கொள்ள வழிவகுக்கும் என்பது உண்மை. தமிழக அரசு விழிப்பாக இருக்கவேண்டும். யூசுப் போன்ற கஷ்டப்படும் எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

ராம்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2022 10:31

பெங்களூர் இலக்கிய விழாவில்…

பெங்களூர் இலக்கியவிழாவில் பங்கேற்கிறேன். வரும் டிசம்பர் 3 அன்று நிகழும் பெங்களூர் இலக்கிய விழாவில் Stories of the True பற்றிய உரையாடல். மொழியாக்கம் செய்த பிரியம்வதாவும் கலந்துகொள்கிறார்

உரையாடல் டிசம்பர் 4  காலை 11 15 மணிக்கு லலித் அசோக் விடுதியில் நடைபெறும்.

டிசம்பர் 3 ஆம்தேதி காலை பெங்களூர் வந்து நான்காம் தேதி மாலை திரும்பி வருவேன்.

ஆர்வமுள்ள நண்பர்கள் கலந்துகொள்ளலாம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2022 03:39

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.