Sivasankari
Born
in Madras, India
October 14, 1942
Website
Genre
“குழைய சோறு வடிச்சு, நெய் பருப்புப் போட்டுப் பிசைஞ்சு, குழந்தைய இடுப்புல வெச்சு, நிலா காட்டி சோறு ஊட்டறப்ப, இதே வாய் நாளைக்கு நம்மை அசிங்கமா திட்டலாம்னு எத்தனை பேர் நினைச்சுப்பார்க்கிறோம்? ஊட்டி வளக்கற தாய் புண்பட்டுப்போக இதே வாய் காரணம்னு யார் நினைக்கிறோம்? பிஞ்சுக்கால் நோவுமேன்னு ராத்திரி படுக்கறதுக்கு முன்ன தைலம் தடவுவோம், எண்ணெய் தேச்சு உருவி வெந்நீர் ஊத்துவோம்... ஆனா, இதே காலால நாளைக்கு நம்மை உதைச்சு விரட்டலாம்னு எதிர்பார்க்கறோமோ? ம்ஹூம், இல்ல! பக்கத்து வீட்டுல எதிர்வீட்டுல இந்த அநியாயம் நித்தம் நடக்கறதைக் கண்ணால பார்த்தப்பறம்கூட, இது நமக்கும் நாளைக்கு வரலாம்னு யார் யோசிக்கறோம்? எதிர்காலத்துக்காக யார் நம்மைத் தயார் பண்ணிக்கறோம்? ம்ஹூம், ஒன்னுமில்ல! என் பிள்ளை, என் பெண்ணு, என் மருமகன்னு வாரிக்கட்டிக்கறோம்... நாளைக்குத் தங்கத்தட்டுல நம்மைத் தாங்கிடுவாங்கன்னு கோட்டை கட்டறோம்... அதான் நிஜத்துல வேற மாதிரி நடக்கிறப்ப, இடிஞ்சுபோயிடறோம்!”
― Nerunji Mul
― Nerunji Mul
“ஆரோக்கியமான சிந்தனைகள் ஆக்கபூர்வமான செயல்களுக்கு வித்தாகின்றன. ஆக, அத்தனைக்கும் அடிப்படை அஸ்திவாரம் மனம். இது சீராக வளர, சுய அலசலும் சுய விமர்சனமும் வெகுவாக உதவும். தினமும் இரவு படுக்கப் போகும் முன், இன்று என்னென்ன பேசினேன், செய்தேன் என்ற சுயஅலசல் செய்துகொள்வதன் மூலம், என் குறை நிறைகளை நானே உணர்ந்து கொள்கிறேன். பின், குறைகளைக் குறைக்கவும், நிறைகளைக் கூட்டவும், விடாமல் முயற்சிப்பது மனமுதிர்ச்சிக்கும் செழிப்பான வளர்ச்சிக்கும் வழி செய்கிறது..." சென்னைக்கு”
― Naan Naanaga...
― Naan Naanaga...
Is this you? Let us know. If not, help out and invite Sivasankari to Goodreads.